Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாவகச்சேரியில் கப்பம் கேட்டு வர்த்தகரின் மகன் கடத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய், மார்ச் 16, 2010 02:48 |

கப்பம் பெறுவதற்காக தமிழ் மாணவர் கடத்தல்

சாவக்கச்சேரி வடக்கில் மடத்தடி பிரதேசத்தில் உள்ள மிகவும் பிரபலம்மிக்க வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் அவரின் 17 வயது நிரம்பிய மகனை கடத்திச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சாவக்கச்சேரி வடக்கு மடத்தடி பகுதியில் உள்ள பிரபல வர்த்தகரின் வீட்டுக்குச் சென்ற இனம்தெரியாத நபர்கள் அவரின் 17 வயதாக மகனை கடத்திச் சென்றுள்ளதுடன், அவரை விடுவிப்பதற்கு 300 மில்லியன் ரூபாய்களை கப்பமாக கேட்டுள்ளனர்.

யாழில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் இந்த மாணவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) நள்ளிரவு 11.00 மணியளவில் கடத்தப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை முதல் வௌ;வேறு செல்லிடத் தொலைபேசிகளில் இருந்து அழைப்புககளை மேற்கொண்ட கடத்தல்காரர்கள் கேட்ட பணத்தை தரமறுத்தால் மாணவனை கொலை செய்யப்போவதாக மிரட்டிவருவதாக வர்த்தகர் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சி ஒன்றின் பெயரை அவர்கள் குறிப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அருள் விநாயகம் என்ற உந்துருளி உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளரின் மகனே கடத்தப்பட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரங்களுக்கான பணத்திற்காகவே இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இதனிடையே சிறீலங்கா இராணுவத்தின் புலனாய்வுத்துறையின் உதவியுடன் துணைஇராணுவக் குழுவினரே இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

pathivu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகள் அழிதொழிக்கபட்ட நாட்டில், இனி கப்பம், கொலை, ஊழல், அரசபயங்கரவாதம், களவு எல்லாம் கட்டுக்கு அடங்காமல் மலியும். ஒருமித்த இலங்கையில் சமஷ்டி அரசியல் பேசுகிறார் சம்பந்தர். விடுதலைபுலிகளின் போராட்டத்தை, வெளி நாடுகளுக்கு சென்று நியாயபடுத்தி பரப்புரை செய்யவுமில்லை, பதிலாக கொச்சை படுத்தி அவர்களை அழிக்க சர்வதேச நாடுகளுக்கும் இலங்கை அரசுக்கும் துணை போனவர்கள் தான் இந்த சம்பந்தர் குழு.

சாவகச்சேரியில் கப்பம் கேட்டு வர்த்தகரின் மகன் கடத்தல்

வவுனியா நிருபர்

செவ்வாய்க்கிழமை, மார்ச் 16, 2010

சாவகச்சேரி,மடத்தடி என்னுமிடத்தில் நேற்று முன் தினம் வர்த்தகர் ஒருவரின் மகன் இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்டுள்ளார் கடத்தப்பட்டவரை விடுவிப்பதற்கு மூன்று கோடி ரூபா பணம் வழங்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சாவகச்சேரி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடத்தப்பட்டவர் க.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதிய சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவராவார்.

வடபகுதியில் பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பின் இடம்பெற்றுள்ள முதலாவது கடத்தல் சம்பவம் இதுவென்றும் யாழ்ப்பாணத்தகவல்கள் கூறுகின்றன.

http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், தமிழன் சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், ஏமாற்றிகள், ..... ……

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு ஏன் இப்ப எல்லோரும் துள்ளி குதிக்கின்றீர்கள்? இராஜதந்திர அரசியலில் மிக முக்கியமானதே விட்டுகொடுப்புதான். அதை முதலில் பழகிகொள்ளுங்கள்.

அதற்கு ஏன் இப்ப எல்லோரும் துள்ளி குதிக்கின்றீர்கள்? இராஜதந்திர அரசியலில் மிக முக்கியமானதே விட்டுகொடுப்புதான். அதை முதலில் பழகிகொள்ளுங்கள்.

எவ்வளவு காலத்துக்கு..?? இன்னும் எதை எல்லாம் எண்டும் சொன்னார்கள் எண்டால் புண்ணியமாக போகும்...

இராசதந்திர அரசியல் எண்டால் விட்டு கொடுத்து கொண்டு இருப்பதே எண்டும் வருங்காலத்தில் சொல்லுவினம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.