Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சனிக்கிழமை இரவு இனந்தெரியாத ஆயுதக்குழு அம்பாறையில் கிராமவாசிகள் மீது தாக்குதல் ‐ கிராமவாசிகள் கிராமங்களைவிட்டு வெளியேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை இரவு இனந்தெரியாத ஆயுதக்குழு அம்பாறையில் கிராமவாசிகள் மீது தாக்குதல் ‐ கிராமவாசிகள் கிராமங்களைவிட்டு வெளியேற்றம்

19 July 10 01:39 am (BST)

சனிக்கிழமை இரவு இனந்தெரியாத ஆயுதக்குழு ஒன்று அம்பாறை மாவட்டத்தின் கிராமவாசிகள் சிலரைத் தாக்கியதை அடுத்து அக்கிராமவாசிகள் தங்கள் கிராமங்களைவிட்டு வெளியேறி உள்ளார்கள். பொத்துவில், பாணம, ராகம்வெல ஆகிய கிராமங்களுள் நுழைந்த இந்த ஆயுதக்குழுவினர் கிராமவாசிகளைத் தாக்கியதோடு அங்கிருந்த வீடுகளையும் சேதப்படுத்தினர். ராகம்வெலவில் உள்ள வாலுகாராம விகாரையும் தாக்குதலுக்குள்ளானது.

தாக்குதலுக்குள்ளானவர்களில் உணவட்டுணே விஜயவன்ச தேரோவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரவு ஒரு மணியளவில் எங்களை எழுப்பிய ஆயுததாரிகள் விகாரையை விட்டு ஓடிவிடுமாறு எம்மை அச்சுறுத்தித் தாக்கினர் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆயுததாரிகளின் தாக்குதலுக்குள்ளான பாணமவைச் சேர்ந்த முதியான்சலாகே பண்டார சொல்கிறார் நள்ளிரவில் வந்த ஆயுததாரிகள் கறுப்புத் துணியினால் தமது முகத்தை மூடி மறைத்திருந்தனர். எம்மை வீட்டுக்கு வெளியே அழைத்த அவர்கள் எம்மைக் கொன்றுவிடப் போவதாக அச்சுறுத்தினர். அவர்களிடம் இரண்டு ரி 56 துப்பாக்கிகள் இருந்தன. நான் ஒருவாறு அங்கிருந்து தப்பி வந்து விட்டேன். வரும்போது திரும்பிப் பார்த்த போது அவர்கள் எங்கும் நெருப்பு வைத்துக் கொண்டிருந்தார்கள்.

உபாலி அபேநாயக்கா என்ற ஓய்வுபெற்ற படையதிகாரி ஒருவரும் தாக்குதலுக்குள்ளானார். அவர்கள் எங்களைக் கொல்ல வந்தார்கள். நாங்கள் ஒருவாறு அங்கிருந்து தப்பித்தோம். நாங்கள் அங்கிருந்து தப்பி வந்து விசேட அதிரடிப்படை காவலரணில் முறையிட்டோம். ஆனால் அப்பகுதிக்கு செல்வதற்கான அனுமதி தமக்கு இல்லையென்று கூறி அவர்கள் மறுத்து விட்டார்கள்.

இதேவேளை ஊடகவியலாளர்களை அப்பகுதிக்குச் செல்ல ராகம்வெல பொலிஸார் அனுமதி வழங்கவில்லை என உள்ளுர் ஊடகவியலாளர் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=27404&cat=1

உண்ணா விரதத்தை முடிச்சுப் போட்டு வீரவன்சே அம்பாறைக்குப் போயிருக்கிறார். பேரினவாதம் தன்னைக் காப்பாற்றுவதற்கு சிங்களவரையும் கொல்லும். :D

கிளிநொச்சியில் முகமூடி அணிந்தோர் இளம் பெண்கள் மீது தாக்குதல்

கிளிநொச்சியில் விஸ்வமடு மற்றும் தர்மபுரம் பகுதிகளில் இனந்தெரியாத குழுவால் இளம் பெண்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக முறையிடப்பட்டுள்ளது.கடந்த ஒருவாரத்தில் இப்பகுதிகளில் இரு சம்பவங்களில் குடும்பப் பெண்ணொருவர் உட்பட இருவர் தாக்கப்பட்டுள்ளனர்.

தர்மபுரம் கிழக்கு கிராம சேவையாளரின் உதவியாளராகவுள்ள விஸ்வமடுவைச் சேர்ந்த 24 வயதான இளம் பெண்ணொருவர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் தாக்கப்பட்டுள்ளார்.முகமூடிகள் அணிந்து முச்சக்கரவண்டியொன்றில் விஸ்வமடுவிலுள்ள இவரது வீட்டுக்கு வந்த இனந்தெரியாத இளைஞர் குழுவொன்றே இந்தப் பெண்ணைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளது.

உறவினர்கள் சத்தமிட்டதைத் தொடர்ந்து இக்குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இவர்களின் தாக்குதலில் இந்தப் பெண் தலையில் படுகாயமடைந்துள்ளார்.நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மற்றைய சம்பவத்தில் கட்டைக்காடு அ.த.க.பாடசாலையில்தொண்டராசிரியராகப் பணியாற்றும் 26 வயதுடைய குடும்பப் பெண்ணொருவர் தாக்கப்பட்டிருக்கின்றார்.

முன்னைய பெண் தாக்கப்பட்ட அதே பாணியிலேயே இந்தப் பெண்ணும் தாக்கப்பட்டிருக்கின்றார். முகமூடி அணிந்த நிலையில் முச்சக்கரவண்டியில் வந்த நான்கு இளைஞர்கள் முச்சக்கரவண்டியை விட்டு இறங்கியதுடன், இந்தப் பெண்ணைத் தாக்கியதாகவும் அவ்வேளை இவரது வீட்டில் நின்ற கணவனும் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.இந்தப் பெண்கள் தாக்கப்பட்ட போதிலும் இவர்கள் அணிந்திருந்த தங்க ஆபரணங்களோ,உøடமைகளோ அபகரிக்கப்படவில்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

[ தினக்குரல் ] - [ Jul 20, 2010 04:00 GMT ]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.