Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறங்கும் உணர்வுகளின் தெறிப்புக்கள்

Featured Replies

உறங்கும் உணர்வுகளின் தெறிப்புக்கள்

தமிழீழ நிருபர்

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 23, 2010

unarvukaL

காலை இலங்கை நேரப்படி சக்தி எவ்.எம். வானொலியில் ஜி.எ.டி நேரம் 9 மணியளவில் நேயர் விருப்பபடி இடைக்கால பாடல்கள் ஒலிபரப்பபட்டுக்கொண்டிருந்தன.

அதில் ஒரு நேயர் இடம் சரியாக விளங்கவில்லை ஆனால் மட்டக்களப்பில் இருந்தே அவர் ஒரு பாட்டை தனக்காக ஒலிபரப்பும்படி கேட்டுக்கொண்டார். ஏன் இந்தப்பாடல் உங்களுக்கு விருப்பம் என்று ஒலிபரப்பாளர் கேட்டார் அந்த பெண்மணியினை.

அந்த பெண்மணி சொன்னார் எனக்கு இந்த பாடலில் சில வரிகள் விருப்பம் என்று. வசரி யாருக்காக இந்த பாடலை விரும்பி கேட்கின்றீர்கள் என அந்த ஒலிபரப்பாளர் கேட்டார். அந்த பெண்மணி சொன்னார் வுனியாவில் புனர்வாழ்வு (சிறையில்) முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் என ம..... என்று சொல்லும்போதே தொலைபேசி துண்டிக்கப்பட்டது. நிச்சயமாக அந்த பெண்மணி தனது மகனிற்காக கேட்ட பாடல்தான் கேளாய் மகனே கேள் ஒரு வார்த்தை நாளைய உலகின் நாயகன் நீயே. அந்த பாடலில் எந்த வரிகளை தனது மகனிற்காக விரும்பினார் என்பது தெரியவில்லை. ஆனால் அதில் வரும் அனைத்து வரிகளும் சிறையில் இருக்கும் தனது மகனிற்கு (போராளி) பொருத்தமானதாக இருக்கும் என்பதனால் தான் அந்த பாடலை தனது மகனிற்காக கேட்டுள்ளார்.

கூடவே இந்த படம் (பாடல்) 1976 இல் வெளிவந்ததாம் முகாமில் இருக்கும் அந்த மகனும் 1976 இல் தான் பிறந்துள்ளார். தனது மகனிற்காக எதை எதை எல்லாம் செய்யலாம் என்று எத்தனையோ தாய்மார் கண்ணீர் வடித்துக்கொண்டு சிந்திக்கின்றார்கள். செயற்படுகின்றார்கள். தங்கள் பிள்ளைகளை பார்ப்பதற்கு கூட வழி செலவுக்கு பணம் இல்லாமல்; பணம் இருந்தாலும் போகும் போது வெறுங்கையோடு போக கூடாது ஏதாவது நல்ல சாப்பாடு அல்லது உடுப்பு ஏதாவது கொண்டு செல்லவேண்டுமே அதற்கு பணம் இல்லாமையால் தமது பயணங்களை ஒத்திப்போடும் தாய்மார் எத்தனை பேர். துணைவியர்கள், பிள்ளைகள் எத்தனை பேர்.

எடுத்தது எல்லாவற்றுக்கும் புலம்பெயர் தமிழர்களை குற்றம் சுமத்தாமல் யாழிலும் வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் அன்றாடம் எவ்வளவு களியாட்டங்கள், கண்காட்சிகள், திருவிழாக்கள் பெரும் செலவில் நடக்கின்றன. இந்த செலவுகளில் ஒரு பகுதியினை இவ்வாறான முகாமில் இருக்கும் பிள்ளைகளை அவர்களது பெற்றோர்கள் சென்று பார்க்க உதவுங்கள். தேர்தலில் வாக்கு கேட்டு சென்ரவர்களும் இதற்கு உதவலாம் தவறு இல்லை.

பிள்ளைகளை பார்க்க செல்லும் போது தமது கைகளை பிள்ளைகள் பார்ப்பார்களே வெறுங்கையோடு போக கூடாது என்றுதான் கூடுதலான தாய்மார் நினைபார்கள். இந்த தாயும் அவ்வாறோ தெரியவில்லை அதனால் தான் பாடல் ஒன்றையாவது தனது மகனிற்கு கொடுத்தாள். காற்றலையில் தனது தாய் கொடுத்த அந்த பாடலை மகன் கேட்டிருப்பாரா? நீங்களும் கேழுங்கள்.

http://74.208.147.65/php/play.php?songid_list=27047&start_with=1

உங்கள் உணர்வுகளையும் பதிய முடியுமாயின் வாரந்தோறும் வெளிவர இருக்கும் உறங்கும் உணர்வுகளின் தெறிப்புக்கள் எனும் தலைப்பில் editor@eelanatham.net எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்

http://www.eelanatham.net/story/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நான் மட்டக்களப்பில் இருக்கும் போது எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் புலிகளின் முகாம் இருந்தது...அதில் இருந்த இரண்டு அண்ணாமாருக்கு சினிமாப் பாட்டு கேட்கிறது என்றால் உயிர்...அவர்களுக்கு அவர்களது தந்தை ஒரு குட்டி வானொலி பரிசாகக் கொடுத்தார்...அவர்கள் சினிமாப் பாட்டுக் கேட்க கூடாது என்ற படியால் அவர்களால் அதை பாவிக்க முடியவில்லை..கடைசியில் அவர்கள் இருவரும் மாவீரர் ஆன போது அவர்களோடு சேர்த்து இந்த வானோலியையும் புதைத்தார்கள்...மறக்க நினைக்கிற ஆனால் மறக்க முடியாத நினைவுகள்.

இனிமேல் யாராவது விடுதலைக்கு என்று ஆயுதம் தூக்கினால் அவர்களை தூக்கவிடாமல்தடுப்பது எனது முதல் கடமை.போதும் போதும் போதும்......

உறங்கும் உணர்வுகளின் தெறிப்புக்கள்

காலை இலங்கை நேரப்படி சக்தி எவ்.எம். வானொலியில் ஜி.எ.டி நேரம் 9 மணியளவில் நேயர் விருப்பபடி இடைக்கால பாடல்கள் ஒலிபரப்பபட்டுக்கொண்டிருந்தன.

அதில் ஒரு நேயர் இடம் சரியாக விளங்கவில்லை ஆனால் மட்டக்களப்பில் இருந்தே அவர் ஒரு பாட்டை தனக்காக ஒலிபரப்பும்படி கேட்டுக்கொண்டார். ஏன் இந்தப்பாடல் உங்களுக்கு விருப்பம் என்று ஒலிபரப்பாளர் கேட்டார் அந்த பெண்மணியினை.

அந்த பெண்மணி சொன்னார் எனக்கு இந்த பாடலில் சில வரிகள் விருப்பம் என்று. வசரி யாருக்காக இந்த பாடலை விரும்பி கேட்கின்றீர்கள் என அந்த ஒலிபரப்பாளர் கேட்டார். அந்த பெண்மணி சொன்னார் வுனியாவில் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் என ம..... என்று சொல்லும்போதே தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

ஒரு தாய் முகாமில் இருக்கும் தனது மகனுக்கு ஒரு நல்ல பாடலை கேட்கும் உரிமையை தடைசெய்தமை, சக்தி பண்பலை (பண்பில்லாத) வானொலி, தொலைக்காட்சி குழுவின் இரகசிய தமிழின விரோத செயற்பாடுகளையும், படுகோழைத்தனத்தை காட்டுகிறது.

கடந்த காலங்களிலும் இன்னல்படும் அப்பாவி மக்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறுவதைக்கூட முன்னின்று கீழ்த்தரமான சக்தி அறிவிப்பார்கள், தயாரிப்பார்கள் தடுத்து, தமது தமிழின விரோதப்போக்கை வெளிப்படுத்தி வந்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு நடக்கும் "மனிதம்" எனும் நிகழ்சிகளில் தமிழினத்தை கோழைகளாக, சிங்களவர்களின் அடிமையாக மாற்ற சக்தி தொலைக்காட்சி முயல்வதாக அதை பார்த்த பெரும்பாலனவர்கள் கூறுகின்றனர்.

சினிமா கலைஞர்களுக்கு மட்டும் குடை பிடித்து வாழ்வது தான் சக்தி தொலைக்காட்சியும், சக்தி பண்பலை (பண்பில்லாத) வானொலியும். பொழுதுபோக்கு என்றபெயரில், கேவலமான சினிமாக்களையும், குரோதம் பழிவாங்கல் கடத்தல் .... போன்றவற்றுடன் பஞ்சமா பாதகங்களையும் தாராளமாக கொண்டுள்ள தொலைக்காட்சி தொடர்களை நம்பி (90 %) பிழைப்பு நடத்தும் சக்தி ஊடகத்துறை, ஈழ தமிழ் மக்களை சீரழிப்பதில் வெற்றிகண்டு வருகிறது.

பெரும்பாலான (90 %) சக்தி அறிவிப்பார்கள் சினிமாவில் மூழ்கி, சினிமா பைத்தியங்களாக இருப்பவர்கள். ஆலோசகர்களாக இருக்கும் இந்தியர் சிலர் இந்திய பயங்கரவாதிகளின் கைக்கூலிகள் போல் செயற்பட்டு இளம் தமிழ் சமுதாயத்தை சினிமா போதையினுள் தள்ளி வருகின்றனர்.

சினிமா நடிகர்களின் பிறந்த திகதி, முதல் நடித்த படம், ..... போன்ற கேள்விகளை தினமும் கேட்டுக் கேட்டு ஈழத் தமிழரின் பொது அறிவை முடக்கும் முயற்சியில் கீழ்த்தரமான சக்தி அறிவிப்பார்கள், தயாரிப்பார்கள் கடந்த பலவருடங்களாக முயன்று வருகின்றனர்.

மொத்தத்தில் சக்தி ஊடகக்குழு அழிந்து போவதே தமிழருக்கு நல்லது என்றளவில் அவர்களது செயற்பாடுகள் அமைந்துள்ளன.

இனிமேல் யாராவது விடுதலைக்கு என்று ஆயுதம் தூக்கினால் அவர்களை தூக்கவிடாமல்தடுப்பது எனது முதல் கடமை.போதும் போதும் போதும்......

வட இந்தியன், அவன் வால்கள் ... = பயங்கரவாதிகள், தமிழின படுகொலையாளிகள், தமிழின விரோதிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், .......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.