Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதிவு மற்றும் சங்கதி ஆகிய இணையத்தளங்கள்அனைத்துலக தொடர்பகத்தின் இணைப்பாளரின் கீழ் இல்லை விடுதலைப் புலிகள் அறிக்கை

Featured Replies

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப்புலிகள்,

தமிழீழம்.

26ஃ07ஃ2010

எமது அன்புக்குரிய தமிழ் மக்களே!

இன்று பல நெருக்கடிகளை சந்தித்து புலம்பெயர் நாடுகளில் ஒற்றுமை முயற்சிகளை மேற்கொள்பவர்களைப்பற்றி ஒரு வருடம் கடந்த நிலையிலும், தாயக மக்களுக்கு எந்த விதமான உதவியையோ அல்லது நம்பிக்கையையோ கொடுக்காதவர்கள் தமது பிழைகளை சுட்டிகாட்டுபவர்களையும் கருத்துச் சொல்பவர்களையும் ஒற்றுமைக்கு உறுதுணையாக செயற்படுபவர்களையும் தேசியத்தின் பேரால் தொடர்ந்து விமர்சிப் பதினூடாக மக்கள் மத்தியில் குழப்பங்களையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கும் நபர்கள் பற்றியும், இணையத்தளங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தவேண்டிய கடமை எமக்கானது என்பதால் விடுதலைப்புலிகளின் அறிக்கைவிடும் மரபையும் மீறி அடிக்கடி அறிக்கைகள்விட வேண்டிய நிலையிலுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தற்போது புலம்பெயர் நாடுகளில் எதிரியால் திட்டமிட்டு இரு குழுக்கள் இயங்குவதாக காட்டக்கூடிய நிலைக்கு சில நபர்களினது எழுத்துக்களும் இணையத்தளங்களும் பத்திரிகைகளும் இயங்குவதால் அதை எதிரி இனம்கண்டு அதைத்தூண்டும் நடவ டிக்கையில் ஈடுபட்டுள்ளான். சிலவற்றுக்கு நேரடியாகவும், சிலவற்றிக்கு அவர்களுக்கு தெரியாமல் அவர்களது நண்பர்கள் ஊடாகவும் இவ்விசம கருத்துக்கள் எதிரியால் தூண்டப்படுகின்றன. இதற்கு பலிக்கடாக்களாக கடைசிவரை களத்தில் நின்று தன்னைத்தானே அழித்துக் கொண்டு வீரச்சாவை தழுவிக்கொண்ட பொறுப்பாளர் திரு.கஸ்ரோ அவர்களும், தற்போது கைதுசெய்யப்பட்டு கைதியாக இருந்துகொண்டு சிங்கள அரசின் கருவியாகச் செயற்படும் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளராக

இருந்த திரு.பத்மநாதன் அவர்களுமேயாவர்.

இந்த இடத்தில் இருவர் பற்றியும் குறிப்பிடவேண்டியுள்ளது. முள்ளிவாய்க்காலில் கடைசித் தோல்விக்கு திரு.கஸ்ரோ அவர்கள் காரணம் என்றும் அதற்காக அவரை தமிழீழ தேசியத் தலைவர் குப்பி கடிக்கும்படி பணித்ததாக இணையங்களில் வெளிவந்த செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதுடன், அவரும் அனைத்துலக தொடர்பகமும் தேசியத் தலைவரின் எண்ணத்திற்கு ஏற்ப எப்படி உழைத்தார்கள் என்பது யாவரும் அறிந்ததே.

இதேபோல் திரு.பத்மநாதன் அவர்களும் தற்போது அரசின் கருவியாக செயற்படுகிறாரே தவிர, முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கு அவரே காரணம் என இணையங்களில் வெளி வருவது உண்மைக்கு புறம்பானது என்பதுடன், கைதுசெய்யப்படும்வரை தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்டவராகவே இருந்தார் என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.

இவர்கள் இருவரையும் மாறி மாறி விமர்சிக்கவிடுவதனூடாக கஸ்ரோ அணி, பத்ம நாதன் அணி என இரண்டுபடுத்துவதில் எதிரி மிகவும் கவனமாகவும் நுட்பமாகவும் செயற்படுத்துகின்றான். கைதியாக வைத்துக்கொண்டு திரு.பத்மநாதனூடாக நாடுக ளில் தொடர்புகளை ஏற்படுத்தி அதை வெளிப்படுத்துவதனூடாகவும், கைதுசெய்யப்பட்டு தடுப்பில் இருந்தபொழுது அனைத்துலகத்துடன் தொடர்புபட்ட போரளிகளை இனம் கண்டு அவர்களுடன் பேரம்பேசி விடுவித்தது ஊடாகவும், அவர்களே தற்போதைய குழப்பங்களுக்கும் இன்றைய முரண்பாடுகளை தோற்றுவிப்பவர்களாகவும் இருக் கிறார்கள். எனவே புலம்பெயர் தேசத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமையையும் ஒருங்கி ணைவையும் சீர்குலைத்து குழுவாதம் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபடும் தனி நபர்களையும், எழுத்தாளர்களையும், பத்திரிகைகளையும், இணையத்தளங்களையும்

இனம்கண்டு புறத்தொதுக்குமாறு மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்;;;.

மேலும், பதிவு மற்றும் சங்கதி ஆகிய இணையத்தளங்கள் தொடர்பாகவும் தெளிவு படுத்த வேண்டிய நிலையிலுள்ளோம். இவ்விரண்டு இணையத்தளங்களும் மே 18க்கு முன்னர் அனைத்துலக தொடர்பகத்தின் இணையத்தளங்களாக செயற்பட்டு வந்தமை யாவரும் அறிந்ததே. அதன் பின்னர் அது புலிகளின் பத்திரிகை நடைமுறைகளையும் மீறி தனி மனிதர்களையும் தனிப்பட்ட அமைப்புக்களையும் மிக மிக இழிவாக விமர்சித்துக் கொண்டிருப்பதன் காரணமாக இயக்கத்தின் மீதும் அனைத்துலக தொடர்பகத்தின் மீதும் அவப்பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

உண்மையில் தற்போதைய அனைத்துலக தொடர்பகத்தின் இணைப்பாளரின் கீழ்

இவ்விரண்டு இணையங்களும் இல்லை என்பதுடன் அதில் ஒரு வருடத்துக்கும் மேலாக வந்து கொண்டிருக்கும் விமர்சனங்களுக்கும் எமக்கும் எந்தவித தொடர்பு மில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தற்போது எமது உத்தியோகபூர்வ இணையமாக றறற.எனைரவாயடயipரடமையட.நெவ மற்றும் புலிகளின் குரல் வானெலியுமேயாகும் (றறற.pரடமையடiமெரசயட.உழஅ). அத்துடன் தற்போதைய மக்கள் கட்டமைப்புகளுடனும் அனைத்து நாட்டு தமிழர் ஒருக்கிணைப்புக்குழுக்களுடனும் இணைந்து ஒற்றமையுடனும் உறுதியுடனும் செயற்பட்டு எதிரியின் சூழ்ச்சித்திட்டங்களை முறியடித்து எமது விடுதலைப் பயணத்தை விரைவுபடுத்துமாறு அனைத்து மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இராமு.சுபன்

இணைப்பாளர்

தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம்.

Arikkai 26072010.pdf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாம் அப்படியோர் அறிக்கையை வெளியிடவில்லையென்று விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் மறுத்துள்ளது. இது தாமே தமக்கெதிராக இப்படியொரு அறிக்கையை வெளியிட்டு, பிறகு, தலைமைச் செயலகம் காகிதப் புலிகள் என்று எதிர்த்து அறிக்கைவிடும் பதிவுப் புலிகளின் நாசகார வேலையாகத்தான் தெரிகிறது. வேறு செய்தித்தளங்களும் சங்கதி பதிவு தொடர்பான அறிக்கையை வெளியிடவில்லை.

எப்படித்தான் மக்களை முட்டாள்களாக்கிக் கொண்டுள்ளார்கள் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

நல்ல விடயம்.

எனக்கும் தெரிஞ்சவர்களுடன் பேசினேன். பதிவு சங்கதி இணையத்தளங்கள் எதிர்கால செயற்பாடுகள் பற்றி நேற்று கூட்டம் இடம்பெற்றதாகவும். அதில் சங்கதியின் இரு பிரிவுகள் குறித்து தலைமைசெயலகம் சார்பாக பதிவு சங்கதி நிர்வாகத்துடன் கூட்டம் இடம்பெற்றதாகவும் கூறினார்கள். கூடவே மக்களை மேலும் பிரிவினைக்குட்படுத்தும் கருத்துப்படி செய்திகளையும் கட்டுரைகளையும் பிரசுரிப்பதனை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்கள். இவற்றை தலமை செயலக இணைப்பாளர் மற்றும் அனைத்துலக செயலகத்தை சேர்ந்த புதிய பொறுப்பாளரும் சொன்னதாக எனக்கு நம்பிக்கையானவர்கள் கூறினார்கள். ஆனால் அறிக்கை விடவில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

அறிக்கை எப்படி வெளியானது எண்று சிவா சின்னப்பொடி அண்ணைக்காவது தெரியுமோ....??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.