Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல அதிகாரிகள் கைதினை அடுத்து இராணுவ உயர் பதவிகளில் மாற்றம்:- இராணுவப் பேச்சாளராக பிரசாத் சமரசிங்க நியமணம்.

Featured Replies

பல அதிகாரிகள் கைதினை அடுத்து இராணுவ உயர் பதவிகளில் மாற்றம்:- இராணுவப் பேச்சாளராக பிரசாத் சமரசிங்க நியமணம்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னர் இராணுவ உயர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் ஆதரவான செயற்பட்ட இராணுவ அதிகாரிகளின் பதவிகளே இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அம்பாறை இராணுவப் பயிற்சி மையத்தின் பொறுப்பதிகாரியான பிரிகேடியர் துமிந்த கெப்பிட்டிவலன உள்ளிட்ட அதிகாரிகள் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறி 3 ஜெனரல்கள், 3 பிரிகேடியர்கள், 2 கேணல்கள் உட்பட 20 க்கும் மேற்பட்ட இராணுவ உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சிலர் கைது செய்யப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. இராணுவப் பேச்சாளராக தற்போது பிரசாத் சமரசிங்க நியமிக்கப்படவுள்ளார் இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு மையத்தின் இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் சமரசிங்க கடமையாற்றவுள்ளார். தற்போது பதவி வகித்து வரும் பிரிகேடியர் உதய நாணயக்கார பதவியை பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னர், பிரசாத் சமரசிங்க இந்தப் பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிகேடியர் உதய நாணயக்கார, இராணுவ பொறியியற் பிரிவின் பொறுப்பாளராக நியமிக்கப்படவுள்ளார் எனவும் இராணுவ வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன.

http://seithy.com/

அம்பாறை மாவட்ட சிறீலங்கா இராணுவ கட்டளை தளபதி கைது

ஜெனரல் சரத் பொன்சோகவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டே அம்பாறை மாவட்ட சிறீலங்கா இராணுவப் பயிற்சி கல்லூரியின் கட்டளை தளபதி பிரிகேடியர் துமிந்த கெப்பட்டிவலன கடந்த வெள்ளிக்கிழமை (29) இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெனரல் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகித்த போது கெப்பட்டிவலன அவரின் உதவியாளராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், பொன்சேகாவுக்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறி 20 இற்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளும், படையினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் விரைவில் கைது செய்யப்படலாம் என்ற அச்சங்கள் தென்னிலங்கையில் அதிகரித்துள்ளன.

http://uyarvu.com/

தேர்தல் வெற்றியை அடுத்து இராணுவத்தில் பாரிய மாற்றங்கள் பிரிகேடியர் ஒருவர் பொலிஸ் காவலில் ; மேலும் பலர் கைதாகலாம்

வீரகேசரி நாளேடு 2/1/2010 10:06:14 AM -

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை அடுத்து பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

இட மாற்றத்திற்குள்ளான இராணுவ அதிகாரிகளில் பலர் யுத்தத்தில் வெற்றி கண்ட இராணுவத் தளபதியும் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமானவர்களாவர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் விபரம் வருமாறு, தமக்கு விசுவாசமான பல சிரேஷ்ட அதிகாரிகள் சேவையிலிருந்து விலக்கப்பட அல்லது இடை நிறுத்தி வைக்கப்பட இருக்கிறார்கள் என்று தாம் கேள்விப்படுவதாக ஜெனரல் பொன்சேகா தெரிவித்திருந்த வேளையில் இந்த திடீர் இட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அம்பாறை இராணுவ பயிற்சிப் பாடசாலையின் கமாண்டர் பிரிகேடியர் துமிந்த கெபெற்றிவலான வெள்ளிக்கிழமை புலன் விசாரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஜெனரல் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகித்த போது பிரிகேடியர் கெபெற்றிவலான இராணுவ உதவியாளராக சேவையாற்றி வந்தார். மேலும் இளைப்பாறிய 20 அதிகாரிகளும், சிப்பாய்களும் ஏற்கனவே பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் பலர் கைது செய்யப்பட இருக்கிறார்கள்.

தற்போதைய மாற்றங்களில் மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க இலங்கை இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இவர் பாதுகாப்பு அமைச்சில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக பணியாற்றி வந்தார்.

ஏற்கனவே பாதுகாப்புப் படையினரின் பிரதானியாக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் அப்பதவியிலிருந்து விலக்கப்பட்டு கூட்டுத் திட்டங்களுக்கான பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ தொண்டர் படைப் பிரிவின் கமாண்டர் ஆக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் ஜம்மிக லியனகே பாதுகாப்புப் படையினரின் பிரதம அதிகாரியின் அலுவலகத்தில் பொது அதிகாரிகள் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை இராணுவ நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் அருணா ஜயதிலக தற்போது தொண்டர் படை கமாண்டர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய மாற்றங்களில் பிரிகேடியர் ஏ. ரி. டீ. சற் அபேசேகர நிர்வாக பிரிவுக்கான புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ தலைமையகக் காரியாலயத்தில் பொது பணிப்பாளர் நாயகமாக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் ஸ்ரீநாத் ராஜபக்ஷ பாதுகாப்பு படையினரின் பிரதம அதிகாரி அலுவலகத்தில் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாஸ்டர் ஜெனரல் ஓர்டினன்ஸாக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் அதுல ஜயவர்த்தன முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகள் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது முந்திய பதவிக்கு மேஜர் ஜெனரல் ஜகத் ரம்புக்போத நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இவர் கிழக்கு பிராந்திய பாதுகாப்பு படைகள் கமாண்டராக பணியாற்றி வந்தார். இந்தப் பதவிக்கு தற்போது பிரிகேடியர் சுசில் உடுமல்கல நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் எல். ஏ. டி. அமரதுங்க 59 ஆவது படைப் பிரிவின் கட்டளையிடும் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வகித்து வந்த காலாட்படை தளபதி பதவிக்கு இதுவரை யாழ்ப்பாணப் பாதுகாப்பு படைகள் கமாண்டராக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் எல். பி. ஆர். மார்க்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். காலாட் படை தளபதியாக தற்போது மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் ஹதுருசிங்க வகித்து வந்த கிளிநொச்சி பாதுகாப்பு படைகள் கமாண்டர் பதவிக்கு பிரிகேடியர் சந்தன ராஜகுரு நியமிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பாதுகாப்பு படைகள் கமாண்டர் மேஜர் ஜெனரல் மனோ பெரேரா இராணுவத்தின் 11 ஆவது பிரிவு ஜெனரல் ஒபீஸ் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தின் 65 ஆவது படைப் பிரிவின் ஜெனரல் ஒபீஸ் கமாண்டர் மேஜர் ஜெனரல் ஜனக வல்கம பாதுகாப்பு அமைச்சில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வகித்து வந்த ஜெனரல் ஒபீஸ் கமாண்டர் பதவிக்கு பிரிகேடியர் குமார் ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

53 ஆவது படைப் பிரிவின் ஜெனரல் ஒபீஸ் கமாண்டர் மேஜர் சாகி கலகே இராணுவ தலைமைக் காரியாலயத்தில பயிற்சிப் பிரிவு பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் ராஜித சில்வா பாதுகாப்புப் படைகள் பிரதம அதிகாரி அலுவலகத்திலிருந்து விலக்கப்பட்டு 58 ஆவது படைப் பிரிவின் ஜெனரல் ஒபீஸ் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.