Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேசக்கரம் வல்லையில் சுயதொழில் ஊக்குவிப்பு உதவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வல்வையில் நேசக்கரம் சுயதொழில் ஊக்குவிப்பு உதவி வழங்கல்

வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010 17:52 | PDF அச்சிடுக மின்னஞ்சல்

நேசக்கரம் சுயதொழில் ஊக்குவிப்புக்கான கொழுப்பனவு 04.02.10 அன்று வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வுக்கு வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையின் அதிபர் திரு.கண்ணதாசன் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்வில் நேசக்கரம் இலங்கைக்கான இணைப்பாளர் திருமதி.கமலாதேவி சதாசிவம் அவர்கள் கலந்து கொண்டு நேசக்கரம் பங்களிப்புகளை வழங்கி மாணவர்கள் பெற்றோர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி இந்து மகளீர் பாடசாலையின் ஆசிரியர் திரு சே. கணேசலிங்கம் , வதிரி வடக்கு மெ.மி.த.கா பாடசாலை அதிபர் திரு.க.இராஜதுரை , மேலைப்புலோலி சைவப்பிரகாசா வித்தியாலய அதிபர் மு.கனகலிங்கம் மற்றும் ஆசிரியர் திரு.த.பார்த்தீபன் அவர்களும் கலந்து கொண்டனர்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களிலிருந்து வெளியேறி வடமராட்சிப் பகுதியில் வாழும் சில குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்புக்கான உபகரணங்களும் மற்றும் உயர்தரம் கற்கும் இரு மாணவிகளுக்கு உடைகளும் கொப்பிகளும் , பெறறோரை இழந்த சிறுமிகள் இருவருக்கான உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டது.

பயனாளர்கள்

2) திரு.உமாபதி அவர்களுக்கு தச்சுத் தொழிலுக்கான உபகரணங்கள் பத்தாயிரம் ரூபா(10000) பெறுமதியில் வழங்கப்பட்டது. திரு.உமாபதி அவர்களது மனைவியும் குழந்தையொன்றும் வன்னியில் மரணமடைந்துவிட்டார்கள். தற்போது 3பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். இம்மூன்று பிள்ளைகளும் எறிகணை வீச்சில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மகள் தனது ஒற்றைக்கண்ணை இழந்துள்ளார். தினக்கூலித்தொழிலாளியான இவருக்கான சுயதொழில் வாய்ப்பாக மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது.

2) திருமதி செவ்வந்தி அகிலன் அவர்களுக்கு கோழிவளர்ப்புக்கான உபகரணங்கள் கோழிகள் ஆடு உட்பட பத்தாயிரம் ரூபா (10000) வழங்கப்பட்டது. செவ்வந்தியின் கணவர் கடைசிப்போரில் காணாமற்போய்விட்டார். 4பிள்ளைகளுடன் தனித்துள்ள இப்பெண்ணின் எதிர்காலத்திற்கான உதவியாக மேற்படி உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

3) திருமதி.சூரியகுமாரி நவரட்ணம் அவர்களுக்கு எள்ளுப்பா பலகாரங்கள் செய்து விற்பதற்கான உபகரணங்கள் உரல் உலக்கை பலகாரங்கள் செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் அவரது வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவியாக பத்தாயிரம் ரூபா (10000) பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 4பிள்ளைகளுடன் வாழும் இப்பெண் போரில் கணவனை இழந்துவிட்டார். பிள்ளைகள் நெருப்புக்காச்சல் தொற்று நோய்களுக்கு உள்ளாகி பாதிப்படைந்துள்ளார்கள்.

4) மாணவிகளான கயல்விழி ,ரேகா ஆகியோருக்கு ஐயாயிரம் ரூபா (5000) பெறுமதிக்கான உடுப்புகள் மற்றும் படிப்புக்கான கொப்பிகள் வழங்கப்பட்டுள்ளது.

5) போரில் பெற்றோர்கள் சகோதரியை இழந்த 7வயதுச்சிறுமிக்கும் , மற்றும் தந்தையை இழந்த இருதய நோயாளியான 7வயதுச்சிறுமிக்கும் மாதாந்த உதவியாக மூவாயிரத்து ஐந்நூறு ரூபா (3500) பெறுமதிக்கான பொருட்கள் வழங்கப்பட்டது. மேற்படி சிறுமிகளுக்கான மாதாந்த கொடுப்பனவுகளை நேசக்கரம் தொடாந்து செய்து வருகிறது.

இத்திட்டத்திற்காக நாற்பத்தியிரண்டாயிரம் ரூபா (42000) இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் தமது ஆதரவினை வழங்கிய திரு.அன்ரன்(யேர்மனி) மற்றும் அருட்குமரன் (யேர்மனி) ஆகியோருக்கும் மற்றும் திரு.அன்ரன், திரு.அருட்குமரன் ஆகியோரிடம் தங்கள் உதவிகளை வழங்கிய அனைவருக்கும் நேசக்கரம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

தொடர்ந்த ஆதரவினை புலம்பெயர் உறவுகளாகிய உங்களிடமிருந்து எங்கள் தாயகத்து உறவுகள் வேண்டி நிற்கின்றனர்.

படங்கள் இணைப்பு மற்றும் மேலதிக செய்திகளைப் பார்வையிட நமது நேசக்கரம் இணையத்திற்கு வாருங்கள். படங்கள் உதவிகள் பற்றி விபரங்கள் யாவும் நேசக்கரம் இணைப்பில் பார்வையிடுங்கள்.

http://nesakkaram.org/

Edited by shanthy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.