Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் பொன்சேகா தொடர்பான செய்திகளின் தொகுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தானும் தனது மருமகனான தனுத்த திலகரத்னவும் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் பெயர்களை கறுப்புப் பட்டியலில்:‐ சரத்:‐

தானும் தனது மருமகனான தனுத்த திலகரத்னவும் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் தமது பெயர்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்திருப்பதாக ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். தனுத்தவை கைதுசெய்வதற்காக இரகசியக் காவல்துறையின் குழுவொன்று இன்று மதியம் தமது வீட்டிற்கு வந்ததாகவும் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் தமக்கெதிராக பலிவாங்கும் புதிய சுற்றை ஆரம்பித்திருப்பதாகவும் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.

அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். எந்த நீதிமன்றத்தாலும் காவல்துறையினராலும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத என மீது அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் இவ்வாறான பலிவாங்கல் குறித்து கவலையடைகிறேன். எனது பாதுகாப்பு முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டிருந்த சகல இராணுவத்தினரையும், பாதுகாப்புச் செயலாளர் நேற்று நள்ளிரவுடன் விலக்கிக் கொண்டுள்ளார். எனது பாதுகாப்பிற்காக இன்று முற்பகல் நான்கு காவல்துறை சிப்பாய்கள் அனுப்பப்பட்டிருந்தனர். எனக்கு ஆதரவு வழங்கிய இராணுவத்தினர் பலர் பாரிய குற்றவாளிகள் எனக் கருதி விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் சரத் பொன்சேக்கா குற்றஞ்சுமத்தினார். தேர்தல் காலத்தில் தன்னை இடியமீன் என சித்தரித்த ஜனாதிபதி தற்போது இடியமீனாக செயற்படுகிறார்.

பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் தனது வீடு சுற்றிவளைக்கப்பட்டிருப்பதாகவும் இவ்வாறான பலிவாங்கல்கள் மூலம் தன்னை அச்சுறுத்த முடியாது எனவும் தனக்கு வாக்களித்த மக்களுக்காக தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடப் போவதாக சரத் பொன்சேக்கா திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார். முன்னாள் கடற்படைத் தளபதிக்கு 120 பேரைக் கொண்ட ஆயுதம் தாங்கிய படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை அழித்த ஜெனரல் சரத் பொன்சேக்காவிற்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி அவரைக் கொலை செய்ய ராஜபக்ஷவினர் மேற்கொள்ளும் முயற்சிகளை ராஜபக்ஷவிற்கு வாக்களித்த மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மங்கள சமரவீர, அர்ஜூன ரணதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தன் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்:‐

5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தன் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அந்த மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக எதிவரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை கூறியுள்ளார். 5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தனர்.

இதனை நாம் முன்கூடியே உறுதிப்படுத்திக் கொண்டோம். தேர்தலில் கிடைத்த மக்களின் ஆணை மோசடியாகவும் முறைகேடாவும் மாற்றப்பட்டுள்ளன. எனினும் என் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை தொடர்கிறது. நான் அதனை நன்கு அறிவேன். மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாத்து தொடர்ந்தும் செயற்பட போகிறேன்.

மக்களின் எதிர்பார்ப்புகளை போன்று அவர்களின் நம்பிக்கையை பாதுகாப்பதற்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட எண்ணியுள்ளேன். அனைவரும் அன்னப்பறவை அறிந்துகொண்டுள்ளனர். அவர்கள் அந்த பறவையை தேடுகின்றனர். அதன் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அன்னப்பறவைச் சின்னத்தில் போட்டியிட எண்ணியுள்ளேன் என சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேக்காவை நாட்டில் இருந்து வெளியேற அனுமதிக்காது கைதுசெய்ய வேண்டும:‐

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேக்காவை நாட்டில் இருந்து வெளியேற அனுமதிக்காது அவர் கைதுசெய்யப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை கொடிகளை ஏந்திச் சென்ற விடுதலைப்புலிகளின் தலைவர்களை பாதுகாப்புச் செயலாளர் சுட்டுக்கொல்ல உத்தரவிட்டதாக தேர்தல் காலத்தில் தெரிவித்து, நாட்டை காட்டிக் கொடுத்த பொன்சேக்கா, எதிர்காலத்திலும் அவ்வாறான தகவல்களை வெளியிடக் கூடும் என்பதால் அவரை நாட்டை விட்டுச் செல்ல அனுமதிக்காது உடனடியாக கைதுசெய்யுமாறு தான் ஜனாதிபதி மற்றும் அரசாஙகத்திடம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாகவும் வீரவன்ஸ கூறியுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா வெளிநாடு செல்வதற்கு தடை எதுவுமில்லை – அரசாங்கம்:‐

ஜெனரல் சரத் பொன்சேகா வெளிநாடு செல்வதற்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டுக்கு செல்வதற்கோ அல்லது சுதந்திர நடமாட்டத்திற்கோ எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் தலைவர் லக்ஸ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டாம் என தமக்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் பீ.பி. அபயகோன் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடு செல்வது தொடர்பில் சரத் பொன்சேகாவிற்கு எவ்வித வரையறுகளும் விதிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத்பொன்சேக்காவின் உத்தியோகபூர்வ அலுவலகம் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு:‐

ஜெனரல் சரத்பொன்சேக்காவின் உத்தியோகபூர்வ அலுவலகம் சற்று நேரத்திற்கு முன்னர் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பூதாகாரமாக வெடித்திருக்கும் இந்த பிரச்சினையின் மற்றுமொரு அடியாக எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்காவின் உத்தியோகபூர்வ அலுவலகம் விஷேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் ரோயல் கல்லூரிக்கு அருகில் பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களால் தொடர்ந்தும் செய்தி சேகரிப்பில் ஈடுபட முடியாதுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனரல் சரத் பொன்சேகா வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார் :

29 January 10 02:10 am (BST)

ஜெனரல் சரத் பொன்சேகா வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பொன்சேகா தஞ்சம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், உத்தியோகபூர்வமாக எவ்வித கோரிக்கையும் இதுவரையில் விடுக்கப்படவில்லை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் தூதுவராலயங்களிலும் சரத் பொன்சேகா அடைக்கலம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவிடமும் தற்காலிக அரசியல் தஞ்சம் கோரும் உத்தேசம் காணப்படுவதாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் என தி அவுஸ்திரேலியன் என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டை விட்டு வெளியேற முடியாத வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வமாக இதுவரையில் அடைக்கலம் கோரப்படவில்லை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.

எனினும், ஜெனரல் சரத் பொன்சேகா சுதந்திரமாக இடம் நகர்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் எனவும், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

3ஆம் இணைப்பு ‐ சரணடைவதா? ஆயுதபலத்தை பயண்படுத்தி போராடுவதா? தீர்மானம் எடுக்கவில்லை – சரத்பொன்சோகா:‐

28 January 10 06:16 am (BST)

விடுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்ட எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் வெளியேறும் முன்னர் கடும் தொனியில் ஊடகவியலாளர்களிடம் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் நடந்து முடிந்த இந்த தேர்தல் மோசடி மிக்க தேர்தல் எனவும், தன்னை இவ்வாறு தடுத்து வைத்திருப்பது சட்டத்திற்கு முரணானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இந்த பிரச்சினை எங்கு சென்று முடியும் என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், இதற்கு இரண்டே வழிகள்தான் காணப்படுவதாகவும், ஒன்று தான் சரணடைவதென்றும், மற்றையது தனக்கிருக்கும் ஆயுதபலத்தை பயண்படுத்தி போராடுவது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த வழியை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து தான் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என்றும், தனக்கு வரும் அழுத்தங்களுக்கு அமையவே தான் எந்த முடிவை எடுப்பதென்று தீர்மானிக்கவுள்ளதகாவும் அவர் குறிப்பிட்டார்.

உயிரச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன்: சரத் ஃபொன்சேகா:‐

27 January 10 01:06 pm (BST)

தனக்கு உயிரச்சம் இருப்பதாகவும், இதனால் நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் கொழும்பு விடுதியில் இருந்து வீடு திரும்பிய எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

இலங்கையில் சட்டம் ஒழுங்கு கிடையாது. நான் விமான நிலையத்துக்கு செல்வதும் தடுக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டு செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்படக் கூடாது என்று அவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு கூறியுள்ளனர். இது பற்றி ஏதும் சொல்ல முடியாது. என பிபிசியின் சந்தன கீர்த்தி பண்டாராவுக்கு பிரத்யேக செவ்வியளித்த சரத் ஃபொன்சேகா கூறினார்.

நான் மக்களை மறக்க மாட்டேன். ஆனால் நான் உயிர் வாழ சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. எந்த நாட்டுக்குப் போகப் போகிறேன் என்பது பற்றி நான் கூற முடியாது. மக்களுடன் தொடர்பில் இருப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தலில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அவர் பிபிசிடம் தெரிவித்தார்.

விடுதியில் முற்றுகை

முன்னதாக கொழும்பு நகரில் ஃபொன்சேகா மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கியிருந்த விடுதியைச் சுற்றிலும், ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் சுமார் 100 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால், இதுபற்றி ராணுவப் பேச்சாளர் உதய நாணயகார கூறும்போது, ஃபொன்சேகாவைக் கைதுசெய்யும் எண்ணம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இராணுவப் பணியை பாதியில் விட்டுச் சென்றவர்கள் உள்பட சுமார் 400 பேருடன் சரத் ஃபொன்சேகா அந்த விடுதியில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்திருப்பதாகவும், அவர்கள் சரணடைய வேண்டும் என்று தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உதய நாணயகார தெரிவித்தார்.

இருந்தபோதும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள், ஃபொன்சேகா கைதுசெய்யப்படலாம் என்று அச்சம் வெளியிட்டிருந்தனர்.

விடுதிக்கு வெளியே இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்ததால், அங்கு பதற்றம் நிலவியது.

விடுதிக்கு வெளியிலிருக்கும் இராணுவத்தினர் திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் இப்படியான பதற்றம் மற்றும் இழுபறிக்குப் பின்னர் சரத் ஃபொன்சேகா விடுதியிலிருந்து வெளியேறி வீடு திரும்பியுள்ளார்.

தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது – சரத் பொன்சேகா:‐

ஆறாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரியும் நோக்கில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து வெளிவரும் பிரபல ஞாயிறு பத்திரிகை ஒன்றின் இணைய செய்தியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதித் தேர்தல் முடிவுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமையப் பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தம்மை படுகொலை செய்வதற்கான சதித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்களின் ஆணை மற்றும் அபிலாஷைகள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா, தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவிற்கு அறிவித்துள்ளார்.

மோசடிகளினால் தமது வெற்றி பறிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் முடிவு தொடர்பில் முறைப்பாடு ஒன்று தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊடகப் பயன்பாடு, தேர்தல் மோசடி உள்ளிட்ட பத்து விடயங்கள் இந்த முறைப்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை நீக்கி, தம்மை படுகொலை செய்து அந்தக் குற்றச்சாட்டை தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது சுமத்த சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்ட 70 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக போராட வேண்டும் அல்லது சரணடைய வேண்டும் விரைவில் இரண்டில் ஓர் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நன்றி: www.globaltamilnews.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.