Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொன்சேகா கைது: சிறிலங்கா நிலைவரம் குறித்து அமெரிக்கா கவலை

Featured Replies

பொன்சேகா கைது: சிறிலங்கா நிலைவரம் குறித்து அமெரிக்கா கவலை

.சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக அமெரிக்க அரசு கவலை தெரிவித்துள்ளது. அரசு மேற்கொண்டுள்ள கைது நடவடிக்கை சமூகங்களின் மத்தியில் மேலும் பிளவுகளை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளத என்று அமெரிக்காவின் இராஜாங்கத்திணைக்கள பேச்சாளர் பிலிப் க்ரெளலி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் - "போர் முடிவடைந்துள்ள நிலையில் சிறிலங்காவில் சமூகங்களுக்கு மத்தியில் காணப்படும் பிளவுகளை சீர் செய்து ஒற்றுமையை கட்டி வளர்ப்பது என்பது சிறிலங்காவுக்கு பிரதான சவாலாக உள்ளது. இவ்வாறான ஒரு நிலையில், அந்த பிளவுகளை மேலும் மோசமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்பதில் சிறிலங்கா அரசு கவனமாக செயற்படவேண்டும்.

"ஜனநாயகத்தையும் சமூகங்களுக்கு இடையில் அமைதியையும் பேணுவதற்காக செயற்படவேண்டிய ஒரு அரசு என்ற வகையில் சிறிலங்கா பொன்சேகா விவகாரத்தை கையாண்டிருக்கும் விதம் மிகவும் அசாதாரணமானது" - என்று கூறியுள்ளார்.

நன்றி

ஈழநேசன்

  • தொடங்கியவர்

சரத் பொன்சேகா கைது: அமெரிக்கா கவலை; மன்னிப்புச் சபை அதிர்ச்சி; பான்-கீ-மூன் ஆலோசனை

[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 01:29 GMT ] [ புதினப் பணிமனை ]

சிறிலங்காவில் அதிபர் தோர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டது குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் பிலிப் கிரௌலி கருத்து வெளியிடுகையில் -

“சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை அமெரிக்கா தொடர்சியாக அவதானித்து வருகிறது. சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. சிறிலங்காவின் சட்டங்களுக்கு அமைவாகவே அவர் மீதான எந்தவொரு நடவடிக்கையும் அமைய வேண்டும்.

இதனால் சமூகத்துக்குள் ஏற்படக் கூடிய பிளவுகளைச் சமாளிக்கின்ற பேராற்றல் சிறிலங்கா அரசுக்குத் தேவை. எந்த நடவடிக்கை எடுக்கும் போதும் மிகக் கவனத்துடன் நடக்கா விட்டால், அது சமூகத்துக்குள் காயங்களையும், பிளவுகளையும் ஏற்படுத்தும்" என்று அவர் கூறியுள்ளார்.

“குடியரசு அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இப்படியான ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது அசாதாரணமானது” என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் - சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிறிலங்காவின் அரசியல்கட்சிகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் வன்முறைகளில் இறங்காமல் கட்டுப்பாட்டுடன் அமைதியாக இருக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. பொதுச் செயலளர் பான் கீ மூனின் பேச்சாளரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தேரதல் சட்டங்கள் தனியே தேர்தல் காலத்துக்கு மட்டுமே உரியவையல்ல. அதற்குப் பின்னரும் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதற்கிடையே - சர்வதேச மன்னிப்புச் சபை, “இது தேர்தலுக்குப் பிந்திய அடக்குமறை” என்று கூறியிருக்கிறது.

தேர்தலுக்குப் பிறகு எதிரணியைச் சிதைவடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்வதாக சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் சரீபி தெரிவித்துள்ளார்.

“விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, தேர்தலிலும் வெற்றியைப் பெற்ற பிறகு மகிந்த ராஜபக்ச மனித உரிமைகளைச் சிறப்பாகப் பேணுகின்ற நிலைக்கு நாட்டை வழிநடத்த வேண்டும்.

ஆனால் மாற்றுக் கருத்துகளைச் சகித்துக்கொள்ளும் தன்மை அங்கு மிகமிகக் குறைந்து போயிருப்பதைக் காணமுடிகிறது.

சிறிலங்காவுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச ரீதியில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கைது செய்யப்படுவதற்கு முன்னர் சரத் பொன்சேகா சிறிலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பதாகத் தனக்குத் தெரிந்த உண்மைகளை வெளியிடத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதினப்பலகை

அதே சமயம் - சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிறிலங்காவின் அரசியல்கட்சிகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் வன்முறைகளில் இறங்காமல் கட்டுப்பாட்டுடன் அமைதியாக இருக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்

ஏ சப்பை 30 ஆயிரம் மக்களின் மரணத்திற்கு அறிக்கை விடாத பரதேசி,இப்ப அறிக்கை விடுகிறாய் உன்னை எல்லாம் செயளாலர் நாயகம் என்று வைச்சிருக்கினம்

அரசு மேற்கொண்டுள்ள கைது நடவடிக்கை சமூகங்களின் மத்தியில் மேலும் பிளவுகளை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளத

இருவரும் ஒரெ சமுகத்தை சேர்ந்தவர்கள் என்று உவருக்கு தெரியாதோ?இல்லாட்டி சரத் சிறுபான்மை சமுகம் என்று நினத்திட்டாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள சமுகத்திற்குள் பிளவை ஏற்படுத்த வேண்டாமாம்.தமிழரை ஒரு சமுகமாகவே அவங்கள் நினைக்கவில்லை. 30 ஆயிரம் தமிழர்களை துடிக்கத்துடிக்க கொன்ற போது கண்ணை மூடிக்கொண்டிருந்தவங்கள் எல்லாம் இப்ப வந்திட்டாங்கள்.தமிழரைக் கொன்ற பயங்கரவாதிகளை தூக்கிலிடுவதுதான் முறை.இந்தப் பயங்கரவாதிகளில் மகிந்த கோத்தபாய ஆகியோரும் உள்ளடக்கப்படவேண்டும்.

அது சப்பட்டைக்கு பூனை ,நாய் இறைச்சியின் சுவை தான் தெரியும்.

உலக நடப்பே தெரியாது.

“குடியரசு அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இப்படியான ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது அசாதாரணமானது” என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்."

எது நடந்தாலும் தமிழனை அடிப்பதுதான் சாதாரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.