Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எவர் வெற்றி பெற்றாலும் சேர்ந்து பணியாற்றுமாம் அமெரிக்கா; அவரிடம் "நல்லவற்றையே" எதிர்பார்க்குமாம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவர் வெற்றி பெற்றாலும் சேர்ந்து பணியாற்றுமாம் அமெரிக்கா; அவரிடம் "நல்லவற்றையே" எதிர்பார்க்குமாம்

போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து அனைத்துலக சமூகத்தில் சிறிலங்காவிற்கு ஏற்பட்டு வரும் நற்பெயருக்கு தற்போதைய தேர்தல் வன்முறைகள் களங்கம் ஏற்படுத்தி விடும் என்று எச்சரித்துள்ளது அமெரிக்கா.

அரச தலைவர் தேர்தல் வாக்களிப்பு நடைபெறுவதற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கின்ற நிலையில் அதிகரித்து வரும் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் அமெரிக்கா கவலையும் தெரிவித்துள்ளது.

“எல்லோருடைய கவனமும் நடக்க இருக்கும் தேர்தலை நோக்கிக் குவிந்திருக்கின்றது. எங்களுடைய கவனம், ஜனநாயக நடவடிக்கைகளுக்குப் புறம்பாக இடம்பெற்று வரும் வன்முறைகள் பற்றியதுதான்” என்றார் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா ஏ.புட்டெனிஸ் [Patricia A Butenis].

“ஆபத்தான பிணக்குகள் நிறைந்த நாடு என்ற தோற்றத்தில் இருந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடக்கூடிய சிறந்த நாடு என்ற மாற்றத்தை நோக்கி சிறிலங்கா தொடர்பான அனைத்துலகப் பார்வை மாறத் தொடங்கி உள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20100123100363

தேர்தல் வன்முறைகள் அந்த முன்னேற்றத்தைப் பாதிப்பனவாக அமைந்துள்ளன. இது சிறிலங்காவுக்கு ஒரு பின்னடைவுதான்.

தேர்தல் முடிந்ததும் நல்ல அரசு ஒன்றை அமைப்பதற்கான கடும் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு எல்லோரிடமும் நான் கேட்டுக்கொள்ள உள்ளேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

தனியார் தொலைக்காட்சியின் Newsfirst என்ற நிகழ்ச்சியில் சிறப்பு நேர்காணல் ஒன்றை நேற்று அவர் வழங்கி இருந்தார்.

“சிறிலங்கா தேர்தல் ஆணையாளரின் விதிமுறைகள் அல்லது கட்டளைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அரச அதிபர் தேர்தலில் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தத்தக்க சூழ்நிலை மக்களுக்குத் தேவை.

சிறிலங்காவிற்கும் அதன் ஜனநாயகத்திற்கும் அமெரிக்கா எப்போதுமே நண்பன். அந்த மதிப்புடன் நின்று கொண்டே நாங்கள் எல்லாவற்றையும் அவதானித்து வருகின்றோம்.

வாக்காளர்களைப் பதிவு செய்தல், மற்றும் வாக்களிப்பை ஊக்குவித்தல் ஆகிய பணிகளைச் செய்யும் அமைப்புக்களுக்கு நாங்கள் ஆதரவு வழங்கி இருக்கிறோம்” என பற்றீசியா அம்மையார் தனது நேர்காணலில் மேலும் கூறினார்.

எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு வாஷிங்ரன் நிதி ஆதரவு வழங்கியதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அவர் அடியோடு மறுத்தார்.

“அது முழுப் பொய்; திரும்பவும் சொல்கிறேன் அது முழுப் பொய். நாங்கள் நடுநிலையாகவே நிற்கிறோம். சிலருக்கு அதனை ஏற்றுக்கொள்வது சிரமமானதாக இருக்கலாம். ஆனால் அதுவே உண்மை” என்றார் அவர்.

“இந்த ஜனநாயகத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் நாங்கள் பணியாற்றுவோம். அது யார் என்பதற்கு அப்பால், நல்லவற்றையே எதிர்பார்ப்போம்.

எந்த வேட்பாளரையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்த மாதிரியான கதைகள் எங்கிருந்து வருகின்றன என்பதே எனக்குத் தெரியவில்லை” என அவர் மேலும் விபரித்தார்.

சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக வெளியான செய்தியை முன்னரும் ஒரு தடவை அமெரிக்காவும் நோர்வேயும் தமது அறிக்கைகளில் மறுத்திருந்தன.

அடுத்த செவ்வாய்க் கிழமை நடைபெற உள்ள தேர்தலின் பின்னர், சிறிலங்கா தொடர்பான அமெரிக்கக் கொள்கையில் மாற்றங்கள் ஏதாவது ஏற்படுமா எனத் தூதுவரிடம் கேட்ட போது, சில விடயங்கள் நீடித்திருக்கும் என்றார்.

“தேர்தல்கள் முடிவடைந்த பின்னால், அதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதற்கு அப்பால், கவனத்துக்குரிய சில விடயங்கள் தொடர்ந்தும் நிலைத்திருக்கும்.

மனித உரிமை மீறல்கள், இன நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகள் தொடர்பிலான கேள்விகள் என்பனவும் அதற்குள் அடங்கும்.

இப்போது இருக்கும் அரசுடனும் அந்த விடயங்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். அந்தப் பிரச்சினைகளும் கவனத்திற்குரிய விடயங்களும் அடுத்த அரசிலும் தொடரும்” என்கிறார் புட்டின் அம்மையார்.

இந்த முக்கியமான தேர்தலில் ஜனநாயகம் குறித்த விடயத்தை முதன்மைப்படுத்துவீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு, அமெரிக்கா தலையிட விரும்பவில்லை என்று பதிலளித்தார்.

“தலையீடு செய்வதற்கோ ஆதிக்கம் செலுத்துவதற்கோ உண்மையிலேயே நாங்கள் விரும்பவில்லை. அது கடினமானதும் நீண்டதும் என நாங்கள் நினைக்கிறோம். எனவே எமது கவலைகளை நாங்கள் பகிரங்கமாகத் தெரிவிக்கிறோம்.

எங்களைச் சந்திக்கும் பல்வேறு அரசியல்வாதிகளிடம் அது பற்றி நாங்கள் கூறுகின்றோம்.

தேர்தல் வன்முறைகள் நடக்காமல் இருக்கவும் வாக்களிக்குமாறு மக்களைத் தூண்டவும் வாக்காளர்களைப் பதிவு செய்யவும் ஆர்வத்துடன் உழைக்கும் அமைப்புக்களுக்கும் நாங்கள் உதவுகின்றோம்” எனத் தன்னிலை விளக்கம் அளித்தார் பற்றீசியா ஏ.புட்டினன்

தேவையான போது மக்கள் பற்றி அக்கறை படுங்கள்,மற்ற நேரத்தில் தூங்கினால் சரி.

வி.. யா.. பா.. ரி...

வி.. யா.. பா.. ரி...

உலகத்தில உங்களுக்குத் தெரியாத வித்தைகள் ஏதாவது இருக்கா என்ன.--------

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.