Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தேர்தலும் எதிர்காலமும் : புதிய திசைகளின் கலந்துரையாடல் நிகழ்வு

Featured Replies

NDSNoShadow2.jpg

புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் நான்காவது பகுதி வெள்ளி (19.10.2010) 10:30 இலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.

இலங்கைத் தேர்தலும் எதிர்காலமும் என்ற தலைப்பில் இடம்பெறும் இந்த நிகழ்ச்சியில் திரு.காதர் அவர்களுடன் கலந்துரையாடல் இடம் பெறும், கடந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்த ஆய்வும், எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் குறித்த மதிப்பீடும், ஆய்வும் இடம்பெறும். இந்த நிகழ்வில் பங்காற்ற விரும்புவோர் நேரடியாக சன்றைஸ் வானொலியூடாகவோ அன்றி குரல்வெப் (kuralweb.com) இணையத் தளத்தினூடாகவோ தம்மை இணைத்துக் கொள்ளலாம்.

குரல்வெப் மற்றும் இனியொரு (inioru.com) இணையத் தளங்களூடாக முன்கூட்டியே தமது கருத்துக்களையும் வினாக்களையும் முன்வைக்கலாம். நிகழ்ச்சியைக் கேட்க விரும்புவோர் http://firstaudio.net ஊடாகக் கேட்கலாம்.

கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கூட பின்னூட்டங்களையோ கேள்விகளையோ பதிவு செய்து கொள்ள முடியும்.

http://kuralweb.com/20100218/discussion4.aspx

Edited by Alternative

மோனே இந்த காதர் யாருங்க? காலம் அப்படி என்ன செய்ய.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க இருக்கிறதுக்கு படிச்சு எழுதவே நேரமில்ல அதுக்க உதுகளில பங்குபற்ற நேரமிருக்குமோ?

  • தொடங்கியவர்

மோனே இந்த காதர் யாருங்க? காலம் அப்படி என்ன செய்ய.

திரு.பி.ஏ.காதர் அவர்கள் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர். 70 களில் இலங்கை ஆசிரியர் சங்கத்தில் ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரலெழுப்பியவர். இலங்கையின் இடதுசாரி அரசியலில் விரல்விட்டு எண்ணக்கூடிய மார்க்சிய ஆய்வாளர்களில் இவரும் ஒருவர். இரண்டு தடவை சிறை சென்று பல வருடங்களைச் சிறையிலேயே வாழ்ந்தவர். ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் அனைத்துத் தளத்திலும் தீர்க்கமான பங்கு வகித்தவர். மலையக மக்களின் போராட்டத்தை தொழிற்சங்க வாதம் என்ற தளத்திலிருந்து அரசியல் தளத்திற்கு நகர்த்திய வரலாற்றுப் பாத்திரம் காதருக்கும் உண்டு. மலையக மக்கள் குறித்தும், சுய நிர்ணய உரிமை குறித்தும் இவரின் நூல்கள் அறியப்பட்டவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்கியின் கோவணத்ததை காவித்திரிந்த ஒரு ஈனம் இனியொரு இணையம்நடாத்தி புதுத்திசை காட்டுதாம்.

இவருடன் யாருங்கோ அது காதர்..ச்சும்மா போய் உம்மடை சனத்திட்டை காட்டும் இந்த திசையை...

ஒருவரின் பெயரை வைத்துக் கொண்டு கொச்சைப் படுத்தாமல் அவ்ர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டு அதற்கேற்ப கருத்து வைக்கலாமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்... கிழம்பிட்டினம்.

அப்பு, இந்த காதருக்கு சில கேள்விகள்:

ஒரு "அரசியல்" சன நாயக நாட்டில் எப்படி சன அதிபதியின் குடும்பத்தினர் முநூற்றி தொண்ணூறு பேர் இருக்கலாம்? அப்படி இருந்தால் அது சன நாயகமா?

பதினைந்து பத்திரிகையாளர்களை கொழும்பில் வைத்து போட்டுத்தள்ளியது சன நாயகமா?

மற்றும், புலியை வீழ்த்திய நாலு நட்சத்திர தளபதி பொன்சேகாவே, இரசாயன பாம்சா ஒரு சர்வதிகாரி, என்று கூறி, பின் அவன் குண்டுக்கட்டாக அவனின் படையாலையே தூக்கி உள்ளுக்கு வைத்திருக்கும் இந்த நிலையில், "தேர்தல்" என்ற ஒரு விடயம் கேடா?

அப்படியே, தேர்தல் வைத்தாலும் புத்த பிக்கு தொடக்கம் ஒரு நூறு பேரை போட்டு தள்ளி பின் மக்கள் வாக்கு போடாமல் இருக்க செல் அடித்து, கிரனேட் எறிந்து, சன நாயகத்தை தூக்கி நிறுத்துபவர்களை பற்றி என்ன அலட்ட உத்தேசம்?

யாழ் திறந்த வெளி சிறைச்சாலையின் பெரிய தாதா டக்ளஸ்வர்தன தேவானந்தரத்னா, கிழக்கின் முதலை வாய் அமைச்சர் பிள்ளையான் தொடக்கம் ஊரில் களவெடுத்து திரிந்த அல்லது சிறு பிள்ளைகளை பிடித்து குடிக்க வைத்து ஆயுதம் கொடுத்து நடத்துவதெல்லாம் ஒரு அரசியலா?

ஸ்ரீ லங்காவில் இப்போது சர்வதிகாரி ஆட்சி நடப்பதே தெரியாமல், காதர் கிழம்பிட்டார். பாவம் ஆடு!

Edited by KuLavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெற்றதாயைக்கூட எதிரியுடன் படுக்கைக்கு அனுப்பிவிட்டு விளக்குப்பிடிக்கும் திசைகள் இப்போது புதியதிசைகளை காட்டுகினம்.முள்ளிவாய்க்கால் இருந்ததிசை இவர்களுக்கு தெரியுமா..?

எல்லாம் புலிகளால்தான் நடந்தது என்றால் இவர்கள் இன்று என்ன செய்கிறார்கள்..?

ச்சும்மா இணையத்திலும் ரேடியோவிலும் ஆயிரம் கருத்துக்களை எழுதுவதால் பேசுவதால் உருப்படியா எதுவும் நடவாது.புதியபுத்திசீவிகள் புறப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனால் ஒருவிசயத்தில் தமிழ்மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

இந்த புதுத்துரோகிகள் நினைத்தார்கள் புலிகள் அழிந்தபின்னர் மக்கள் தங்களை ஏற்பார்கள் என்று.

இன்றும் இவர்களின் கலந்துரையாடல்களுக்கும் கூட்டங்களுக்கும் 2009 மே18க்கு முன்னர் வந்த அதே 35 பேர்தான்.

ஒருசீவன்கூட அதிகமாகவில்லை.

புதியதிசையும் இன்னொரு அடிபணிவு அரசியல்காரர்கள்தான்.

டக்கி விழுந்துகும்புடுவான்.

இவர்கள் மல்லாந்து மகிந்தாவை கும்புடுவார்கள்.

கருத்துச் சொன்ன புலநாய்வு சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.

கலந்துரையாடலின் ஒலி வடிவம் இணைக்கப் பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கேட்டுப் பாருங்கள்.

http://kuralweb.com/20100218/discussion4.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.