Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையோர் வன்முறை என்கின்ற போர்வையில்…: ரமேஸ் சிவரூபன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இளையோர் வன்முறை என்கின்ற போர்வையில்…: ரமேஸ் சிவரூபன்.

புலம்பெயர்தேசங்களில் தமிழ் இளைஞர்களுக்கிடையேயான வன்முறைகள் என்பது தற்போது தமிழர்களின் வாழ்வில் ஒருஅன்றாடநிகழ்வாகிவிட்டது;மலைப்பிரதேசங்களில் மாலையானதும் மழை பொழிவதைப்போல. மிக அண்மையில் பாரிசின் புறநகர்ப்பகுதியில் நடைபெற்ற வன்முறை நிகழ்வொன்றில் 16 வயதேயான இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டிருக்கின்றார். இது ஒரு வழமையான நிகழ்வு எனபது போல் பாரிஸ் வாழ் தமிழர்கள் பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை.

ஈழத்தில் விடுதலைப் போராட்டங்களின் ஆரம்ப காலங்களில் தமிழ் இளைஞர்களின் சடலங்கள் ஆங்காங்கே எரியுட்டப்பட்ட நிலைகளில் கண்டெடுக்கப்பட்டுகாலப்போக்கில் அவை சாதாரண நிகழ்வுகளாகின.இவை இலங்கைப்படைகளால் நிகழ்த்தப்பட்டன. பின்னர் யாழ் குடாப்பிரதேசத்தில்இருந்து அனைத்து விடுதலை இயக்கங்களாலும் இராணுவம் விரட்டியடிக்கப்பட்டபின் இயக்க உள் முரண்பாடுகளால் மின்கம்பத்தில் பிணங்கள் தொங்கின. அவையும் சாதாரணமாகிப்போயின. எண்பத்து மூன்றுகளின் பின்னான புலப்பெயர்வு அதிகரிப்பின் பின்னர் புலம்பெயர்தேசங்களில் எம்மவர்கள் கடுமையான தொழிலாளிகளாகவே அத்தேசங்களில் அறியப்பட்டார்கள். இக் கால கட்டங்களில் யாழ்ப்பாணத்தின் மிக இறுக்கமான சாதி முரண்பாடுகளும் இவர்களிடையே அதிகம் தலை தூக்கியிருக்கவில்லை. கடுமையான உழைப்பின் பெறுமானங்களால் தங்களது மனைவி பிள்ளைகள் சகோதர சகோதரிகள் என இவர்களை புலத்துக்கு அழைக்கும் முயற்சிகளை மேற்கொண்டபோது பல்வேறு நாடுகளில் ஆண்டுக்கணக்கில்மாதக்கணக்கில் தங்கியிருந்து பிரயாண முகவர்களால் சீரழிக்கப் பட்டு ஒரு தலைமுறை புலத்துள் புகுந்த போது அது ஈழத்தின் வன்முறையின் எச்சங்களையும் காவி வந்து ஆங்காங்கே பதியனிட்டுக்கொண்டது.

ஆரம்பப் புலப்பெயர்தமிழர்கள் தங்குவதற்கு போக்கிடமின்றியும் மொழிப்புரிதலின்மை காரணமாகவும் ஒருவரையொருவர் இறுகப்பற்றியிருக்க வேண்டிய தேவை இருந்தது. அப்போது சாதி, பிரதேச வேறுபாடுகள் ஓடியொழித்துக்கொண்டன. ஆனால் தொண்ணூறுகளுக்குப் பின்னர் வருகை தந்தவர்களுக்கு வதிவிடப்பிரச்சினையோ மொழி பெயர்ப்புப்பிரச்சினையோ இருக்கவில்லை. (இதற்குள் பிரான்சில் பிரெஞ்சு மொழி தெரியாத இலங்கைத்தமிழர்களிடம் பிரெஞ்சுக் கொலனியவாசிகளான பாண்டிச்சேரித்தமிழர்கள் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றுகின்றோம், உதவி புரிகின்றோம் என்கின்ற போர்வையில் ஈழத்தமிழரின் கடின உழைப்பின்பலன்களை மனிதாபிமானமின்றி மிக இலகுவாகத் திருடியும் கொழுத்தார்கள்.) பிற்காலப்புலப் பெயர்வாளர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை தேட வேண்டியது அவசியம் என்கின்ற நிலமையும் இருக்கவில்லை. அவர்களைத் தாங்குவதற்கு தந்தையோ சகோதரனோ இருந்தார். எனவே அவர்களுக்கான ஓய்வு நேரங்களும் ஒருவரையொருவர் சந்திக்கும்திறனும் அதிகரித்தன. புலப்பாடசாலைகளுக்குப்படிக்கப்போன இளைஞர்களுக்கு அப்பாடசாலைகளின்நெகிழ்வுத் தன்மைகள் ஆச்சரியங்களைக்கொடுத்தது.

இலங்கைப்பாடசாலைகளில் கடுமையான ஒடுக்குதல்களுக்குள் கல்வியைப் பெற்றவர்களும் ஆயுத வன்முறைகளுக்கு இடையில் கல்வியைத் தொலைத்தவர்களும் புலம்பெயர் பயண இடைநடுவில் பல்வேறு நாடுகளில் தங்கியிருக்க நேர்ந்ததனால்கல்வியை இடை நிறுத்தியதன்பின்னர் அந் நாடுகளுக்குள் புகுந்த பின் திரும்பவும்பாடசாலைகளுக்குள் புகுந்தவர்களுக்கு மேற்கத்தைய நாடுகளின்பாடசாலைகள்அளித்த சுதந்திர நடவடிக்கைகளும் அவர்களுக்கு கல்வியின் மீதான ஆர்வத்தினைத் தடுத்து அந்தச் சுதந்திரங்களை தமது வயதுக் கேற்ற வழிகளில் எவ்வாறு செயற்படலாம் என்ற தோற்றுவாயையே ஏற்படுத்தியது. மொழி புரியாத பெற்றோரினால் பிள்ளைகளைச் சரியான கல்வியின் வழியில் கொண்டு செலுத்தவும் முடியவியல்லை.இயக்கங்களின் குழு வன்முறைகளைப் பிரதியெடுத்தவர்களாக இத்தேசங்களுக்குள் புகுந்தவர்கள் இங்கும் குழுக்களாகப் பிரிந்து கொண்டு தமது வன்முறைகளுக்கு வடிகால் தேடத் தொடங்கினார்கள்.

சாதிவாரியான, பிரதேசவாரியான வன்முறைகளும்வெடிக்கத்தொடங்கின. ஆரம்ப காலங்களில் சாதியை ஒளித்து வைத்தவர்களும் இப்போது வசதி வந்து விட்ட தைரியத்தில் புலத்தில் தமது புதிய சந்தததிகளுக்கு அதனைக் கற்றுக் கொடுக்கவும் சாதியக் குப்பையான இந்துவத்தினைப் பேணுவதற்கான ஆலயங்களை அமைப்பதற்கும் தொடங்கினார்கள்.

இது மட்டுமல்லாது தாராளமான மது, போதை மருந்துகளின் பாவனைகளும் அதிகரித்துக்கொண்டது. தேடுதல் குறித்த பிரக்iஞைகளற்ற பொருளாதாரத் தேடுதலையே குறிக்கோளாகக்கொண்ட பெற்றோர். தமக்குக்கிடைத்த சுதந்திரத்தை மட்டுமே பற்றிக்கொண்ட இளம்சந்ததி. புலம் பெயர் தமிழர்களின் பொருளாதாரச் செழிப்புக்களில் கண்வைத்துக்கொண்ட மதவாத அமைப்புக்கள் இவற்றுக்கிடையே இளைஞர் வன்முறை இன்று தலைவிரித்தாடுகின்றது. இதனை ஒளிப்பதற்கும் சீர்படுத்துவதற்கும் வன்முறைகளில் ஈடுபடும் இளைஞர்களுடன் சரியான உறவுகளைப் பேணி அவர்களை மீட்டெடுக்கும் முயற்சிகளில் யாரும் ஈடுபட முன்வரவில்லை.

நான் எல்லா இளம்சந்ததிகளையும் குற்றம்சொல்லவரலில்லை புதிய தேசங்களில் பதியனிட்டுக் கொண்டு சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளும் ஏராளம்தான். ஆனால் ஒரு குடம் பாலுக்கு ஒருதுளி விசம் என்பது போலசிலரின்நடவடிக்கைகள் முழுமையான தமிழ்ச் சமூகத்தையும் சக சமூகங்கள் வன்முறையாளராகவே பார்க்கும் நிலைக்குத் தள்ளுகின்றது. திரைப்படங்கள் என்கின்ற போர்வையில் இந்தியத்திரை அட்டைக்கத்தி வீரர்களுக்கு இரசிகர்களாகி விடுகின்றவர்கள் இங்கு நிஜக் கத்திகளைத் தூக்கிக் கொண்டு தமக்கிடையே செய்யும்கொடூரமான தாக்குதல்களைக்கண்டு மேலைத்தேயக் காவற்துறையினரே மிரண்டு போயுள்ளனர். தங்கள் காதலிகளுக்கான தாக்குதல்கள், தங்களைக் காதலிக்க மறுக்கும் பெண்கள்மீதான தாக்குதல்கள் என புலம்பெயர் இளஞ்சமூகம் வன்முறைப்பரம்பல்களை விரித்துக்கொண்டே போகிறது.

நான்சொல்ல வந்த விடயத்தைச்சொல்லி விடுகின்றேன். அண்மையில் மரண நிகழ்வொன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அப்போது புலம்பெயர் படைப்பாளிகள் கலைஞர்களையும் அங்கு அதிகமாகக் காண முடிந்தது. அப்போது இக்கட்டுரையின்மேலே நான் குறிப்பிட இளைஞனின் மரணம் தொடர்பாகவும் நாங்கள் கதைத்துக்கொண்டோம். அப்போது குறித்த மூத்த முற்போக்குப் பெண் படைப்பாளியொருவர் “இந்த வன்முறைகளில் அவனுகள்தான் ஈடுபடுகின்றானுகள். நானென்ன பனை மரத்தை இஞ்சை கொண்டு வந்து நட்டு அதிலை கள்ளுச்சீவியோ என்ரை பிள்ளையளுக்கு இதுகளை விளங்கப்படுத்த முடியும். பேசாமல் பாரிசை விட்டு எங்காவது தொலைதூரத்துக்கு பிரெஞ்சுக்காறரின்ரை ஏரியாவுக்கு என்ரை பிள்ளையளைக் கூட்டிக்கொண்டு போகப் போறேன். இதுக்கு அம்மா பகவான் ஆசி புரிய வேண்டும்” என நெக்குருகினார். மறு கிழமை வெளிவந்த தென்னிந்தியத்தமிழ்ச் சஞ்சிகையொன்றில் அம்மா பகவான் என அழைக்கப்படும் கல்கி சாமியாரின் பித்தலாட்டங்கள் ஆதாரத்துடன் வெளியிடப்பட்டிருந்தும் நித்தியானந்தரின் லீலைகளுக்கு மத்தியில் அச்செய்தி பெரிதாக எடுபடவேயில்லை. ஆந்த முற்போக்குப்படைப்பாளி இங்குள்ள அம்மாபகவானின் முகவராகவும்அவரது சக தோழியான இன்னொரு கவிஞரான பெண்மணி பங்காரு என அழைக்கப்படும் செவ்வாடைச்சாமியின்முகவராகவும் செயற்படுகின்றனராம். இங்கே யாருக்கு உளவியல் மருத்துவம் தேவையென்ற கேள்வி எனக்குள் எழுந்தது. சில வேளைகளில் எனக்குத்தான் தேவையென மேற்படி படைப்பாளிகள் இக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தால் சிபார்சு செய்வார்கள்

http://inioru.com/?p=11602

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நான் ஒரு தளத்தில் படித்த செய்தி. பெயர் விபரங்களுடன் இருந்தது. அவர்களின் தனிப்பட்ட நன்மை கருதி பெயரை நான் எழுதவில்லை.

பிரித்தானியாவில் விலை மாதர் இல்லம் ஒன்றுக்குள் புகுந்த தமிழ் இளைஞர்களான x 25 வயது,y 22 வயது,z 18வயது ஆகியவர்கள் லண்டன் Tooting (ரூட்டிங்) பகுதியில் அமைந்துள்ள விலைமாதர் இல்லத்திற்குள் புகுந்து அவர்கள் மீது பாலியல் வன்முறையை மேற்கொண்டும் அங்கிருந்த நகைகள், பணம் என்பனவற்றை கொள்ளையிட்டும் சென்றுள்ளனர்.

இவர்கள் பொலிசாரிடம் சிக்கியதை தொடர்ந்து கடந்தவாரம் Kingston Crown court (கிங்ஸ்ரன் கிறவுண் நீதிமன்றில்) ஆஜர்படுத்தப்பட்டபோது முறையே 12 வருடம், 11வருடம், 8ஆண்டுகள் என சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர்கள் இரவு பகல் என்று பாராமல் பிள்ளைகளுக்கு என்டு உளைச்சு வைச்சால் உதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.

பிரித்தானியாவில் விலை மாதர் இல்லம் ஒன்றுக்குள் புகுந்த தமிழ் இளைஞர்களான x 25 வயது,y 22 வயது,z 18வயது ஆகியவர்கள் லண்டன் Tooting (ரூட்டிங்) பகுதியில் அமைந்துள்ள விலைமாதர் இல்லத்திற்குள் புகுந்து அவர்கள் மீது பாலியல் வன்முறையை மேற்கொண்டும் அங்கிருந்த நகைகள், பணம் என்பனவற்றை கொள்ளையிட்டும் சென்றுள்ளனர்.

அப்ப விலை மாதர்களும் :lol:

இது எல்லா நாடுகளிலும் புரையோடியுள்ள பிரச்சனை ,குறிப்பாக ஒருவகை இளைஞர்கள் நேரடியாக உறவுகளற்றவர்கள்.(பெற்றார் ,சகோதரர்) இன்னொரு வகையினரின் பெற்றோர்கள் தாங்கள் வாழும் நாட்டு மொழியறிவோ அந்த நாட்டு அடிப்படை சட்ட திட்டங்கள் பற்றியோ அறியாதவர்கள். இங்கு பிறந்த அல்லது வளர்ந்த இளைஞர்கள் தங்களின் உரிமை சுதந்திரம் என்னவென்று நன்றாகவே அறிந்தவர்கள்.இதனால் பெற்றாரை ஏய்ப்பது அவர்களுக்கு சுலபமாகிவிடுகின்றது.

அண்மையில கனடா சீ.பீ.சி யில ஓர் செய்தி பார்த்தன். ஓர் தமிழ் இளைஞருக்கு arrest warrant பிறப்பிக்கப்பட்டு இருந்திச்சிது, தேடப்படும் அவர் படமும் போடப்பட்டு இருந்திச்சிது. காரணம்? இன்னோர் தமிழ் இளைஞரை இவர் வேணுமெண்டு காரால அடிச்சு சாக்காட்டினவராம். வாகனத்தை ஒருவரை கொல்லுறதுக்கு ஆயுதமாய் பாவிச்சு இருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.