Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் பொன்சேகாவை தமிழ் பேசும் மக்கள் ஏன் ஆதரிக்கக்கூடாது?

Featured Replies

எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவை தமிழ்மொழி பேசுவோர் ஏன் ஆதரிக்கக் கூடாது என்று ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ் மொழிபேசும் உறுப்பினர்கள் நேரடியாக பதிலளிக்காது சமாளித்துக்கொண்டனர். கூட்டமைப்பு தேர்தல் பிரச்சார நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாடு மாகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது .

ஜனாதிபதியின் ஆலோசகரும் ஊடக ஆலாட்சி அதிகாரியுமான ஏ.எச்.எம் அஸ்வர் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், ரிசாத் பதூர்தீன், தேசிய ஐக்கிய முன்னணியின் உப தலைவர் அபுல் கலாம் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலான ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஊடகவிலயாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்ததன் பின்னர் அமைச்சர் ரிசாத் பதூர்தீன் அங்கிருந்து வெளியேறிவிட்டார். ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி நேரத்தின் போது எதிரணியின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை தமிழ் மக்கள் ஏன்? ஆதரிக்க கூடாது என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு அமைச்சர் முரளிதரனும் தேசிய ஐக்கிய முன்னணியின் உபதலைவரும் பதிலளித்தனர்.

அபுல் கலாம் பதில்

தேசிய ஐக்கிய முன்னணியின் உபதலைவர் அபுல் கலாம் பதிலளிக்கையில், சரத் பொன்சேகா தேர்தலில் போட்டிடுவதற்கு முன்னர் இராணுவத்தளபதியாக இருந்தவர். 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி சிறுபான்மை இனம் தொடர்பில் தெரிவித்த கருத்தை சிறுபான்மையின மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் இது தமிழ் மொழிபேசுவோருக்கு நன்றாகவே தெரியும்.

இந்த கூற்றுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கடுமையாக எதிர்ப்பினை தெரிவித்திருந்தது. ஒருதடவைகள் மட்டுமல்ல இரண்டாவது தடவையாகவும் அதே கருத்தை தெரிவித்திருந்தார் என்றார்.

அமைச்சர் முரளிதரன் பதில்

இந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் முரளிதரன், பொதுவாக நாட்டில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மக்கள் நிம்மதியாகவும் சமாதானமாகவும் வாழ்கின்றனர். எதிர்காலம் தொடர்பில் தெளிவான சிந்தனையும் கொள்கையும் ஜனாதிபதியிடம் இருக்கின்றது என்றார்.

http://www.virakesari.lk/article.aspx?id=17503&channel=Important

ஓருவேளை சரத் ஜனாதிபதியாக வந்து விட்டால் அவருடன் போய் ஒட்டிக்கொள்வதுக்கு வசதியாக இப்பவே அடக்கி வாசிக்க தொடங்கி விட்டினம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓருவேளை சரத் ஜனாதிபதியாக வந்து விட்டால் அவருடன் போய் ஒட்டிக்கொள்வதுக்கு வசதியாக இப்பவே அடக்கி வாசிக்க தொடங்கி விட்டினம்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67295

இந்த செய்தியும் தொடர்புபட்டதுதான். நீங்களே சரத் வாறதவிட மகிந்த வாறது நல்லது எண்டு எழுதியிருந்தீங்கள்.... விதி எல்லாருக்கும் ஒண்டுதான். :lol:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67295

இந்த செய்தியும் தொடர்புபட்டதுதான். நீங்களே சரத் வாறதவிட மகிந்த வாறது நல்லது எண்டு எழுதியிருந்தீங்கள்.... விதி எல்லாருக்கும் ஒண்டுதான். :lol:

சரத்தை விட மகிந்த நல்லவன் எண்டு நான் எழுதவில்லை... சரத்தை விட மகிந்த நல்ல சுவையான எலும்பு துண்டுகளை போடுவான் நாங்கள் எடுத்து சூப்பலாம் எண்டும் நான் எழுதவில்லை...

மேற்குலகம் எதிர்பார்க்கும் ஆட்ச்சி மாற்றம் இலங்கையில் நிகழ்வது தமிழர்களுக்கு எந்த வகையிலும் நல்லது இல்லை எண்றுதான் எழுதியும் இருக்கிறேன்...

தமிழர் ( புலிகள் அல்ல) சிங்களவரிடம் தோற்றது இலங்கையில் தமிழர்கள் போரில் சிக்கி இறக்கவில்லை இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் எண்று நிறுவ முடியாமையால் தான்...

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என்பதை நிறுவி இருந்தால் தனிநாட்டுக்கான அங்கீகாரம் கூட சாத்தியமாக இருந்து இருக்கும்... ஒரு இனப்படுகொலை செய்தவரை ஆட்ச்சியில் இருந்து அகற்றுவதோ அல்லது மாற்றுவதோ அந்த நாட்டின் மீதான இனப்படுகொலை சாயத்தை கழுவி விட மட்டுமே செய்யும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரத்தை விட மகிந்த நல்லவன் எண்டு நான் எழுதவில்லை... சரத்தை விட மகிந்த நல்ல சுவையான எலும்பு துண்டுகளை போடுவான் நாங்கள் எடுத்து சூப்பலாம் எண்டும் நான் எழுதவில்லை...

மேற்குலகம் எதிர்பார்க்கும் ஆட்ச்சி மாற்றம் இலங்கையில் நிகழ்வது தமிழர்களுக்கு எந்த வகையிலும் நல்லது இல்லை எண்றுதான் எழுதியும் இருக்கிறேன்...

தமிழர் ( புலிகள் அல்ல) சிங்களவரிடம் தோற்றது இலங்கையில் தமிழர்கள் போரில் சிக்கி இறக்கவில்லை இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் எண்று நிறுவ முடியாமையால் தான்...

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என்பதை நிறுவி இருந்தால் தனிநாட்டுக்கான அங்கீகாரம் கூட சாத்தியமாக இருந்து இருக்கும்... ஒரு இனப்படுகொலை செய்தவரை ஆட்ச்சியில் இருந்து அகற்றுவதோ அல்லது மாற்றுவதோ அந்த நாட்டின் மீதான இனப்படுகொலை சாயத்தை கழுவி விட மட்டுமே செய்யும்...

ஏப்ரல்மாதத்தில் நாங்கள் வீதிமறியல் செய்துகொண்டிருக்கேக்க வெளிநாட்டு தூதுவர்கள் ஏதோவெல்லாம் செய்யச்சொல்லி சொன்னார்கள்., ஏற்பாட்டாளர்களின் குறிக்கோளும் நீங்கள் சொல்லுவதுபோல நிறுவுவதுதான், அதை டீல் போட்டபோதே கண்டுகொண்டார்களோ தெரியாது! முள்ளிவாய்க்காலால் வந்துகொண்டிருந்த சனம் என்ன சொல்லியிருக்கும் என்று இப்போது விளங்குகிறது. வெள்ளைக்கொடியுடன் வந்தவாகளை கொன்றது மட்டும் தற்போது நிலுவையில் உள்ளது, டிபிஎஸ் எழுதியுள்ளதுகூட அந்தநேரம் சரத் கொடுத்த வாக்குமூலங்கள்தான். எப்படி முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான், ஒரு பகுதிமீது மட்டும் பிழை இருந்திருந்தால் எதிராக முடிவு வரும்...எப்போதோ வந்திருக்கும். இங்கு ஒருதரப்பு தங்களது குற்றச்சாட்டுகளை மறைத்து மற்றப்பகுதிமீது முழுக்குறறத்தையும் சுமத்துவது.... எந்த மாற்றங்களையும் கொண்டுவராது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல்மாதத்தில் நாங்கள் வீதிமறியல் செய்துகொண்டிருக்கேக்க வெளிநாட்டு தூதுவர்கள் ஏதோவெல்லாம் செய்யச்சொல்லி சொன்னார்கள்., ஏற்பாட்டாளர்களின் குறிக்கோளும் நீங்கள் சொல்லுவதுபோல நிறுவுவதுதான், அதை டீல் போட்டபோதே கண்டுகொண்டார்களோ தெரியாது! முள்ளிவாய்க்காலால் வந்துகொண்டிருந்த சனம் என்ன சொல்லியிருக்கும் என்று இப்போது விளங்குகிறது. வெள்ளைக்கொடியுடன் வந்தவாகளை கொன்றது மட்டும் தற்போது நிலுவையில் உள்ளது, டிபிஎஸ் எழுதியுள்ளதுகூட அந்தநேரம் சரத் கொடுத்த வாக்குமூலங்கள்தான். எப்படி முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான், ஒரு பகுதிமீது மட்டும் பிழை இருந்திருந்தால் எதிராக முடிவு வரும்...எப்போதோ வந்திருக்கும். இங்கு ஒருதரப்பு தங்களது குற்றச்சாட்டுகளை மறைத்து மற்றப்பகுதிமீது முழுக்குறறத்தையும் சுமத்துவது.... எந்த மாற்றங்களையும் கொண்டுவராது. :lol:

ஆனால் இரு பகுதியில் எந்த பகுதி வந்தாலும் எலும்புதுண்டுகளை முன்புபோல் அள்ளி வீசுவார்களா என்ற உங்களது ஆதங்கம் நியாயமானதே. முன்பு புலியை காட்டிதருகிறேன் என்று போய் சிங்களவனின் கக்கூசுக்குள் பதுங்கியதுபோல். இனிமேலும் பதுங்கவிடுவானோ தெரியாது. தவிர நாங்கள் வெட்டி புடுங்கோவோம் ஆனால் புலிதான் விடுகுதில்லை என்றும் அவிச்சுகொட்டவும் முன்பு வசதியாய் இருந்தது. உலகவரலாற்றிலேயே துரோகிகளுக்கு வித்தியாசமாக ஆப்பு வதை;தது புலிகள்தான். இனி கவலைபட்டு என்ன செய்வது தெண்டி இழுக்கவேண்டியதுதான்.

நீங்கள் சொல்வது உண்மைதான் ஏப்ரல் மாதத்தில் பேரணிகள் நடந்ததுதான்.

ஏப்ரல்மாதத்தில் நாங்கள் வீதிமறியல் செய்துகொண்டிருக்கேக்க வெளிநாட்டு தூதுவர்கள் ஏதோவெல்லாம் செய்யச்சொல்லி சொன்னார்கள்., ஏற்பாட்டாளர்களின் குறிக்கோளும் நீங்கள் சொல்லுவதுபோல நிறுவுவதுதான், அதை டீல் போட்டபோதே கண்டுகொண்டார்களோ தெரியாது! முள்ளிவாய்க்காலால் வந்துகொண்டிருந்த சனம் என்ன சொல்லியிருக்கும் என்று இப்போது விளங்குகிறது. வெள்ளைக்கொடியுடன் வந்தவாகளை கொன்றது மட்டும் தற்போது நிலுவையில் உள்ளது, டிபிஎஸ் எழுதியுள்ளதுகூட அந்தநேரம் சரத் கொடுத்த வாக்குமூலங்கள்தான். எப்படி முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான், ஒரு பகுதிமீது மட்டும் பிழை இருந்திருந்தால் எதிராக முடிவு வரும்...எப்போதோ வந்திருக்கும். இங்கு ஒருதரப்பு தங்களது குற்றச்சாட்டுகளை மறைத்து மற்றப்பகுதிமீது முழுக்குறறத்தையும் சுமத்துவது.... எந்த மாற்றங்களையும் கொண்டுவராது. :lol:

அரசாங்கத்தோடு இருப்பவர்கள் சொல்பவைக்கும் உண்மையில் பாதிக்க பட்டு வந்த மக்கள் சொல்லும் சொல்லுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது... செய்தியாளர்கள் எல்லாரையும் உண்மையை மறைக்க தடை செய்ய பட்டனர்... முகாம்களுக்குள்ளும் மக்களை குடியேற்றிய பிரதேசங்களுக்கும் இண்றுவரை வெளித்தொடர்பு கிடையாது... அப்படி போபவர்கள் இராணுவ கண்காணிப்பில்... அரசாங்கத்தின் நிழலில் இருக்கும் தமிழ் ஊடகவியலாளருக்கு கண்ணுக்கு தெரியாத விடயம் உது...

அதே போல சனத்தை கொலை செய்ய இராணுவத்தை புலிகள் தூண்டி விட்டார்கள் எண்று சொல்லி வந்தவர்தான் தாங்கள்... இண்டைக்கு இரு தரப்பும் கொலை செய்தது எண்டு இடை செருகல் செய்கிறீர்...

புலிகளால் கொல்லப்பட்ட ஒரு மக்களுக்காக பாடு பட்ட உண்மை தமிழன் யார் என்பதை நீண்டகாலமாக கேக்கிறேன் சொல்லதான் ஆள் கிடைக்குது இல்லை... அந்த குறையை தாங்கள் தீர்த்து விடுங்கோவன்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.