Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நாங்கள் எங்களுடைய புத்தகப் பைகளை எடுக்கமுதலே வீட்டை இடித்துத் தரை மட்டமாக்கியுள்ளனர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"நாங்கள் எங்களுடைய புத்தகப் பைகளை எடுக்கமுதலே வீட்டை இடித்துத் தரை மட்டமாக்கியுள்ளனர்

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24706&cat=1

போரின் காரணமாக ஏறத்தாழ மூன்று இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்திருந்தனர். ஏறத்தாழ அதேயளவு மக்கள் அண்மையில் பெய்த பெருமழையினால் தமது வீடுவாசல்களை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர். இதேபோல் இன்னொரு தொகுதி மக்களும் நிர்க்கதியாகியுள்ளனர். கொழும்பு கொம்பனித் தெரு மீ வீதியில் வசித்து வந்த மக்களே இவ்வாறு நிர்க்கதியாகியுள்ளனர். போராலோ அல்லது மழையாலோ அல்ல இவர்கள் நிர்க்கதியாகியிருப்பது. இது அபிவிருத்தியின் பேரால் நடைபெற்றிருக்கிறது.

ஏறத்தாழ நான்காவது தலைமுறையினராக வாழ்ந்து வருகிறார்கள் அந்த மக்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள். அவர்கள் ஒரு போதும் நாட்டின் அபிவிருத்தி என்பது தம்மை தெருவில் நிறுத்தும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்தருக்கவில்லை. வீதி அபிவிருத்தி அதிகார சபை இரண்டே மணித்தியாலத்தில் அந்த மக்களை நி;க்கதியாக்கியுள்ளது.

கடந்த மே 8ஆம் திகதி முறையான இழப்பீடோ நிவாரணமோ இன்றி அந்த மக்கள் வசித்து வந்த வீடுகள் இரண்டு மணி நேரத்துள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. அந்த இரண்டு மணித்தியாலத்துள் அவர்கள் தங்கள் உடமைகளை எடுத்துக் கொள் முடியாமல் போய்விட்டது. அவர்களுடைய பல முக்கியமான ஆவணங்கள் விடுகள் தரைமட்டமாக்கப்பட்டதோடு அழிந்து விட்டன.

64 வயதான தெரேசா சொல்கிறார் "இது ஒரு அநாவசியமான வேலை. 64வயதாகும் நான் இங்கேயே பிறந்து வளர்ந்தேன். மணமுடித்தேன். பிள்ளைகளைப் பெற்றேன். எனது பிள்ளைகளுக்கும் இப்போது பிள்ளைகள் இருக்கிறார்கள். எனது தகப்பனாரும் இங்கு வசித்தவர் தான். அதனோடு சேர்த்துப் பார்க்கும் போது 75 அல்லது 80 வருடங்களாக நாங்கள் இங்கு வசித்து வருகிறோம்."

1980ஆம் ஆண்டு வீடுகளைக் கட்டுவதற்கு அப்போதிருந்த அரசாங்கம் இவர்களுக்கு எழுத்து மூலமான அனுமதியை வழங்கியிருக்கிறது. இறுதிக்காலம் வரை இவர்கள் வரியைக் கூடச் செலுத்தி வந்திருக்கிறார்கள்.

நான்கு நாட்களுக்கு முன்னதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அங்கு ஒரு கூட்டத்தைக் கூட்டி அந்த மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும், பல கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தொட்டலங்கா எனுமிடத்தில் தற்காலிகமாக கூடாரங்கள் அமைத்துத் தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர். எட்டு மாதங்களில் அவர்களுக்குப் புதிய வீடுகள் அமைத்துத் தரப்படும் என்றும் கூறியுள்ளனர்.

இது மியூ வீதி மக்களுக்கு சரியான மாற்று வழியாக இருக்கவில்லை. அவர்கள் தங்களுக்கு மேலதிக கால அவகாசம் வழங்க்ப்பட வேண்டும் என்று கேட்டார்கள். அவர்களுக்கு கிடைத்த பதிலோ வீட்டை இடித்துத் தள்ளுவதற்காக வந்த இயந்திரங்களாகத் தான் இருந்தது.

அபிவிருத்திக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால் அது உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். எங்களுக்கு நியாயமான மாற்றீடுகள் மேற்கொள்ளப்பட்டு வெளியேறக் கோரியிருந்தால் நாங்கள் வெளியேறி இருப்போம். ஆனால் அதனை அவ்க் மேற்கொள்ளவில்லை என்கிறார் அங்குள்ள குடியிருப்பாளர்களில் ஒருவரான நிஸாம்.

நாங்கள் எங்களுடைய புத்தகப் பைகளை எடுக்கமுதலே வீட்டை இடித்துத் தரை மட்டமாக்கியுள்ளனர். எங்கள் புத்தகப்பைகள் இடிபாடுகளுள் சிக்கி விட்டன. ஐந்து நாட்களாக நாங்கள் பாடசாலைக்குச்செல்லவில்லை என்கிறாhன் மாணவனான இந்திக அஸங்க.

இந்த இடத்தில் வசிக்கும் மக்கள் அரசாங்க உத்தியோகத்தர்களோ தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களோ அல்ல. பெரும்பாலானவர்கள் சொந்தமாக வேலை செய்பவர்கள். கடுமையாக உழைப்பவர்கள். தமது உழைப்பையும் உதிரத்தையும் சிந்தி சிறுகச் சிறுக இந்த வீடுகளைக் கட்டியுள்ளார்கள்.

அவர்களுடைய உணர்வுகளை அதிகாரத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்வதாக இல்லை. கடந்த வெள்ளியன்று பள்ளிவாசல் தொழுகையின் பின்னர் தமது வீடகள் இடிக்கப்பட்டமைக் குஎதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினார்கள்.

பாதிக்கப்பட்ட மக்கள் கொம்பனித்தெருவின் ஏனைய குடியிருப்பாளர்களுடன் சேர்ந்து கொழும்பு குடியிருப்பு பாதுகாப்பு மன்றம் என்ற ஒரு அமைப்பை நிறுவியிருக்கிறார்கள்.

வீடமைப்பு அதிகாரசபை உறுதியளித்தபடி ஒரு வருடத்துள் வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும்.

அது வரை மாத வாடகை எட்டாயிரம் ரூபா தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அது போதாது அது 15ஆயிரமாக அதிகரிக்கப்பட வேண்டும்.

சில இதில் இரண்டு மூன்று மாடி வீடுகள். அவர்களுக்கு குறைந்தது இரண்டு வீடுகளாவது தரப்பட வேண்டும்.

சிலர் இதில் கடைகளை நடாத்தி வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு கடைகள் வழங்கப்பட வேண்டும் என்று தமது கோரிக்கையை விபரிக்கிறார் கொழும்பு மாநகரசபை உறுப்பினரான அர்ஷாத் நிஸாம்டீன்.

இப்போது வீதி அதிகார சபை அதிகாரிகள் வெறும் வாய்ச் சொல் மூலமாகவே உறுதி அளித்திருக்கிறார்கள். இந்த அரசாங்கத்தினை நாங்கள் நம்பத் தயாராக இல்லை. எழுத்து மூலமாக இந்த உறுதி மொழிகள் வழங்கப்பட வேண்டும். இன்னும் இரண்டொரு நாளில் அது நடைபெறாவிட்டால் நாம் சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் சிராஸ் நூர்டீன் என்கிற சட்டத்தரணி.

நாங்கள் இந்த நாட்டு மக்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறோம். அவர்கள் அரசாங்கத்தின் இந்த அநீதிக்கு எதிராக எழுந்து குரல் கொடுக்க வேண்டும். அவ்வாறு எழுந்து நிற்பது தான் அவர்களுடைய உரிமைகளைப் பெற்றுக் கொள்ள உதவும் என்கிறார் ஹேமந்த வீரக்கோன். இவரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்களில் ஒருவர்.

இந்த விடயங்கள் குறித்து வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளின் கருத்தைக் கேட்பதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்கிறார் யங்ஏசியா தொலைக்காட்சி செய்தியாளர்.

இந்த வருடம் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட அமைச்சரவையி;ல் வீதி அபிவிருத்தி அதிகார சபை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசு ஆரம்பிக்கும் அபிவிருத்தித் திட்டத்தால் நாட்டு மக்களின் வாழ்க்கையில் செழிப்பு ஏற்படும் என்று அரசாங்கம் எற்கெனவே தெரிவித்திருந்தது. ஆனால், மியீ வீதி மக்களை நோக்கு போது அது அவ்வாறல்ல என்று புலனாகிறது.

மியூ வீதி மக்களைப் பற்றிப் பேசும் போது இன்னும் இரண்டு தொகுதி மக்களைப் பற்றிப் பேச வேண்டும். முதலாவது சம்பூரில் நிர்க்கதியாக்கப்பட்ட மக்கள்.

சம்பூரில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்களிலிருந்து அவர்களைத் துரத்தி அடித்து விட்டு அவ்வளவு நிலங்களையும் இந்தியாவுக்கு தாரை வார்த்துள்ளது இலங்கை அரசு. அதுவும் அபிவிருத்தியின் பேரால் தான் நடைபெற்றது.

குறைந்த பட்சம் மியூ வீதி மக்கள் தமது எதிர்ப்பையாவது காட்ட முயற்சித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நடக்கிறதோ இல்லையோ வீடுகளைக்கட்டித் தருவதாகவும், அதுவரை வாடகையாக எட்டாயிரம் ரூபாய் தருவதாகவும் உறுதியளித்திருக்கிறார்கள்.

ஆனால் சம்பூரில் வாழ்ந்த மக்கள் போரின் பெயரால் துரத்தியடிக்கப்பட்டு முகாம்களில் தான் இன்னமும் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பதிலாக வீடுகளோ காணிகளோ வழங்கப்படுவதாகக் கூறப்படவில்லை. அதற்காகப் போராடக் கூட முடியாதளவுக்கு அவர்கள் சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய பிரச்சினையை வெளியில் பேசி இலங்கை அரசாங்கத்தினுடையது மட்டுமல்ல இந்திய அரசினதும் வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்ள எந்த அரசியல் தலைமையும் தயாரற்றிருக்கிறது.

இதேபோல வன்னியிலும் கிழக்கிலும் படையினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளிலுள்ள வளம் செழிக்கும் காணிகள் அனைத்தும் அரசாங்கத்தால் சுவீகாரம் செய்யப்பட்டிருக்கிறது. அவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு பகிரிந்தளிக்கப்படவுள்ளன. அந்நிறுவனங்களைப் பாதுகாக்கும் பொருட்டு நிரந்தர இராணுவ முகாம்கள் நிறுவப்பட்ட வருகின்றன. முருகண்டி சாந்தபுரம் பகுதியில் மீளக் குடியேறக் கொண்டு செல்லப்பட்ட மக்கள் அங்கு மீளக் குடியேற அனுமதிக்கப்படவில்லை. அவர்களுடைய காணிகள் அனைத்தும் இராணுவ முகாமுக்காகச் சுவீகரிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இராணுவத்தினர் மக்களுடைய காணிகளை அபகரித்து இராணுவ முகாம்களை அமைத்து வருவதாகப் பொது மக்களிடமிருந்து குற்றச்சாட்டக்கள் எழுந்த போதெல்லாம் தூக்கத்திலிருந்த தற்போதைய மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தற்போது தான் தூக்கம் கலைந்து இருபகுதியினருடனும் பேசி சமரசமாகத் தீர்த்து வைக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார். அவர் அடுத்த முறை தூக்கம் கலைந்து எழுந்து பேசுவதற்குள் முழுக்காணிகளும் கபளீகரம் செய்யப்பட்டு விடும்.

ஆனால் அபிவிருத்தியின் பெயரால் தெற்கிலும் சரி வடக்கு கிழக்கிலும் சரி மக்களுடைய வளம் வாய்ந்த நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் தெருவுக்கு வருகிறார்கள். இந்த அபிவிருத்தி மக்களுக்கானதெனின் அவர்கள் ஏன் தெருவுக்கு விரட்டப்பட வேண்டும்.

இது தான் இந்தியாவிலும் நடக்கிறது. சண்டீஸ்கரினதும் அதனையண்டிய பிரதேசங்களினதும் வளமான நிலங்கள் ‐அவை பழங்குடி மக்களிடம் இருந்தவை‐ அவர்களிடம் இருந்து அபகரித்து தனியார் நிறுவனங்களுக்கு வழங்க முயற்சித்து வருகிறது. இந்திய அரசு. மறுத்த மக்களை ஆயுதம் கொண்டு விரட்ட முயற்சிக்கிறது. ஆனால் மாவோயிஸ்ட்டுக்கள் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அதற்கெதிராகப் போராடி வருகிறார்கள். எங்களுடைய நாட்டிலோ மாவோயிஸ்ட்டுக்கள் தூக்கத்தில் இருக்கிறார்கள். வடக்கினதும் கிழக்கினதும் தெற்கினதும் மக்களை இனரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் வெற்றிகரமாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். அரசிற்கு எதிராக இணைந்து போராட முடியாதபடி.

மறுபுறத்தில் புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டார்கள் என்று அரசாங்கம் உறுதிபடக் கூறிய பின்னும் அவசரகாலச்சட்டங்களையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் தொடர்ந்து பேணுவது இவ்வாறான எதிர்ப்புக்கள் கிளம்பினால் அவற்றை முறியடிக்க அச்சட்டங்கள் உதவும் என்பதனால் தான் என்கிறார்பெயர் குறிப்பிட விரும்பாத ஊடகவியலாளர் ஒருவர்.

அரசாங்கம் சொல்லும் அபிவிருத்தி மக்களுக்கானதா பதில சொல்ல வேண்டியது அரசாங்கம் மட்டுமல்ல. மக்களுடைய பிரச்சனைக்ளுக்குத் தீர்வு காண்பதற்கு அபிவிருத்தி தான் அவசியம் என்று சொல்லும் ஊடகவியலாளர்களும், புத்திஜீவிகளும் செயற்பாட்டாளர்களும் தான்.

அவர்கள் மௌனம் கலைப்பார்களா?

GTNற்காக ‐ ஆனந்தத் தாண்டவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.