Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திபெத்தில் 7 றிச்டரில் நில நடுக்கம்...சீன பெற்றோல் குடிநீர் தேடும் ஆராட்சியின் விளைவா?

Featured Replies

-

திபெத்தில்
7 றிச்டரில் நில நடுக்கம்...

திபத்தின் யூஷு கங்காய் பிரந்தியத்தில் 7றிச்டரில் நிலம் அதிர்ந்ததால் பாரிய சேதம் ...

article_chine.JPG

Des secours s'activent dans la zone de Yushu (nord-ouest de la Chine)

après une série de violents séismes, le 14 avril 2010 - 20minutes.fr

இது திபத்தில் நடந்தது என்று சொல்லாமல் சீனாவில் இருக்கம் கங்காய் பிராந்தியத்தில் நடந்தது என்று பத்திரீகைகளில் பேசப்படுகிறது ... ?

சீன பெற்றோல் குடிநீர் தேடும் ஆராட்சியின் விளைவா?

-

Edited by ஜெகுமார்

  • தொடங்கியவர்

-

திபெத்தி தலைநகரம் லஸ்ஸாவிற்கு அண்மையில் நடந்த பூகம்பத்தின்

மீட்புப் முயற்சிகள் தொடருகின்ற வேளையில் மீண்டும் 5.1 றிச்டரில் நிலம்நடுங்கியது

Saturday, April 17, 2010 at 00:59:01 UTC - 360 km (225 miles) NNE of Lhasa, Xizang (Tibet)

தொடரும் நிலநடுக்க மீட்புதவிப் பணி - 2010-04-17 17:22:33 cri

சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள ச்சிங்காய் மாநிலத்தின் யு ஷு மாவட்டத்தில், ரிச்டர் அளவையில் 7.1 ஆகப் பதிவான நில நடுக்கம் நிகழ்ந்த பின், இன்று காலை 7.49மணியோடு 3நாள் ஆகியுள்ளது. இன்னும் மீட்புதவிப் பணிகள் இயன்ற அளவில் தொடர்ந்து வருகின்றன. அதேவேளை, இதனால் பாதிக்கப்பட்ட மக்களை குடியமர்த்தும் பணியும் உரியமுறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

16ம் நாள் பிற்பகல் 5மணி வரை, மொத்தம் 1,144பேர் உயிரிழந்துள்ளனர். 417பேரே காணவில்லை; 11,744பேர் காயமடைந்தனர்.

நிலநடுக்கப் பேரிடர் நீக்கப் பணிகளை மேற்கொள்ள, சீன மக்கள் விடுதலைப் படையும் பாதுகாப்புக் காவல்துறையும் 12,000க்கு அதிகமான வீரர்களை அனுப்பியுள்ளன. இதுவரை, 1,253 பேர் மீட்கப்பட்டனர், மருத்துவச் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 3,831 ஆகும். தவிர, பொது பாதுகாப்பு துறையும் தீயணைப்புத் துறையும் 1000க்கு அதிகமானோர் இடம்பெறும் 20 மீட்புதவிக் குழுக்களை அனுப்பியுள்ளன. மிக முக்கிய கட்டத்தில் மீட்புதவிப் பணிகளை மேற்கொள்ளும் கட்டளை ஒன்றை, சீனப் பொது பாதுகாப்பு துறை நேற்று வெளியிட்டது.

அதேவேளை, காமயடைந்தோருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கும் பணிகளும் அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 16ம் நாள் பிற்பகல் 5மணி வரை, 5,880மருத்துவ சிகிச்சைப் பணியாளர்கள் இடம்பெற்ற 30 பணிக்குழுக்கள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்றடைந்துள்ளன.

உள்ளூர் மருத்துவச் சிகிச்சை வசதி குறைவாக இருந்தால், சீன நெடுஞ்சாலை, இருப்புப்பாதை, பயணியர் விமான சேவை உள்ளிட்ட வாரியங்கள் மீட்புதவிப் பணிகளுக்கு சிறப்பு வசதியளித்து, கடுமையாக காயமடைந்தோரை இதர மாநிலங்களுக்கு ஏற்றுச்சென்று சிகிச்சையளிக்க உதவுகின்றன. இது தொடர்புடைய போக்குவரத்து நிலை குறித்து, சீனத் துணை போக்குவரத்து அமைச்சர் காவ் சியுங்ஃபெங் கூறியதாவது

யு ஷு மாவட்டம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 4ஆயிரம் மீட்டர் உயரமான பிரதேசமாகும். இயற்கைச் சுற்றுச்சூழல் மோசமாக உள்ளது. இந்நிலையில், போக்குவரத்துப் பணிகளுக்கு மேலதிக இன்னல்களை இது ஏற்படுத்துகிறது. ஆனால், இதைச் சமாளிக்க, தொடர்புடைய ஆற்றலும் அனுபவங்களும் எமக்கு உண்டு என்றார் அவர்.

நிலநடுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை குடியமர்த்தும் பணி, நிதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை, 39ஆயிரம் கூடாரங்கள், 70ஆயிரத்துக்கு அதிகமான போர்வைகள், 55ஆயிரம் பருத்தி ஆடைகள், 750டன் உணவுப் பொருட்கள் ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களில் ஒவ்வொருவருக்கும், 15யுவான் மற்றும் அரை கிலோகிராம் உணவுப் பொருட்கள் நாள்தோறும் அளிக்கப்படுகின்றன. அனாதைக் குழந்தைகள், ஆதரவற்ற முதியோர், நிலநடுக்கம் ஏற்படுத்திய மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு உதவிக் கொள்கைகளை, தொடர்புடைய வாரியம் வகுத்தது. மேலும், கூடாரங்கள், உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள், பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு அதிகமாக ஏற்றிச் செல்லப்பட்டு வருகின்றன.

-

திபெத்தில் 7 றிச்டரில் நில நடுக்கம்...

சீன பெற்றோல் குடிநீர் தேடும் ஆராட்சியின் விளைவா?

நல்லகாலம் அம்பாந்தோட்டையில் துறைமுகம் கட்டுவதால் என்று சொல்லவில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.