Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு நாட்டின் பட்ஜெட் தொகையை விட அதிகம் – தமிழகத்தில் கலாநிதி மாறன்

Featured Replies

பெங்களூர்: பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் கொண்ட பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார் என ஃபோர்ப்ஸ் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டது.

ஒரு பில்லியன் டாலர், அதாவது ரூ.4 ஆயிரத்து 700 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் தயாரித்து வெளியிட்டது.

உலகலவில் சுமார் ஆயிரம் பெயர்கள் கொண்ட இந்த பட்டியலில் 49 இந்தியர்கள் உள்ளனர். சன் டிவி கலாநிதி மாறன், 342வது இடத்தைப் பெற்று பில்லியனர் பட்டியலில் இடம்பெற்ற தமிழ்நாட்டுக்காரர் ஆகியுள்ளார்.

இந்தியாவில் உள்ள இந்த 49 பில்லியனர்களின் சொத்து மதிப்பையும் போர்ப்ஸ் தனித்தனியே கணக்கிட்டு கூறியுள்ளது.

இதன் அடிப்படையில் இந்த 49 இந்திய பெரும் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்துக்களை சேர்த்து மதிப்பிட்டால் 222.1 பில்லியன் அமெரிக்க டாலர் என கணிக்கப்படுகிறது.

அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 லட்சத்து 43 ஆயிரத்து 870 கோடி!

இந்திய அரசாங்கத்தின் 2010-11ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த வரி மற்றும் வரியல்லாத வருவாய் மதிப்பீட்டு அளவு ரூ.8 லட்சத்து 94 ஆயிரத்து 769 என பட்ஜெட்டில் வாசிக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் வரி வருமானத்தை விட, 49 பணக்காரர்களின் சொத்து மதிப்பும் அதிகம்.

கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகை 251.4 பில்லியன் டாலர்.

இந்திய கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகையில் சுமார் 88.34 சதவீதம்.

அந்த 49 பெருங்கோடீஸ்வரர்கள்...!

உலக பணக்காரர்கள் வரிசையில் நான்காம் இடத்திலும் இந்தியாவில் முதல் இடத்திலும் இருப்பவர் முகேஷ் அம்பானி. சொத்து மதிப்பு 2,900 கோடி டாலர்.

அம்பானிக்கு அடுத்தபடியாக உலக வரிசையில் 5ம் இடத்தை பிடித்து இந்தியாவில் இரண்டாவது பெரிய கோடீஸ்வரராக ஆர்சிலர் மிட்டல் லட்சுமி மிட்டல் (2870 கோடி டாலர்).

இந்தியாவின் 3வது பெரிய பணக்காரர் விப்ரோ அசிம் பிரேம்ஜி (1700 கோடி டாலர்). அம்பானி சகோதரர்களில் ஒருவர் உலக வரிசையில் 4வதும், மற்றொருவர் இந்திய வரிசையில் 4வது இடத்தையும் பிடித்துவிட்டனர்.

1370 கோடி டாலருடன் உலக பட்டியலில் 36வது இடத்தில் உள்ளார் அனில் அம்பானி.

இவர்களைத் தொடர்ந்து எஸ்ஸார் குரூப்ஸ் ஷாஷி அண்ட் ரவி ரூஜா சகோதரர்கள், சாவித்திரி ஜிண்டால், டிஎல்எஃப் குஷால் பால் சிங், ஆதித்யா பிர்லா குழுமத்தின் குமார் பிர்லா, பாரதி ஏர்டெல்லின் சுனில் மிட்டல், வேதாந்தா அணில் அகர்வால் உள்ளனர்.

இந்தியாவில் 11வது இடத்தில் கோத்ரெஜ் குழுமத்தின் ஆதி கோத்ரெஜ்ஜும் அவரைத் தொடர்ந்து, கவுதம் அதானி, சன் பார்மாவின் திலிப் சங்க்வி, எச்சிஎல் ஷிவ் நாடார், ஜிஎம்ஆர் ஜி.எம்.ராவ், ரான்பாக்ஸியின் மால்விந்தர் அண்ட் ஷிவிந்தர் சிங் சகோதரர்கள், கோடக் மஹிந்தரா உதய் கோடக் உள்ளனர்.

தமிழகத்தின் நம்பர் ஒன் பணக்காரர் கலாநிதி மாறன்

தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார்.

44 வயதான கலாநிதி மாறனின் சொத்து 290 பில்லியன் என ஃபோர்ப்ஸ் தெரிவிக்கிறது. அதாவது சுமார் ரூ.13 ஆயிரத்து 630 கோடி.

தமிழ்நாடு அரசின் மொத்த வரி வருவாயில் (ரூ.63,091.74 கோடி) 21.6 சதவீதம் கலாநிதி மாறனின் சொத்து. தமிழக அரசின் கடன் தொகையுடன் ஒப்பிட்டால் (ரூ.74,858 கோடி) 19 சதவீதம்.

மாநிலம் முழுவதும் வீடில்லாதோருக்கு 21 லட்சம் குடியிருப்புகள் கட்டித்தர தமிழக அரசு செலவழிக்கும் தொகையை விட கூடுதலானது கலாநிதியின் இந்த சொத்து மதிப்பு.

சன் நெட்வொர்க்கின் 77 சதவீத பங்குகளை இவர் தன் வசம் வைத்துள்ளார். சன் டிவி நெட்வொர்க்கின் கீழ் 20 டிவி சேனல்கள், 46 எஃப் எம் ரேடியோ நிலையங்களை நடத்தி வருகிறார்.

அதோடு சன் டைரக்ட் டிடிஎச் சேவைகளை மலேசிய பெருங்கோடீஸ்வரர் அனந்த கிருஷ்ணனின் அஸ்ட்ரோ குழுமத்துடன் இணைந்து நடத்தி வருகிறார். இதில் 45 லட்சம் சந்தாதாரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சன் பிக்சர்ஸ் மூலம் மெகா பட்ஜெட் படங்களையும் எடுத்து வருகிறார். இவை அல்லாமல் பல்வேறு தொழிலகங்களில் முதலீடு செய்திருக்கும் கலாநிதி மாறன், அடுத்ததாக விமான போக்குவரத்துத் துறையில் கால் பதிக்க உள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக எஸ்ஸெல் குழுமத்தின் சுபாஷ் சந்திரா (ஜீ என்டெர்டெயின்மென்ட்), பென்னட், கோல்மன் அண்ட் கோ நிறுவனத்தின் தலைவர் இந்து ஜெயின், 'லேண்ட்மார்க்' மிக்கி ஜக்தியானி, டோரென்ட் பவர் நிறுவனத்தின் சுதிர் சமீர் மேத்தா சகோதரர்கள் போன்றவர்கள் உள்ளனர்.

பெருகும் பணக்காரர்கள்...

இந்தியாவில் கடந்த பத்தாண்டு காலத்தில் பணக்காரர்கள் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து வந்திருப்பதாக பெயின் அண்ட் கோ கன்சல்டன்ஸி நிறுவனம் தெரிவிக்கிறது.

அந்நிறுவனம் நடத்திய ஆய்வில், 2000ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் பணக்காரரர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 11 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

ஆனால் இந்திய மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் தினசரி 50 ரூபாய்க்கும் கீழான வருமானத்தில் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது.

பணக்காரர்கள் தாங்கள் சிரமப்பட்டு சேர்த்த பணத்தை மற்றவர்களுக்கு கொடுக்க தயாராக இருப்பதில்லை.

இயற்கை பேரிடர் போன்ற சிக்கலான தருணங்களில் சக மக்களுக்கு உதவுவதில் இந்தியாவில், அரசாங்கங்கள் தான் முன்னணியில் உள்ளன.

இதுபோன்ற சமயங்களில் மத்திய, மாநில அரசுகள் மூலம் 65 சதவீதத்துக்கும் மேல் நிதி திரட்டப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் மூலம் எஞ்சிய தொகை திரட்டப்படுகிறது. மிகவும் சொற்ப அளவுக்கே பணக்காரர்கள் மற்றும் கார்ப்பொரேட் நிறுவனங்களின் தனிப்பட்ட பங்களிப்பு இருப்பதாக பெயின் அண்ட் கோ நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆனால் அமெரிக்காவில் இதுபோன்ற பேரிடர் நிவாரண நிதிகளில் தனி நபர்கள், கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் 75 சதவீத நிதி திரட்டப்படுகிறது.

மூலம்

ஒரு ரூபாவுக்கு பாட்டு எழுதி பிச்சை எடுத்த கருநாநிதி குடும்பம் எப்படி கோடீஸ்வரர் ஆனது?

எல்லாம் மக்கள் பணம். கொள்ளை அடித்த காசை பேரன் பெயர்களில் போட்டு வெள்ளைக்காசாக்கி கோடீஸ்வரர் ஆகி விட்டார்கள்.

எம்ஜிர் கொள்ளை அடித்து ஊழல் செய்து ஏழை களிடமும் தானும் அனுபவித்தார். கருநாநிதி கொள்ளை அடித்து குடும்பத்தை வளர்த்து கோடீஸ்ஸ்வரன் ஆகி விட்டார்

  • தொடங்கியவர்

ஒரு ரூபாவுக்கு பாட்டு எழுதி பிச்சை எடுத்த கருநாநிதி குடும்பம் எப்படி கோடீஸ்வரர் ஆனது?

எல்லாம் மக்கள் பணம். கொள்ளை அடித்த காசை பேரன் பெயர்களில் போட்டு வெள்ளைக்காசாக்கி கோடீஸ்வரர் ஆகி விட்டார்கள்.

எம்ஜிர் கொள்ளை அடித்து ஊழல் செய்து ஏழை களிடமும் தானும் அனுபவித்தார். கருநாநிதி கொள்ளை அடித்து குடும்பத்தை வளர்த்து கோடீஸ்ஸ்வரன் ஆகி விட்டார்

நேசன் தாங்கள் சொல்வது சரிதான், ஆனாலும் அதைவிட ஈழத்தமிழர் என்று சொல்லும் நம்மவர் கொடுத்த கொடுக்கின்ற கொடுக்கப்போகின்ற பணம் எவ்வளவு என்று சொல்லமுடியுமா?

புலம்பெயர் நாடுகளில் சன் குழுமத்தின் டி வி நிகழ்ச்சிகளை வினியோகிப்போர், வாங்கி பார்ப்போர் எல்லஓருக்கும் உங்களின் காசும்தான் அதில் ஒரு பகுதி.

ஈழத்தமிழன் தம் சகோதரர்களை நடுத்தெருவில் விட்டாலூம் கருணா நிதி குடும்பத்தை காப்பாற்றியமைக்கு நாளை கரு நா நிதி கவிதை பாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நேசன் தாங்கள் சொல்வது சரிதான், ஆனாலும் அதைவிட ஈழத்தமிழர் என்று சொல்லும் நம்மவர் கொடுத்த கொடுக்கின்ற கொடுக்கப்போகின்ற பணம் எவ்வளவு என்று சொல்லமுடியுமா?

புலம்பெயர் நாடுகளில் சன் குழுமத்தின் டி வி நிகழ்ச்சிகளை வினியோகிப்போர், வாங்கி பார்ப்போர் எல்லஓருக்கும் உங்களின் காசும்தான் அதில் ஒரு பகுதி.

ஈழத்தமிழன் தம் சகோதரர்களை நடுத்தெருவில் விட்டாலூம் கருணா நிதி குடும்பத்தை காப்பாற்றியமைக்கு நாளை கரு நா நிதி கவிதை பாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

கலைஞருக்கு தெரியும் , ஈழத்தமிழன் இளிச்சவாயன் என்று, என்ன தான் சன், கலைஞர் தொலைக்காட்சியில் தமிழினப்படுகொலையைத் திட்டமிட்டு மறைத்தாலும், தமிழனப்படுகொலைக்கு காரணமான சோனியா காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்தாலும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் சூடு சுறணையற்று, மான ரோசமற்று சன், கலைஞர் தொலைக்காட்சிக்கு ஆதரவு கொடுப்பார்கள்.

கலைஞருக்கு தெரியும் , ஈழத்தமிழன் இளிச்சவாயன் என்று, என்ன தான் சன், கலைஞர் தொலைக்காட்சியில் தமிழினப்படுகொலையைத் திட்டமிட்டு மறைத்தாலும், தமிழனப்படுகொலைக்கு காரணமான சோனியா காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்தாலும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் சூடு சுறணையற்று, மான ரோசமற்று சன், கலைஞர் தொலைக்காட்சிக்கு ஆதரவு கொடுப்பார்கள்.

இங்க ஜ.பி.சி காரன் அழாக்குறையாக கத்துகிறான். நடத்துவதற்கே பணம் இல்லை. தொலைபேசி வசதி போய் மீண்டும் யாரோ புண்ணியத்தில் வந்துள்ளது.

ஒருவரும் ஆதரவு கரம் தர முன்வருவார் இல்லை. தேசியம் கத்தி அவர்களுக்கு தொண்டையே வற்றி போச்சு.

ஆனால் ஜங்கரன் ரி.வி காரர் வாகனத்தில் விளம்பரம்.,நிறைய அடிமை ஈழத்தமிழ் வேலையாட்கள் என்று

சன்குடும்பத்திற்கு வேலை செய்கினம்.

இதுதான் ஈழத்தமிழனின் ஈன நிலை.

  • கருத்துக்கள உறவுகள்

சன் டி.வி ... நிறுவனத்தின் படங்களை பார்க்க வேண்டாம் என்று கூறுபவர்களை மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன்...... இன்றைய அறிவியல் யுகத்தில் எத்தனையோ வழி முறைகள் உள்ளன அதை ஈழத்தோழர்கள் பின்பற்ற வேண்டும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.