Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தபாய கூறியதை அமெரிக்கா, நோர்வே மறுப்பு

Featured Replies

ஜெனரல் சரத் பொன்சேகாவின் இராணுவ ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு நோர்வேயும், அமெரிக்காவும் ஒத்துழைப்பு வழங்கியதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் ஸ்ட்ரேய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஐந்து ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஜெனரல் சரத் பொன்சேகாவின் பங்களிப்பு வியந்து பாராட்டத்தக்கதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத் தளபதி பதவியை வகித்த எந்தவொரு நபரும் இந்த வெற்றியை ஈட்டியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினைக் கவிழ்ப்பதற்கான சதித் திட்டம் தீட்டிய காரணத்தினால் ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா மீதான விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும், மிகப் பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டுப்படைத் தளபதி பதவியை வகித்த காலத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா அரசியல் தலைவர்களுடன் தொடர்புகளைப் பேணியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இராணுவ ஆட்சி ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் சரத் பொன்சேகா முயற்சிகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகள் சரத் பொன்சேகாவின் சதித் திட்டத்திற்கு பாரியளவு ஒத்துழைப்பு வழங்கியதாக நூறு வீதம் உறுதிப்படக் கூற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, நோர்வே போன்ற நாடுகள் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை பிரசூரம் செய்யும் ஊடகவியலாளர்களுக்கு நோர்வே பணம் வழங்கியதற்கான சான்றுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் மீது சரத் பொன்சேகாவே தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், விரைவில் இந்த உண்மைகள் அம்பலப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய கூறியதை அமெரிக்கா, நோர்வே மறுப்பு சிறீலங்காவின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஐபக்ஸ அவர்கள் சிறீலங்காவின் எதிரிகட்சிகளின் வேட்பாளாராக போட்டியிட்ட முன்னாள் ஐனரல் சரத்பொன்சேகா அவர்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் நிதியுதவி வழங்கின என்ற குற்றச்சாட்டை அமெரிகா, நோர்வே ஆகிய நாடுகள் மறுத்துள்ளன.

இதேவேளை கோத்பாய அவர்கள் சரத்பொன்சே அவர்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் சட்டத்தை கையில் எடுத்து கூறியமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.thinamurasam.com/

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்கு அமெரிக்காவும், நோர்வேயும் நிதி உதவி வழங்கியதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள கருத்தை அந்த இரண்டு நாடுகளும் மறுத்துள்ளன.

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஷபக்ஷவை மேற்கோள்காட்டி சிங்கப்பூர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான தகவல்களை முற்று முழுதாக நிராகரிப்பதாக நோர்வே தூதரகம் அறிவித்துள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் நோர்வே இந்த மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

எந்தவொரு நாட்டின் உள்விவகாரங்களிலும் நோர்வே தலையீடு செய்ததில்லை எனவும், செய்யப் போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் இலங்கைக்கான நோர்வே தூதுவர் டோரி ஹாட்ரோம், இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்க்கட்சி வேட்பாளருக்கு பண உதவி அளித்ததாக இலங்கை பாதுகாப்புச் செயலாளர் வெளியிட்டுள்ள கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதென அமெரிக்கா ஊட அறிக்கை ஒன்றின் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எந்தவொரு வேட்பாளருக்கும் தாங்கள் ஆதரவளிக்கவில்லை எனவும், இலங்கையில் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே தமது நாட்டின் விருப்பமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவளித்த நபர்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.

globaltamilnews

நல்லது கோதபாயா, இதே நிலைப்பாட்டில் தொடர்ந்து இரு கோதபாயா.

புதுக்குடியிருப்பு வைத்திய சாலை மீது நாங்கள் குண்டு வீசியது உண்மைதான். அது அங்கை எங்களின் அனுமதியை மீறி இயங்க வேண்டியது இல்லை எண்டு கோத்தபாய சொன்ன போது அமத்தி கொண்டு இருந்த மாதிரி இதுக்கும் இருக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாயா கூடாது! அமெரிக்காவும் நோர்வேயும் அச்சா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.