Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கடலோர காவற்படையின் கடத்தலின் பின்னணியில் நிலவும் மர்மம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய கடலோர காவற்படையின் கடத்தலின் பின்னணியில் நிலவும் மர்மம்

கடந்த புதன் கிழமை இந்திய கடலோர காவற்படையினர் இருவரை இலங்கை மீனவர்கள் கைது செய்ததாக செய்திகள் வெளிவந்தன. அதில் எந்தளவுக்கு உண்மைத்தன்மை இருக்கின்றது இலங்கை மீனவர்களால் தானா இந்திய காவற்படையினர் கைது செய்யப்பட்டனர் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண மீனவன் ஒருவன் இந்திய கடலோர காவற்படையை கைதியாக பிடிக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதும், அப்படி கடலோர காவற்படை இல்லாத சாதாரண மீனவனைத்தான் இலங்கை மீனவர்கள் பிடித்திருந்தாலும் சாதாரண மீனவர்களை மீட்க கடற்படை வரவேண்டிய அவசியமில்லை.

அப்படி வந்திருப்பினும் மீனவர்களை இந்திய காவற்படையிடம் இலங்கை ஒப்படைத்திருக்கும். இப்படியான சாதாரண நிகழ்வுகள் எதுவுமே இங்கு நடைபெறவில்லை.

மாறாக கடலோர காவற்படையை மீட்டதாக சொல்வதன் மர்மம் என்னவென்றால், இலங்கையிலிருந்து மீனவர்கள் போர்வையில் இந்திய மாநிலமான ஆந்திராவிலுள்ள தீவிரவாதிகளிற்கு பொருட்கள் போவது வழக்கமாக நடந்து வருகின்றது. இப்படியிருக்கும்போது, இலங்கை கடற்படையின் அனுசரணையுடன் இவற்றை செய்தது சீனா,பாகிஸ்தான் கடற்படையினர் என்பதே தெளிவாக உணரமுடிகிறது.

சமீபகாலமாக கச்சத்தீவில் சீனாவின் நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளிவந்தன. அந்த செய்திகளையெல்லாம் மறுத்த இந்திய அரசு தற்போது எதுவும் சொல்லமுடியாமல் பத்திரமாக மீட்டதாக தகவலை சொல்லி உண்மையை புதைக்கிறது.

பாகிஸ்தானியர்கள் பார்ப்பதற்கு சிங்களவர்களை போன்றே இருப்பார்கள். அதுவும் கொழும்பிலுள்ள பாகிஸ்தானிய தொடர்பாளர்கள் சிங்களம், தமிழ் இரண்டும் படித்திருப்பதால் அவர்களை இலகுவில் அடையாளம் காணமுடியாது.

சிங்கள மீனவர்கள் போர்வையில் தமிழக மீனவர்களை சுட்டுக்கொண்றது மட்டுமல்லாமல் தமிழக காவற்படையை கைது செய்த இச்சம்பவமானது தமிழக மீனவர்களிற்கு மட்டுமல்லாது தென்னிந்தியாவிற்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மீனவர்கள் போர்வையில் தாக்குதல் தொடுத்த சீனா, பாகிஸ்தான் இராணுவத்தை இந்திய காவற்படையினர் விசாரணை எதுவுமின்றி திருப்பி அனுப்பியது இந்தியாவின் தேசியத்திற்கு பெரும் அவமானமானது.

மீனவ மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தினை இந்நிகழ்வு ஏற்படுத்தியிருக்கிறது.

http://meenaham.com/?p=705

எல்லாம் ஒரு எதிர்த் தாக்கம்தான். இவைவகள் உண்மையாகவிருந்தால் பிராந்திய வல்லரசு மிகவேகமாக இன்னுமொரு ஆயுதக்குழுவை இலங்கையில் செயற்படுத்த வேண்டிய தேவையேற்படும். எங்கள் தலையில் மிளகாய் அரைக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரு எதிர்த் தாக்கம்தான். இவைவகள் உண்மையாகவிருந்தால் பிராந்திய வல்லரசு மிகவேகமாக இன்னுமொரு ஆயுதக்குழுவை இலங்கையில் செயற்படுத்த வேண்டிய தேவையேற்படும். எங்கள் தலையில் மிளகாய் அரைக்கப்படும்.

தலையை இப்படி சும்மா நீட்டிகொண்டிருந்தால்தான் அது நடக்கும். எமது தலையில் எமக்கு உள்ள உரிமையை இனியாவது நாம் புரிந்து கொள்ளவேண்டும். (புலிகளின் தலையில் போட்டுவிட்டு இனி நித்திரை கொள்ள முடியாது...... புலி இல்லை)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.