Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறையாண்மை காக்கப்படுமானால், வயிகோல் என்றாலும் நாம் உண்போம் ‐ உப்புல் ஜோசப் பெர்னான்டோ‐ விசேட தமிழாக்கம் ‐ குளோபல் தமிழ்ச் செய்திகள்‐

Featured Replies

இறையாண்மை காக்கப்படுமானால், வயிகோல் என்றாலும் நாம் உண்போம் ‐ உப்புல் ஜோசப் பெர்னான்டோ‐ விசேட தமிழாக்கம் ‐ குளோபல் தமிழ்ச் செய்திகள்‐

02 July 10 12:52 am (BST)

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஊருக்கு ஊர் ஆடைத் தொழிற்சாலைகளை திறக்கும் போது, எதிர்க்கட்சியில் இருந்து மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பிரேமதாச கிராமங்களில் உள்ள இளைஞர் யுவதிகளை பயன்படுத்தி வெள்ளையர்களுக்கான உள்ளாடைகளை தைப்பிப்பதாக கூறினர்.

வெள்ளையர்கள் அடைத் தொழிற்துறைக்கு வழங்கிய ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகை முற்றாக கிடைக்காது போனால் கிராமபுறத்து இளைஞர்களும், யுவதிகளும் அரசாங்கத்தின் உள்ளாடைகளை கழற்றி விடுவர் என்ற அச்சத்தில் மகிந்த ராஜபக்ஷவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசாங்கத்தினரும் இன்று அச்சத்தில் உள்ளனர்.

எனினும் தற்போது அரசாங்கம் திராட்சைப் பழம் புளித்த நரியை போல் ஜீ.எஸ்.பீ.வரிச்சலுகை கிடைக்காவிட்டால் பரவாயில்லை.. என கூறுகிறது.

ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை பெற பயங்கரவாதி என முத்திரை குத்திய ஊடகவிலாளர் திஸ்ஸநாயகத்தை அரசாங்கம் விடுதலை செய்தது. அவசரகாலச் சட்டத்தின் சில விதிகளை தளர்த்தியது. ஜீ.எஸ்.பீ.பிளஸ் கிடைக்காது, பல லட்சம் பேர் தொழில் வாய்ப்பை இழந்தால், அது தம்மை பாதிக்கும் என அரசாங்கம் அஞ்சியது.

திஸ்ஸநாயகத்தை விடுதலை செய்து, அவசரகாலச் சட்டத்தில் சில விதிகளை தளர்த்திய பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகை வழங்க அரசாங்கத்துடன் பேச்சு நடத்த இணங்கியது.

எனினும் தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு இனிப்பை வழங்கிவிட்டு, வயிற்றில் அடிப்பது போல், ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை பெற வரவேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தது. அரசாங்கம் அதனை பொருட்படுத்தவில்லை. தேர்தலுக்கு முன்னர் அத்தியவசிய உணவுப் பொருட்களுக்கான வரிகளை நீக்கி, எரிவாயு விலை அதிகரிக்கப்படுவதை நிறுத்தியது. அரசாங்கம் மக்களுக்கு இனிப்பை வழங்கியது போன்று, திஸ்ஸ நாயகத்தை விடுவித்து, அவசரகாலச் சட்டத்தின் சில விதிகளை தளர்த்தி ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை பெறுவதற்காக ஐரோப்பிய ஒன்றயத்திற்கு அரசாங்கம் இனிப்பை ஊட்டி பார்த்தது..

அரசாங்கத்தின் இனிப்பை சாப்பிட்டு சுவைத்த இலங்கை மக்கள் வரிசையாக சென்று புள்ளடியிட்டனர். தற்போது பாண் என்று கூறிக்கொள்ள முடியாதவாறு சாப்பிட்டவற்றை மக்கள் கக்கி வருகின்றனர். பாண் விலை வானத்தை தொடுமளவு உயர்ந்துள்ளது. பால் மாவின் விலையும் உயர்ந்துள்ளது. எரிவாயு விலைகளும் அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் எந்த பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் எனக் கூறமுடியாத நிலைமை. தேர்தல் நடைபெறும் போது விலை உயர்த்தப்படாத பொருட்களின் விலைகள் ரொக்கட் வானில் பறப்பது போன்று கிடு கிடு என தற்போது அதிகரித்துச் செல்கிறது.

6 மாதத்திற்கு முன்னர் சாதாரணமாக பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்குமாயின் இப்படி கிடு கிடுவென உயர்த்திருக்காது. தற்போது வட்டியுடன் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகிறது. இந்த வட்டியும் மக்களின் சட்டைப் பைகளில் இருந்தே செல்கிறது. தற்போது வாக்களித்த மக்கள் தம்மை தாமே குறைக்கூறிக் கொள்கின்றனர். இலங்கை மக்கள் வாக்களித்து விட்டு, வாங்கி கட்டியது போல், கொடுத்து விட்டு, வாங்கி கட்டிக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் தயாரில்லை. இதன் காரணமாகவே ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனைகளை விதித்தது.

இந்த நிலையில் முன்னர் கூறியது போல் திராட்சைப் பழம் புளித்த நரியை போன்று நிபந்தனைகளை நிறைவேற்றி நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுக்க முடியாது என அரசாங்கம் கூறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகள் என்ன?. அந்த நிபந்தனைகளில் முதலவாது நிபந்தனை 17வது அரசியல் சாசனத் திருத்தத்தை அமுல்படுத்துதல். 17வது அரசியல் சாசனத் திருத்தம் என்றல் என்ன?. 17வது அரசியல் சாசனத் திருத்தம் ஐரோப்பிய ஒன்றயத்தால் உருவாக்கப்பட்டதல்ல. 2001 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் கவிழ்ந்து விடும் சூழ்நிலையில் அதனை கவிழவிடாது காப்பற்றிய ஜே.வீ.பீயும் பொதுஜன ஐக்கிய முன்னணியும் இணைந்து உருவாக்கிய அரசியல் சாசனத் திருத்தம் தான் இந்த 17வது அரசியல் சாசனத் திருத்தம்.

அரசாங்க நிறுவனங்களை அரசியல்மயத்தில் இருந்து விடுவிப்பதற்காக இந்த அரசியல் சாசனத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அன்று இந்த அரசியல் சாசனத் திருத்தத்தை நிறைவேற்ற கைகளை உயர்த்தியவர்கள் வெள்ளைகாரர்கள் அல்ல. மகிந்த ராஜபக்ஷ உட்பட தற்போது இந்த அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்களே அதனை நிறைவேற்ற கைகளை உயர்த்தி வாக்களித்தனர்.

அன்று மிகவும் கௌரவமாக கைகளை உயர்த்தினர். காவற்துறை, நீதித்துறை, தேர்தல் திணைக்களம், அரச சேவை போன்றவற்றை அரசியல் தலையீடுகளில் இருந்து மீட்டு மிகப் பெரிய புரட்சியை செய்து விட்டதாக நாட்டுக்கு சுட்டிக்காட்டினர். இந்த நிலையில், இந்த அரசாங்கம் தயாரித்து நிறைவேற்றிய 17வது அரசியல் சாசனத் திருதத்தை அமுல்படுத்துவதால், எப்படி நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படும்?, இந்த கேள்வியை மக்கள் கேட்கின்றனர்.

நாட்டு மக்களின் இறையாண்மையை பாதுகாப்பதற்காகவே 17வது அரசியல் சாசனத் திருத்தம் கொண்டு வரப்படுவதாக இன்றைய அரசாங்கம் அன்று கூறியது.

இனிமேல் காவற்துறையில் அரசியல்வாதிகள் தலையீடுகளை மேற்கொள்ள முடியாது. அரசியல்வாதிகள் அரச ஊழியர்களுக்கு அழுத்தங்களை கொடுக்க முடியாது.

நீதித்துறையிலும் தலையீடுகளை மேற்கொள்ள முடியாது.

சுதந்திரம் மற்றும் நீதியான தேர்தலை நடத்துவதில் அரசியல்வாதிகள் தடையேற்படுத்த முடியாது என அப்போது பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற பெயரில் ஆட்சியில் இருந்த ஸ்ரீலஙகா சுதந்திரக் கட்சி தலைமையிலான இந்த அரசாங்கம் மிகவும் உற்சாக தொனியில் கூறியது.

எனினும் இன்று 17வது அரசியல் சாசனத் திருத்தம் நாட்டின் இறையாண்மைக்கு குந்தகமானது என அரசாங்கம் கூறுகிறது.

17வது அரசியல் சாசனத் திருத்தம் அமுல்படுத்தப்பட்டால், காவற்துறை மா அதிபராக நியமனம் பெறப் போவது ஐரோப்பிய ஒன்றயத்தின் வெள்ளையர்களுக்கு தேவையானவர் அல்ல. நாட்டு மக்களுக்கு தேவையான நேர்மையான காவற்துறை அதிகாரியே அந்த பதவியை பெறுவார்.

நீதி, அரச சேவை மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இப்படியான நேர்மையான அதிகாரிளே நியமிக்கப்படுவர். இந்த அதிகாரிகள் மக்களின் உத்தரவுகளை நிறைவேற்ற கடமைப்பட்ட அதிகாரிகளாவர். அப்படியானால் எப்படி இறையாண்மை பாதிக்கப்படும்?. 17வது அரசியல் சாசனத் திருத்தம் அமுல்படுத்தப்பட்டால், பாதிக்கப்படுவது நாட்டின் இறையாண்மையல்ல, அரசாங்கத்தினதும், அரசியல்வாதிகளினதும் இறையாண்மையாகும்.

மக்களின் காவற்துறை சட்டத்தை அமுல்படுத்தும் போது, அரசாங்கத்தினால் மோசடிகளை செய்ய முடியாது.

மக்களின் அரச சேவை மக்களுக்கு சேவையாற்றும் போது, அரசாங்கம் திருடுவதற்கு விளக்கை பிடிக்கவும், கடைக்கு போகவும், அதன் அழுக்குகளை கழுவவும் முடியாது போகும்.

மக்களின் நீதிமன்றம் சுயாதீனமான தீர்ப்புகளை வழங்கும் போது, அரசாங்கத்தினால் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை சிறையில் அடைக்கவோ, திருடர்களையும், கூலிப்படையினரையும் விடுதலை செய்து அவர்களை பாதுகாக்கவோ முடியாது போகும்.

மக்களின் தேர்தல் ஆணையகம் சுதந்திரம் மற்றும் நீதியான தேர்தலை நடத்தும் போது, அரசாங்கத்தினால் வாக்கு மோசடிகளில் ஈடுபட முடியாது.

17வது அரசியல் சாசனத் திருத்தம் அமுல்படுத்தப்பட்டால், ஊழல், மோசடிகளில் ஈடுபடவும், வன்முறைகளில் ஈடுபடுவதற்கு உள்ள இறையாண்மை பாதிக்கப்படும் என்ற காரணத்தினால், அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பீ.பிளசுக்கான நிபந்தனைகளை கண்டு அஞ்சுகிறது.

கொள்ளை, வன்முறைகளில் ஈடுபட உருவாக்கிக் கொண்டுள்ள அனுமதி பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு, உங்களால் உருவாக்கப்பட்ட 17வது அரசியல் சாசனத் திருத்தத்தை அமுல்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது. எனினும் இதனால் இறையாண்மை பாதிக்கப்படும் என அரசாங்கம் மக்களிடம் கூறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றை நிபந்தனை என்ன?.

ஒருவர் கைதுசெய்யப்படும் போது கடைபிடிக்கப்படும் கடுமையான சட்டங்களை நீக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதித்துள்ளது.

யுத்தம் நடைபெற்ற போது, இந்த சட்;டத்தை நீக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கேட்கவில்லை. ஜெனரல் சரத் பொன்சேக்கா உட்பட அவரது ஆதரவாளர்கள், அரசாங்கத்திற்கு எதிரான ஊடவியலாளர்கள், தொழிலாளர்களின் தலைவர்கள், மாணவர்களின் தலைவர்கள் ஆகியோரை அடக்க அரசாங்கம் இந்த சட்டத்தை பய்ன்படுத்துவதால், அந்த சட்டத்தை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.

தற்போது யுத்தம் நடைபெறவில்லை. எனினும் தமது அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக அரசாங்கம் இந்த சட்டத்தை பயன்படுத்தி வருகிறது. இதனையே உடனடியாக நிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோருகிறது. இதனால் எப்படி நாட்டின் இறையாண்மைக்கு எப்படி பாதிப்பு ஏற்படும்.....?.

ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ளது.

ஊடகச் சுதந்திரத்தை பாதுகாப்பதால், நாட்டின் இறையாண்மைக்கு எப்படி பாதிப்பு ஏற்படும்..?.

விடுதலைப்புலிகளை விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஐரோப்பிய ஒன்றியம் விதிக்க வில்லை. கைதுசெய்யப்பட்டு சந்தேக நபர்களின் பெயர்களை பகிரங்கப்படுத்தி, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நிபந்தனை விதித்துள்ளது.

கே.பி.முதல் சகல விடுதலைப்புலிச் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தி நீதிமன்றத்தில் நிறுத்தாது. வடபகுதியில் வாக்குகளை பெறுவதற்காக அவர்களை அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது.

அதேபோன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த நிபந்தனை மூலம் நாட்டினதும், மக்களினதும் இறையாண்மை பாதுகாக்கப்படுமே தவிர பாதிக்கப்படாது.

அரசாங்கத்தின் திருட்டுத்தனங்களும், மோசடிகளும் மாத்திரமே பாதிக்கப்படும்.

அரசாங்கம் தனது இறையாண்மையை பாதுகாக்க முற்படுவதன் காரணமாக லட்சக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில் பாதுகாப்பை இழக்க போகின்றனர். எனினும் மனசாட்சியில்லாத அரசாங்கம் அது குறித்து கவலைப்படுவதில்லை.

ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதித்த போது, இறையாண்மை பாதிக்கப்படும் எனக் கூறிய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை விதித்த போது, அந்த நிபந்தனைகளால் இறையாண்மை பாதிக்கப்படும் என கூறவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதால், மக்கள் பாதிப்படுவர்கள் என்ற காரணத்தினால், நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்கி அதனை நிறைவேற்றி கடனுதவியை பெற்று, பொருட்களின் விலைகளை அதிகரித்து அரசாங்கம் மக்களின் வயிற்றில் அடிக்கிறது.

ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகைக்கான நிபந்தனைகளை நிறைவேற்றினால், தமது அடி வயிற்றில் அடி விழும் என்பதால்,

லட்சக்கணக்கான இளைஞர்கள் தொழில் வாய்ப்புகளை இழந்தாலும் பரவாயில்லை என்ற நிலையில், நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி, அரசாங்கம் தனது அடி வாயிற்றை பாதுகாத்துக் கொள்ள முனைகிறது.

எனினும் மக்கள் ஆவேசமடைந்து. வீதியில் இறங்கும் போதே, அரசாங்கத்தின் அடி வயிறு சூடேறும்.

மனசாட்சியில்லாத அரசாங்கத்தினால், மக்களுக்கு ஆவேசம் ஏற்படப் போகும் சந்தர்ப்பத்தை உணர்ந்துகொள்ள முடியாது.

"சீனி இல்லாமல் தேனீர் அருந்துவோம் மிளகாய் இல்லாமல் குழம்பு சாப்பிடுவோம். சமவுடையை ஏற்படுத்துவோம். வயிகோல் என்றாலும் நாம் உண்போம்" 70 ‐77 ஆம் ஆண்டுகளில் மக்களின் கோப ஆவேசத்தை அறியாத ஐக்கிய முன்னணி அரசாங்கம் மேற்படி கோஷத்தை எழுப்பியது.

அந்த கம்யூனிசம் இறுதியில் ஜனநாயகமானது. தொழிலின்றி நாம் இருப்போம். பட்டினியையும் பொறுத்துக்கொள்வோம். இறையாண்மை காக்கப்படுமானால், வயிகோல் என்றாலும் நாம் உண்போம்.

இந்த கோஷமானது தற்போதையே அரசாங்கம் மக்களின் ஆவேசத்தை செவிமடுக்காது எழுப்பி வரும் கோஷமாகும். மக்கள் ஆத்திரமடையும் போது, அரசாங்கத்தின் இறையாண்மைக்கு எதிராக திரும்பினால் மக்களின் கோபத் தீயில்

அரசாங்கம் சாம்பலாய் மாற அதிக நேரம் எடுக்காது.

உபுல் ஜோசப் பெர்ணான்டோ..விசேட தமிழாக்கம் ‐ குளோபல் தமிழ்ச் செய்திகள்:‐

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=26633&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

இறையாண்மை காக்கப்படுமானால், வயிகோல் என்றாலும் நாம் உண்போம்

அப்ப இவ்வளவு காலமும் புண்ணாக்கா தின்று கொண்டிருந்தாய்??!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.