Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி மூன்றாம் தவணைக்காக ஆட்சி நடத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது – ரணில் விக்ரமசிங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மூன்றாம் தவணைக்காக ஆட்சி நடத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது – ரணில் விக்ரமசிங்க 11 September 10 01:30 am (BST)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாம் தவைணக்காக ஆட்சி நடத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரே அடுத்த ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சிக்கு எதிராக செயற்படுவோரின் உறுப்புரிமை ரத்து செய்யப்படும் அதேவேளை, கட்சிக்கு ஆதரவாக செயற்படுவோருக்கு உறுப்புரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சில உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்வதனால் கட்சி வீழ்ச்சியடைந்து விடாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியை இல்லாதொழிப்பதற்கு சில தரப்பினர் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இந்த சதித் திட்டத்தை கட்சி இனங்கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1956ம் ஆண்டில் எட்டு ஆசனங்களும், 1970ம் ஆண்டில் 14 ஆசனங்களும் மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சிப் பெற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் உறுப்பினர்களின் ஒத்துழைப்பினால் மீண்டும் மீண்டும் கட்சி வெற்றியீட்டியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பண்டாரவள பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வெகு விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய யாப்பு விதிகள் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை செயலிழக்க செய்ய எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது:‐

ஐக்கிய தேசியக் கட்சியை செயலிழக்க செய்ய எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் கட்சியில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் தீர்மானங்களுக்கு முரணாக செயற்பட்டு, கட்சியினரை தவறாக வழிநடத்துவோர் அனைவருக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சிக்காக பாடுபடும் அப்பாவிகளான கட்சியின் உறுப்பினர்கள் குறித்து எண்ணி, அவர்களுக்கு நியாயத்தை நிறைவேற்ற வேண்டியது சகலரதும் கடமையாகும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். மஹியாங்கனை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் அண்மையில் உரையாற்றும் போதே ரணில் இதனை குறிப்பிட்டுள்ளார். லக்ஷ்மன் செனவிரட்ன மற்றும் ஏர்ள் குணசேகர ஆகியோர் கட்சியில் வகித்து வந்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் யாப்பின்படி கட்சியின் தலைவரே நியமனங்களை வழங்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் கட்சியின் நலனகு எதிராக செயற்பட்டு, அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டால், அவர்கள் தொடர்ந்தும் கட்சியின் பதவிகளை வகிக்க முடியாது எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இவர்கள் சுயாதீனமாக செயற்படத் தீர்மானம்:‐

ஐகக்pய தேசியக் கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ளனர். கபீர் ஹசீம், சஜீத் பிரேமதாச, லக்ஸ்மன் கிரியல்ல, கயந்த கருணாதிலக்க, தலதா அத்துகோரள, ரஞ்சித் மத்துமபண்டார, துனேஷ் கன்கந்த, ரஞ்சன் ராமநாயக்;க, திலிப் வெதஹாராச்சி, புத்திக பத்திரன, ஈ.எம்.சுவாமிநாதன், ஹர்ஸ் டி சில்வா, இரான் விக்ரமரத்ன, பாலித தொவரப்பெரும, சுஜீவ சேனசிங்க, ரோஷி சேனாநாயக்க, சந்திரானி பண்டார, நிரோஷன் பெரேரா, அசேகா அபேசிங்க, மொஹான் லால் க்ரோ, ருவான் விஜேவர்தன, ஹரின் பெர்ணாந்து, அனோமா கமகே, ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களே நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க தீர்மானித்துள்ளனர். அதேவேளை கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணாது போனால், தாம் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க போவதாக ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அறிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சகல பிரச்சினைகளும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தீர்க்கப்படும்:‐

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சகல பிரச்சினைகளும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தீர்க்கப்பட்டு, அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு எதிராக நாடு முழுவதும் விரிவான Nவைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் பெருமளவில் முடிவடைந்துள்ளதுடன் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இறுதி தீர்மானங்களை எடுத்து, அதனை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை ஜனநாயக விரோதமாக சர்வாதிகார பயணத்திற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு எதிராக பாரிய மக்களை அமைப்பை கட்டியெழுப்பு முனைப்புகளை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டு வருகிறது. அரசாங்கத்திற்குள் பல நெருக்கடிகள் உருவாக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கியமாகவும் வலுவான நிலையிலும் முன்னோக்கி செல்ல வேண்டும் எனவும் காமினி ஜயவிக்ரம பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து முதலில் ரணிலை வெளியேற்ற வேண்டும்:‐

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டுமாயின் முதலில் ரணில் விக்ரமசிங்கவையே கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அந்த கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு வாக்களிக்கும் உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கிறது. இந்த அரசியலமைப்புத் திருத்தம் என்பது ரணில் விக்ரமசிங்கவின் விரும்பமில்லையா எனவும் செனவிரட்ன கேள்வி எழுப்பியுள்ளார். ரணில் விக்ரமசிங்கவிடம் திகதி குறிப்பிடாத பதவி விலகல் கடிதங்களை வழங்கவில்லை எனவும் அவ்வாறான கடிதங்களை ரணில் வைத்திருந்தால் அவை போலியானவை எனவும் லக்ஷ்மன் செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=29674&cat=1

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

ரணில், சம்பந்தர், கக்கீம் போன்ற தலைவர்கள் நாட்டில் இருக்கும் வரை மகிந்தவின் மூன்றாவது பதவிக் காலத்தை மட்டுமல்ல அவரது குடும்ப ஆட்சியையும் ஒன்றுமே செய்ய முடியாது

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

சரியாய் சொன்னீங்கள் வாத்தியார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.