Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா இராணுவத்தில் இணைக்கப்படுகிறார் கே.பி – பிரிகேடியர் பதவி வழங்க அரசு திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:wub: டாஷ் சரியாகச் சொன்னீர்கள்,

இங்குள்ள எனது நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் யாழ் சென்று திரும்பியிருந்தார். அவரின் கதைகளைக் கேட்டால் அறைய வேண்டும்போல இருக்கும். வயதில் மூத்தவர், குடும்ப நண்பர் என்றபடியால் பேசாமலிருக்க வேண்டியிருக்கு.

அவரின் திருவாய் மலர்ந்தருளிய சில வசனங்கலை இங்கே தருகிறேன்,

" யாழ்ப்பாணம் இப்ப அந்த மாதிரி"

" சனமெல்லாம் சந்தோஷமாத் திரியுது"

"ஊரில நடக்கிற கடத்தல், களவெல்லாம் சனத்தின்ர தனிப்பட்ட பிரச்சனைதான் காரணம்"

" தங்கட வீட்டுக்கு அருகில இருக்கிற ஆமிக்காம்பை அகற்ற வேண்டாம் எண்டு சனம் ராணுவத்துக்கு அல்லும் பகலும் கரைச்சல் குடுத்தபடி"

"கொக்குவில் பொற்பதி ரோட்டில ராணுவ முகாம் இல்லாதபடியாலதான் அங்க களவும், கடத்தலும் நடக்குது"

"கொழும்பு போல் போலீஸ்காரன்கள் துவக்கில்லாமல் வெறும் தடியோடதான் திரியிறாங்கள்"

"இப்ப ஆரும் வந்து தனிநாடு, சுதந்திரம் எண்டு யாழ்ப்பாணத்தில கதைச்சால் சனம் வெட்டுவம் எண்டு சொல்லுது"

"கன சனத்துக்கு இப்ப நல்லாச் சிங்களம் தெரியும், ஆமிக்காரரோட சிங்களத்தில கதைச்சுக்கொண்டு சனம் பஸ்வழிய திரியுது"

"யாழ்ப்பாணத்துச் சனத்துக்கு இப்ப எந்தக் கவலையுமில்லை, சும்மா வெளிநாட்டில இருந்து கொண்டு எங்கட சனம் போடுற கூச்சலை அங்க யாரும் கண்க்கெடுக்கிறதில்லை, இன்னும் சொல்லப்போனால் ஆத்திரத்தோடுதான் இருக்குது"

"இவ்வளவு சனமும் செத்ததையும், சிங்களக் குடியேற்றங்கள் நடக்கிறதையும் எடுத்துவிட்டுப் பார்த்தால் சனம் நல்ல சந்தோஷமாத்தான் திரியுது"

"சிங்களவங்களைக் குடியேற்றைறதால என்ன பிரச்சனை எண்டு சனம் கவலைப்படவில்லை"

"பொடியளை விட ஆமிக்காரர் எவ்வளவோ மேல் எண்டு சனம் வெளிப்படையாச் சொல்லுது"

என்னத்தைச் சொல்ல??

சனம் சந்தோசமாக இருக்க வேண்டுமென்பதில மாற்றுக்கருத்தில்லை, ஆனால் அதற்காக நாம் கொடுக்கும் விலை என்னவென்று எவருக்காவது தெரியுமா??

அண்ணே! இப்பிடிப் பட்டவை ஆனையிறவு வெற்றிக்கு கிடாய் அடிச்சு போத்தில் உடைச்சு கொண்டாடியவையாய் இருப்பினையே தவிர ... போராட்டத்தின் தார்ப்பரியத்தை உண்மையில் புரிந்து கொண்டவர்களாக இருக்கமாட்டார்கள். பொருளாதாரத் தடை, பாதுகாப்பு கெடுபிடி இவற்றிலிருந்து விடுபட்டதால் வரும் சந்தோசம் தற்காலிகமானதென்று எந்த ஒரு அடிப்படை அறிவுள்ள மனிதனுக்கும் தெரியும். இவர்களை நீங்கள் கேட்கவேண்டிய கேள்வி .... தமிழர்களின் போராட்டத்திற்கான அடிப்படை காரணம் என்ன? அது இன்று தீர்க்கப்பட்டு விட்டதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:wub: டாஷ் சரியாகச் சொன்னீர்கள்,

இங்குள்ள எனது நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் யாழ் சென்று திரும்பியிருந்தார். அவரின் கதைகளைக் கேட்டால் அறைய வேண்டும்போல இருக்கும். வயதில் மூத்தவர், குடும்ப நண்பர் என்றபடியால் பேசாமலிருக்க வேண்டியிருக்கு.

அவரின் திருவாய் மலர்ந்தருளிய சில வசனங்கலை இங்கே தருகிறேன்,

" யாழ்ப்பாணம் இப்ப அந்த மாதிரி"

" சனமெல்லாம் சந்தோஷமாத் திரியுது"

"ஊரில நடக்கிற கடத்தல், களவெல்லாம் சனத்தின்ர தனிப்பட்ட பிரச்சனைதான் காரணம்"

" தங்கட வீட்டுக்கு அருகில இருக்கிற ஆமிக்காம்பை அகற்ற வேண்டாம் எண்டு சனம் ராணுவத்துக்கு அல்லும் பகலும் கரைச்சல் குடுத்தபடி"

"கொக்குவில் பொற்பதி ரோட்டில ராணுவ முகாம் இல்லாதபடியாலதான் அங்க களவும், கடத்தலும் நடக்குது"

"கொழும்பு போல் போலீஸ்காரன்கள் துவக்கில்லாமல் வெறும் தடியோடதான் திரியிறாங்கள்"

"இப்ப ஆரும் வந்து தனிநாடு, சுதந்திரம் எண்டு யாழ்ப்பாணத்தில கதைச்சால் சனம் வெட்டுவம் எண்டு சொல்லுது"

"கன சனத்துக்கு இப்ப நல்லாச் சிங்களம் தெரியும், ஆமிக்காரரோட சிங்களத்தில கதைச்சுக்கொண்டு சனம் பஸ்வழிய திரியுது"

"யாழ்ப்பாணத்துச் சனத்துக்கு இப்ப எந்தக் கவலையுமில்லை, சும்மா வெளிநாட்டில இருந்து கொண்டு எங்கட சனம் போடுற கூச்சலை அங்க யாரும் கண்க்கெடுக்கிறதில்லை, இன்னும் சொல்லப்போனால் ஆத்திரத்தோடுதான் இருக்குது"

"இவ்வளவு சனமும் செத்ததையும், சிங்களக் குடியேற்றங்கள் நடக்கிறதையும் எடுத்துவிட்டுப் பார்த்தால் சனம் நல்ல சந்தோஷமாத்தான் திரியுது"

"சிங்களவங்களைக் குடியேற்றைறதால என்ன பிரச்சனை எண்டு சனம் கவலைப்படவில்லை"

"பொடியளை விட ஆமிக்காரர் எவ்வளவோ மேல் எண்டு சனம் வெளிப்படையாச் சொல்லுது"

என்னத்தைச் சொல்ல??

சனம் சந்தோசமாக இருக்க வேண்டுமென்பதில மாற்றுக்கருத்தில்லை, ஆனால் அதற்காக நாம் கொடுக்கும் விலை என்னவென்று எவருக்காவது தெரியுமா??

சிலவிசுக்கோத்துகள் இப்படித்தான் கதைக்கும், உண்மையில் இதுகளுக்கு ஏன் இனப்பிரச்சினை தொடங்கினது என்றே தெரியாது, ஏன வெளிநாட்டுக்கு வந்தனி என்று கேட்டு பாருங்கோ பக்கத்து வீட்டு பொன்னையற்ற மகன் வந்தான் அதனால் நானும் வந்தனான் என்று சொல்லுங்கள், இதுகள் கடைசிவரைக்கும் நாட்டில என்ன நடக்குது என்று தெரியாமலேயே வாழ்கையை முடித்துக்கொண்டு போறதுகள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு எம்மைப் பற்றி நல்லாத் தெருயும் கிழமைக்கு இப்படி 2 அறிக்கை விட்டால், கஸ்ட்ரோ, நெடியவன்,கே.பீ என்று நாமே எமக்குள் அடிபடுவம் என்று, அதை விடுங்கோ யாழ்ப்பாணம் போய் ஒருக்கா காலாட்டி போட்டு வந்தால் நாடே நல்லாத் தான் இருக்கு,சிங்களவன் ரொம்ப நல்லவன் என்று அறிக்கை விடும் அறிவாளிகள் தானே எம்மவர்கள், வன்னியில் மத மாற்றம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் வன்னியில் இன மாற்றமே நட்க்குது தமிழனின் வீரத்துக்கு ஆதாரமாய் இருந்த பூமியில் இனிமேல் புத்த விகாரையும், சிங்கள மொழியும் தான் கேட்கப் போகுது, போற போக்கில் பல மாவீரர் குடுமபங்களே தமிழ் இன அடையாளம் இழந்து சிங்களவர்களாக் மாறப் போகிரார்கள், ஆனால் உதெல்லாம் யாழ்பாணம் போகும் அறிவாளிகளுக்கு விளங்காது, அங்கு போட்டு வந்து ஒரு அறிக்கை விடுவீனம், இப்ப நாடு அந்த மாதிரி, அப்ப 2002இல் நாடு என்ன சுடுகாடாகவா இருந்தது, 2002இல் மகிழ்ச்சியாக இருந்தவன் எல்லம் இப்போது தெருவில் இருக்கிறான் அது இதுகளுக்கு தெரியாது, நானும் எதோ தமிழன் உணர்வுடன் போராடுகிறான் என்று யோசித்தேன் ஆனால் இப்போது தான் விளங்குது யாழ்ப்பாணம் போக இலகுவான ஒர் வழி செய்து தருமாரு போராடிய்ருக்கிரான் என்று. இப்போது எமது இனத்தில் ஒரு புதுக் கூட்டம் இருக்கு அவை என்ன சொல்லீனம் தெரியுமோ கெர்மனியிலும்,பிரான்ஸிலும்,இங்கிலாந்திலும் எப்படி அந்த நாட்டு மொழியை கதைத்து வாழீனமோ, அப்படி ஈழத்திழும் சிங்களத்தில் கதைத்து வாழ்ந்தால் என்னவென்று, நான் யோசிக்கிறேன் இப்படியும் ஒரு கேடு கெட்ட இனமா எமது இனம்

இந்த இழிவான நிலைமையை உருவாக்கியதும் நமது இராஜ தந்திரமற்ற "இராஜ தந்திரம்"தான். யாழ்ப்பாணம் போய் நல்லூர் திருவிழாவில் கலக்குக் கலக்குபவர்கள் வந்து சொல்லும் கதைகளைக் கேட்டுவிட்டு மிச்ச புலம்பலைத் தொடர்வோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.