Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மா திரும்பியிருக்கிற ஆற்றங்கரை காணி நிலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா திரும்பியிருக்கிற ஆற்றங்கரை காணி நிலம்

தீபச்செல்வன்

DSC04360.JPG

புற்களும் பற்றைகளுமாய் கிடக்கும் நிலத்தில்

வீடு கரியிருக்கும் உருக்குலைந்த காணியில்

அம்மாவின் களைப்பு தணலூட்டப்பட்டிருக்கிறது

கடவுள்கள் எங்களை கைவிட்டதாய்

ஒரு நாள் உணர்ந்தபொழுது காணி நிலம் தரும்

பராசக்தியிடம் அம்மா உணவிழந்து பசியிருந்தாள்

ஆற்றங்கரையில் கிடக்கும் இந்தக் காணிநிலத்தை

பராசக்தி ஏன் கைவிட்டாள்?

யுத்தக் குற்றங்களுக்காக நிறைவேற்றப்பட்ட தண்டனைக்காலத்தின்

எந்தச் சித்திரவதைகளையும்

பகிரப்போவதில்லை என்று அம்மா ஒப்புதலளித்திருக்கிறாள்.

வீடு திரும்பியிருக்கிறோம் என்பதை

இந்த ஆற்றங்கரைப் பறவைகள் கொண்டாடுகின்றன

ஒரு நாள் ஆறு பெருக்கெடுக்கையில்

என்னை கைகளில் அம்மா நிரப்பி வைத்திருந்தாள்

என்னை இழுத்துச் சென்றுவிட்டு வேர்களால் கரமளித்து

கரையேற வைத்தது ஆறு.

மூடியிருக்கும் ஆற்றங்கரையில் சிதைவடைந்த

கரைகளைக் காண முடியவில்லை.

கனவுக்காக சிந்திய அம்மாவின் உதிரம்

ஆற்றங்கரையில் படிந்திருக்கிறது.

கிளைகளை இழந்த நாவல் மரத்தில்

ஊஞ்சல்களை கட்டி தங்கை எப்படி ஆடப்போகிறாள்?

பட்டுப்போகாத அதன் வேர்களை தடவும் அம்மாவின் புன்னகையில்

அது ஆதி நிழலை பெய்கிறது

நாவல் மரத்தின் கீழாய்

நாவற்பழங்களை பொறுக்கும் குழந்தைகளை காணவில்லை.

சுவர்களை தேடும் அம்மா

உக்கிய கடவுகளின் புகைப்படங்களை எடுக்கிறாள்

அண்ணாவின் புகைப்படம் அழிந்து போயிருந்தது.

இன்னும் உயிருடன் இருக்கின்றன மருதானி மரம்

மற்றும் சில பூவரச மரங்கள்.

பாதி நிழலை வைத்திருக்கிறது மருதமரம்.

சாம்பல் சுவடுகளின் மேலாய் நாட்டப்பட்டிருக்கிறது புதிய கூடாரம்.

வானத்தின் காயம் ஆறிவிடும் என அம்மா நம்புவதைப்போல

மீண்டும் வீடு வளரும் என்று தங்கை நம்புகிறாள்.

தாழ்நிலத்தில் மீண்டும் பாடல்கள் முளைக்கின்றன.

கனவுகளின் பாத்திகளும் வரம்புகளும் உருக்குலைந்துபோக

எறியப்பட்ட பனை விதைகள் வடலியாய் வெடித்திருக்கின்றன

எங்கள் புன்னகை ஆற்றங்கரையை விட்டு

பெயர்ந்துபோன எல்லாப் பறவைகளையும் அழைத்துக்கொண்டிருக்கிறது.

__________________________

09.05.2010, இரத்தினபுரம், கிளிநொச்சி.

“எனது அம்மா மற்றும் தங்கை கடந்த வருடம் மே 16ஆம் நாள் இறுதி யுத்தத்தின் முடிவில் தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நிறைவேற்றப்பட்ட யுத்தத்திற்கான தண்டனைகளை முடித்துக் கொண்டு 09.05.2010 அன்று நாங்கள் வாழ்ந்த காணி நிலத்திற்கு திரும்பியிருக்கிறார்கள்”

புகைப்படம் : இரத்தினபுரத் தாழ் நிலப்பகுதியில் இருக்கிற எனது கூடாரம். (செப்டம்பர்) இம்மாதம் பெருமழைக்கு பாதுகாப்புத் தேடிக் கட்டப்பட்டது.

தீபச்செல்வனின் புதிய கவிதையிது. யாழ் வாசகர்களுக்காக இணைத்துள்ளேன்.

வலிகளுடன் வாழ்ந்து வலிகளை அனுபவித்து எழுதும் தீபச்செல்வனின் கவிதைகள் எங்கள் வரலாற்றை எழுதிச் செல்கிறது.

Edited by shanthy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.