Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2005ம் ஆண்டு தேர்தலைப் புறக்கணித்ததே இன்றைய நிலைக்குக் காரணம் என்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2005ம் ஆண்டு தேர்தலைப் புறக்கணித்ததே இன்றைய நிலைக்குக் காரணம் என்கிறார் - இரா.சம்பந்தன்

2005ம் ஆண்டு தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்தமையே மக்களின் இன்றைய அவல நிலைக்குக் காரணம். அன்று தமிழ் மக்கள் புறக்கணிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் தவறானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த ஐனாபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களால் எடுக்கப்பட்ட முடிவுதான் மக்களுடைய தற்போதைய வேதனைக்குரிய நிலைக்குக் காரணம் என்பதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த முடிவு வேறுவிதமாக அமைந்திருந்தால், விசேடமாக வடக்கு – மக்கள் தள்ளப்பட்டிருக்கின்ற மிகக் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கமாட்டார்கள். நிட்சயமாக அவர்களின் வாழ்வியலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படுத்தப்பட்டு, ஓர் நிதானமான அரசியல் தீர்வை நோக்கிச் செல்வதற்கு வழிவகை ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

இந்தமுறை நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான முடிவு, நிதானமான முடிவை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்.

இதன்காரணமாகவே, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட, தேர்தல் வேட்பாளர்களின் நியமனங்கள் வெளிவந்த பின்னரும் கூட, எங்களது நிலைப்பாட்டை அறிவிக்காமல். எமது மக்களின் நிலைப்பாட்டை அறிந்தவண்ணம் இருக்கின்றோம். நாங்கள் தொடர்சியான கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றோம்.

எங்களால் எடுக்கப்படுகின்ற இறுதி முடிவு தமிழ் பேசும் மக்கள் சார்பிலும், தமிழ் மக்கள் சார்பிலும், அவர்களுடைய நலன் சார்ந்தே இருக்குமே தவிர வேறு எந்தவொரு தேவையையும் சார்ந்து அது அமையாது.

கடந்த நான்கு வருடங்களில் எமது மக்கள் எதிர்கொண்ட பலவிதமான பின்னடைவுகளும், துன்பதுயரங்களும் இருக்கின்றன. எமது மக்களை மீட்டெடுத்து, அவர்களின் சுபீட்டமான எதிர்காலத்திற்கு வழியைக் காட்டவேண்டிய கடமை நாங்கள் சுமந்திருக்கின்றோம்.

நாங்கள் ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களுனும் சந்தித்து உடனடியாகக் கவனத்தில் எடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் பேசியுள்ளோம்.

- இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில், மீள்குடியேற்றுதல், புனர்வாழ்வு, வீட்டுவசதி, தொழில் வாய்ப்பு, சமூகக்கட்டமைப்பு, போன்ற விடயங்கள்.

- யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், உயர்பாதுகாப்பு வலயங்கள் தேவையில்லை, வடக்கு – கிழக்கில் உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு மக்களை சொந்தக் காணிகளில் நிரந்தரமாகக் குடியேற்றி அவர்கள் அங்க தொழில்களை ஆரம்பிக்க வேண்டும்.

- யுத்தம் முடிவடைந்தள்ள நிலையில், வடக்கு – கிழக்கில் அமைந்துள்ள இராணுவ முகாங்கள், சோதனைச் சாவடிகள், ஏனைய இராணுவக் கட்டமைப்பு நீக்கப்பட வேண்டும். அதாவது 1983 ஆம் ஆண்டுக்கு முன்னரான நிலைக்குத் திரும்ப வேண்டும்.

- தொடர்ந்தும் இடம்பெயருதல் இடம்பெறக்கூடாது.

- வடக்கு – கிழக்கில் தனியாருக்குப் பல்வேறு அபிவிருத்திக்கென அரச காணிகள் யாராவது விநியோகித்து இருந்தால், அவ்விதமான ஒழுங்கள் மீளப்பெறவேண்டும்.

- பெருண்பாண்மை இனத்தவர்கள் அரசாங்கத்தின் உதவியுடன், அரச காணிகளை குடியேற்றுவது நிறுத்தப்பட்டு, அவை நீக்கப்பட வேண்டும்.

- வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களுக்கு வழங்பட்ட காணிகள் யுத்தம் காரணமாக அங்கு இல்லாமல் இருந்த காரணங்களினால், அவர்களின் காணிப் பத்திரங்கள் இல்லாமல் செய்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.

- பெருண்பாண்மை இனத்தவர்களைக் குடியேற்றுவது நிறுத்தப்பட வேண்டும்.

- சிறைச்சாலைகளிலும், தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டுள்ளோர் மீது சாட்சியங்கள் இல்லாது இருக்குமானால் உடனடியாக அவர்கள் விடுவிக்க வேண்டும். ஏனையோருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும். யாரையாவது சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றால் அவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

- எமது மக்களை வடக்கு – கிழக்கில் கௌரமாக, சுயமரியாதையுடன், பாதுகாப்பாக வாழ்வதற்கு அவர்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார விடயங்களை முன்னெடுப்பதற்கு ஒரு நிரந்தரமான, நியாயமான நடைமுறைப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வுத் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.

போன்ற விடயங்களை வலியுறுத்தி இருந்தோம். ஆனால் கடந்த 4 ஆண்டுகளால் அரசியில் ரீதியான முன்னெடுப்புகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் பின்னோக்கியே சென்றதாக பிராதான இரு வேட்பாளர்களும் சுட்டிக்காட்டினர்.

ஐனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அவர்களின் நிலைப்பாடு குறித்து அறிய ஆவலாக இருக்கின்றோம். அத்துடன் அறியப்படும் நிலைப்பாடுகள் குறித்து ஆராய்ந்து ஆலோசனைக்குக் கொண்டு வருகின்றோம்.

அத்துடன், விசேடமான இந்தியாவுடனும், அனைத்துலக சமூகத்துடனும் ஆராய்ந்து பேசி வருகின்றோம். இந்த விடயத்தில் அவர்களின் பங்களிப்பு முக்கியம் எனக் கருதுகின்றோம்.

அனைத்து விடயங்களும் தீவிரமான கவனத்தில் இருக்கின்ற காரணத்தினால், மக்கள் சிறிது காலத்திற்குப் பொறுமை காக்க வேண்டும். எவ்வித குழப்பங்களுக்கு உட்படத் தேவையில்லை என மக்களை அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம். தேர்தல் தொடர்பில் எமது நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும். எமது மக்களின் ஒற்றுமையைப் பாதுகாத்து ஒருமித்துச் செயற்பட வேண்டும் என்பது அவர்களின் கடமை எனக் கருதுகின்றோம்.

இத்தேர்தல் எமது மக்களுக்கு அரிய சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. அந்த அரிய சந்தர்ப்பத்தை எமது மக்கள் மிகவும் நிதானமாகவும், சாதுரியமாகவும், பயன்படுத்துவார்கள் என நாங்கள் நம்புகின்றோம்.

அத்துடன் வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பில் ஐனாதிபதி வேட்பாளர்கள் இருவருடனும் பேசியிருக்கின்றோம். அதில் உறுதியாகவும், தெளிவாகவும் நாங்கள் இருக்கின்றோம். மீண்டும் வடக்குக் கிழக்கு இணைக்கபட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது அதில் அவர் மேலும் கூறியுள்ளார்.

சிங்கள தேசத்திற்கான ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்கழிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே பெரும்பாலான தமிழ் மக்களினதும் நிலைப்பாடக இப்போதும் இருந்த வருகின்றது என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எதிர்வரும் ஐனாபதித் தேர்தலை விடவும், நாடாளுமன்றத் தேர்தலையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் குறி வைக்கின்றார்கள் என கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

ஆறு வருடங்கள் பூர்த்தியாகி வருகின்ற நிலையில்,

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பினருக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கும் என்பது கேள்விக்குரியதே! இந்த நிலையில் மக்களிடம் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகளைத் திரட்டவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வியூகம் வகுத்து வருதாகக் கூறப்படுகின்றது.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் கூட்டமைப்பு என்ற ரீதியில் அந்த மக்களின் விருப்பங்களை அறிந்து கொள்வதற்காவது சம்பந்தன் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதனை விடுத்து இந்தியா மற்றும் அனைத்துலக சமூகத்தினரும் நலன்களுக்காகத் தயாரிக்கப்படும் நிகழ்சி நிரலுக்கு அமைவாகச் சொல்வதை செய்யுமாறு தமிழ் மக்களை நிர்பந்திப்பது கூட்டமைப்பின் அரசியல் எதிர் காலத்திற்கே கேடாக அமைந்துவிடும் என்றும் அரசியல் அவதானிகள் மேலும் எச்சரித்துள்ளனர்.

http://www.pathivu.com/news/4783/68/2005/d,view.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தர் ஐயா சொன்னது கொஞ்சம், உல்டாபண்ணினது கொஞ்சம், எழுதியவரின் விருப்பு கொஞ்சம் சேர்த்த அப்பிராணிகளுக்கான புல்லுக்கட்டு. வாசிச்சுப்போட்டு சுத்தி சுத்திவரக்கூயதாக எழுதப்பட்டிருக்கு. அவர் கொடுத்த செவ்வியை கேட்டவாகளுக்கு வாசித்தவாகளுக்கு இங்கு எழுதப்படுவது புரியக்கூடும். :)

பி.பி.சி செவ்வியில் தெளிவாக சம்பந்தன் அய்யா கூறியதாவது,புலிகளின் முடிவு பிழை என்பதே.ஒரு மாத்தும் இல்லை.

ஆனால் றணில் வந்திருந்தால் முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கலாம் எனும் ஊகத்திலும் பிழை இருப்பதாக ஊகிக்க முடியவில்லை.

ஆனால்,றணில் மேற்குலகத்தாரை கைக்குள் போட்டு செய்ய வேண்டியதை ,கருணா பிளவு போல ?... இன்னும் பலவற்றை செய்திருப்பார்.இது எனது கருத்து..

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பினர் இப்படி மாறுவார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். எடுத்த முடிவு தவறென்றால் இப்போது இவர்கள் எடுத்திருக்கும் முடிவு தவறா சரியா என்று இவரால் சொல்ல முடியுமா?? இன்றெடுப்பதை நாளையே வந்து" இந்த முடிவும் தவறென்று" தலையில் கைய்யை வைக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

ஒன்றுபட்ட இலங்கைக்குள் என்று வருகின்றபோதே சரணாகதி அரசியலைத்தான் கூட்டமைப்பினர் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இது ஒருநாளும் சரிப்பட்டு வரப்போவதில்லை என்று 1976 இல் தந்தை செல்வா தலமையில் தனி ஈழம்தான் தீர்வு என்று தீர்மானிக்கப்பட்ட போதும், இவர்கள் 33 ஆண்டுகளிற்குப் பின்னர் மீண்டு அதே இடத்தில் வந்து நிற்பது எமக்கு எதையுமே பெற்றுத் தரப்போவதில்லை.

காலம் காலமாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வொன்றைக் காண்பதற்கு தமிழர்கள் சிங்களப் பேரினவாதத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் ஏன் குழம்பின என்பது சம்பந்தருக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.ஆனாலும் அவர் ரணிலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருக்கிறார். முடிவுகள் என்னவென்று அவருக்குத் தெரியாவிட்டாலும் தமிழருக்குத் தெரியும்.

அரசியல் நடத்துவதற்குக் காரணம் வேண்டுமே...இருக்கவே இருக்கு....ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வென்னும் பேச்சுவார்த்தை நாடகம். இதை வைத்தே ஒருவாறு காலத்தைக் கடத்திவிடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.