Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றுமையினை பேணவேண்டும், யாரையும் ஆதரிப்பதில்லை என்பதே கூட்டமைப்பு எம்.பி க்களின் பெரும்பாலானோர் கருத்து.

Featured Replies

நாளை கூட்டமைப்பு கூடுகின்றது. இந்த கூட்டத்தில் பலகருத்துக்கள் இருந்தாலும் நாளைய கூட்டத்தில் இரு பிரதான கருத்துக்களே வாதிடப்படவுள்ளன. இந்த நிலையில் ரணில் அணிக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நாம் நிம்மதியாக அரசியல் செய்ய முடியும் என்ற கருத்து உட்பட மஹிந்தவை வீட்டிற்கு அனுப்புவோம் என்ற கருத்தில் இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமசந்திரன், துரை ரட்னசிங்கம், இமாம், சிவ சக்தி ஆனந்தன், சிறில் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

மஹிந்தவோ சரத் பொன்சேகாவோ ஒப்பீட்டு ரீதியாக நல்லவர்கள் என தமிழ் மக்களிற்கு சிங்கள தலைவர்களை சிபார்சு செய்ய் வேண்டிய தேவை இல்லை. அவசியமும் இல்லை. யாரையுமே நம்பி மக்களுக்கு நாம் சிபார்சு செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டில் கஜேந்திர குமார் பொன்னம்பலம், கஜன், பத்மினி, செல்வம், சிவாகிலிங்கம், சிறிகாந்தா, கனகசபை, அரியனேந்திரன், ஜெயானந்த மூர்த்தி, தன்கேஸ்வரி, கிஷோர், உட்பட ஏனையோர் உள்ளனர்.

இதில் கிஷோர், தங்கேஸ்வரி ஆகியோர் பாராளுமன்ற தேர்தலில் வேறு நிகழ்ச்சினிரலில் இருந்தாலும்இந்த விடயத்திற்கு தாம் ஒத்துபோவதாக கூறியுள்ளனர்.

இது இவ்வாறு இருக்க சில எம்பிக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியாத நிலையிலும் உள்ளனர். கனகசபை எம்.பி இந்தியாவில் உள்ளார். ஜெயானந்த மூர்த்தி வெளி நாட்டில், சுரேஸ் பிரேமசந்திரன் இந்தியாவில் இருந்து இன்று வரலாம் என நம்ப படுகின்றது, இவ்வாறான நிலையும் உள்ளது.

ஆகவே கூட்டமைப்பில் உண்மையான ஜன நாயக அடிப்படையில் பெரும்பான்மையானோர் கருத்து எடுபடுமா? அல்லது சம்பந்தன் ஐயா தனது கருத்தினையே வெளியிடுவாரா? அல்லது இரண்டாக பிரிந்து கருத்துக்களை வெளியிடுவார்களா என்பதே நாளைய முடிவு. ஆனால் கூடுதலானவர்கள் இந்த ஜனாதிபதி தேர்தல் முக்கியம் அல்ல ஆனால் பாராளுமன்ற தேர்தல் முக்கியம் ஆகவே அதில் தான் நாம் ஒற்றுமையுடன் கவனத்தினை செலுத்தவேண்டும். ஜனாதிபதி தேர்தலை மக்கள் முடிவாக விடுவோம் அல்லது பகிஸ்கரிப்போம் என்று வாதிடுகின்றனர்.

இதே வேளை அனைத்து கூட்டங்களிலும் சம்பந்தன் , மாவை, சுரேஸ் ஆகியோரே பங்குபற்றூவதாகவும் சில கூட்டங்களிற்கு தம்மை அழைப்பது இல்லை என்ற குற்ற சாட்டுக்களும் வலுத்து வருகின்றது. இதற்கு சம்பந்தன் தரப்பில் மற்றவர்களுக்கு கதைக்க தெரியாது எனவும் ஆங்கில விளக்கங்களும் குறைவு எனவும் கூறியுள்ளார். அப்படியெனின் கஜேந்திர குமார் பொன்னம்பலம், சிறிகாந்தா ஆகியோருக்கும் இந்த பிரச்சினை இருக்கா என கேட்கின்றனர் பாதிக்கப்படும் அணியினர்.

இதே வேளை பாராளுமன்ற தேர்தலில் சில புத்தி ஜீவிகளையும் களம் இறக்கவேண்டும் ஏனெனில் தற்போதைய எம்பிக்களில் வெளி நாடுகளிற்கு சென்று பேச முடியாது எனவும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது. இந்த கருத்து சில வெளி நாட்டு தமிழ் புத்திசாலிகளால் முன்வைக்கப்படுகின்றதாம். இந்த கருத்தானது பாராளுமன்ற தேர்தலில் கொள்கை ரீதியாக உறுதியாக இருக்கும் இப்போதைய சில உறுப்பினர்களை நீக்கி விட்டு நிலைமைக்கேற்ப தடம் மாறும் சிலரை உள்வாங்குவதற்கு சம்பந்தன் அவர்கள் திட்டம் இடுவதாகவும் கூறப்படுகின்றது.

ஆகவே உள்ளுக்குள் இருக்கும் சில அடிப்படை திட்டங்கள் கூட இந்த ஜனாதிபதி தேர்தலில் பிரதிபலிக்கலாம்.

மேற்கூறப்பட்ட தகவல்கள் 12 மேற்பட்ட இருதரப்பு எம்.பி க்களுடன் பேசியபோது வந்தவை. ஆகவே பொதுமக்களும், புலம்பெயர்ந்தவர்களும் கூட்டமைப்பின் ஒற்றுமையினையும், கொள்கைரீதியான முடிவுகளில் ஒன்று பட்டு நிற்பதற்கும் கூட்டமைப்பிற்கு உதவவேண்டும் அல்லது ஆலோசனை கூறவேண்டும். வெளி நாடுகளில் உள்ள சிலர் கூட்டமைப்பிற்கு பணத்தினை கொடுத்து தமது கருத்தினையும் திணிக்கும் நிலை தற்போது உள்ளது. உதாரணம் கனடாவில் இருந்து ஒருவர் பல இலட்சம் ரூபாய்களை சம்பந்தன் ஐயாவிற்கு தேர்தல் நடவடிக்கைக்கு கொடுத்துள்ளார். ஆனால் இது ஏனைய எம்பிக்களுக்கு தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. பொது தேவைக்கு கொடுத்தாலும் இந்த விடயங்களில் சில வெளிப்படை தன்மைகள் பேணுவது சிறந்தது. http://www.eelanatham.net/news/important

சரியான முடிவு. சிங்கள தலைமைகளை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு வாக்கு போடுங்கள் என்று சொல்ல தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை.

தமிழர் தமிழராக அரசியல் நடாத்த வேண்டும். ஆயுதபோர் மவுனிக்கலாம். அரசியல் போர் தொடர வேண்டும்.

தனி தமிழ்மாநில ஆட்சி உருவாகும் வரை ஆதல் தனித்து அரசியல் செய்ய வேண்டும்.

சிங்கள அரசியல் தலமையை இனம் காட்டி நாங்கள் மீண்டும் அடங்கி அவர்கள் கீழ் போக வழிகாட்ட கூடாது.

புலம் பெயர் தமிழர் நாடு கடந்த அரசுக்கான வேலை. தமிழ் தேசிய கூட்டமைப்பு சுதந்திரத்துடன் கூடிய தமிழர் தன்னாட்சி அமைப்பு உருவாக்க அரசியல் நடாத்தல்.

இரண்டும் சேரும் போது அரசியல் பலம் பேரம் பேசும் அளவுக்கு உருவாகும்.

அதை விட்டு மீண்டும் சிங்கள கட்சிகளின் பின் வால் பிடிக்க போக கூடாது.

சம்பந்தரும் சிவாஜிலிங்கமும் கயிறு இழுக்கிறார்கள் இடையில் ஒன்றும் செய்ய முடியாதவர்களாய் இவர்கள் இருக்கப்போகிறார்கள். எத்தனை பேர் மகிந்தவின் ஆட்சியில் அமைச்சராக இருக்கப்போகிறார்கள்.? இன்னும் சில நாட்களில் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மகிந்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட சிந்தனைகளை ஆழமாக அலசிப் பார்க்கும் பொழுது தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளையோ அதன் மூலக் கோட்பாடுகளையோ அவர் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. கொள்கை ரீதியாக எமக்கும் அவருக்கும் மத்தியிலான இடைவெளி மிகப்பெரிது. எனினும் அவர் நடைமுறை அரசியலில் நம்பிக்கை கொண்ட யதார்த்தவாதி என்று கருதப்படுவதால், சமாதான வழிமுறையை எவ்விதம் கையாளப் போகிறார் என்பதையும், தமிழ் மக்களுக்கு எவ்விதம் நீதி வழங்கப் போகின்றார் என்பதையும் முதலில் நாம் அறிந்து கொள்வது அவசியம்.

-- மாவீரர் நாள் உரை 2005

தமிழ் மக்களுக்கு நீதி வழங்கிய மகிந்த இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வந்து தமிழர் பிரதேசத்தை பொருளாராத ரீதியில் முன்னேற்றுவார் என்று நம்பலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.