Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசிய அரசுக்கும், பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும் கோரிக்கை வைப்போம் - மின்னஞ்சல் அனுப்புவோம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களே,

மலேசியாவில் தவிக்கும் 75 ஈழத்தமிழர்கள்: படங்கள்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=31539

75 தமிழர்களை பிடித்து வைத்துள்ள மலேசிய அரசுக்கு அம்மக்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பவேண்டாம் எனவும், அவர்கள் விரும்பும் நாட்டிற்கே அவர்களை அனுப்ப அந்நாட்டு பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும் கோரிக்கை வைப்போம் மின்னஞ்சல் அனுப்புவோம்.

Dato Sri Mohd Najib Tun Abdul Razak

Prime Minister of Malaysia

http://www.pmo.gov.my/?page=1638&menu=feedback

Ministers

http://www.pmo.gov.my/?menu=cabinet&page=1797

75 Sri Lankans end 2-day boat standoff in Malaysia

http://sg.news.yahoo.com/ap/20100426/tap-as-malaysia-boat-standoff-b3c65ae.html

http://newsok.com/75-sri-lankans-end-2-day-boat-standoff-in-malaysia/article/feed/153095

http://www.ptinews.com/news/626317_75-Sri-Lankans-end-2-day-boat-standoff-in-Malaysia

http://www.heraldsun.com.au/news/national/sri-lankan-asylum-seekers-end-stand-off-in-malaysia/story-e6frf7l6-1225858467065

http://gulfnews.com/news/world/other-world/sri-lankan-asylum-seekers-on-boat-end-stand-off-in-malaysia-1.618506

http://humanrights.einnews.com/news/illegal-immigration/malaysia

------------

Muthamizh

Chennai

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழர்களுக்கு சீமான் அவசர வேண்டுகோள்

மலேசிய அரசு கைது செய்துள்ள 75 ஈழத்தமிழர்களை இலங்கைக்கு அனுப்பகூடாது என்று இயக்குனர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் இயக்க தலைவரும், திரைப்பட டைரக்டருமான சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிங்கள இனவெறி அரசு தமிழர்கள் மீது தொடுத்த போரினால் பாதிப்புற்று வன்னிவதை முகாம்களில் அடைக்கப்பட்டு பின் விடுதலையான ஈழத்தமிழர்கள் பெண்கள், குழந்தைகள் உள்பட 75 பேர் தங்களால் இனி இலங்கையில் வாழ முடியாத நிலையில் வேறு ஏதாவது நாட்டிற்கு அகதிகளாகப் போய் பிழைத்துக் கொள்வோம் என்று கப்பலில் தப்பித்து சென்றனர்.

ஆனால் அப்படி சென்றவர்களின் படகை மலேசிய காவல் துறையினர் நடுக்கடலில் சுற்றி வளைத்து கைது செய்து தற்போது அவர்களை கோலாலம்பூருக்கு அருகில் உள்ள முகாமில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் திட்டத்தில் மலேசிய அரசு இருப்பதாக தெரிகின்றது. இது அவர்களை மரணக்குழிக்குள் தள்ளு வதாகும்.

நாம் மலேசிய அரசிடம் வைக்கும் கோரிக்கை எல்லாம் எங்கள் தமிழர்களை தங்கள் தாய் நாட்டில் உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதம் இல்லாமல் எங்காவது சென்று பிழைத்துக் கொண்டால் போதும் என்று அகதிகளாகச் சென்ற தமிழர்களை அவர்கள் விரும்பினால் உங்கள் நாட்டில் அனுமதியுங்கள். அல்லது அவர்களுக்கு உரிய உணவு, மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்து அவர்களை ஏற்றுக் கொள்ள விரும்பிய நாடுகளுக்கு அனுப்பி வையுங்கள். இதனை பன்னாட்டு சட்டங்களின்படி செய்யாவிட்டாலும் மனிதாபி மான அடிப்படையிலாவது செய்வீர்கள் என்று நம்புகின்றோம். மீண்டும் அவர்களை சிங்கள இன வெறியனிடம் அனுப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.

நம் தாய்த் தமிழ் உறவுகளின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் இயக்கம் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மலேசிய தூதரிடம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு எனது தலைமையில் சென்று மனு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழினச் சொந்தங்கள் அனைவரும் திரண்டு வந்து தமிழர் வாழ்வுரிமைக்கான இந்தப்பயணத்தில் இணைந்து கொண்டு ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் மலேசிய அரசுக்கும், அவரவர் நாட்டில் உள்ள மலேசிய தூதரகங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் அனுப்ப வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=31485

அனைவரும் தயவு செய்து அனுப்புங்கள்... பலன் கிட்டாது எண்று முயற்சி செய்யாது இருந்து விடாதீர்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.