Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் இருந்து ஐ.நா முன்றல் வரை நடைபயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் இருந்து ஐ.நா முன்றல் வரை நடைபயணம்

திகதி: 19.07.2010 // தமிழீழம்

பிரித்தானியாவில் இருந்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா முன்றல்வரை நடைபயணம் ஒன்றை மேற்கொள்ள இருக்கிறார் சிவந்தன். பிரித்தானியாவில் இருந்து கால்நடைப் பயணமாக சுவிஸ், ஜெனீவாவரை செல்ல சிவந்தன் என்ற இளைஞர் முன்வந்துள்ளார்.

23ம் திகதி லண்டனில் நடைபெறும் இரவு நேரப் போராட்ட முடிவில் இந்தக் கால் நடைப் பயணம் ஆரம்பிக்க இருப்பதாக அறியப்படுகிறது. சுமார் 12 நாட்கள் தொடர்பயணம் மேற்கொள்ள இருக்கும் இவர் 6ம் திகதி ஜெனீவாசென்று அங்கு ஐ.நா முன்றலில் நடைபெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்கேற்று, ஐ.நா பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுவைக் கையளிக்க உள்ளார்.

போராளிகளின் விடுதலை குறித்து ஐ.நா துரித நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மற்றும் இன அழிப்பு தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கக்கோரியும், இந்த நடைபயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

1983ம் வருடம் ஜூலை 23ம் நாள் சிங்கள காடையர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டு, சொத்துக்கள் சூறையாடப்பட்ட நாள். ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் ரத்தவெள்ளத்தில் மிதந்த நாள் கறுப்பு ஜூலை ஆகும். தமிழன் ரத்தம் குடிக்க புறப்பட்ட சிங்கள காடையரின் அடக்குமுறைகளை உலகிற்கு நாம் பறைசாற்றும் நாள் கறுப்பு ஜூலை.

எனவே பிரித்தானியா வாழ் மக்களே அன்று இரவு 9.00 மணிக்கு நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களும் கலந்துகொள்ள வேண்டும். அத்தோடு அங்கு இளையோர்களால் ஆரம்பிக்கப்பட இருக்கும் நடை பயணத்திற்கும் மக்கள் தமது ஆதரவை வழங்கவேண்டும்.

ஜூலையில் கொல்லப்பட்ட அனைத்து தமிழர்களின் ஆத்மசாந்திக்காக நாம் ஒன்றுகூடுவோம்!

sankathi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Jul 22, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / யாதவன்

சிவந்தனின் நடைப்பயணம் எமது மக்கள் மீது இன அழிப்பை உறுதிப்படுத்தும்

பிரித்தானியாவில் இருந்து ஐ.நாவை நோக்கி இடம் பெறவுள்ள சிவந்தனின் நடைப்பயணம் தாயகத்தில் எமது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பை உறுதிப்படுத்தும் மற்றொரு சான்றாக அமையவுள்ளது.

எனவே, இந்நடைப்பயணத்திற்கு புலம் பெயர் தமிழ் மக்கள் அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடுகடந்த தமிழீழ அரசின் லண்டன் முதன்மைப் பிரதிநிதியுமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"கடந்த வருடம் மே மாதம் வன்னியில் இடம் பெற்ற போரின்போது சிறிலங்கா அரச படைகள் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி மக்களை வகைதொகையின்றி கொன்று குவித்தது. இதற்கு இந்தியா உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் ஒத்துழைப்பை வழங்கியிருந்தன.

எனினும் தனது நாட்டில் இன்னொரு இனத்தின் மீது தாக்குதல் நடத்தி அவ்வினத்தை அழித்தது அப்பட்டமான ஒரு இன அழிப்பாகும். இதற்கான முழுப்பொறுப்பும் முப்படைகளின் தளபதியாக உள்ள ஐனாதிபதி இராஐபக்சவையே சாரும். இந்த இனவழிப்பு மற்றும் போர்க்குற்றம் போன்றவற்றுக்கான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற குரல்கள் புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமின்றி மனிதாபிமான மற்றும் மனித உரிமைகளுக்கான சர்வதேச அமைப்புகளிடமிருந்தும் பரவலாக எழுந்து வருகின்றன.

எனினும் ஐ.நா உட்பட சர்வதேச சமுகம் இந்த போர்க்குற்ற விசாரணைகள் தொடர்ப்பில் இறுக்கமான நிலைப்பாடுகளை எடுக்காது மென்போக்கில் செயற்பட்டு வருகின்றன. எனவே போர்க்குற்ற விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சர்வதேச சமுகம் மற்றும் ஐ.நாவிடம் தொடர்ந்து புலம் பெயர் தமிழ் மக்கள் குரல் கொடுக்க வேண்டியது மிக அவசியமானதாகும்.

இந்நிலையில் பிரித்தானியாவில் வசித்து வரும் துடிப்புள்ள இளைஞனான சிவந்தன் சிறிலங்காவில் தமிழர் தாயகத்தில் இடம் பெற்ற தமிழின அழிப்பைக் கண்டித்தும் இதற்கு உடனடியாக விசாரணை நடத்தி இன அழிப்பில் ஈடுபட்டவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தும் எதிர்வரும் 23 ஆம் நாள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு லண்டன் மத்திய பகுதியில் இருந்து nஐனிவாவில் உள்ள ஐ.நா. தலைமையகத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இறுதியில் அவர் அங்கு மகஐர் ஒன்றையும் கையளிக்கவுள்ளார்.

இந்நடைப்பபயணம் எமது தாயகத்தில் இடம் பெற்ற இன அழிப்பை சர்வதேசத்திற்கு உறுதிப்படுத்தும் மற்றொரு சான்றாக அமையவுள்ளது. இன்றைய காலகட்டத்தின் தேவையை அறிந்து அவர் எடுத்திருக்கும் இம்முயற்சி வரவேற்கப்பட வேண்டியது மாத்திரமின்றி அனைத்து

புலம் பெயர் தமிழ் மக்களும் ஆதரவு வழங்க வேண்டியதுமாகும்.

இவர் நடைப்பயணம் தொடர்பான திட்டத்தை என்னிடம் முன்வைத்தபோது நான் அவருக்கு தேவையான ஆலோசனையையும் ஆதரவையும் வழங்கியிருந்தேன். எமது மக்கள் இன்னும் சளைத்துவிடவில்லை எமது இனத்திற்காக தொடர்ந்து போராடும் இனமாகவும் இலட்சியத்தை வென்றெடுக்கும் இனமாகவும் தொடர்ந்து செயற்படும் என்பதையே இவரின் நடைப்பயணம் கோடிட்டுக்காட்டும் என்பதில் ஐயமில்லை.

இவர் எமது தமிழீழ போராட்டத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இதனால் லண்டனில் நடைபெற்ற பல போராட்டங்கள், கவனயீர்ப்பு நிகழ்வுகள் மற்றும் அரங்க நிகழ்வுகளிலும் கலந்து கொண்டவர். எனவே இவரின் இந்த முயற்சி போற்றத்தக்கது.

தம்பி சிவந்தனின் நடைப்பயணம் வெற்றி பெற்று அவரின் நோக்கம் நிறைவேற எனது வாழ்த்துக்கள்" என எஸ்.ஜெயானந்தமூர்த்தி விடுத்துள்ள அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் இருந்து ஐ.நாவை நோக்கி நடை பயணம்

25504116.png

போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தியும், தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும், பிரித்தானியாவில் இருந்து ஜி.சிவந்தன் என்பவர் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நடை பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்.

கறுப்பு ஜூலையை முன்னிட்டு எதிர்வரும் 23ஆம் நாள் இரவு 9:00 மணி முதல் 11:30 மணிவரை பிரித்தானியப் பிரதமர் இல்லத்தை மையப்படுத்தி நடைபெறவுள்ள இரவுநேரப் போராட்டத்தைத் தொடர்ந்து இவரது நடை பயணம் ஆரம்பமாகவுள்ளது.

மத்திய லண்டனில் இருந்து நடை பயணத்தை ஆரம்பிக்கும் சிவந்தன், ஏ-3 நெடுஞ்சாலையூடாக நடந்து போட்ஸ்மவுத் கடற்கரையைச் சென்றடைந்து, அங்கிருந்து பிரான்சின் கடற்கரையான கலையை அடைந்த பின்னர், ஜெனீவா நோக்கி நடந்துசெல்ல இருக்கின்றார்.

இவரது நடை பயணத்திற்கு சுமார் இரண்டு வாரங்கள் எடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் நாள் ஜெனீவாவை சென்றடைந்து, ஐ.நா மனித உரிமைகள் சபையில் மனுக் கையளிக்கப்பட இருக்கின்றது.

சிவந்தனின் நடை பயணத்தின்போது அந்தந்த நாட்டு மக்களிற்கு அவர்களின் மொழியில் அச்சிடப்பட்ட அவரது கோரிக்கைகள், மற்றும் ஈழத்தமிழ் மக்களின் நிலை பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படவுள்ளன.

அந்தப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகரசபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் போன்ற சமூகத் தலைவர்களுனான சந்திப்புக்களும் இடம்பெறவுள்ளன. அத்துடன், சிவந்தன் மேற்கொள்ளும் இந்த நடை பயணத்தில் தத்தமது பிரதேசங்களில் தமிழ் மக்களும் இணைந்து நடக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

மாற்றுமொழி ஊடகங்களுக்கும் இது பற்றி அறிவிப்பதுடன், தமிழ் ஊடகங்களும் இந்த நடை பயணத்திற்கும், ஆங்காங்கே தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் பணியிலும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை, மற்றும் தமிழ் இளையோம் அமைப்பு போன்றன கேட்டுள்ளன.

இதேபோன்று பிரான்ஸ், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் மக்களும் இந்த நடை பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், சிவந்தனுடன் இணைந்து நடப்பதன் ஊடாக தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஐரோப்பிய மக்கள் முன்னலையில் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் எனவும் இந்த நடை பயணத்தை ஏனைய நாடுகளில் ஒழுங்கு செய்துள்ள ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.