Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. நிறுவனங்களின் வாகனப் பயண அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. நிறுவனங்களின் வாகனப் பயண அனுமதி

ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டு நிறுவனங் களின் வாகனங்கள் ஏ 9 வீதியூடாக வன்னிப் பிரதேசத் துக்குச் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சிடமே அனுமதி பெற்றுச்செல்லவேண்டும். இந்தப் புதிய விதி, அல்லது ஏற்பாடு கடந்த ஒரு வார காலத்திற்கு முன்னர் நடை முறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இது வரை கால மும் ஜனாதிபதி செயலணிக் குழுவின் அங்கீகாரத்தைப் பெற்று ஐ.நா. தொண்டு நிறுவனங்கள் ஏ9 வீதியூடாக வன்னிப் பிரதேசத்துக்கு சென்று வந்தன.

இந்தத் திடீர் மாற்றத்துக்கான, புதிய ஏற்பாட்டுக்கான காரணம் எதுவும் நிச்சயமாகத் தெரியாது. உத்தியோகப் பூர்பமாகத் தெரிவிக்கப்படவில்லை.

போரினால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான வன்னி மக்கள் இப்போதுதான் தமது பகுதிகளில் மீளக் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் தமது சொந்தத்தில் தொழில்செய்து தமது அன்றாட உணவுத் தேவையை தானும் நிறைவேற்றக் கூடிய தள நிலைமை இன்னும் உண்டாகவில்லை; உருவாக்கப்படவில்லை.

அதனால், அவர்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளை ஐக்கியநாடுகள் சபையின் தொண்டு நிறு வனங்களே பெரிய அளவில் செய்து வருகின்றன. உண வுத் தேவையைப் பூர்த்தி செய்தல், குடி தண்ணீர் விநி யோகம், தற்காலிக வீடுகளை அமைத்தல், மலசல கூடங்களை அமைத்தல் உட்பட அத்தியாவசியத் தொண்டுகளை ஐ.நா. தொண்டு நிறுவனங்களே களைப் பின்றி, சலிப்பின்றிச் செய்துவருகின்றன.

இத்தகைய ஒரு கட்டத்தில், சந்தர்ப்பத்தில், ஐ.நா.தொண்டு நிறுவனங்கள் மீள்குடியமர்ந்த மக்க ளுக்கு நல்கும் நயமான சேவைகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில், அவற்றின் வாகனங்கள் ஏ9 வீதி யூடாக செல்வதற்குத் திடீரென ஒரு வார காலத்திற்கு முன்னர் வாகன அனுமதி முறை ஜனாதிபதி செயலணிக் குழுவிடமிருந்து மாற்றப்பட்டதன் பின்னணி என்ன? அதற்கான காரணம் வெளிப்படுத்தப்படவில்லை.

அரசாங்கம் இவ்வருடத்திற்குரிய வரவு செலவுத் திட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கே ஆகக் கூடுதல் நிதியை ஒதுக்கிய அதேவேளை, ஒப்பீட்டளவில் மீள் குடியேற்றம் மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்கு மிக மிகக் குறைந்த அளவிலேயே நிதியை ஒதுக்கியுள்ளது!

இத்தகைய பின்புலத்தில், அரசாங்கத்தினால் நடத் தப்பட்ட போரினால் இடம்பெயர்ந்து பல அவலங்கள், துன்பங்கள் சோதனைகளின் பின்னர் மீளக்குடியமர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும் புவதற்கு உதவ வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசாங் கத்தையே சார்ந்தது. ஆனால் அரசின் வரவு செலவில் இந்த மக்களின் சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதித்தொகை ""பச்சடி போடவும்'' போதாது!

இத்தகைய ஒரு சூழ்நிலையில், மீளக்குடியமர்ந்த மக் களுக்குத் தான் செய்ய வேண்டிய கடமை என்று உணர்ந்து, ஐ.நா.நிறுவனங்கள் செய்யும் மனிதாபி மானப் பணிகளை ஸ்தம்பிதம் அடையச் செய்ய வேண் டும் என்ற உள்நோக்கத்துடனேயே அரசு செயற்படு கிறதோ என்று சந்தேகம் கொள்ளவைக்கிறது!

தமது வாழ்க்கையைத் தொலைத்து, அதனை மீளக்கட்டியெழுப்பி முந்திய நிலைக்கு வருவதற்கு உரிய நிதி வளமோ, ஏனைய ஆதார வசதிகள் தானும் இன்றி அல்லாடும் மீளக்குடியமர்ந்த வன்னித் தமிழ் மக்களுக்குக் கிடைக்கும் உதவிகளையும் தட்டிப் பறிக்கும் செயற்பாடாகவே அரசின் இந்த நடவடிக்கை யைப் பார்க்க முடிகிறது. வெறும் நிர்வாக நடைமுறை மாற்றம் என்று அரசின் திடீர் செயற்பாட்டை தர்க்க ரீதி

யாகவேனும் கருத முடியாது!

அவ்வாறு இல்லை என்றால்

ஐ.நா.சபையின் செயலாளர் நாயகத்துக்கு இலங்கை விவகாரம் குறித்து ஆலோசனை வழங்குவதற்கு நிபு ணர் குழு நியமிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தலை நகர் கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், கொடும்பாவி எரிப்புகள், முற்றுகைகள், உண்ணா விரதம் என்பனவற்றின் சங்கிலித் தொடரான கைங் கரியங்களின் ஓர் அம்சமோ இது என்ற ஐயுறவையும் தொக்கி நிற்கச் செய்கிறது.

இல்லையேல், அல்லற்பட்டு, அல்லற்பட்டு வாழ்க் கையின் கடைசி எல்லைக்குள் சென்றுவிட்ட வன்னித் தமிழ் மக்களுக்கு அரசு செய்யாத, அருமருந்தன்ன உதவி களை வழங்கிவரும் ஐ.நா.தொண்டு நிறுவனங்களை வழியை தடுத்துக் குற்றி போடுவதற்கு உண்டான அவ சியமும், அவசரமும்தான் என்ன? இதற்குப் பதில் தெரி யாத இருளில் வன்னித் தமிழ் மக்கள் மூழ்கடிக்கப்பட் டுள்ளார்கள்!

பகை நட்பாக் கொண்டொழுகும் பண்புடையாளன் றகைமைக்கட் டங்கிற் றுலகு என்கிறார் வள்ளுவர்.

பகைவரையும் நண்பராக்கிக் கொண்டு செயற்படும் குணம் உடையவனுடைய பெருந்தன்மையில் தான் உலக நலம் அடங்கி உள்ளது.

நன்றி - உதயனிணையம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.