Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கம் நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டால் சர்வதேசத்திடம் அரசுக்காக உதவி கேட்போம். - சம்பந்தன்

Featured Replies

தமிழ் மக்களுக்கான தேவையை அறிந்து தனது நிலைப்பாட்டை அரசாங்கம் மாற்றிக்கொள்ளுமாயின் சர்வதேசத்திடம் இலங்கைக்கு உதவிகோர தயாராகவுள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு யுத்ததத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் கடமையிலிருந்து அரசாங்கம் விலகக் கூடாது என திட்டவட்டமாகக் கூறியுள்ளார் சம்பந்தன்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இக்கருத்தை வலியுறுத்தினார்.

அங்கு அவர் உரையாற்றுகையில்,

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நாம் விஜயம் மேற்கொண்டு அங்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துக் கேட்டறிந்தோம். குறிப்பாக மீள் குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தற்காலிக முகாம்களில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து எமது கரிசணையை செலுத்தியிருந்தோம்.

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின்போது அரசாங்கம் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு மக்களின் குடியிருப்புகளை தகர்த்தது. அதனால் அப்பாவி மக்கள் உணவு, உறை, உடையுள் எதுவுமின்றி பெரும் துன்பங்களை எதிர்நோக்கினார்கள். வீடுகளை உடைத்த அரசாங்கம் அவற்றை மீளக் கட்டிக்கொடுப்பதில் பின் நிற்கிறது. குறிப்பாகச் சொல்வதானால் வீடுகளை அமைத்துக்கொடுக்கும் நோக்கமே அவர்களிடம் இல்லை.

மீள்குடியேற்றப்பட்டவர்களில் சிலருக்கு நிவாரணத் தொகை கிடைத்துள்ளது. பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை.

அரசாங்கம் சில அபிவிருத்திகளைச் செய்திருக்கிறது. நாங்கள் இல்லை எனக் கூறவில்லை. ஆனால் மக்களின் தேவை கருதிய பெரும்பாலான விடயங்கள் செய்துகொடுக்கப்படவில்லை. அவ்வாறு அவற்றைச் செய்துகொடுக்க அரசாங்கம் முன்வருமானால் அதற்கு உதவுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

கேள்வி: அரசாங்கத்துடன் நீங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாகக் கூறப்படுகிறதே?

பதில்: அதுபற்றி பேச விரும்பவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி என்பதை விட மீண்டும் சந்தித்துப் பேசவுள்ளோம் என்பது தான் பொருத்தமானதாக இருக்கும்.

கேள்வி: அந்த பேச்சுவார்த்தையில் நீங்கள் முன்வைத்த விடயங்களை விளக்கிக் கூறுங்கள்?

பதில்: வடக்கில் நாங்கள் விஜயம் செய்து அறிந்துகொண்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஜனாதிபதிக்கும் அமைச்சர்கள் குழுவினருக்கும் எடுத்துக் கூறினோம். ஒருமித்த நாட்டுக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.

கேள்வி: ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அரசாங்கத்துக்கு ஆதரவு தரவள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றி?

பதில்: எமது மக்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுமேயானால் அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கத் தாயாராக இருக்கிறோம். ஆனால் நாம் குறிப்பிட்ட சில விடயங்களில் அரசாங்கம் பின் நிற்குமேயானால் அதனை சுட்டிக்காட்டவும் தயாராக இருக்கிறோம்.

கேள்வி: அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்றன எனக் கூறும் நீங்கள் சர்வதேசத்திடம் உதவி கோரலாமே?

பதில்: நிச்சயமாக. யுத்தத்தின் பின்னர் மக்கள் ஏராளமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் காணவில்லை என ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். மனைவிமார் விதவைகளாக செய்வதறியாமல் இருக்கிறார்கள். எத்தனையோ பேர் ஊனமுற்றிருக்கிறார்கள். மீள்குடியேற்றம் முழுமைப் படுத்தப்படவில்லை. மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க முடியாது என அரசாங்கம் கூறுகிறது. இந்நிலையில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமாயின் எமது மக்களுக்காக சர்வதேசத்திடம் உதவி கோர தயாராக உள்ளோம்.

கேள்வி: தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு அரசில் தீர்வு காண்பது குறித்து வடக்கு கிழக்கைப் பிரதிநித்துவப்படுத்தும் பிரதான கட்சி என்ற வகையில் அரசாங்கத்துக்கு யோசனைகளை முன்வைக்க தாயாராக இருக்கிறீர்களா?

பதில்: அரசாங்கத்தினால் அவ்வாறு கோரப்படுமாயின் அதற்கு பதில் தருவோம். ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தரும் தீர்வு என தட்டிக்கழிக்க முற்படாத வகையில் நிலைப்பாடு மாற வேண்டும்.

கேள்வி: நிறைவேற்று அதிகார முறைமையை நீடிப்பது பற்றி விமல் வீரவன்ச கருத்து தெரிவித்திருந்தார். அதுபற்றி கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

பதில்: விமல் வீரவன்சவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எமக்கு இல்லை

ஈழனாதம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது நடக்கும் அரசியல் நிலைபாடுகளின் அடிப்படையில் பார்த்தால் கூட்டமைப்பை இந்தியாவும் இலங்கை அரசும் சேர்ந்து ஓரம் கட்டபடுவதை அவதானிக்கலாம். ஜனாதிபதி தேர்தல் தொடக்கம் இன்றுவரை இந்தியா கறிவேப்பிலை மாதிரி கூட்டமைப்பை பாவித்துள்ளது. கூடமைபை மக்களிடமிருந்து அன்னியபடுத்தும்நடவடிக்கைகளை இந்தியாவும் இலங்கை அரசும் திட்டமிட்டே செய்கிறது.

1.நிருபமா ராவ் சந்திரகாந்தனை சந்தித்தது தொடக்கம்

2 ராஜபக்ச கூடமைப்பு நேற்றய சந்திப்பின் பிறகு டக்லஸ் தேவானந்தாவை சந்தித்தது, அழைத்துக்கொண்டு இந்தியாவுக்கு போனது எல்லாம் ஒட்டுகுழுக்களின் கட்சிகளை பலபடுதவும் இந்தியா தமிழ் மக்களுக்கு வழங்கும் உதவுகள் எல்லாமே டக்லஸ் , பிள்ளையான் ,கருணா போன்றவர்களிநூடகவே வழங்கப்படும். இதன் மூலம் மக்கள் ஒட்டு குழுக்கள் தலைவர்கள் பக்கமே சாய்வார்கள். கூட்டமைப்பு செய்ய மக்களுக்கு முனையும் எந்தவிதமான உதவிகளோ தட்டுக்கபடும், மேலாக கூடமைப்பு மக்களை சந்திப்பது கூட தடுக்கபடுகிறது இனியும் தொடரும்.

புலம்பெயர் மக்கள் உதவிகள் கூட கூடமைபிநூடாக மக்களை அடையாதவாறு தடுக்கப்படும்.

தமிழ் மக்களை ஒட்டு குழுக்களின் பக்கம் சாய வைத்து, ஒட்டு குழு கட்சிகளினூடாக அரசில் தங்கியிருக்க வைப்பதன் மூலம் , அச்சுறுத்தல், சிங்கள குடியேற்றம் என தமிழர் தேசியம் தாயகம் மறக்கடிக்கப்படும். அரசியல் தீர்வு என்பதை நீண்ட காலத்திற்கு இழுத்தடித்து , கடைசியாக இந்தியாவின் விருப்பபடி பதின் மூன்றாவது திருத்த சட்டம் அல்லது அதனிலும் குறைவாக கொடுத்தாலே ஆச்சரியம்தான்.

இதன் அடிப்படையிலேயே நாடு பூராகவும் மாகணசபை தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ள அரசு வடமாகான தேர்தல் தற்போது நடத்தப்பட மாட்டாது என்று அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே டக்லஸ் நாற்பது ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார் , இருபதொராயிரம் சிங்கள மக்களை வடக்கில் மிக விரைவில் குடியேற வைக்க திட்டம் நடக்கிறது. குடியேற்றம் நடந்த பிறகே இந்த தேர்தல் நடத்த படும் . அடுத்த தேர்தலில் அரசுக்கு சார்பான மாகான மாகாணசபை தலைவரே தெரிவு செய்யப்பட வைப்பதன் மூலம் கிழக்கு மாகான மக்களை கொண்டும் வடக்கு மாகான மக்களை கொண்டதும் இரண்டு மாகானங்களும் இணைவதில் தமக்கு உடன் பாடு இல்லை என்று மக்களை கொண்டே சொல்ல வைப்பது தான் மகிந்தாவின் சிந்தனை. மக்களே சொன்ன பிறகு இந்தியாவும் வாயை மூட வேண்டியதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.