Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்பு சரத் ஒப்பந்தத்தை முறியடிக்க ஒன்றுபடுவோம் – மகிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பு சரத் ஒப்பந்தத்தை முறியடிக்க ஒன்றுபடுவோம் – மகிந்த

நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ளபோதிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் சரத்பொன் சேகா மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக அது மீண்டும் உருவாவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

குருநாகல் பகுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 30 வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தனி ஈழம் என்ற பெயருக்கு இடமில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று அந்நிலை இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்த அவர், இதனை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

http://meenakam.com/?p=3368

பண்டா செல்வா ஒப்பந்தம் மாதிரி இதையும் பயன்படுத்தி நாட்டை குட்டிச்சுவர் ஆக்கிரது என்றே அடம்பிடிக்கிறாங்கள்..

உலகத்தில உரிமைக்காக போராடுபவர்களை அழித்து விடலாம் ஆனால் உரிமைகளை கொடுக்க மறுப்பவர்களை அழிப்பது ரொம்ப கஷ்டம்

கூட்டமைக்கு ஏதோ எழுதிக்கொடுத்ததை ஒப்பந்தமாக்கிப் போட்டாங்களா?

கூட்டமைப்பை இங்கே மகிந்த புரட்டி எடுக்கிறான்,டில்லியில் அன்பாக கூப்பிட்டு மகிந்தவின் நண்பர் குழாம் எச்சரிக்கை விடும் பாணியில் கதை போகுது..,

இந்த இணைப்பை பாருங்கள்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா பல்வேறுபட்ட உத்தரவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை இந்தியாவிற்கு தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்திய அதிகாரிகளுடன் பேச்சவார்தைகளை நடத்தியுள்ளது.

இந்த சந்திப்புகளின் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு மேற்கொண்ட தீர்மான் குறித்து இந்திய அரசாங்க தரப்பிற்கு தெளிவு படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர்களின் விருப்பங்களுக்கு அமைவாகவே தாங்கள் ஆட்சி மாற்றத்திற்காக கரத் பொன்சேகாவை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாகவும் கூட்டமைப்பினர் சார்பில் இந்திய அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவா கூறினார்.

நாளைய தினம் நாடு திரும்பும் கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவான பரப்புரை நடவடிக்கைகளை முழு வீச்சுடன் ஆரம்பிக்கவுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தல் பரப்புரைகளின் போது இந்தியாவிற்கோ தமிழக அரசிற்கோ நெருக்கடி ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை கூட்டமைப்பு வெளியிடக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவு இந்திய தரப்பால் வழங்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த யுத்தத்தின் பின்னணியில் இந்தியா இருந்துள்ளமை குறித்தோ தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை இந்தியா பெற்று தர தவறியுள்ளதாகவோ கூட்டமைப்பினர் பரப்புரைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் அவருடன் இணைந்து தாங்கள் முன்வைக்கும் தீர்விற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

http://www.pathivu.com/news/5101/54//d,view.aspx

நடைபெற்று முடிந்த யுத்தத்தின் பின்னணியில் இந்தியா இருந்துள்ளமை குறித்தோ தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை இந்தியா பெற்று தர தவறியுள்ளதாகவோ கூட்டமைப்பினர் பரப்புரைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதாலைதான் சிவாஜிலிங்கத்தை நாடுகடத்தினவையோ....???

முள்ளிவாய்க்காலில் ஹிட்லரையும் மிஞ்சிய ஆட்டத்திற்கு மகிந்தா அன் கோ இற்கு விசேட ஆலோசகர்களாக செயற்பட்டவர்களாயிற்றே,குற்றம் உள்ளவரை குறு குறுப்பிற்கு குறைவிருக்காது.எல்லாவற்றையும் மறைக்க ஜில்லா கலெக்டர் வேசம் தரிக்கின்றார்கள் போல,இதன் ஒரு அங்கமாகத்தான் கலெக்டர் ஆபீஸ் வாசலில் வைத்தே சிவாஜி திருப்பிஅனுப்பப் பட்டிருக்கிறார் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பு என்பது புலிகளால் உருவாக்கபட்ட அமைப்பு, அது மக்கள் நலன் சார்ததாகவே எப்போதும் இயங்கும், கூட்டமைப்பு மீது மக்களுக்கு என்றும் நம்பிக்கை உண்டு, கூட்டமைப்பு ஒரு லட்சம் மக்களினதும், முப்பதாயிரம் போராளிகளினதும் உயிர்களை எளிதில் மறந்து விட மாட்டாது. அமிர்தலிங்கத்தின் பாதை ஆபத்தானது, இது எச்சரிக்கை அல்ல, தமிழர்களது கட்டளை. :)

Edited by சித்தன்

கூட்டமைப்பு என்பது புலிகளால் உருவாக்கபட்ட அமைப்பு, அது மக்கள் நலன் சார்ததாகவே எப்போதும் இயங்கும், கூட்டமைப்பு மீது மக்களுக்கு என்றும் நம்பிக்கை உண்டு, கூட்டமைப்பு ஒரு லட்சம் மக்களினதும், முப்பதாயிரம் போராளிகளினதும் உயிர்களை எளிதில் மறந்து விட மாட்டாது. அமிர்தலிங்கத்தின் பாதை ஆபத்தானது, இது எச்சரிக்கை அல்ல, தமிழர்களது கட்டளை. :)

ஜானாதிபதி தேர்தலை தொடர்ந்து வரும் நாடாளுமண்ற தேர்தலில் புலிகளால் பரிந்துரைக்க பட்ட வேட்ப்பாளர்கள் எவருக்கும் இந்த முறை ஆசனம் கிடையாது எண்று தமிழரசு கட்ச்சி அவர்களிடம் சொல்லி விட்டது... புலி சாயத்தை கூட்டமைப்பு எப்போதோ வெழுத்து விட்டது...

போன தேர்தலில் புலிகள் இரணிலை ஆதரிக்காதது தான் தமிழ் மக்களின் இன்னலுக்கு காரணம் எண்று சம்பந்தன் பிபிசி தமிழ் வரைக்கும் சொல்லும் அளவில் தான் இருக்கிறது புலிக்கும், கூட்டமைப்புக்குமான சம்பந்தம்...

Edited by தயா

கூட்டமைப்பு சரத் ஒப்பந்தத்தை முறியடிக்க ஒன்றுபடுவோம் – மகிந்த

நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ளபோதிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் சரத்பொன் சேகா மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக அது மீண்டும் உருவாவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

குருநாகல் பகுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 30 வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தனி ஈழம் என்ற பெயருக்கு இடமில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று அந்நிலை இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்த அவர், இதனை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

http://meenakam.com/?p=3368

அவன் தெளிவாக தான் இருக்கிறான்..

Edited by shanu thinesh

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.