Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தமிழ் கல்வி முற்றாக புறக்கணிக்கப்படுகிறது-பிரதி கல்வி அமைச்சர் குமுறல்!

Featured Replies

கல்வி அமைச்சில் இழைக்கப்பட்ட அநீதிகள் - சச்சிதானந்தன் விளக்கம்

by வீரகேசரி இணையம்

தமிழ்க் கல்வி அபிவிருத்தி தொடர்பில் கல்வி அமைச்சு அக்கறையின்றி செயற்படுவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் தமிழ்க் கல்வி அபிவிருத்தி தொடர்பான எந்தவொரு செயற்றிட்டத்துக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படுவதில்லை என தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கல்விக்கு வழங்கப்படும் முன்னுரிமையின் அடிப்படையிலேயே தாம் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை கூற முடியும் என பிரதியமைச்சர் சச்சிதானந்தன் நேற்று அறிவித்திருந்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உபதலைவர்களில் ஒருவராக கடமையாற்றும் பிரதியமைச்சர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட தமிழ்க் கல்வி அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ளும் எந்தவொரு செயற்றிட்டத்துக்கும் ஒத்துழைப்பு அற்ற நிலையில் கல்வி அமைச்சு அக்கறையின்றி செயற்படுகின்றது. இது குறித்து கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர் ஆகியோர் பதில்கூற வேண்டும்.

தேர்தல் காலத்தில் மட்டும் தமிழ் மக்களின் தோழர்களாகவும் உறவுகளாகவும் வர்ணித்து நடித்துவரும் சிலர் எமது மக்களின் கல்வியில் அக்கறை கொண்டுள்ளார்களா? என்றால் அது இல்லை.

கடந்த நான்கு வருடங்களாக கல்வி அமைச்சினூடாக நான் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட தமிழ் கல்வி வளர்ச்சிக்கென மேற்கொண்ட செயற்றிட்டங்களுக்காக ஒத்துழைப்புகள் வழங்கப்படாத நிலையில் முட்டுக்கட்டைகளே அதிகமாக காணப்பட்டன.

ஊவாவில் அனேக பாடசாலைகள் அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. சப்ரகமுவ மாகாணத்தில் எந்தவொரு தமிழ்மொழிமூல தேசிய பாடசாலையும் இல்லை. தமிழ்க் கல்வி அபிவிருத்தி தொடர்பில் கல்வி அமைச்சர் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் அக்கறையற்ற செயற்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பலமுறை கோரிக்கை விடுத்தும் இசுறுபாடசாலை திட்டத்தில் இதுவரை எந்தவொரு தமிழ்ப் பாடசாலையும் உள்ளடக்கப்படாமை, தமிழ்க் கல்வி பறக்கணிப்புக்கு நல்லதொரு உதராரணமாகும்.

இதற்கு கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர் பதில்கூற வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கென அவுஸ்திரேலியாவிலிருந்து பெருமளவு நிவாரணப் பொருட்கள் கொண்டுவரப்பட்டன. இவற்றை அந்த மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் கடந்த நான்கு மாதங்களாக சுங்க திணைக்களத்தில் தேங்கிக் கிடக்கின்றமை வேதனையைத் தருகின்றது.

தமிழ்க் கல்வி அபிவிருத்தி தொடர்பில் கல்வி அமைச்சு அக்கறையின்றி செயற்படுகின்றது. இவ்வாறு தமிழக் கல்வி அபிவிருத்தி புறக்கணிக்கப்பட்டுவரும் நிலையில் ஜனாதிபதித் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. வேட்பாளர்களில் யார் தமிழ் கல்வி அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றாரோ அவருக்கே நாம் ஆதரவு வழங்க வேண்டிய நிலையில் உள்ளோம். இது தொடர்பாக நாளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அவர்களுடன் கலந்துரையாடவுள்ளேன்.

பெரும்பான்மையினர் தமிழ்க் கல்வி தொடர்பில் அக்கறையின்றி செய்றபடும் அதேவேளை எமது தமிழ்த் தலைமைகள் தமிழ் மக்கள் தொடர்பில் சிந்தித்து செயற்படுகின்றார்களா? அது இல்லை.

எமது நாடு சுதந்திரமடைந்த பின்னர் ஏற்படுத்தப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டம் மலையக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட சந்தர்ப்பமாகும். அதனையடுத்து “எடு என்றால் எடுக்கவும் போடு என்றால் போடவுமாக” இருந்த தமிழினத்தின் நிலை மாறி வரலாற்றில் இடம்பெற்ற அஹிம்சை வழிப்போராட்டங்களால், அதாவது மலையத்தின் தந்தை அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களால் முன்னெடக்கப்பட்ட போராட்டங்களின் தாக்கங்களால் எமக்கு வாக்குரிமை பிரஜாவுரிமை கிடைக்கப்பெற்றது.

இவ்வாறு எமது மலையக தந்தை காட்டிய பாதையில் எமது மலையக தலைமைகள் செல்கின்றார்களா என்றால் அது இல்லை. மக்கள் தேவைகளை அறிந்து எமது சமூகத்தின் வளர்ச்சிக்காக சேவையாற்றி அதன்மூலம் தமது அரசியல் இருப்பை பாதுகாக்காமல் அதனை பணம், சாராயம், அடாவடித்தனம், சர்வாதிகாரம் மூலம் தக்கவைத்துக்கொள்ள நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.

மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். எமது ஏழை தொழிலாளர்களை மதிக்க வேண்டும். இதன் விளைவுகளை சில மலையக தலைமைகள் எதிர்காலத்தில் காணப்போவது நிச்சயம் என தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article.aspx?id=17490&channel=Important

எலக்சன் சடன்ட்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் தமிழ் கல்வி முற்றாக புறக்கணிக்கப்படுகிறது-பிரதி கல்வி அமைச்சர் குமுறல்!

ஆ...

அப்பிடியே...

இதென்ன புதுக்கதையாய் கிடக்கு

ஆகலும் குமுறாதேங்கோ வெடிச்சுசிதறப்போகுது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.