Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் ஒரு அமைதியை ஏற்படுத்தலாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் ஒரு அமைதியை ஏற்படுத்தலாம்.

இலங்கையல் சிங்களவர், தமிழர் பிரச்சனைக்குத்தூபமிட்டு வளர்த்து அமைதியில்லா இலங்கையை உருவாக்கியவர்கள் முற்று முழுதாக இந்தியர்களே. சிங்களவர் தமிழர்களுக்கு உரிமையைக் கொடுக் விரும்பினாலும், இதை இப்படிச் செய் அப்படிச்செய் என்று சிங்களத்திற்கும், தமிழர்களுக்கு உரிமைக்காகப் போராடு என்ற ஆயுதத்தையும் அள்ளிக் கொடுத்து உரிமையை கேட்பது போன்று கொடுக்காதே என்ற சிங்களத்திற்கும் சொல்லி இரு இனங்களும் தொடர்ந்து பிர்சனைப்படுவதால் வேறு வல்லரசுகள் இலங்கையில் கால்பதிக்காது வைத்துக் கொள் இதுவே வழி என்ற ரீதியில் இலங்கையை நடத்தி வந்தது இந்தியாதான். மிரட்டல்களும் தட்டல்களும் எங்கே எப்போது போடவேண்டும் என்று அங்கே போட்டு இரு இனங்களையும் அமைதியாக வாழவிடாது அல்லல் படுத்தியது இந்தியா.

பின்னர் பிரபாகரன் நாட்டைப்பிரித்து எடுத்துவிடுவான் என்ன எண்ணம் மேலோங்க எப்படியாவது இவர்களை மீண்டும் பழைய நிலைக்குத் தள்ளிவிடவேண்டும் என்று புலிகளை அழிக்கத்திட்டம் தீட்டி இன்று (1968) பழைய நிலைக்கு கொண்டுவந்தாலும் இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது போனது இந்தியாவின் வியூகம் மிகப்பெரும் தோல்வியில் தான் முடிந்துள்ளது. வருங்காலங்கள் சிங்களவர்கள் சீனாவை ஒரு போதும் புறம்தள்ளமாட்டார்கள். எனவே இவ்வளவு காலமும் செய்த ராஜதந்திரம் இலங்கையில் இந்தியாவிற்கு தோற்றுப்போனது.

இருந்தாலும் ஒரு வழிதான் இருக்கின்றது, சீனாவுடன் நேரடியாகவோ அல்லது அல்ஙகை அரசாங்கமூடாகவோ இந்தியா சண்டையிடாது. திருகோணமலையில் அமெரிக்கா வொயிஸ் ஒவ் அமெரிக்கா அமைத்தபொழுது (1980களில்) புலிகளை வைத்து அதைத் தகர்த்தது. இப்போது சீனாவுக்கு எதிரான எதிர்ப்பைக்காட்ட மீண்டும் தமிழர்களைப் பயன்படுத்த இந்தியா பின்னிற்காது. தன் அடிவருடிகளை வைத்து மீண்டும் ஒரு போராட்டத்தைத் தொடங்கலாம். அப்படியானால் அது தமிழர்களுக்குத்தான் பாதிப்பாக அமையும். இந்தியா செய்த துரோகத்தனங்களை மனத்pல் வைத்து இலங்கையில் இந்தியாவின் செயற்பாட்டுகளுக்கு தமிழர்களாகிய நாங்கள் இடமளிக்கக்கூடாது. இந்தியா இந்தியாவாக இருக்கும் வரை தமிழீழம், உரிமை என்ற சொற்களுக்கு விடைகிடையாது. இந்தியா தமிழர்களுக்குத்தீர்வை வை என்று சொல்வதும் அரை குறைத்தீரவை கொடுப்பதும் கிழிவ்தெறிவதும் கடந்த கால அனுபவங்கள். இந்தியாவில் இருந்து அச்சுறுத்தல்களும் மீண்டும் தன்னுடைய சிந்தனைகளுக்குக்கட்டுப்படும் தமிழர்களை வைத்து இந்தியா மீண்டும் ஆயுதப்போராட்டத்தை உருவாக்கலாம், தமிழ்நாட்டிலிருந்து பயிற்சி வழங்கி இலங்கைக்கு அனுப்பலாம் என்பதன் முன்னெச்சரிக்கையாக சீனாவை கச்சதீவு போன் தீவகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் இலங்கை அரசு நிறுத்தியுள்ளது. இந்தியா இந்தியாவாக இருக்கும் வரை தமிழர்கள் இலங்கையில் அமைதியுடன் வாழ சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அவசியமானதும் தேவையும்கூட. இந்தியாவின் கபடவிளையாட்டுக்களுக்கு பாடம் புகட்டக்கூடிய தலைமை ராஜபக்ஷ அன் கொம்பனி தான். இவர்கள் ஆட்சியிலிருப்பது தான் நல்லது.

சிலர் தமிழர் நலன்களுக்கு பாதிப்பு என்று நினைக்கலாம். வெட்டுக்காயம் ஆற்றுவது கடினம் என்றால் காயத்தைப்பெரியதாக்கி மருந்து போடுவதில் தவறில்லை. சீனாவின் ஆதிக்கத்தை தமிழர்கள் வெறுக்காமல் காலத்தின் கடமையாக ஏற்கவேண்டும். யார் இருந்தாலும் தமிழர்களுக்கு இப்போதைக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. இந்தியாவின் தமிழருக்கான உரிமை வாதம் ஒரு தன்னலம் தான் ஒழிய தமிழரின் மோலான கரிசனையில் அல்ல. இந்தியாவின் இலங்கைமீதான தலையீட்டை ஒதுக்க தமிழர்களும் பாடுபடவேண்டும். அப்படிச் செய்யும்போது தான் இந்தியா சிங்களவருடன் மோதும்.

சீனாவும், பாகிஸ்தானும், பங்களாதேசும் புலிகளை தடை செய்யவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.

இதன் மூலம், அவர்களுக்கும் சுயநலம் இருந்தாலும், அதற்காக இலங்கை அரசின் அராஜகத்தை அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ராஜ்லோகன், நன்றி ஆசான். இந்த கட்டுஐயை வாசித்துவிட்டு மீன் சாப்பிடுவது தொடர்பான நமது எதிர்கால அரசியல் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். தேசத்தில் வாழும் மக்களும் இராஜதந்திரிகளும் எவ்விதத்தில் மீன்பிடித் தடைகளை அகற்றுவது என்றும் எப்படி மீன்பிடித் தடைகளை மீறியும் தாண்டியும் மீன்பிடிப்பது என்றும் யோசிப்பார்கள். ஏனெனில் உயிர்வாழ அவர்களுக்கு எப்படியும் மீன்பிடித்தாக வேண்டும். நாழைய பயங்கர வாதிகள் புலம் பெயர்ந்தவர்கள் அனுப்பும் மீன்களைத் தின்றுவிட்டு கடலை வற்றடித்து மீன்பிடிக்கும் முயற்ச்சியில் ஈடு பட திட்டமிடுவார்கள். எங்கள் புலம் பெயர்ந்த கற்பனாவாதிகளுக்கு மீன் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஒன்றுதான் அவர்கள் கடல்தான் எதிரி. கடலில் இறங்கிறவன் எல்லாம் துரோகிகள் கடலில் இறங்கவேண்டாம் என்பார்கள். கடல் வற்றும்வரை கடலைப் பகீஸ்கரிப்பதுதான் சுதந்திரமாக மீன்பிடிப்பதற்க்கு வழி என்பார்கள் போலும்.

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.