Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தவின் “தமிழ் அரசியல் தலைமை”யுடன் பேச்சுவார்த்தை எப்போது?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிஸ்முரசம்

இலங்கை ஜனாதிபதி அண்மையில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் நடைபெறப்போகும் தேர்தலில் வடகிழக்கில் இருந்து அதிக ஆசனங்களை பெற்று தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்படும் தமிழ் தலைமைகளுடன் மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சு நடத்தமுடியும் என தெரிவித்திருந்ததார்.

இந்த நிலையில் இலங்கையில் பொதுத்தேர்தல் நடந்துமுடிந்துள்ளது. வடகிழக்கை பொறுத்தவரையில் சிங்கள அரசாங்கம் இலங்கை ஜனாதிபதி கூறியது போன்றான தமிழ் தலைமை ஒன்று உருவாவதை தடுக்குமுகமாக பல்வேறு உபாயங்களை மேற்கொண்டது.

எவ்வாறாயினும் சிங்கள தலைமைகளின் சூழ்ச்சிகளை பல்வேறு முறை எதிர்கொண்டு தங்களை பழக்கப்படுத்திக்கொண்ட தமிழ் மக்கள் சகல சூழ்ச்சிகளையும் உடைத்து சிங்கள அரசாங்கத்தின் முகத்தில் உமிழ்ந்து துப்பிவிட்டு 13 உறுப்பினர்களை தேர்வுசெய்துள்ளனர்.

இதனை ஒருபோதும் எதிர்பார்க்காத நிலையில் சிங்கள அரசினால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளான,தமிழ் மக்களால் மீண்டும் ஒரு முறை தமது ஏகப்பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப்புலிகளின் கைப்பொம்மைகள்,விடுதலைப்புலிகளின் வன்முறைகளினால் பாராளுமன்றம் வந்தவர்கள் என சர்வதேச ரீதியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் கடந்த காலத்தில் சிங்கள அரசாங்கங்கள் பிரசாரம் மேற்கொண்டுவந்த நிலையில் இன்று விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் குறித்த 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் தமிழ் மக்கள், விடுதலைப்புலிகளினால் ஒருங்கமைக்கப்பட்ட அரசியல் அமைப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் மக்களை ஒருபோதும் விலைபேசமாட்டாது என்ற பூரண நம்பிக்கையினை கொண்டிருப்பதனாலும் அதனை வெற்றிபெறச்செய்துள்ளனர்.

இதேபோன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் அற்றுப்போயுள்ள நிலையில் தமது அரசியல் செயற்பாடுகள் மற்றும் உரிமைகளை பெற குரல் கொடுக்கவேண்டிய பலம் வாய்ந்த ஒரு ஏகப்பிரதிநிதித்துவம் தேவை என்பதை தமிழ் மக்கள் நன்குணர்ந்துள்ளனர்.

இலங்கையில் தமிழ் மக்கள் தமது முடிவினை தெளிவாக தெரிவித்துள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குறிப்பி;ட்டதுபோன்று தமிழ் மக்களினால் தெரிவுசெய்யப்பட்டுள்ள அந்த தமிழ் தலைமையுடன் எப்போது பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்?அல்லது கடந்த காலத்தைப்போன்று இழுத்தடிப்பு செய்வாரா தெரியவில்லை.

இந்தவேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எடுத்துவரும் நடவடிக்கைகள் சில பாராட்டப்படவேண்டியவையாக உள்ளபோதிலும் அதன் செயற்பாட்டுவடிவங்கள் உத்வேகம் பெறவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் நிலையினை எடுத்துக்கொண்டால் வாக்களிப்பு வீதம் வெகுவாக குறைந்துவருகின்றமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்படுகின்றது. இது சிரத்தையான அரசியல் நடவடிக்கை தேவை அல்லது சீரான அரசியில் செயற்பாடுகள் இல்லையென்பதை சுட்டிக்காட்டுகின்றது.

இன்று வடகிழக்கை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு இடத்திலும் துணை ஆயுதக்குழுக்களின் அரசியல் அலுவலகம் மட்டுமே இயங்கி வருதைக்காணக்கூடியதாகவுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக குறித்த ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள் பிரதானமாக இருந்தபோதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியல் அலுவலகங்களை திறக்க முயலவில்லையென்பதையும் குறிப்பிட்டேயாகவேண்டும்.

இந்த நிலையில் அண்மையில் திருமலையில் கூட்டப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலாவது செயற்குழு கூட்டத்தில் வடகிழக்கின் ஒவ்வொரு பகுதியிலும் அலுவலகம் திறக்கவேண்டும் என முடிவுசெய்யபட்டுள்ளதை வரவேற்கின்றோம்.

அத்துடன் அந்த முடிவ வெறும் ஏட்டுச்சுரக்காயாக அல்லாமல் செயற்பாட்டுவடிவம் பெறும் இடத்திலேயே அரசியல் சூனியமாக இருக்கும் எமது உறவுகள் சிலரை வாக்குச்சாவடிக்கு அனுப்பக்கூடிய நிலையேற்படும் என்பது எமது நம்பிக்கை.

ஏவ்வாறாயினும் சிங்கள அரசாங்கத்தின் சதி முயற்சிகளை முறியடித்து எமது ஏகப்பிரதிநிதித்துவத்தை தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ள நிலையில் கூட்டமைப்பினர் எவ்வாறான செயற்பாட்டினை தொடக்கப்புள்ளியாக இடப்போகின்றனர் என்பது விளங்காத புதிராகவே உள்ளது உண்மை.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக தேர்தல் பிரசாரங்களின்போது கூட்டமைப்பினர் தெரிவித்துவந்தனர்.

தற்போது இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயாரென திறந்த மனதுடன் அழைப்புவிடுத்துள்ளதை வரவேற்கின்றோம்.எனினும் எந்த அரசியல் தீர்வுத்திட்டத்தின் அடிப்படையில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்பதை வெளிப்படுத்தவேண்டும்.

கடந்த காலத்தைப்போன்று பேச்சுவார்த்தை என்று கதிரையினை சூடாக்கும் நிலை மட்டும் இனிவரும் காலங்களில் இடம்பெறக்கூடாது என்பதே எமது எண்ணம் ஆகும்.

எடுத்த எடுப்பிலேயே எமது தீர்வுத்திட்டத்தை திணிக்கமுடியாது என்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலையிருந்தாலும் பேசுவதற்கு ஒரு அடிப்படை தீர்வுத்திட்டம் ஒன்று கூட்டமைப்பினரின் கைகளில் தற்போது இருக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது கட்டமைப்பை மெருகூட்டி வடகிழக்கில் உள்ள தமிழ் தேசிய உணர்வுள்ள புத்திஜீவிகளுடனும் முக்கியமாக புலம்பெயர்ந்து வாழும் என்றும் எம் மக்கள் தொடர்பில் ஆழ்ந்த சிரத்தை எடுத்துவரும் புத்திஜீவிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தைசெய்யக்கூடியவாரு தீர்வுத்திட்டம் ஒன்றை தயாரிக்கவேண்டும்.

அந்த தீர்வுத்திட்டம் தொடர்பில் வடகிழக்கு தமிழ் மக்கள் உட்பட புலம்பெயர்ந்துவாழும் எமது மக்களுக்கும் தெளிவுபடுத்தப்படவேண்டும்.

இவ்வாறான ஒரு நிலையிலேயே இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூறியதுபோன்றான அழைப்பு கிடைக்கும் இடத்தில் எமது மக்களின் கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை நாம் சிங்கள தேசத்துக்கும் இந்தியா உட்பட சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துக்கூறலாம்.

இன்று எமது மக்களின் சர்வதேச அரசியல் காய் நகர்த்தலில் ஈடுபட்டுள்ள திரு.ருத்திரகுமாரும் அவரது குழுவினரும் சிறப்பான முறையில் தமது பணிகளை புலம்பெயர் நாடுகளில் மேற்கொண்டுவருகின்றமை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு முன்னுதாரணமாக கொள்ளலாம் என்பதே எமது கருத்தாகும்.

“நாடுகடந்த தமிழீழம்” தொடர்பில் சரியான கட்டமைப்பு தயாரிக்கப்பட்டு அவை புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் குழுக்கள் அமைக்கப்பட்டு அதனூடாக அம்மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு அது தொடர்பில் தேர்தல் நடத்தப்பட்டு அதற்கு தமிழர்களின் பூரண அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே இலங்கையில் இனிவரும் காலங்களில் சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டுமானால் அந்த முறையினை பயன்படுத்துவதன் மூலம் சிறப்பான வெற்றியை மட்டுமல்ல எமது தாயகம், உரிமைகள் தொடர்பில் சிங்கள தேசியம் மேற்கொண்டுவரும் பொய்பிரசாரங்களை இல்லாமல் செய்யலாம் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.

மேலதிக தகவல்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தவேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எடுத்துவரும் நடவடிக்கைகள் சில பாராட்டப்படவேண்டியவையாக உள்ளபோதிலும் அதன் செயற்பாட்டுவடிவங்கள் உத்வேகம் பெறவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவுள்ளது.

இன்றைய சூழலில் அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தியே ஆக வேண்டும். அதுவே புத்திசாலித்தனமும் கூட. அதற்கான கோரிக்கைகள் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பினரால் பல விட்டுக் கொடுப்புகள் செய்யப்படும் என்பதையும் எதிர்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தனது குடும்ப அரசியல் நலன் சார்ந்ததாக அரசியலமைப்பை மாற்றுவதற்கு சிங்கள மாற்றுக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது கட்டாயம் கூட்டமைப்புடன் பேசும் நிலைக்குத் தள்ளப்படுவார்.

வாத்தியார்

...............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தவின் “தமிழ் அரசியல் தலைமை”யுடன் பேச்சுவார்த்தை எப்போது?

நாடு கடந்த அரசு அமைச்சு முடிய முதல்வேலையா பேச்சுவார்த்தைதான் :lol:

நாடு கடந்த அரசு அமைச்சு முடிய முதல்வேலையா பேச்சுவார்த்தைதான் :lol:

புலம்பெயர் தமிழ் சமுகத்திற்கும் கூட்டமைப்பினருக்கும் இடையிலான இடைவெளி தற்போதைக்குத் தொடரும். எப்போது அவை இணைந்து செயற்படும் என்பதைச் சொல்வதற்கில்லை. சர்வதேச நாடுகள் எங்களுடன் பயணிக்காது என்பது எனது முடிவு. அவ்வாறான ஒரு சூழல் ஏற்பட்டு சர்வதேசம் எங்களுடன் இணைந்தோ, அல்லது உண்மையான ஆதரவுடனோ பயணிக்கும் வேளையில்தான் இந்த இரண்டு தளங்களும் ஒன்றுபட முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.