Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் பொன்சேகா பல விடயங்களில் தமிழ் கூட்டமைப்பிற்கு உத்தரவாதம் – அவர்களின் ஆதரவு கிடைக்கலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரத் பொன்சேகா பல விடயங்களில் தமிழ் கூட்டமைப்பிற்கு உத்தரவாதம் – அவர்களின் ஆதரவு கிடைக்கலாம்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணத்திட்டங்களும் சமாதான வழிமுறைகளும் அடங்கிய ஆவணம் ஒன்றை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தனிடம் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா கையளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கையளிக்கப்பட்ட ஆவணத்தில் 10 அம்சங்கள் உள்ளடக்கப்படடுள்ளன. சிவில் நிர்வாகம் மற்றும் இயல்பு நிலையை நிலைநாட்டுதல், துணைப்படைகள் மற்றும் ஆயுதக்குழுக்களை தடைசெய்தல், இடம்பெயர்ந்தவர்களுக்கான துரித மீள்குடியேற்றம், மற்றும் புனர்வாழ்வு அளித்தல் போன்றவை இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு படையினரை மாற்று இடங்களில் நிலைநிறுத்துவதனை அடிப்படையாகக்கொண்டு தேசிய பாதுகாப்பு மற்றும் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படுவதுடன், மிகமுக்கிய இடங்களில் மாத்திரமே பாதுகாப்பு படையினர் நிலைநிறுத்தப்படுவர் எனவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணி மற்றும் விவசாயம் ஆகியவற்றை பொறுத்தமட்டில் தற்போது பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளும் கட்டங்களும் அதன் சட்டபூர்வ உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையற்ற வகையில் அரசின் தேவைகளுக்கு ஒதுக்கப்படுவது நீக்கப்படும் எனவும், மீன்பிடித்தலுக்கான முழுஉரிமை பற்றியும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் வாணிப வர்த்தக தடைகள் அனைத்தும் நீக்கப்ப்படும் எனவும் பிராந்தியத்தின் போக்குவரத்து வசதிகள் அனைத்தும் முறையாகச் செய்துகொடுக்கப்படும் என்பதுடன் யுத்தத்தின் போது தமது பாசத்திற்குரியவர்களை இழந்த அனைவருக்கும் விசேட நிவாரணம் வழங்கப்படும் எனவும் ஆதாரங்கள் ஏதுமில்லாது தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் ஒரு மாதகாலத்திற்குள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் தற்போது அமுலிலுள்ள அவசரகாலச்சட்டம் சகல மக்களினதும் அடிப்படை உரிமைகளை பாதிப்பதால் அது நீக்கப்படும் எனவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்படடுள்ளது.

இது இவ்வாறு இருக்கையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக வந்த செய்திகள் மக்களை குழப்பமடைச் செய்துள்ளது. பொன்சேகாவினால் வழங்கப்பட்ட ஆவணத்திலுள்ள விடயங்களில் வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்களின் அடிப்படையினல் இன்றைய தினம் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் மற்றும் ஆதரவின் பேரில் பொன்சோகவிற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கலாம் என்ற தகவலினை கூட்டமைப்புடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

– மீனகம் செய்தியாளர்

http://meenakam.com/?p=2074

ஆகா.... இனி இலங்கையில் சமாதானமும்.... சாந்தியும் ஆனந்தமும் பொங்கி வலியபோகுது..

நானும் போனால் அந்த ஆனந்த மலையில் நீராடலாம்...

எனது பிறவிப்பயனை அடைய இதோ புறப்படுகிறேன்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜணநாயகத்தில் தான் அறிக்கைகளும், உறுதிமொழிகளும் எளிதாக கிடைப்பனவாயிற்றெ...

பேரம் முடிந்து கூட்டணியும் முடிவாயிற்று இனி இவர்களை யார் கேட்க்க போகிறார்கள்..

இதில இன்னோமொன்ரை யோசிக்கவேணும்....

கரணம் தப்பினால் மரணம் எண்டு சொலுரவேல்

அதைமாதிரி கூட்டமைப்பு சரத்திர வாலைப்பிடிக்க அங்கால ராசபக்ச கடுப்பாயிடுவார்.... அவரேன்டாலும் பரவாயில்ல அவற்ற தம்பியைப் பற்றி தெரியும்தானே.

தேர்தலில ராசபக்ச வேண்டுட்டால் சரத் அமேரிக்கா ஓடிடுவான்... ரணில் ஒரு பச்சோந்தி... கூட்டமைப்பை நினைச்சாதான் பாவமா இருக்கு.

அங்குவை வைச்சில்லோ அடிப்பாங்கள்...

திரும்பவும் யோசிச்சு அரனiஎநனரபெமழ.

  • கருத்துக்கள உறவுகள்

-----

அதைமாதிரி கூட்டமைப்பு சரத்திர வாலைப்பிடிக்க அங்கால ராசபக்ச கடுப்பாயிடுவார்.... அவரேன்டாலும் பரவாயில்ல அவற்ற தம்பியைப் பற்றி தெரியும்தானே.

தேர்தலில ராசபக்ச வேண்டுட்டால் சரத் அமேரிக்கா ஓடிடுவான்... ரணில் ஒரு பச்சோந்தி...

------

தேர்தல்லை சரத் வென்றால்..... மகிந்தவும், தம்பியாரும் அம்பாந்தோட்டையில் நிற்கவா போகின்றார்கள்?

அவர்களும் அமெரிக்காவுக்கோ..... ஆபிரிக்காவுக்கோ தான் போக வேணும்.

உண்மையில் தேர்தல் நடக்கும் தினத்தில், மதியத்திற்கு பின் இவர்கள் அனைவரும் நாட்டில் இருக்கமாட்டார்கள்.

இப்பவே விமானச்சீட்டு எல்லாம் வாங்கி வைத்திருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.