Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலை புலிகளுக்கு எதிரான போருக்காக வன்னிக்கு வந்த இந்திய ஜெனரல் தீபக் கபூர்: இந்திய நிருபர் தகவல்!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரில் சிறீலங்கா இராணுவத்தினருக்கு இந்தியப்படைகள் களத்தில் நின்று கட்டளைகளையும் நெறிப்பபடுத்தல்களையும் வழங்கியமைக்கு தகுந்த சாட்சியாக இந்திய ஊடகவியலாளர் நிக்கில் கோக்கலே தனது அனுபவப்பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வன்னியில் இந்திய படைகளும் ஆயிரக்கணக்கில் ஈடுபடுத்தப்பட்டமைக்கு ஆதாரமாக இந்திய இராணுவத்தின் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் தீபக் கபூர் அங்கு களமுனை பணிகளில் ஈடுபட்டிருந்தமை நிக்கல் கோக்கலேயின் பத்தியொன்றில் வெளியாகியிருக்கின்றது.

போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த கடந்த மே மாத நடுப்பகுதியில் வன்னிப்பகுதி நேரடியாக சென்று செய்தி சேகரித்தவர் என்ற வகையில் அந்த அனுபவங்களை பகிர்ந்துள்ள இந்தியாவிலன் புதுடில்லி தொலைக்காட்சியின் பாதுகாப்புத்துறை நிருபரும் முன்னாள் அவுட் லுக் சஞ்சிகை நிருபருமான நிக்கல் கோக்கலே தனது பத்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:-

விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர் இவ்வாறான ஒரு முடிவைக்கிட்டும் என்றும் எதிர்பார்த்திராத பலரில் ஒருவராக நானும் இந்தியாவிலேயே இருந்து செய்திகளை அவதானித்துக்கொண்டிருந்தேன். ஆனால், போர் முடிவடைந்துவிட்டது. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று சிறிலங்காவிலிருந்து தொடர்ச்சியாக கிடைத்த தகவல்களை எவ்வாறு உறுதி செய்துகொள்வது என்ற தொடர் குழப்பநிலை இருந்துகொண்டே இருந்தது. இறுதியில் சிறீலங்காவுக்கு செல்வது என்ற முடிவுடன் எனது ஒளிப்பதிவாளர் தனபாலுடன் கொழும்புக்கு சென்றேன.

அங்கு சென்று பொன்சேகா, கோத்தபாய உட்பட பலரை செவ்வி கண்டேன். பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இடத்துக்கும் சென்று செய்தி சேகரித்தேன்.

இதன்பின்னர், மே 22 ஆம் திகதியும் அப்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் பல கேள்விகளை கேட்டேன். பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறதே? எவ்வாறு அவர் கொல்லப்பட்டார். என்பது உட்பட பல கேள்விகளை தொடுத்தேன்.

அதற்கு பொன்சேகா, "உங்களது நாட்டு இராணுவ தளபதிதான் களமுனையில் நின்றார். எங்களது இராணுவ வெற்றியை பாராட்டினார்" - என்று பதிலளித்தார். அதற்கு நான் " ஆம். ஜெனரல் தீபக் கபூர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சீறிலங்காவின் இராணுவ நடவடிக்கையில் விசேட கவனம் செலுத்திவந்தார் என்பது எனக்கு தெரியும்" - என்றேன். அதற்கு பொன்சேகா " என்ன...தீபக் கபூரை உங்களுக்கு தெரியுமா" என்றார். அப்போது பொன்சேகாவுடன் கூடவிருந்த சிறிலங்கா இராணுவத்தின் அப்போதைய பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார " இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பான நிருபராக நிக்கின் பல ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார்" என்று பொன்சேகாவுக்கு விளக்கினார்.

- இவ்வாறு அவர் தனது பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய இராணுவத்தில் 43 வருடங்களாக பணியாற்றிய ஜெனரல் தீபக் கபூர் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பத்தியினை முழுமையாக வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்புக்கு செல்லவும்

http://news.rediff.com/column/2010/may/12/nitin-gokhale-on-the-lttes-defeat.htm

புலிகளுக்கு எதிரான போரில் களத்தில் நின்ற இந்திய இராணுவ தளபதி'

புதுடெல்லி/கொழும்பு , வெள்ளி, 14 மே 2010( 20:03 IST )

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் இலங்கைப் படைகளுக்கு ஆதரவாக இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி தீபக் கபூர் களத்தில் நின்றதாக பிரபல பாதுகாப்புத் துறை இந்திய ஊடகவியலாளர் நிக்கில் கோக்கலே பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரில், இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியப்படைகள் களத்தில் நின்று கட்டளைகளையும் நெறிப்பபடுத்தல்களையும் வழங்கியதற்கு தகுந்த சாட்சியாக இந்திய ஊடகவியலாளர் நிக்கில் கோக்கலே தனது அனுபவப்பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வன்னியில் இந்திய படைகளும் ஆயிரக்கணக்கில் ஈடுபடுத்தப்பட்டதற்கு ஆதாரமாக, இந்திய இராணுவத்தின் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் தீபக் கபூர் அங்கு களமுனை பணிகளில் ஈடுபட்டிருந்ததாக, நிக்கல் கோக்கலே எழுதியுள்ள பத்திரிகை கட்டுரை ஒன்றில் வெளியாகியுள்ளது.

போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த கடந்த ஆண்டு மே மாதம் மத்தியில், வன்னிப்பகுதிக்கு நேரடியாக சென்று செய்தி சேகரித்தவர் என்ற வகையில், அந்த அனுபவங்களை பகிர்ந்துள்ள இந்தியாவின் என்டிடிவி தொலைக்காட்சியின் பாதுகாப்புத்துறை நிருபரும், "அவுட் லுக்" பத்திரிகையின் முன்னாள் நிருபருமான நிக்கல் கோக்கலே தனது கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது:

விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர் இவ்வாறான ஒரு முடிவை எட்டும் என்றும் எதிர்பார்த்திராத பலரில் ஒருவராக நானும் இந்தியாவிலேயே இருந்து செய்திகளை கவனித்துக்கொண்டிருந்தேன்.

ஆனால், போர் முடிவடைந்துவிட்டது;பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று இலங்கையிலிருந்து தொடர்ச்சியாக கிடைத்த தகவல்களை எவ்வாறு உறுதி செய்துகொள்வது என்ற தொடர் குழப்பநிலை இருந்துகொண்டே இருந்தது.

இறுதியில் இலங்கைக்கு செல்வது என்ற முடிவுடன் எனது ஒளிப்பதிவாளர் தனபாலுடன் கொழும்புக்கு சென்றேன.

அங்கு சென்று பொன்சேகா, கோத்தபாய உட்பட பலரை பேட்டி கண்டேன்.பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இடத்துக்கும் சென்று செய்தி சேகரித்தேன்.

இதன்பின்னர், மே 22 ஆம் தேதியும் அப்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.அவரிடம் பல கேள்விகளை கேட்டேன்.பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறதே?எவ்வாறு அவர் கொல்லப்பட்டார். என்பது உட்பட பல கேள்விகளை தொடுத்தேன்.

அதற்கு பொன்சேகா, “உங்களது நாட்டு இராணுவ தளபதிதான் களமுனையில் நின்றார்.எங்களது இராணுவ வெற்றியை பாராட்டினார்” - என்று பதிலளித்தார்.அதற்கு நான் ” ஆம். ஜெனரல் தீபக் கபூர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கையின் இராணுவ நடவடிக்கையில் விசேட கவனம் செலுத்திவந்தார் என்பது எனக்கு தெரியும்” - என்றேன்.

அதற்கு பொன்சேகா ” என்ன…தீபக் கபூரை உங்களுக்கு தெரியுமா” என்றார். அப்போது பொன்சேகாவுடன் கூடவிருந்த இலங்கை இராணுவத்தின் அப்போதைய பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார, ”இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பான நிருபராக நிக்கின் பல ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார்” என்று பொன்சேகாவுக்கு விளக்கினார்.

இவ்வாறு அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

http://tamil.webdunia.com/newsworld/news/international/1005/14/1100514057_1.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏபிறல் 2009 ல ஒரு 10 நாடுகளிண்ட தளபதிகள் போயிருந்தது படத்தோட இங்க போட்டத மறந்திட்டியளே!!! :rolleyes:

ஏபிறல் 2009 ல ஒரு 10 நாடுகளிண்ட தளபதிகள் போயிருந்தது படத்தோட இங்க போட்டத மறந்திட்டியளே!!! :rolleyes:

வன்னிக்கு போனதாயோ....??? அதிலை இந்திய இராணுவத்தின் தளபதி தீபக் கபூர் போனதாக படமோ...?? என்னத்துக்கோய் புழுகுகிறீர்....??

ஓய் அடிச்சது இறங்க போய் படும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிட்டடியிலயும் தலைப்பா சிங்கோட அந்த போட்டோவ இங்க போட்டினம். எங்கயோ கொக்கிளாயோ கொக்கு தொடுவாயோ புல்மோட்டயோ ஒரு கடக்கரையில... 10 - 12 வெளிநாட்டு தளபதிமார்.... :rolleyes::blink:

கிட்டடியிலயும் தலைப்பா சிங்கோட அந்த போட்டோவ இங்க போட்டினம். எங்கயோ கொக்கிளாயோ கொக்கு தொடுவாயோ புல்மோட்டயோ ஒரு கடக்கரையில... 10 - 12 வெளிநாட்டு தளபதிமார்.... :rolleyes::blink:

தீபக் கபூர் சிங் இல்லையோய்....

நீர் இந்தப்படத்தை சொல்லுகிறீரோ...?? ( உது ஒரு 5 வருடத்துக்கும் முன்னம் எடுத்தது.)

d484f143a4c92573f51fb3b803524e88.jpg

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16446

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீபக் கபூர் சிங் இல்லையோய்....

நீர் இந்தப்படத்தை சொல்லுகிறீரோ...?? ( உது ஒருவருடத்துக்கும் முன்னம் எடுத்தது.)

d484f143a4c92573f51fb3b803524e88.jpg

உதில்லயப்பா.... ஒரு கடக்கரை பாலத்தில.... 10 - 12 நாட்டு தளபதிமார்... கிட்டியில ஏதோ ஒரு திரியில போட்டதை கண்டனான். :rolleyes:

உதில்லயப்பா.... ஒரு கடக்கரை பாலத்தில.... 10 - 12 நாட்டு தளபதிமார்... கிட்டியில ஏதோ ஒரு திரியில போட்டதை கண்டனான். :)

இதுவா...??

img2rp.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவா...??

img2rp.jpg

உதேதான்....உதில நீங்கள் சொல்லுறாள் நிக்குதோ?

உதேதான்....உதில நீங்கள் சொல்லுறாள் நிக்குதோ?

இந்தப்படத்திலை இல்லை... ஆனால் முதலில் தந்த படத்திலை நிக்கிறார் .... ( அவராகத்தான் இருக்கும் எண்டு நினைக்கிறன்)

இவர்தான் ஆள்...

deepak-kapoor2.jpg

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்
sing.jpg

இந்தியர்கள் இலங்கை படைகளுடன் நிண்று தாக்கு கிறார்கள் எண்று செய்திகள் வந்த போது குறுக்கால போவான் , நிழலி போண்றவர்கள் களத்திலையும் திண்ணையிலையும். இந்தியன் ஆமியின் கோமணம் கொடியிலை காயிறதை கண்டவையாம் எண்டு சீண்டிக்கொண்டு திஞ்சவை...

(அது சரி ஊர்புதினத்துக்கை இருந்த இந்த தலைப்பு ஏன் நிகழ்வும் அகள்வும் பகுதீக்கை வந்தது....?? )

Edited by தயா

இவரை பார்க்க தென்கரையூர் சாமி நாதன் அண்ணன் போல் இருக்கு :):):lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.