Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விரலணிகள்

Featured Replies

தமிழர் சமுதாயம் பல கலாசார, பண்பாட்டு விழுமியங்களைத் தன்னகத்தே கொண்ட சமுதாயமாகும். நம் முன்னோர்கள் பல நம்பிக்கைகளையும் சடங்குகளையும் எமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள். அவற்றை நாம் பின்பற்றும் காரணத்தால் தலைமுறைகள் பலவற்றைக் கடந்தாலும் எமது சமுதாயம் உயிர்ப்புடன் வாழ்கிறது என்றால் அது மிகை இல்லை.

விரல்களில் மோதிரங்களை அணிவதால் மருத்துவப்பயன்பாடு கிடைப்பதாக பலர் கருதுகிறார்கள். பலருக்கு தங்கள் கை விரல்களை மடக்குவதற்கு அல்லது நீட்டுவதற்கு இலகுவாக இருப்பதில்லை. அதிலும் பெண்களுக்கு இவ்வாறான பிரச்சனைகள் அதிகமாக உள்ளன. பெண்களுக்கு அதிகளவான இரத்த இழப்பு ஏற்படுவதோடு அவர்களின் எலும்புகள் விரைவில் பலவீனமடைவதே இதற்கு காரணம் என தற்கால வைத்தியர்கள் விதந்துரைக்கிறார்கள். எது எப்படி என்றாலும் அதை காலத்தால் முன் உணர்ந்த நம் முன்னோர்கள் கைகளில் தங்க ஆபரணங்களை அணிவதன் மூலம் அதற்கு தீர்வு உண்டு என்று நம்மை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அதன் காரணத்தினால்தான் பெண் குழந்தைகளுக்கு கைகளில் தங்க வளையல்களையும், விரல்களில் மோதிரங்களையும் அணிவித்தார்கள். அதனால் இரட்டிப்பு பலன் கிடைக்கிறது. அவர்களைப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் அதேநேரம் மருத்துவப்பலனும் கிடைக்கும்.

எங்கள் வலது கை மோதிர விரலில் மோதிரம் அணியும் போது உணவுடன் சேர்ந்து தங்கத்தின் மருத்துவ சக்தி உடலுக்குக் கிடைக்கிறது என்பது மேலதிகமாக நமக்குக் கிடைக்கிற ஒரு செய்தியாகும். தங்கபஸ்பம் என்பது கூட மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்படுகின்ற ஒரு முக்கியமான பொருளாகும். தங்க ஆபரணங்களை உடலில் அணியும்போது ஒரு விதமான பளபளப்பும் மினுமினுப்பும் அழகும் நமக்குக் கிடைக்கிறது.

தமிழர் வாழ்வில் பெண் குழந்தைகளுக்கும் தாய் மாமனுக்கும் மிக நெருங்கிய இறுக்கமான பிணைப்பு உண்டு. தாய் மாமன் மடியில் வைத்து அப்பெண் குழந்தைகளுக்கு காது குத்துவது, பூப்புனித நீராட்டு விழாவில் தாய்மாமன் முறை செய்வது, உச்சிப்பட்டம் கட்டுவது உட்பட பல விடயங்களில் பெண் குழந்தைகளை இளவரசியைப் போல பாவனை செய்வது நம் வழக்கமாகும். இதன் காரணமாகவே தமிழர் வழக்கத்தின்படி பூப்படையும் வயதை எய்துகின்ற பெண் குழந்தைகளுக்கு அல்லது பூப்படைந்த பெண் குழந்தைகளுக்கு தங்க ஆபரணங்களை நம் பெரியோர்கள் அணிவித்து மகிழ்ந்தார்கள். பணவசதி இல்லாத ஒரு ஏழை கூட தன் மகளுக்கு பூப்படையும் வயதை நெருங்கும்போது சிறு சிறு நகைகளை சேர்க்கத் தொடங்குவது நம் தமிழர் வழமையாகும்.

நாம் விரல்களில் அணிகின்ற விரலணிகள் மிக காலத்தால் முந்தியவை. ஆனாலும் அக்காலத்தில் மோதிரம் எனப்படும் தங்க நகைக்கு வேறு பல பெயர்கள் வழங்கப்பட்டிருப்பதை நாம் இலக்கியங்களில் இருந்து தெரிந்து கொள்கிறோம். இந்த விரலணிகளுக்கான ஆரம்பம் எது என்பதை நாம் திட்டவட்டமாக கூறமுடியாவிட்டாலும் அவை காலத்தால் மிகப் பழமையானவை என்ற தகவல் நமக்குக் கிடைக்கிறது. இராமாயாணத்தில் ராமனைப் பிரிந்த சீதாபிராட்டியை சந்திக்கின்ற அனுமன், தான் ராமபிரானின் தூதுவன் என்பதை ராமன் கொடுத்து அனுப்புகின்ற கணையாழியை சீதாபிராட்டியிடம் கொடுப்பதில் இருந்து விரலணிகள் அக்காலத்தில் எவ்வளவு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறன என்பதை உணர்த்துவதாக பழம்பெருங்காப்பியமான இராமாயாணம் எடுத்து உரைக்கின்றது.

தற்காலத்தில் பல நாட்டு அதிபர்களும் தங்கள் இராஜாங்க கருமங்களுக்காக வேற்று நாடுகளுடன் பல ஒப்பந்தங்களை செய்வது வழக்கமாகும். ஒரு நாட்டு அதிபரின் கையெழுத்து அல்லது அந்நாட்டு அரச பொறுப்பில் மிக முக்கிய இடத்தை வகிக்கும் ஒரு அமைச்சரின் கையெழுத்துடன் அவரின் பதவி முத்திரையை பொறிப்பதன் ஊடாக அந்த ஒப்பந்தங்கள் பெறுமதிமிக்க ஒப்பந்தங்கள் மாற்றம் பெறுகின்றன.

அக்காலங்களில் இவ்வாறான வழமை காணப்படவில்லை என்பதுடன் அரசர்கள் அல்லது முக்கிய பொறுப்பில் உள்ள மந்திரிகளின் கணையாழிகள்தான் பெறுமதிமிக்க அரச முத்திரைகளாக பயன்படுத்தப்பட்டன என்பதை பழைமையான பல இலக்கியங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. ஒரு ஆட்சிமிக்க மன்னன் தனது விரல்களில் பலவகையான சிறு சிறு வேறுபாடு கொண்ட முத்திரைகள் பொறிக்கப்பட்ட பல மோதிரங்களை அணிந்திருந்ததுடன் தனது நம்பிக்கைக்கு உரிய தளபதிகளுக்கு அவற்றை வழங்குவதன் ஊடாக தனது அதிகாரங்களில் சிலவற்றை குறிப்பிட்ட தளபதிகளுக்கு வழங்கினான் என்றும் நாம் பழைய நூல்கள் வாயிலாக நாம் உணரமுடிகிறது. அவ்வாறான மோதிரங்களை 'முத்திரை மோதிரங்கள்' என சிறப்பாக அழைக்கப்பட்டதுடன் மிக முக்கிய அரச அதிகாரங்கள் அம்முத்திரை மோதிரங்களில் தங்கியிருந்தன எனவும் நாம் அறியக்கிடைக்கிறது.

'ஆழியங் கையினான்' என்ற தொடரில் இருந்து மோதிரம் அணிந்த விரலை உடையவன் என்ற பொருள் நமக்குக் கிடைக்கிறது. 'ஆழி' எனப்படும் சொல்லிற்கு பொதுவாக கடல் என அர்த்தம் கொள்ள முடியும். ஆனால் இங்கு ' ஆழி' எனப்படுவது விரலணியைக் குறிக்கும் ஒரு சொல்லாகக் குறித்து நிற்கிறது. மேலும் விரலில் அணிகின்ற அணிகலனுக்கு 'கணையாழி' என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது என்பதை இராமாயாணம் போன்ற இலக்கியங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

மோதிரம் என்ற ஆபரணத்திற்கு ஒரு நல்ல தமிழ்ச் சொல்லாக 'விரல் செறி' என்ற சொல் பழங்காலத்தில் புழக்கத்தில் இருந்துள்ளது என்பதை நாம் இலக்கியங்கள் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. அதாவது விரல்களில் செறிப்பது அல்லது விரல்களில் அணிவது என்பது இதன் பொருளாகும். 'குறிப்பொறி விரற்செறி செறிந்து' என்னும் தொடர் அமுதாம்பிகைப் பிள்ளைத தமிழில் வருகின்ற தொடர் இதற்கு சிறந்த ஒரு உதாரணமாகும்.

அத்துடன் வாழை மீன் வாயைத் திறந்திருப்பதுபோன்ற தோற்றம் உடைய பல வகையான மோதிரங்கள் அக்காலத்திலும் பாவனையில் இருந்துள்ளமைக்கு போதிய சான்றுகள் நம்மிடம் உண்டு. இவ்வகையான மோதிரங்களுக்கு 'நெழி' என்னும் சிறப்பான பெயர் அக்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது.

'மணியாரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி' என்னும் தொடர் திருக்கைலாய ஞானவுலாவில் உள்ளது. இத்தொடர் மூலம் 'மணிகள் பலவற்றைக்கொண்ட ஆழியை தனது மென்மையான விரலில் அணிந்த' எனப்பொருள் கொள்ள முடியும். மேலும் மோதிரங்களில் பவழ மோதிரம், முத்து மோதிரம், மாணிக்க மோதிரம், வைர மோதிரம் உட்பட நவரத்தின மோதிரங்கள், வெள்ளி மோதிரங்கள், தனித் தங்கத்தினால் உருவாக்கப்பட்ட மோதிரங்கள் என பல வகையான மோதிரங்கள் உண்டு.

அடுத்து கைகளில் நாம் மோதிரங்களை அணியும்போது நடு விரலில் மாத்திரம் மோதிரங்களை அணியக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். அதற்கு காரணம் என்னவெனில் நடு விரல் என்பது ஆணவத்தைக் குறித்து நிற்பதாகும். அதாவது நடு விரல், மோதிர விரல், சின்னி விரல் ஆகியன முறையே ஆணவம், கன்மம், மாயையைக் குறித்து நிற்பதாக சைவ சித்தாந்தம் கூறுகிறது. ஆரம்ப காலங்களில் தற்போதைய மோதிர விரல் என்பது கன்மம் செய்வதற்கு உரிய விரலாகப் பாவனை செய்யப்பட்டு சைவ சமய கிரியைகளில் தர்ப்பை தரிக்கும் விரலாகப் பயன்படுத்தப்பட்டது. இதன்காரணத்தால் அவ்விரலை 'பவித்திர விரல்' எனச் சிறப்பாக அழைத்தார்கள். காலங்கள் செல்லச் செல்ல அந்த விரல் மோதிரம் அணிகின்ற விரலாகத் தற்போது கருதப்படுகிறது.

கிரியைகளைச்செய்யும் குருக்கள் கட்டாயமாக 'பவித்திரம்' என்று அழைக்கப்படும் தர்ப்பையை பூணுவதன் மூலமே அந்த தகுதியைப் பெறுகிறார் என சைவ சமய கூறுகிறது. ஆனால் 'பவித்திரம்' என்று சொல்லப்படுகின்ற சிறப்பான மோதிரத்தை அணிந்த சைவ சமய குருக்கள் தர்ப்பை அணியாமல் பூஜை செய்வதற்கு அனுமதி வழங்குவதாகவும் சைவ சமயம் கூறுகிறது. பவித்திரம் என்ற சொல்லுக்கு தூய்மை அல்லது புனிதம் எனப்பொருள் கொள்ள முடியும்.

இவ்வாறு தமிழர்களுக்கும் தங்கத்துக்கும் இடையில் மிக நீண்ட காலமாக மிக நெருங்கிய தொடர்பு இருந்துவருகிறது. தங்கள் வாழ்க்கைக்கு சிறந்ததொரு சேமிப்பாக தங்கத்தை சேமித்தது மாத்திரம் அல்லாமல் அழகிய தங்க ஆபரணங்களை உருவாக்கி அவற்றை அணிந்து தம் அழகை மெருகூட்டியதுடன் மருத்துவ பயன்பாடு கொண்ட ஒரு உலோகமாகத் தங்கத்தை அவர்கள் பயன்படுத்தினார்கள்.

உமா பிரகாஷ்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி பிரியங்கா! :(

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்லபதிவு தோழர் பிரியங்கா. :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.