Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவின் உண்மை முகம் - புலிகளை அழித்ததற்கு மகிந்தவிற்குப் பாராட்டு

Featured Replies

அமெரிக்காவின் உண்மை முகம் - புலிகளை அழித்ததற்கு மகிந்தவிற்குப் பாராட்டு

தமிழீழத்தின் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக தமது உயரிய உயிர்களை ஈகம் செய்து மாபெரும் விடுதலைப் போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்றும், அவர்களை அழித்ததற்கு பாராட்டுத் தெரிவிப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

தமிழ் மக்கள் தமது விடுதலைக்கு உதவுவார் என தற்பொழுதும் நம்பியிருக்கும் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் இந்தக் கருத்து அவரது உதவியாளர்கள் மூலம் நேரடியாக சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளமை புலம்பெயர்ந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்று கொழும்பில் மகிந்தவைச் சந்தித்த அமெரிக்க அரசுத் தலைவரது சிறப்பு உதவியாளரும், இனப்படுகொலை, மனித உரிமைகள், மற்றும் பல துறைகளுக்குப் பொறுப்பாக இருப்பவருமான சமந்தா பவர் (Samantha Power), போக்குற்றம், மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவின் இயக்குனர் டேவிட் பிறெஸ்மான் (David Pressman) ஆகிய முக்கிய பொறுப்புக்களில் இருக்கும் இருவருமே ஒபாமாவின் வாழ்த்தையும், பாராட்டையும் மகிந்தவிடம் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதத்தை வெற்றிகரமாக ஒழித்த சிறீலங்கா அரசுடன் தமது உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்ள அரசுத் தலைவர் பராக் ஒபாமா ஆர்வமாக இருப்பதாக இவர்கள் தெரிவித்த கருத்தை மகிந்தவும் ஏற்றுக்கொண்டு, தனது விருப்பத்தினையும் பதிலுக்குத் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசு இழைத்துள்ள போர்க் குற்றங்களுக்கு நீதி விசாரணை வேண்டும் என, புலம்பெயர்ந்த மக்களும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துவரும் ஒரு முக்கிய காலகட்டத்தில், போர்க்குற்றம், மற்றும் மனித உரிமைகளுக்குப் பொறுப்பாக இருக்கும் ஒபாமாவிற்கு நெருங்கிய இரண்டு முக்கிய அதிகாரிகள் சிறீலங்கா அரசிற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டுள்ளமை பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன.

அமெரிக்காவில் இயங்கும் ஒபாமாவிற்கான தமிழர்கள் என்ற அமைப்பும், ஏனைய அமைப்புக்களும் இந்த விடயத்தை அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் கவனத்திற்குக் கொண்டு செல்வதுடன், அமெரிக்காவின் உண்மையான நிலைப்பாட்டை அறிந்து தமிழ் மக்களிற்கு தெளிவுபடுத்துவது மிகவும் முக்கிய பணியாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, தமது பிரதிநிதிகள் இருவரும் 14ஆம் நாள் முதல் 18ஆம் நாள்வரை இலங்கையில் தங்கியிருப்பர் எனவும், கொழும்பில் அரச பிரதிநிதிகளைச் சந்திக்கும் இவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பிற்கும் சென்றும் அங்கும் அரச பிரதிநிதிகளையே சந்திக்க இருப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அறிக்கை தெரிவிக்கும் அதேவேளை, பொதுமக்களையோ, அன்றி பொதுமக்களின் பிரதிநிதிகள், மனித உரிமை அமைப்புக்களையோ இவர்கள் சந்திப்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

அமெரிக்காவில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிற்கும், அமெரிக்க வெளிவிவகார (இராஜாங்க) அமைச்சர் ஹிலாரி கிளின்ரனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாக நடைபெற்ற இன்றைய சந்திப்பில், சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா ஏ. புட்டினஸ் (Patricia A Butenis), சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், வெளிவிவகாரச் செயலர் றொமேஸ் ஜயசிங்க, அரசுத் தலைவரது செயலர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

http://www.vannionline.com/2010/06/blog-post_2168.html

இலங்கை ஒரு பதட்டமான நாடாக இருக்க வேண்டுமென்பது , இந்தியாவின் அவா...அதே போல் எங்கேயாவது யாராவது யுத்தம் செய்ய வேண்டும் என்பது அமெரிக்காவின் அவா....இன்னுமொன்று அமெரிக்காவின் ஏற்பாட்டில் 800 ஏக்கர் நிலத்தில் ஏதோ நடக்குதாம்.... எல்லாத்தையும் சொல்ல ஏலாது கண்டியலே....

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமா தன்னுடைய நாட்டுப் பிரச்னைகளையே தீர்க்க முடியாமல் தவிக்கின்றார்.

அவருடைய ஆலோசகர்கள் வேறு அவருடைய காலை வாரச் சந்தர்ப்பம் பாத்திருக்கின்றார்கள்.

இதற்குள் அவர் நமக்கு ஏதாவது செய்வார் என்று நினைப்பது எங்கள் அறியாமையே.

வாத்தியார்

.............................

... சர்வதேச அரசியலில் ஞானசூனியங்கள் நாங்கள் .... இவ்வழிவிற்குப்பின்னும் ....?????????????

மகிந்த கொஞ்சம் பொறு! ... இன்னும் கொஞ்ச நாளில் இங்கு புலத்திலுள்ள காஸ்ரோக்களும் உனக்கு நன்றி தெரிவித்து செய்தி அனுப்புவார்கள்!!!!! :lol: .... உன் புண்ணியத்தில் இங்கு அவர்களுக்கு அகப்பட்டதுகளை சுருட்ட சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறாய்!! :lol:

இப்படியான சில்லரைத்தனமான விடய்ங்களுக்கெல்லம் கோபப்படுவது எந்து அரசியல் அறியாமயையே காட்டி நிற்கிறது, சமாதான் காலதில் ந்ட்புலிகளை எத்தனை சர்வ்தேச நாடுகள் பாராட்டின, எத்தனை ராஜ தந்திரிகள் வந்து புலிகளின் தலைமையை வந்து சந்தித்தன, எமது விடுதலை இயக்கத்திற்கு ஒரு சர்வதேச நாட்டுக்கும் அதன் தலைவருக்கும் வழங்கும் மரியாதையும் வழங்கப்பட்டது, ஆனால் இறுதியில் எமது மக்கள் உடல் சிதறி இறந்த போது யாரும் வரவில்லை.

இதைத்தான் நடேசன் அவர்கள் தனது இறுதி நேர் காணலில் "எம்முடன் வந்து உணவு உண்டு மகிழ்ந்த எரிக் சொல்கைமே இன்று எம்மை ஆய்தங்களை ஒப்படைத்து விட்டு சரண் அடையச் சொல்கிறார்" என வேதனைப்பட்டார்.இது தான் சர்வதேச அரசியல் அகம் ஒன்றை வைத்துக்கொண்டு புறம் ஒன்றைச் செய்வார்கள்.

இதை நான் மீண்டும் குறிப்பிடுகிறேன் 1986ம் ஆண்டு சதாம் உசனுக்கு இரசாயன ஆயுதம் வழங்கி அதை பாவிக்க ஊக்குவித்த அமெரிக்கவே 2006ம் ஆண்டு அதே அணு ஆயுதத்தை பாவித்தமைக்கு தூக்கில் இட்டது. இது தான் அரசியல். 1986ம் ஆண்டு ஏன் அமெரிக்க உசைனுக்கு ஆதரவளித்த்து

ஏன் என்றால் ஈரானை அடக்கி வைப்பதற்கு வளைகுடாவில் ஒரு சக்தி தேவைப்பட்டது அதனால் அமெரிக்க வாய் மூடி மவுனியாக இருந்தது ஆனால் அவர்கள்டைய போர் முடிந்த போது அவ்ரால் பிரியோசனம் இல்லை என்றவுடன் அவரைத் தூக்கி எறிந்த்து. இங்கே யார் மடையன் அது சதாம் தான் 1986இல் அமெரிக்க இருகின்றது என்ற தைரியத்தில் இவர் அடாத அட்டமே இல்லை, ஆனால் இறுதியில் இவரை காப்ப்ர்ற எந்த ஒரு அரபு நாடும் முன்வரவில்லை.

அதே தான் எமது நாட்டிலும் இங்கே ம்கிந்த அன் கோ அதைச் செய்கின்றது,இறுதியில் தன்னையும் இதே நாடுகள் ஒரு நாள் தமக்குத் தேவை இல்லய் என்று தூக்கி எரிந்துவிடும் என்பதை உணரவில்லை. இப்படியானா காரணங்களால் தான் எமது தலைவரும் ந்டுனிலமையைக் கடை பிடித்தார், ஆனால் அதுவே எமது போராட்டதீர்கு பாதகமாஇ அமைந்துவிட்டது என்வே இப்படியான முகஸ்துதிகளுக்கு செய்யும் நடவடிக்கைகளை கண்டு நாம் குழம்பாமல் இருப்பதே சிறப்பாகும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.