Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் இருந்து சென்னைக்கு நூதன முறையில் தங்கம் கடத்திய குருவிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 20, ஜூலை 2010 (22:27 IST)

இலங்கையில் இருந்து சென்னைக்கு நூதன முறையில் தங்கம் கடத்திய குருவிகள்

கொழும்பிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு இன்று மிகின் லங்கா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த சிலர் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் உதவியுடன் வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் எட்டு பேர் மீது அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் சோதனை நடத்திய போது, எதுவும் சிக்கவில்லை.

ஆனாலும் அவர்கள் தங்கம், வைரத்தை கடத்தி வந்திருக்கிறார்கள் என்று அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு ஆசனவாயில் தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

பின்பு ஏழு பேரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, இனிமா கொடுத்து, உள்ளே வைத்திருந்த தங்க பிஸ்கட்களை எடுத்தனர்.

பிடிபட்ட அனைவரும் ராமநாதபுரம், சென்னை, அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள். பிடிபட்டு விசாரணை நடத்திய எட்டு பேரில் ஒருவர் தப்பிவிட்டாரெனவும் கூறப்படுகிறது.

இவர்களிடம் இருந்து 89,96,920 மதிப்புள்ள சுமார் 4 864 கிராம் தங்க பிஸ்கட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அளவு தங்கம் பிடிபடுவது திருச்சி விமான நிலைய வரலாற்றில் இது முதன் முறை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் குருவியாக செயல்பட்டுள்ளனர் என்றும், இவர்கள் தங்கம் வைத்திருப்பது மற்றவர்களுக்கு தெரியாது எனவும் சுங்கப்பிரிவு கமீஷனர் சிவசங்கரன், துணை கமீஷனர் ஹேமா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நக்கீரன்

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத்தெரிய இந்தியாவில் எண்பதுகளில் அண்ணாநகர்ப்பிரதேசத்தில் அம்பிகைபாலன் எனம் இலங்கைத்தமிழரை போதைப்பொருள் கடத்துபவர்கள் மத்தியில் லொறி என அழைப்பதைக் கௌ;விப்பட்டிருக்கிறேன். காரணம் சென்னையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஆசனவாயிலில் போதைப்பொருளை மறைத்துவைத்து கொண்டுசெல்லக்கூடியவர்களில் அதிகபட்சமான அளவில் கொண்டுபோகக்கூடியவர் என அறிந்தேன். இவர் சென்னை அண்ணாநகரில் அப்போது வசித்த கொட்டடியைச்சேர்ந்த கோபால் என்பவருடன் அடிக்கடி கண்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத்தெரிய இந்தியாவில் எண்பதுகளில் அண்ணாநகர்ப்பிரதேசத்தில் அம்பிகைபாலன் எனம் இலங்கைத்தமிழரை போதைப்பொருள் கடத்துபவர்கள் மத்தியில் லொறி என அழைப்பதைக் கௌ;விப்பட்டிருக்கிறேன். காரணம் சென்னையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஆசனவாயிலில் போதைப்பொருளை மறைத்துவைத்து கொண்டுசெல்லக்கூடியவர்களில் அதிகபட்சமான அளவில் கொண்டுபோகக்கூடியவர் என அறிந்தேன். இவர் சென்னை அண்ணாநகரில் அப்போது வசித்த கொட்டடியைச்சேர்ந்த கோபால் என்பவருடன் அடிக்கடி கண்டிருக்கிறேன்.

இவர்கள் அவரின் மாணவர்களாக இருக்க கூடும். :lol::lol:

செவ்வாய்க்கிழமை, 20, ஜூலை 2010 (22:27 IST)

இலங்கையில் இருந்து சென்னைக்கு நூதன முறையில் தங்கம் கடத்திய குருவிகள்

கொழும்பிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு இன்று மிகின் லங்கா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த சிலர் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் உதவியுடன் வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் எட்டு பேர் மீது அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் சோதனை நடத்திய போது, எதுவும் சிக்கவில்லை.

ஆனாலும் அவர்கள் தங்கம், வைரத்தை கடத்தி வந்திருக்கிறார்கள் என்று அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு ஆசனவாயில் தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

பின்பு ஏழு பேரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, இனிமா கொடுத்து, உள்ளே வைத்திருந்த தங்க பிஸ்கட்களை எடுத்தனர்.

பிடிபட்ட அனைவரும் ராமநாதபுரம், சென்னை, அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள். பிடிபட்டு விசாரணை நடத்திய எட்டு பேரில் ஒருவர் தப்பிவிட்டாரெனவும் கூறப்படுகிறது.

இவர்களிடம் இருந்து 89,96,920 மதிப்புள்ள சுமார் 4 864 கிராம் தங்க பிஸ்கட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அளவு தங்கம் பிடிபடுவது திருச்சி விமான நிலைய வரலாற்றில் இது முதன் முறை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் குருவியாக செயல்பட்டுள்ளனர் என்றும், இவர்கள் தங்கம் வைத்திருப்பது மற்றவர்களுக்கு தெரியாது எனவும் சுங்கப்பிரிவு கமீஷனர் சிவசங்கரன், துணை கமீஷனர் ஹேமா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

குருவிகளுக்கு புளொக் எழுதிறதை விட்டிட்டு இதென்னப்பா புது வேலை? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பின்பு ஏழு பேரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, இனிமா கொடுத்து, உள்ளே வைத்திருந்த தங்க பிஸ்கட்களை எடுத்தனர்.

இவர்களிடம் இருந்து 89,96,920 மதிப்புள்ள சுமார் 4 864 கிராம் தங்க பிஸ்கட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அளவு தங்கம் பிடிபடுவது திருச்சி விமான நிலைய வரலாற்றில் இது முதன் முறை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

5 கிலோ தங்கத்தை.... இனிமா குடுத்து எடுப்பதென்றால்...... vogel-strauss-008.gif

இவர்கள் குருவிகள் அல்ல.... தீக்கோழிகள். vogel-strauss-001-82x150.gif

.

இலங்கையின் வளம் இப்படியும் கொள்ளையடிக்கப்படுகிறதா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.