Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலையைக் கவசமாக்கும் இனப் படுகொலையாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலையைக் கவசமாக்கும் இனப் படுகொலையாளர்கள்

img1100724061_1_1.jpg

தனது நாட்டு மக்களின் மீதே கனரக ஆயுதங்களையும், ஒயிட் பாஸ்பரஸ், கிளஸ்டர் பாம் போன்ற சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பேரழிவு ஆயுதங்களையும் பயன்படுத்தி இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த சிறிலங்க அரசு, தன் மீது படிந்துள்ள இரத்தக் கறையையும், சதைத் துண்டுகளையும் மறைக்க முடியாமல், கலையையும், கலைஞர்களையும் ‘அமைதி’த் திரையாக்க முயற்சித்து வருகிறது.

இலங்கையில் அமைதி நிலவுகிறது என்றும், எந்த அச்சுறுத்தலுமின்றி சுற்றலா பயணிகள் வரலாம் என்றும், வணிக மேம்பாட்டிற்கும், முதலீட்டிற்கும் மிகச் சிறந்த நாடு என்றும் உலக நாடுகளுக்கு ஒரு பொய்த் தோற்றம் காட்ட, சிறிலங்க அரசும், பாலிவுட் திரையுலக அமைப்பான இந்திய சர்வதேச திரைப்பட அகாதமி (ஐஃபா) அமைப்பும், இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பும் (ஃபிக்கி) இணைந்து கடந்த ஜூன் மாதம் 3, 4, 5ஆம் தேதிகளில் கொழும்புவில் மிகப் பிரம்மாண்டமாக ஒரு திரைப்பட விழாவையும், அதனைத் தொடர்ந்து ஒரு வணிக மாநாட்டையும், மூன்றாவது நாள் நட்சத்திர கிரிக்கெட் போட்டியையும் நடத்தின.

ஆனால், சிறிலங்க அரசும், அதன் ‘இந்திய நண்பர்’களும் மிகத் தீவிரமாக திட்டமிட்டு, இனப் படுகொலையை மறைக்க அரங்கேற்றிய அந்த நாடகம், தமிழினத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பாலும், தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு விடுத்த கடும் எதிர்ப்பாலும் படுதோல்வியில் முடிந்தது. இந்தி திரைப்பட உலகம், டெல்லி அரசின் ஆதரவு என்று இருந்தும், தமிழ்நாட்டில் இருந்து எழுந்த ஒட்டுமொத்த எதிர்ப்பு அவர்களின் விளம்பரத் திட்டத்தை முறியடித்ததில் மிகவும் கலங்கிவிட்டது சிறிலங்க அரசு.

அதன் வெளிப்பாடுதான் தமிழ்த் திரையுலகம் ஒன்றுபட்டு நின்று காட்டிவரும் எதிர்ப்பை, இலங்கையில் சென்று படிப்பிடிப்பில் கலந்துகொண்டால் தடை என்ற அந்த எதிர்ப்பை முறியடிக்க தமிழ்த் திரையுலக நட்சத்திரங்களை இலங்கைக்கு அரசு விருந்தினர்களாக அழைத்து, அவர்களை தமிழர் பகுதிகளுக்கு (முழு இராணுவப் பாதுகாப்புடன்) அழைத்துச் சென்று, அங்கே கவனிப்பாரற்றுக் கிடக்கும் தமிழ் மக்களுக்கு ‘சேவை’ புரிய உதவி வருகிறது.

சிறிலங்க அரசு தமிழ்நாட்டிலுள்ள தங்களின் ‘தொடர்பு’களின் மூலம் இந்த உடைப்புச் சதியை நிறைவேற்ற முற்பட்டிருப்பதன் வெளிப்பாடே நடிகை அசின் யாழ்ப்பாணத்திற்கும், வன்னிக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்கு சேவை செய்ய ஈடுபடுத்தப்பட்ட நாடகமாகும்.

கலைஞர்களைப் பயன்படுத்தி மனிதாபிமான நாடகம்

மும்பை கலைத் துறையினரைப் பயன்படுத்தி கொழும்புவில் அரங்கேற்றிய ஐஃபா நாடகமும், ஃபிக்கியின் துணையுடன் நடத்திய வணிக மாநாடும் படுதோல்வி கண்ட நிலையில், இப்போது தமிழ்த் திரைப்படக் கலைஞர்களைக் கொண்டு தமிழர் பகுதிகளில் மனிதாபிமான நாடகம் நடத்தத் திட்டமிட்டுள்ளது சிறிலங்க அரசு.

தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு விதித்துள்ள தடையைத் தாண்டி, 'ரெடி' என்ற இந்திப் படத்தில் நடிக்க இனப் படுகொலை சிறிலங்க அரசின் திடீர் தூதரான சல்மான் கானுடன் இலங்கைக்குச் சென்ற நடிகை அசினுக்கு எதிராக தமிழ்நாட்டில் உருவான எதிர்ப்பையே தங்கள் மனிதாபிமான நாடகத்திற்கு மிக அழகாக பயன்படுத்திக்கொண்டுள்ளது சிறிலங்க அரசு.

img1100724061_1_2.jpg

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கும், வன்னிக்கும் சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தியுடன் இராணுவ ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்ட நடிகை அசின் அங்கு கண் சிகிச்சை செய்யப்பட்ட தமிழ் நோயாளிகளைப் பார்த்துப் பேசிய காட்சிகள் ஊடகங்களில் வெளியிட்டு, அவர் வாயால் சிறிலங்க அரசின் மனிதநேயத்தை பாராட்டச் சொல்லியுள்ளது.

4,000 தமிழர்களுக்கு கண் பார்வையளிக்கும் சிகிச்சை (கண் பார்வையை பறித்தது யாரையா?) அளிக்கும் திட்டத்தின் கீழ் 3,000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு கண் சிகிச்சை தேவைப்படுவதாகவும், அந்த சேவையைத் தான் செய்ய சிறிலங்க அரசும், அதன் கலைத் தூதர் சல்மான் கானும் உதவியதாகவும் அசின் கூறினார். அவர் சில ஊடகங்களுக்குப் பேட்டியும் அளித்துள்ளார்.

இலங்கையில் நடப்பதென்ன என்பதை அறியாத எவரும் அசினின் ‘சேவை’யைக் கண்டும், அதற்கு மின்னல் வேகத்தில் ஏற்பாடு செய்துக் கொடுத்த சிறிலங்க அரசையும் பாராட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

“நான் நடித்த பல படங்கள் தமிழ் மொழிப் படங்களே, எனவே தமிழ் சமூதாயத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேன். எனவே நாமல் ராஜபக்சவை (அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்) தொடர்பு கொண்டு எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். போர் நடந்த பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்தேன். அதன் பிறகுதான் கண் சிகிச்சை முகாம் நடத்தலாம் என்ற யோசனை எனக்குத் தோன்றியது. சல்மான் கானின் மனிதாபிமான (?) அறக்கட்டளையின் உதவியுடன் 5 மருத்துவர்களையும், தேவையான கருவிகளையும், கண் அறுவை சிகிச்சைக்குப் பின் பொருத்தக்கூடிய குவியாடிகளையும் இந்தியாவில் இருந்து வரச்செய்தேன். அதன் பிறகு வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும் கண் சிகிச்சை முகாம் நடத்தினோம்” என்று ஊடகங்கள் பலவற்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

எத்தனை வேகத்தில் இந்த மனிதாபிமானப் பணிகள் நடந்தேறியுள்ளன! இது தெரியாமல் அல்லவா உலக நாடுகள் சிறிலங்க அரசைக் கண்டிக்கின்றன? தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி ஆயிரக்கணக்கில் தன் நாட்டு மக்களையே கொன்று குவிததாலும், அதன் பிறகு இந்த அளவிற்கு எந்த அரசு மனிதாபிமானத்தை கொட்டும்? எனவே அகமகிழந்து போன அசின், சிறிலங்க அரசைப் பாராட்டுகிறார். அங்கே (தமிழ்நாட்டில்) உட்கார்ந்து கொண்டு விமர்சிப்பவர்கள் என்ன செய்தார்கள் என்றும் கேட்கிறார்!

ஆனால், வன்னியின் மற்றொரு இடத்தில் என்ன நடைபெறுகிறது? ஓராண்டுக் காலத்திற்கு மேல் கடும் போர் நடந்த அந்தப் பகுதியில் தமிழர்கள் வாழ்ந்திருந்த வீடுகள் அனைத்தும் சிங்கள படையினரின் குண்டு வீச்சால் தரைமட்டமாகி, ஒண்டுவதற்குக் கூட ஒரிடமின்றி, அங்கு மறுகுடியமர்த்தம் செய்யப்பட்ட மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு 5 கூரைத் தகடுகளையும், சிமெண்ட் வாங்க 5 ஆயிரம் ரூபாய் பணத்தையும் (தகரம் இந்தியா கொடுத்தது, நிதியுதவி அளித்தது இண்டர்னேஷனர் இம்மிகிரேஷன் ஆர்கனைஷேசன் என்கிற பன்னாட்டு அமைப்பு) மட்டும் தந்துவிட்டு வேறு எந்த உதவியும் செய்யாமல் விட்டுவிட்டது சிங்கள அரசு. நிர்க்கதியாக விடப்பட்ட அந்த மக்களுக்கு உதவ அங்கு பணியாற்றிவரும் பன்னாட்டுத் தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு நிதி வருவதற்கு ராஜபக்ச அரசு அனுமதி மறுத்தது. இதனால் ஐ.நா.வின் தலைமையில் நடந்த மறுவாழ்வுப் பணிகள் முடங்கின. அந்த அமைப்புகளுக்கு நிதி வருவதைத் தடுத்தவர் யார் தெரியுமா? பசில் ராஜபக்ச!

img1100724061_2_1.jpg

தமிழர்கள் குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றிவரும் இந்த தொண்டு அமைப்புகளுக்கு ஒரு மாத அனுமதியை மட்டுமே வழங்குகிறது பசில் ராஜபக்ச துறை! ஒவ்வொரு மாதமும் அவர்கள் தங்கள் பணியை நீட்டித்துக் கொள்ள சிறிலங்க அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும், அதற்காக அலைய வேண்டும், மறு அனுமதியைப் பெறுவதில் ஆகும் தாமதம் காரணமாக அவர்களின் சேவை பாதிக்கப்படுகிறது. இது இலங்கைச் செய்தி!

ஆனால் சிறிலங்க அரசு மின்னல் வேகத்தில் அசினுக்கு தேவையான அனைத்தையும் செய்கிறது. மனிதாபிமான ஸ்ட்ண்ட் என்பது இதுதான்! இது அசின் போன்ற நடிகைக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இங்குள்ள தமிழ் ஆண் நடிகர்களுக்கு புரிந்திருக்கிறதா என்றால், அது இல்லை. “கலை மக்களை இணைக்கும் பாலம்” என்றும், கலைஞர்கள் அப்படிப்பட்ட பணிகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இப்படிக்கூறும் இவர்கள் போர் நடந்த நேரத்தில் அந்தப் பணி செய்ய தமிழர் பகுதிகளுக்கு போக சிறிலங்க அரசிடம் அனுமதி கேட்டிருந்தால் தெரிந்திருக்கும் கதை. மனிதர்களை பூண்டோடு அழிக்கும் இடத்தில் மக்களிடையே பாலமா? எங்கே இருக்கிறது சொல், குண்டு வீசி அழித்துவிடுகிறோம் என்று கூறியிருப்பார்கள்.

இலங்கையில் நடக்கும் அவலங்களை செய்திகளாக்கும் அந்நாட்டு (சி்ங்கள) பத்திரிக்கையாளர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள், பேருந்தில் இருந்து இழுத்துப் போட்டு தாக்குகிறார்கள். கொட்டை எழுத்துகளில் செய்தி வருகிறது. ஆனால் நம்ம தமிழ்நாட்டுக் கலைஞர்கள் சிலருக்கு மட்டும் மாபெரும் மனிதாபிமானியாகத் தெரிகிறார் ராஜபக்ச!

img1100724061_2_2.jpg

இது ஏதோ அறியாமல் இவர்கள் பேசுகிறார்கள் என்றெல்லாம் எவரும் கருதமாட்டார்கள். இந்தக் கலைஞர்களின் ஆதங்கமெல்லாம் சம்பாதிக்க கதவு திறக்கிறது, இவர்கள் மனிதாபிமானம் பேசியே அடைத்துவிடுகிறார்களே என்பதுதான். இந்த ‘ஆதங்கத்தை’ மிக நன்றாக புரிந்துகொள்ளும் ராஜபக்ச அரசின் தூதர்கள் விரிக்கும் வலையில் இவர்கள் அப்படியே மயக்குமுற்று விழுகிறார்கள். தங்களின் சம்பாதிக்கும் ஆர்வத்தை இவர்கள் கலை என்கிறார்கள், அதையே தனது படுகொலையை மறைக்கும் கவசமாக்குகிறது சிறிலங்க அரசு. இதற்கு ஒத்துழைக்க அரசுகள், வணிக அமைப்புகள், விழா ஏற்பாடுகள்.

வன்னியில் நடந்த மனிதப் படுகொலையைக் கண்டு மானுடம் துடிக்கிறது. இங்குள்ள கலைஞர்களுக்கு மட்டும் அங்கு சென்று கலைச் சேவையாற்ற நெஞ்சு துடிக்கிறது.

என்ன அவலம் ஏற்பட்டாலும் அதற்கு ஒரு அடையாள போராட்டத்தை நடத்திவிட்டு அப்படியே ஒதுங்கிக் கொண்டு சொந்த நலன் காக்கப் புறப்படும் இந்த கலைஞர்கள், இந்த நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் போது செந்தமிழ்நாட்டுக் கலைஞர்கள் அந்நாளில் வெள்ளையனுக்கு எதிராக எப்படி செயலாற்றினார்கள் என்பதை யாராவது போதனை செய்தால் நல்லது. இவர்கள் திருந்தினாலும் திருந்தலாம்.

அந்த ஏற்பாட்டை செய்யுமா தமிழ்த் திரையுலகம்?

நன்றி : http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1007/24/1100724061_2.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.