Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நைனாதீவில் சோழர் காலத்து ஆலயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி, மார்ச் 12, 2010 02:10 |

நைனாதீவில் சோழர் காலத்து ஆலயம்

யாழ் குடாநாட்டின் கரையோர தீவுப்பகுதிகளில் ஒன்றான நைனாதீவுப் பகுதியில் சோழர் காலத்து ஆலயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராட்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

நைனாதீவுப்பகுதியில் கி.மு 10 ஆம் நூற்றாண்டு பழமை வாய்ந்த சோழர் காலத்து ஆலயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், அது 40 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டதாகவும் பேராசிரியர் பொ. புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

ராஜ ராஜ சோழன் மிகவும் பலம் மிக்க அரசனாக 985 தொடக்கம் 1014 காலப்பகுதியில் தஞ்சாவூர் மற்றும் சோழமண்டலம் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்திருந்தார்.

நைனாதீவில் கண்டறியப்பட்ட ஆலயத்தில் சுவர்களும், அத்திவாரமும், சிற்பங்களும் காணப்படுவதாகவும், சோழர் காலத்து நாணயங்களும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்குடாநாட்டின் தீவுப் பகுதிகளில் இதுவரை பிரித்தானியா மற்றும் டச்சு ஆட்சியாளர்களின் தடயப்பொருட்களே கண்டறியப்பட்டிருந்தன. ஆனால் சோழர் காலத்து தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும்.

மேலதிக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் போது இந்த ஆலயப்பகுதி முழுமையாக மீட்கப்படும் எனவும், தீவுப்பகுதி மக்கள் இவ்வாறான ஆலயங்களை நிர்மாணிப்பதில்லை எனவும் புஸ்பரட்ணம் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் தமிழ் மக்கள் தொல்பொருள் ஆராட்சிகளில் ஈடுபடுவதை சிறீலங்கா அரசு அனுமதிப்பதில்லை. தொல்பொருள் ஆராட்சியில் சிங்கள மக்களின் அதிகாரங்களே அதிகம் உள்ளன. வடக்கு – கிழக்கில் தொல்பொருள் ஆராட்சிகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசு நிதி உதவிகளையும் வழங்குவதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

pathiv

அங்குள்ள ஆர்மியும் நேவியும் இரவிரவா புத்தர் சிலையை புதைக்கப் போறாங்கள்;எதுக்கும் முந்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கி மு 10ம் நூற்றாண்டு என எழுதியிருக்கிறீர்கள் (எழுத்துப்பிழை). கிபி 10ம் நூற்றாண்டு என்று திருத்தி விடுங்கள். சோழர்காலமெனில் அதுதான் சரியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணே கி மு தான் சரி கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்த குடி தமிழர் எண்டு என்ர தமிழ்வாத்தி படிப்பிச்சவர். தஞ்சைபெரியகோயிலப்பற்றி செல்லேக்க உப்புடிதான் சொன்னார்கள். எழுதினவர் கிண்டியெடுத்த கல்லு ஆராச்சிக்க அனுப்பி எடுத்து எழுதினாரோ தெரியாது நயினாதீவு முழுக்க இந்தியாக்காறரக்கொண்டு கிண்டுவிச்சா சிங்களவங்கள துரத்தலாம். :)

பதிவுக்கு ஆங்கிலத்தை சரியான தமிழிலை மொழிபேயர்த்து போடுறதிலை தான் சிக்கல் எண்டா, ஊரின் பெயரை கூட சரியாக சொல்ல தெரியாத சிக்கலோ? இல்லை நெடுந்தீவை நயினாதீவு எண்டு மாத்திப்போட்டா யாரும் சண்டைக்கு வரமாட்டினம் எண்டு நினைச்சினமோ?? :)

http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Chola+era+temple+excavated+off+Jaffna&artid=s8GtkpakB2o=&SectionID=oHSKVfNWYm0=&MainSectionID=oHSKVfNWYm0=&SectionName=VfE7I/Vl8os=&SEO=

The History and Archeology Department of Jaffna University has excavated a temple of the Chola era in Nedunthivu or Delft Island, off the Jaffna coast.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.