Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"உண்மை, நீதியை பாதுகாக்க இலங்கைக்கு இதுவே தருணம்%27

Featured Replies

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து ஒருவருடம் கடந்துவிட்ட நிலையில், உண்மையையும் நீதியையும் பாதுகாத்துக்கொள்வதற்கு அதிகளவில் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதையும் இறுதிச் சமாதானத்தையும்

பார்க்க வேண்டிய காலம் இது என்று சர்வதேச ரீதியில் மதிக்கப்படும் சிரேஷ்ட தலைவர்களான டெஸ்மன்ட்டுட்டுவும் லக்தார் பிராகிமியும் அழைப்பு விடுத்துள்ளனர்.

2007 இல் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் புகழ்பெற்ற உலகத் தலைவருமான நெல்சன் மண்டேலாவினால் சர்வதேச மட்டத்திலுள்ள மாண்புமிக்கவர்களை ஒன்று

சேர்த்து "எல்டர்ஸ்%27 அமைப்பு உருவாக்கப்பட்டது. உலகின் சிரேஷ்ட புகழ்பெற்ற மனிதர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த "எல்டர்ஸ்%27 அமைப்பின் உறுப்பினர்களாக டெஸ்மன்ட்டுட்டுவும்%27 லக்தார் பிராகிமியும் உள்ளனர்.

இவர்கள் இருவரும் லண்டன் கார்டியன் பத்திரிகைக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள இலங்கை தொடர்பான கட்டுரையிலேயே மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளனர். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இலங்கையின் கொடூர யுத்தத்தின் இறுதிக் கட்டம் முடிவுக்கு வந்து இப்போது ஒரு வருடமாகிவிட்டது. முழுமையாக பூர்த்தியடையாமல் இருந்தாலும், சமாதானமானது படுகொலைகளிலும் பார்க்க எப்போதுமே சிறப்பானதாகும். அத்துடன், மோதல் இல்லாத நிலையிலும் பார்க்க உண்மையான சமாதானமானது அதிகளவுக்கு சிறப்பானது என்பதை அனுபவம் எமக்கு கூறுகிறது.

தமிழ் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் யுத்த வெற்றியின் முதலாவது ஆண்டு பூர்த்தியடைந்துள்ளது. இந்நிலையில் இறுதிச் சமாதானத்தை நோக்கி இலங்கை எவ்வளவு தூரத்திற்கு முன்னகர்வை மேற்கொண்டுள்ளது?

வெற்றிகளை நாம் உதாசீனப்படுத்தக் கூடாது. கடந்த 26 வருட மோதலின் பின்னர் யுத்தத்தின் முடிவில் இலங்கை மக்கள் பெற்றுள்ள ஆறுதலை நாமும் பகிர்ந்து கொள்கிறோம்.

கடந்த வருடம் இடம்பெயர்ந்த 3 இலட்சம் தமிழர்களில் அநேகமானவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். முகாம்களில் மீதமாக இருப்பவர்களுக்கும் அதிகளவிலான நடமாடும் சுதந்திரம் கிடைத்துள்ளது. உறுதியளிக்கப்பட்டிருந்ததிலும் பார்க்கக் குறைவானதாக இருந்த போதிலும் இது வரவேற்கத்தக்கதாகும்.

வடக்கில் தமது பகுதிகளுக்கு திரும்பிச் சென்றவர்கள் தமது வீடுகள் ஷெல் வீச்சுகளுக்கிலக்காகியிருந்தமையையும் சேதமடைந்திருப்பதையும் கண்டுள்ளனர். உள்ளூர் பொருளாதாரமான விவசாயம், மீன்பிடி இன்னமும் முறையான விதத்தில் ஆரம்பிக்கப்படவில்லை. தொழில் வாய்ப்பு அருகியே காணப்படுகின்றது. பணம் பற்றாக்குறையாக உள்ளது. கடுமையான யுத்தத்தின் விளைவாக இந்தச் சவால்கள் எப்போதுமே ஏற்படுபவையாகும்.

நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதிலும் பார்க்க பௌதீக சூழலை திருத்தியமைப்பது இலகுவானதாக அமையும்.எவ்வாறாயினும் நம்பிக்கையில்லாத நிலையில் சமாதானமானது நலிவடைந்த நிலையிலேயே இருக்கும். வன்முறைக்கும் திரும்பிச் செல்லும். இதனை ஒருவரும் விரும்பவில்லை. இது எப்போதுமே அச்சுறுத்தலாகவே இருக்கும்.

முன்னேற்றம் குறைவாக இருக்கின்றமை தொடர்பாகவே ஆழ்ந்த கவலையை "எல்டர்ஸ்%27 தெரிவித்து கொள்ள விரும்புகிறோம். தமிழ் மக்களின் கவலை ,மனக்கசப்பு உணர்வுகள் அதிகரித்து வரும் அபாயமானது தோல்வியான விடயமாக அமையும்.

சகல தரப்புகளையும் உள்வாங்கிய ஜனநாயக அரசாக அதாவது தனது சகல இனச் சமூகங்களையும் உள்வாங்கிய சமூகமாக இலங்கை தன்னை கட்டியெழுப்ப வேண்டுமானால், தொலைநோக்கு கொண்ட அரசியல் தலைமைத்துவம் அவசரமாக தேவையாகும். சகல சமூகங்களையும் பற்றிக் கொண்டு தனது சகல பிரதேசங்களுக்கும் பணியாற்ற இது தேவையாகும். இதுவரை இதற்கு பற்றாக்குறையான தன்மையே காணப்படுகின்றது.

சிறுபான்மையினர், மனித உரிமைகள்,சட்டம் என்பனவற்றுக்கு மதிப்பளித்தல் இலங்கையின் எதிர்காலம் தொடர்பாக பிரதான இடத்தை பிடிக்க வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல உதவுவது அவசியம். யுத்தத்தில் ஈடுபட்டோர் என்று சந்தேகிக்கப்படுவோர் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் மனிதாபிமான ரீதியில் நடத்தப்படவேண்டும்.

அரசியலமைப்பில் ஏற்கனவே வரையறைப்படுத்தப்பட்டிருக்கும் அதிகாரப் பகிர்வை செயற்பட வைக்க வேண்டியதை நாங்கள் பார்க்க வேண்டிய தேவை உள்ளது. வடக்கு,கிழக்கு பகுதியினர் அபிவிருத்தி, மீள்கட்டுமானத்தில் உள்ளூர் சமூகங்களுக்கு அதிகளவு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

யுத்தத்தின் இறுதி மாதங்களில் இலங்கை அரசாங்கத்தாலும் விடுதலைப்புலிகளாலும் சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டதாக திரும்பத் திரும்ப ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றது.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தீர்மானம் சரியான பாதையில் எடுத்துவைக்கப்படும் நடவடிக்கையாக அமைந்தாலும், அது கிட்டத்தட்ட போதியதானதாக இல்லை.

ஏதாவது உள்நாட்டு அல்லது சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பாக எவரையாவது பொறுப்பாளியாக்கக் கூடிய நோக்கத்தைக் கொண்டதாக ஆணைக்குழு இருப்பதற்கான எந்தவொரு குறிகாட்டியும் இல்லை.

சட்டரீதியாக பதிலளிக்கும் கடப்பாட்டுக்கான தெளிவான அதிகாரம் இல்லாத நிலையில் உண்மையையோ, நல்லிணக்கத்தையோ ஆணைக்குழுவானது பெறுபேறாக்கிக் கொள்வதற்கு அதிகளவு வாய்ப்பு இல்லை.

பாதிக்கப்பட்டோரோ, சாட்சியங்களோ,

சாட்சியத்தை அளிப்பதற்கான பாதுகாப்பு உணர்வும் இல்லாத தன்மை காணப்படுகிறது.

நாட்டுக்குள்ளிருந்து ஆதாரத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய சுயாதீனமான சர்வதேச விசாரணையே சிறப்பான தெரிவு என்று "எல்டர்ஸ்%27 நம்புகிறது. ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்படவிருக்கும் நிபுணர் குழுவுக்கு இது பரிந்துரையாக அமையுமென நாம் கருதுகிறோம்.

அவ்வாறு இடம்பெற்றால், அந்த மாதிரியான விசாரணையொன்றை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கையின் நண்பர்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

முழுமையானதும் வெளிப்படையானதுமான நல்லிணக்க நடவடிக்கைகளுடன் இணைந்ததாக இத்தகைய விசாரணைகள் சிறந்த முறையில் செயற்பட்டிருப்பதை தென்னாபிரிக்காவிலும் ஏனைய நாடுகளிலும் நாம் பெற்ற அனுபவத்தின் வாயிலாக கண்டிருக்கிறோம். யுத்தம் இடம்பெற்ற தசாப்தங்களில் சகல சமூகங்களும் பட்ட துன்பங்கள், தவறுகள் என்பன விளங்கிக் கொள்ளப்பட்ட தன்மைக்கு இது இடமளிப்பதாக அமையும்.

உயிரிழந்த பொது மக்களின் குடும்பங்களுக்கும் உடமைகளை இழந்த குடும்பங்களுக்கும் கணிசமான அளவு நிதி இழப்பீடுகளை வழங்குவது நல்லிணக்கத்துக்கு உதவும். அத்துடன் கொல்லப்பட்டோர், காணாமற் போனவர்கள் தொடர்பாக உத்தியோகபூர்வமாக பதிவுகளை மேற்கொள்வது நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப உதவும். அத்துடன் இது இலங்கைக்குள்ளும் வெளியேயும், உள்ள தமிழ்ச் சமூகத்துக்கு கடப்பாட்டை ஏற்படுத்துவதாகவும் அமையும்.

வன்செயல்களுக்கு மீண்டும் திரும்புவது எவரினதும் விருப்பம் அல்ல. சர்வதேச சமூகத்தின் பெறுமதியான உறுப்பினர் என்ற இடத்தை இலங்கை மீண்டும் பிடித்துக் கொள்வதானால் நாம் நன்மை அடைவோம்.

http://www.thinakkural.com/publication_west/content.php?contid=3121&catid=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.