Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இயல்பு வாழ்வினை மீட்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் இராஜதந்திரம்-இதயச்சந்திரன்

Featured Replies

மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பின் மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன்,

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்த விவகாரம், கிழக்கு அரசியலில் புதிய உதயத்தை தோற்றுவித்துள்ளது.

முழு நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களோடு இணைந்திருப்பவர், எதிர்க்கட்சி வேட்பாளரை ஆதரிப்பதற்கு மிகுந்த துணிச்சல் தேவை.

மக்களின் உணர்வலைகளைப் புரிந்து கொண்ட ஒருவரால் தான் இத்தகைய முடிவினை மேற்கொள்ள முடியும். சரத்திற்கு ஆதரவு தெரிவித்தவுடன் இவருக்கு வழங்கப்பட்ட சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் அரசால் நிறுத்தப்பட்டுள்ளன.

இத்தகைய பழிவாங்கல் நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் மேற்கொள்வார்களெனத் தெரிந்திருந்தும் தனது முடிவினை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இவரை அரசியலிற்குள் அழைத்து வந்தவர்கள் குறித்து அவர் கவலைப்படவில்லை. குறைந்த பட்ச அதிகாரப் பகிர்வில்லாத உள்ளூராட்சி சபையில் இருப்பதை விட, ஆட்சி மாற்றமொன்று ஏற்படுவதனூடாக, அதிகாரத்தைப் பெறலாமென்கிற நம்பிக்கை சிவகீதாவுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.

புதிதாகப் பாதை அமைப்பதோ அல்லது சீர்செய்வதோ, அபிவிருத்தியின் உச்சமென அரசிற்கு வக்காலத்து வாங்குபவர்கள் மத்தியில் மட்டு. மாநகர முதல்வரின் அதிரடி அறிவிப்பு சற்று வித்தியாசமாகவே தென்படுகிறது.

உணவில் தன்னிறைவும் நேர்மையுள்ள சமூகமும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிரந்தர சமாதானமும் காடுகளையும் விலங்கினங்களையும் சுற்றாடலையும் பாதுகாக்கும் முன்னெடுப்புகளும் மஹிந்த சிந்தனை இரண்டில் கூறப்படுகிறது.

இவையெல்லாம் இந்த நாட்டில் இதுவரை இருந்ததில்லை என்பதனை சிந்தனை இரண்டாம் பாகம் ஏற்றுக்கொள்வது போலுள்ளது.

அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய தீர்வு, சமாதானம், நல்லிணக்கம் போன்ற தேர்தல் கால வார்த்தைகளின் அர்த்தங்களை தமிழ் பேசும் மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.

துரையப்பா விளையாட்டரங்கில், மனிதாபிமானமிக்க ஜனநாயகவாதியாகப் புகழாரம் சூட்டப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் "சிந்தனை மூன்றாம் பாகம்' இனிவரும் காலங்களில் வெளியிடப்படுமா வென்பதை, ஜனவரி 26 ஆம் திகதி தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கப் போகின்றன.

அதேவேளை தமிழர் தரப்பில் ஏற்படும் சடுதியான மாற்றங்கள், ஜனாதிபதியை கலங்கடித்துக் கொண்டிக்கின்றன.

சரத்தை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரம் அதிகார நாற்காலியை இழப்பேனென்று தெரிந்தும் எதிரணி வேட்பாளரின் பக்கம் சாய்ந்த சிவகீதாவின் திடீர் முடிவு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர் மட்டத் தலைவர்களின் வெளியேற்றம் போன்றவை, வாக்குச் சம வலுவில் மாறுதல்களை உருவாக்குமென்பதை அதிபர் புரிந்து கொள்கிறார்.

சமாதான காலத்தில் படைவலுச் சமநிலையில் மாற்றங்கள் ஏற்பட உதவி புரிந்த பிராந்திய வல்லரசாளர்களின் அனுசரணை இருந்தும் ஜனாதிபதியால் தமிழர் தரப்பை வென்றெடுக்க கடினமாக இருப்பதாகத் தெரிகின்றது. இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் துன்பச் சிலுவை சுமந்து நீண்ட தூரம் பயணித்துள்ளனர்.

ஆட்சி மாற்றமென்பது, மூச்சு விடும் நேரத்திற்கான கால அவகாசம் தான். தமிழரசுக் கட்சியின் வருடாந்த தேசிய மாநாட்டில் இரா. சம்பந்தன் தாயகம், தேசியம், தன்னாட்சி என்கிற அடிப்படை கோட்பாடுகளை மீண்டும் வலியுறுத்தி இயல்பு வாழ்வு நிலை நிறுத்தப்பட வேண்டுமென்பதன் அவசியத்தை முன்னிலைப்படுத்தியுள்ளார்.

படை வலுவோ அல்லது அரசியல் பலமோ இல்லாத நிலையில் எஞ்சியுள்ள 22 நாடாளுமன்ற உறுப்பினர்களை முன்வைத்தே அடுத்த கட்ட அரசியல் நகர்வினை மேற்கொள்ள முடியும்.

அதிலும் மக்களின் பங்களிப்போடு இணைந்த அரசியல் போராட்டங்களை நடத்தக்கூடிய சாத்தியமான களச் சூழலும் தற்போதைய ஆட்சியில் இல்லை.

முள்ளிவாய்க்கால் வரை, தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டினை உயர்த்திப் பிடித்துச் சென்ற 3 இலட்சம் மக்களும் சிதறுண்டு போயுள்ளனர். இன்னமும் முள்வேலி முகாம்களுக்குள் இலட்சத்திற்கும் மேற்பட்ட வன்னி மக்கள் வாழ்விழந்து வாடுகின்றனர்.

போராளிகள் என்று அரசால் இனங்காணப்பட்ட 11,000 இளைஞர்களில் 8000 பேர் பெண்கள்.

ஏற்கெனவே கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள், விசாரணை ஏதுமின்றி பல்லாயிரக்கணக்கில் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்.

இவை தவிர தேர்தலிற்காக வன்னி முகாம்களிலிருந்து திறந்து விடப்பட்ட மக்கள் போக்கிடமின்றி அலைந்து திரிகின்றனர்.

யாழ். குடாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, குடாநாட்டின் மூன்றிலொரு நிலப் பரப்பை விழுங்கிக் கொண்டிருக்கும், இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்துபேசவில்லை.

""எல்லோரும் ஒரு தாய் பெற்ற பிள்ளைகள்'' என்று கூறும் ஞானோபதேசங்கள், வலி சுமந்த மேனியரின் இரணங்களை ஆற்றுப்படுத்தாது.

கடந்த ஆறு மாதங்களாக விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் தந்தையான 86 வயது நிரம்பிய திருவேங்கடம் வேலுப்பிள்ளையை பனாகொடை முகாமில் தடுத்துவைத்ததை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.

மேற்குலக வல்லரசொன்றின் அழுத்தத்தால் 2008 மார்ச் 7ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டு 20 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவி யலாளர் திஸநாயகம் 50,000 ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் காலம் நெருங்குவதால் ஏ9 பாதை தானாகத் திறக்கிறது. தென்னாசிய நாடுக ளுக்கே உரித்தான ஜனநாயகத் தேர்தல் வாக்குறுதிகள், பண வீக்கம் போல் பெருத்துச் செல்கின்றன.

அதேவேளை கறுப்புப் பணத்தை வெளியேற்றும் நோக்கில் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல் தொடர்பான சட்டம், தளர்த்தப்பட்டிருப்பதாக ஜே.வி.பி. யின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

பொதுவாகவே ஆட்சி மாற்றமேற்பட்டு புதிதாக ஆட்சி பீடமேறுவோர், திறைசேரி திவாலாகிப் போயுள்ளதென புலம்புவதன் மர்மம் இப்போதுதான் புரிகிறது.

சுயாதீன கருத்துக் கணிப்புகள், சரத்திற்கு ஆதரவான செய்திகளை வெளியிடுவதால் ஆட்சியாளர் மத்தியில் அசைவுகள் காணப்படுகின்றன. தேர்தல் நாள் நெருங்க, அசைவுகள் அதிர்வுகளாக மாறக் கூடும்.

மக்களை நம்பாமல் அரசியல்வாதி களின் கட்சி தாவல்களே தமக்குப் பலம் சேர்க்குமென எண்ணும் தலைமைகள் அதிகரிப்பது, மக்கள் ஜனநாயகத்திற்கு பொருத்தப்பாடான விடயமல்ல.

ஆகவே பெருந்துயர் சுமந்த, அவல வாழ்விற்குள் தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்களின் அத்தியாவசியமான உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.இதில் அரசியல் தீர்வு குறித்து உடனடியாக பேசப்பட வேண்டுமென்பது நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகத் தோன்றுகிறது.

ரணிலோடு விடுதலைப் புலிகள் மேற்கொண்ட உடன்படிக்கையிலும் மக்களின் இயல்பு வாழ்வு குறித்தே பேசப்பட்டது.

அரசியல் தீர்வு பற்றியதான விடயத்திற்கு கால வரையறை நிர்ணயிக்கப்பட வேண்டுமென இலங்கை அரசு நிர்ப்பந்தித்தாலும் விடுதலைப் புலிகளின் தரப்பில் இயல்பு வாழ்வு நிலைநாட்டப்பட வேண்டுமென்கிற விவகாரமே முன்னிலைப்படுத்தப்பட்டது.

இதனடிப்படையில் இரா. சம்பந்தன் கூட்டமைப்பின் சார்பாக முன்வைத்த பத்துக் கோரிக்கைகளை சரத் பொன்சேகா ஏற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.

சரத் வெற்றி பெற்ற பின்னர் இக் கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப் படுமாவென்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆனாலும் உறுதியுரைகளையும் ஒப்பந்தங்களையும் சிங்கள தேசம் கிழித்தெறிந்த வரலாறுகளை நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

அரசியல் தீர்விற்கு இந்தியா உதவ வேண்டுமென கோரிக்கை விடும் இரா. சம்பந்தன் சரத் பொன்சேகாவிடம் விடுத்த 10 கட்டளைகளையும் நிறைவேற்ற இந்திய உதவியை நாடலாம்.

நன்றி - வீரகேசரி வாரவெளியீடு

http://thinamurasam.com/

ஒப்பந்தம் சரத் எவன்றாலும் நடைமுறைப்படுதப்படமாட்டாது என்பது எந்த அரசியல் அறிவில்லாதவனுக்கும் புரியும். ஆனால் இப்போதைய தேவை இலங்கை அரசதலைவரைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழினம் படிப்படியாக மாற்றம் பெறவேண்டும் என்பதுதான். சம்பந்தரின் அல்லது ஒட்டு மொத்தக் கூட்டமைப்பினரின் முடிவுகள் பொன்சேகாவை ஆதரவளிப்பதாகவிருந்தாலும் மகிந்தவிற்கு ஆதரவளிப்பதாகவிருந்தாலும் அந்த சக்தி தீர்மானிக்கும் சக்தியாக எந்தக் காலத்திலும் மாற்றமடைந்திருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
:) இலங்கையின் அரச அதிகாரத்தைத் தீர்மானிப்பது என்னவோ தமிழரின் வாக்குகள்தான் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அப்படித் தீர்மானித்துத் தீர்மானித்து இதுவரை கண்டதுதான் என்னவென்று தெரியவில்லை. அதே அவல வாழ்வும் அழிவுகளும்தானே எமக்கு மிஞ்சியது ?! இனியும் நாம் "தீர்மானிக்கும் சக்தி" என்று பெருமை பேசுவதில் என்ன நண்மை இருக்கிறது?! புரியவில்லை!!!!!

தற்போது இழப்பதற்கு எதுவுமில்லை என்றாலும் போரட்ட சக்தியை இழந்த நமக்கு பாதுகாப்பு என்பது அவசியம். இப்போதய நிகழ்வில் ஆட்சிமாற்றம் எதுவும் விடிவைத் தரப்போவதில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

தமிழரின் பலம் ஆட்சிமாற்றங்களை ஏற்படுத்துமானால் தமிழரின் தேவை எதிர்காலத்திலும் ஆட்சியாளர்களுக்குத் தேவைப்படும். என்பதுதான் என் கருத்து. ஏனைய முஸ்லிம், மலையகத் தமிழர் போன்றல்லாது இலங்கையிலுள்ள பெரிய சிறுபான்மையினர் நாங்கள் ஒன்றை இழந்தாலும் இன்னொரு பலத்தை உருவாக்க வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்.

தமிழர் குனிவது பணிவதற்கல்ல. மீண்டும் எழுவதற்காக என்ற தந்திரத்தில் நகருதல் நலன் தரலாம்.

:) இலங்கையின் அரச அதிகாரத்தைத் தீர்மானிப்பது என்னவோ தமிழரின் வாக்குகள்தான் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அப்படித் தீர்மானித்துத் தீர்மானித்து இதுவரை கண்டதுதான் என்னவென்று தெரியவில்லை. அதே அவல வாழ்வும் அழிவுகளும்தானே எமக்கு மிஞ்சியது ?! இனியும் நாம் "தீர்மானிக்கும் சக்தி" என்று பெருமை பேசுவதில் என்ன நண்மை இருக்கிறது?! புரியவில்லை!!!!!

நேற்றைய தூரோகியான சிவகீதா பிரபாகரன் இண்று தியாகியாக வர்ணிக்க படுகிறார் எண்றால் அதுக்கு சரத்தாமாவுக்கான அவரின் ஆதரவுதான் காரணம்.... முதலில் கருணாவோடு இருந்து பிரிந்து பிள்ளையானோடு கூட்டு பின்னர் கருணாவோடு சுதந்திர கட்ச்சியில் இணைவு... அதுக்கும் பிறகு சரத்துக்கு ஆதரவு எண்று இடத்துக்கு தக்கவாறு நிறம்மாறும் பச்சோந்திதான் இவர்களின் இப்போதைய தியாகிகள்...

தாங்கள் நினைப்ப்பதை எவர் எல்லாம் செய்ய விளைகிறார்களோ அவர்கள் எல்லாம் நல்லவர்கள் ஆகிவிடுகிறார்கள் இந்த அரசியல் கோமாளிகளுக்கு...

தமிழர்கள் எண்றால் முட்டாள்கள் எண்று சரத் பொன்சேகா முதல் நேற்றய தேசிய ஆய்வாளர் வரைக்கும் முடிவு எடுத்து விட்டார்கள்...

  • தொடங்கியவர்

நேற்றைய தூரோகியான சிவகீதா பிரபாகரன் இண்று தியாகியாக வர்ணிக்க படுகிறார் எண்றால் அதுக்கு சரத்தாமாவுக்கான அவரின் ஆதரவுதான் காரணம்.... முதலில் கருணாவோடு இருந்து பிரிந்து பிள்ளையானோடு கூட்டு பின்னர் கருணாவோடு சுதந்திர கட்ச்சியில் இணைவு... அதுக்கும் பிறகு சரத்துக்கு ஆதரவு எண்று இடத்துக்கு தக்கவாறு நிறம்மாறும் பச்சோந்திதான் இவர்களின் இப்போதைய தியாகிகள்...

தாங்கள் நினைப்ப்பதை எவர் எல்லாம் செய்ய விளைகிறார்களோ அவர்கள் எல்லாம் நல்லவர்கள் ஆகிவிடுகிறார்கள் இந்த அரசியல் கோமாளிகளுக்கு...

தமிழர்கள் எண்றால் முட்டாள்கள் எண்று சரத் பொன்சேகா முதல் நேற்றய தேசிய ஆய்வாளர் வரைக்கும் முடிவு எடுத்து விட்டார்கள்...

மக்களை நம்பாமல் அரசியல்வாதி களின் கட்சி தாவல்களே தமக்குப் பலம் சேர்க்குமென எண்ணும் தலைமைகள் அதிகரிப்பது, மக்கள் ஜனநாயகத்திற்கு பொருத்தப்பாடான விடயமல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.