Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் மீதான அக்கறையும் அன்பும் உண்மையானதல்ல

Featured Replies

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழ் மக்கள் மீது திடீர் அக்கறையும் அன்பும் ஏற்பட்டுள்ளதாக கூறும்

இடதுசாரி முன்னணி அந்த அக்கறையும் அன்பும் தேர்தலை நோக்காக கொண்டதேயன்றி உண்மையானதல்ல எனவும் தெவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதில் எமக்கும் உடன்பாடு உண்டு. ஆனால், அதன் மூலம் மாத்திரம் ஜனநாயகம் மலரப்போவதில்லை.

மாறாக தமிழ் மக்களுக்கு சுயநிர்ணயத்துடன் கூடிய நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

அதன் மூலமே அனைத்து மக்களும் ஐக்கியத்துடன் வாழும் ஜனநாயகம் மலரும் என்று இடதுசா முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெவித்தார்.

நிப்போன் ஹோட்டல் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் கூறியதாவது: ஜனாதிபதி தேர்தலை அறிவித்ததும் அரசாங்கம் அவசர அவசரமாக காம்களில் உள்ள மக்களை மீள்குடியமர்த்துகிறது. அம்மக்களை சுதந்திரமாக நடமாடுவதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறுகிறது.

இடைத்தங்கல் காம்களுக்குள் புலி உறுப்பினர்கள் இருப்பதாகவும் வன்னிப் பகுதியில் பெருந்தொகையான மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாளும் முகாம்களில் உள்ள மக்களை மீள்குடியமர்த்த முடியாது. அப்பகுதியில் முழுமையாக மிதிவெடிகளை அகற்றி பாதுகாப்பை உறுதிபடுத்தியதன் பின்னரே அம்மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவோம் என அரசாங்கம் கூறியது.

ஆனால், தற்பொழுது அம்மக்களை சுதந்திரமாக நடமாட அனுமதிப்பதாகவும் ஜனவரி மாதத்திற்குள் அனைத்து முகாம் மக்களையும் அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவதாகவும் அரசாங்கம் கூறியிருப்பதானது அவர்களுடைய அரசியல் சுய இலாபத்தை தெட்டத் தெளிவாக காட்டுகிறது.

அதேபோன்று ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் தமிழ் மக்கள் மீது திடீர் கரிசனை ஏற்பட்டுள்ளது. முகாம்களில் உள்ள மக்கள் பெரும் அவதியுறுவதாகவும் அவர்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காமையானது மிகவும் கவலையளிப்பதாகவும் அவர் கவலை தெவித்துள்ளார்.

எனவே, இவர்களின் திடீர் கசனையின் காரணத்தை மக்கள் புந்துகொள்ள வேண்டும்.

தென்னிலங்கையில் 1988, 1989 காலப் பகுதிகளில் பெருந்தொகையான இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். அந்த சந்தர்ப்பத்தில் கண்ணீர் வடித்து அதற்கெதிராக போராட்டத்தை நடத்திய மஹிந்த ராஜபக்ஷ, இன்று காணாமல் போனோர் தொடர்பிலும் உய நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் இருக்கின்றார்.

இவ்வாறு சிங்கள இளைஞர்களுக்கு ஒரு முகம், தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு ஒரு முகம் காட்டியவர்கள் தமிழ் மக்கள் மீது திடீர் கசனை காட்டுகிறார்கள். ஆனால், நாம் அப்படியல்ல. அன்று சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டபோதும் அதற்கெதிராக போராடினோம். அதேபோன்று தான் தமிழ் இளைஞர்கள் யுவதிகள் கொல்லப்பட்டதற்கும் எதிராக போராடி வருகின்றோம்.

தமிழர்களாயிருந்தாலும் சிங்களவர்களாகவிருந்தாலும் அவர்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது அதற்கெதிராக நாம் குரல்கொடுத்து போராட்டங்களை நடத்துவோம்.

ஜே.வி.பி.யினருக்கு எதிராக அடக்குறையினை பிரயோகித்த காலங்களிலும் அதற்கெதிராக நாம் போராடினோம். அதன் மூலமாகவே விமல் வீரவன்ச போன்றவர்களை நாம் பாதுகாத்தோம்.

அதேபோன்று லசந்த விக்ரமசிங்க போன்ற ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். பலர் தாக்குதலுக்குள்ளானார்கள். இவற்றுக்கெல்லாம் நாம் பொறுப்பல்ல என் அண்மையில் சரத் பொன்சேகா கூறியிருந்தார். அப்படியென்றால் அதற்கு யார் பொறுப்பு என நாம் மஹிந்தவிடம் கேள்வி எழுப்புகின்றோம்.

அதேபோன்று கடந்த காலங்களில் இடம்பெற்ற வெள்ளை வேன் கடத்தல் போன்ற செயல்களின் பின்புலத்தில் யார் இருந்தார்கள் என்பதையும் நாம் அறிவோம். அதற்கான ஆதாரங்களும் உள்ளன.

எனவே, இவ்வாறானவர்களுக்கு வாக்களிப்பதில் எந்தவித அர்த்தம் இல்லை

http://tamilskynews.org/index.php?option=com_content&view=article&id=84:2009-12-04-13-49-28&catid=34:2009-11-28-06-27-40&Itemid=100

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.