Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

51 நாடுகள் ஆதரவளித்த ஒஸ்லோ தீர்மானத்தின் அடிப்படையில் பேசத்தயார்-த.தே.கூ

Featured Replies

தமிழ் மக்களின் வாக்குப் பலத்தை பாவித்து ஒஸ்லோ உடன்படிக்கையின் அடிப்படையில் அரசியல் தீர்வொன்றை பெறத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அர்பணிப்புடன் செயற்படும்;இவ்வாறு இலங்கை தமிழருசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா கூறினார்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து காரைதீவு நந்தவனம் பிள்ளையார் சன சமூக முன்றலில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தமிழர்களின் ஜனநாயக சக்தியான தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாட்டின் தமிழ் பேசும் மக்களுக்காக

தமிழ் தேசிய இனத்திற்காக அந்த இனம் தமது மண்ணில் தன்னை ஆழ்வதற்காக சுயநிர்ணய உரிமை

அடிப்படையில் தமிழர்களாகவும் சுதந்திரமுள்ள மனிதர்களாகவும் வாழ்வதற்கு குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றது; போராடிக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய தமிழ்தேசியக் கூட்டமைப்பு மீண்டும் பலம் பெற்ற சக்தியாக மீண்டும் வரவேண்டுமா? அல்லது

சிங்கள அரசுகள் நினைப்பது போல் அழிக்கப்பட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலே

இப்போதுத் தேர்தலாகும்.

இந்த நாட்டில் நமக்கு சம்த்துவமில்லை எம்மை அடிமையாக நினைக்கிறார் ஜனாதிபதி;எமக்கு சிறு

உரிமை கூட தருவதற்கு அவர் ஆயத்தமில்லை;ஆனால் அவருடன் இருக்கும் நம்மவர்கள் அவருடைய தாரகமந்திரத்திலயே திளைப்பதுடன் மகிந்த சிந்தனையை கொண்டு எமது உரிமைக்காக அல்லது இனத்ஹ்டின் விடுதலைக்காகக் குரல் கொடுப்பதற்கு நாதியற்றவர்கவேயுள்ளனர்.

கிழக்கு முதலமைச்சர் பிள்ளையான் என்றாலும் சரி அமைச்சர் கருணாவாக இருந்தாலும் சரி ஒரு காலத்ஹ்டில் இனத்தின் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடியவர்கள்.இதையெல்லாம் விட்டுவிட்டுப் போய் இவர்கள் அடிமைத்தனமாக இருந்து கொண்டு முதலமைச்சராக இருந்தாலென்ன

அமைச்சராக இருந்தாலென்ன மகிந்த சிந்தனையில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தனக்கு ஒரு சுத்திகரிப்பு தொழிலாளியை கூட நியமிக்க அதிகாரமில்லையென கிழக்கு முதலமைச்சர்

கூறுகிறார்.அமைச்சர் கருணாவோ எமக்கு அதிகாரங்கள் தேவையில்லையெனக் கூறுகிறார். அவர்களுடைய தலைவர் மகிந்தவோ இவர்களுக்கு அதிகாரங்களை கொடுப்பதற்கு போதிய பொறுப்பில்லை பக்குவமில்லை என்கிறார்.

அத்தகையவரின் அரண்மனையில் இவர்கள் வீற்றிருக்கிறார்கள்.காலடியில் வீழ்ந்து கிடக்கிறார்கள்.

இத்தகையவர்கள் எமது மக்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க முடியுமா?

முதலமைச்சராக இருக்கும் தமது ஆட்சியிலேயே அதிகாரமில்லையெனக் கூறுபவர் ஒப்பாரி வைத்தாலும் அவர் வெற்றிலை சின்னத்தில்தான் வந்தவர்.

இன்று இந்த மாவட்டத்தில் மற்றுமொருவரான இனியபாரதி என்பவரும் வெற்றிலை சின்னத்தில் நிற்கிறார்.

இந்த மக்களின் விடுதலைக்காக, மக்கள் பட்ட துன்பத்தை எடுத்து சொல்வதற்காக,மக்கள் கொல்லப்படுவதை தடுத்துட நிறுத்துடுவதற்காக இவர்களால் குரல் கொடுக்க முடியுமா? இல்லையே !

இன்று இந்த அரசு மீது உலக நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் போன்றவை குற்றம் சுமத்திய வண்ணமுள்ளன.

மக்களை கொன்று குவித்தவர்கள் உலகில் போர்குற்றம் புரிந்தவர்களென மனித உரிமை ஆணையம் சொல்கின்றது.

பான் கி மூனே இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆயத்தமாக இருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இத்தகைய அமைச்சரவையில் இருப்பவர்கள் என்ன முகத்தோடு

தமிழ் மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறர்களோ தெரியவில்லை; இவர்களுக்கு நம்மவர்களிடம்

வாக்கு கேட்பதற்கு என்ன தகுதியிருக்கின்றது.

கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் எனக் கூறுபவர்கள் வன்னி அகதி மக்களை மீள் குடியேற்றுவதாக

பூச்சாண்டி காட்டி எத்தகைய அடிப்படை வசதியும் வழங்காது வதைத்து வருகின்றது.

இந்த மக்கள் மிக மோசமாகப் பழிவாங்கப் பட்டிருக்கிறார்கள்.மிக மோசமான வேதனைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். மீள்குடியேற்றம் என்பது மோசடி நடவடிக்கையே;இதனை நாம் உலகிற்கு சொகிறோம்.

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை நம்மக்கள் நன்கு படிக்க வேண்டும்.விடுதலை புலிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தொடர்ந்தும் அறுபது ஆண்டுகளாக இருந்தவர்கள்.

எங்கள் தாயகத்தில் சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கும்

விடுதலைப்புலிகளும் அரசும் ஒஸ்லோவில் உடன்படிக்கையாக ஏற்றுக்கொண்ட 51 நாடுகள் ஆதரவு தெரிவித்த உடன்படிக்கையின் அடிப்படையில் இன்னும் அரசுடன் பேச நாம் ஆயத்தமாக உள்ளோம்.

இது மட்டுமன்றி ஒஸ்லோ உடன்படிக்கையின் அடிப்படையில் அரசியல் தீர்வுக்காக, இந்தியா,ஐரோப்பிய யூனியன், போன்ற உலக் நாடுகளுடனும், ஒஸ்லோ உடன்படிக்கையை ஆதரித்து அறிக்கைவிட்ட 51 நாடுகளுக்கு முன்னால் எமது தீர்மானத்தை முன்வைக்கிறோம்;அவர்களுடையா ஆதரவையும் அனுதாபத்தையும் பெறுவோம். தமிழ் மக்களின் வாக்கு பலத்தை பாவித்து இதில் நாம் வெற்றி பெறுவோம்" இவ்வாறு அவர் கூறினார்.

http://www.tamilarkal.com/

ஆனால் சோனியாவின் காங்கிரஸ் அடிவருடிகளின் ஆட்சியை நடாத்து இந்தியா ஆதரவு அளிக்கவில்லையே?

உலகம் ஒன்று சேர்ந்து வந்தாலும் இந்தியா வேணும் என்றுதான் நீங்கள் போய் மண்டி யிட்டீர்கள் இல்லையா சம்பந்தர் ஐயா அவர்களே!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெளிவாக சொல்லியிருந்தார் இந்திய அனுசரனையுடன்......

வடக்கு கிழக்கு இணைஞ்சோ இணையாமலோ...??

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சேர்த்து

கச்சதீவு உட்பட.....

அதோட பெயர் தமிழீழம்

எந்த நேரமும் பிரிந்து போகும் அதிகாரம் உட்பட.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.