Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்

Featured Replies

வேலூர் - ஐப்பசி 05, 2010

விஐடி பல்கலைக்கழகம், தமிழ் மொழி அகடமி இணைந்து நடத்திய 13வது தேசிய மொழிகள் மாநாடு விஐடியில் நேற்று நடந்தது.

விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது: தூய தமிழில் பேசுபவர்களை காண முடிவதில்லை. ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழில் பேசுவதற்கு கூச்சப்படும் நிலை மாற வேண்டும். விஐடியில் 25 மொழிகள் பேசும் மாணவ & மாணவிகள் உள்ளனர்.

16 ஆயிரம் பேர் இங்கு படித்தாலும் தமிழ் மொழி பேசுபவர்கள் குறைவு. தமிழ் மொழி பேசாதவர்களுக்கு தமிழ் மொழியை கற்றுத்தரவும், தமிழ் மொழியியல் பட்டய சான்று வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேவைப்படும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழியை கற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாட்டை தமிழ் மொழி அகடமி செய்யவேண்டும் என்றார்.

மாநாட்டை சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜெகதீசன் தொடங்கிவைத்து பேசுகையில்,‘பொறியியலிலும், மருத்துவத்திலும் தமிழ் மொழியை எப்படி கொண்டு செல்வது என்பதை கண்டறிய வேண்டும்’ என்றார். விழாவில் மாநில தகவல் உரிமை ஆணையர் சாரதாநம்பி ஆரூரான், ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம், விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், துணைவேந்தர் வி.ராஜூ, திரைப்பட இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=7364

  • தொடங்கியவர்

எழுத்தியல் - இத்தாலியில் பிறந்த வீரமாமுனிவர் / டாக்டர் ஜி.யூ.போப் பாதிரியார்

நம் தாய்மொழியாம் தமிழின் பெருமைகள் குறித்து எழுதப் புகுந்தால் ஏராளம் எழுதலாம். அவற்றுள் தாய்த்தமிழைப் புகழ்ந்தேற்றி நம்மவர்கள் பாடிவைத்தவை மட்டுமின்றி, தமிழைக் காதலித்து வாழ்ந்து மறைந்த வெளிநாட்டுக் காரர்களும் அடங்குவர். தமிழில் தேம்பாவணி எனும் பெருங்காப்பியம் பாடிய வீரமாமுனிவர் இத்தாலியில் பிறந்தவர். தமிழில் பல நூல்களையும் இலக்கண விளக்கங்களையும் வழங்கியவர். இப்போது நாம் பயன் படுத்தும் ஏ,ஓ ஆகிய இரு தமிழ் எழுத்துகளும் கி.பி. 1720வரை எ,ஒ ஆகிய எழுத்துகளின் மேல் புள்ளியிட்டு அமைக்கப் பட்டிருந்தன.

அவற்றை ஏ,ஓ என்று மாற்றியமைத்தப் பெருமை வீரமாமுனிவருக்குண்டு. தமிழ்மொழி வேற்றுநாட்டவரையும் எவ்வாறு ஈர்த்தது என்பதற்கு, "இங்குத் தமிழ் மாணவன் ஒருவன் அடக்கம் செய்யப் பட்டிருக்கிறான்" என்று தன் கல்லறையில் குறிக்குமாறு கேட்டுக் கொண்டு உயிர் விட்ட டாக்டர் ஜி.யூ.போப் பாதிரியாரின் முறிச் சான்று ஒன்றே போதும்.

  • தொடங்கியவர்

சிறந்த ஒரு மொழியின் அடிப்படை அதன் சொல்வளமாகும். சொல்லுக்கு அடிப்படை எழுத்துகளும் எழுத்துக்கு அடிப்படை ஒலியுமாகும். எழுத்துகளை அவற்றின் ஒலிகளுக்கேற்ப மூன்று இனங்களாகப் பிரித்துத் தன்னகத்தே கொண்டிலங்குவதை ஆராய்ந்து பார்த்தால் தமிழ்மொழியின் அறிவியல் புரியும்.

1 எழுத்து வகைகள்

தமிழெழுத்து நான்கு வகைப்படும்:

1:1 உயிரெழுத்து (அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ) = 12

1:2 மெய்யெழுத்து (க்,ச்,ட்,த்,ப்,ற்,ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) = 18

1:3 உயிர் மெய்யெழுத்து (க்+அ=க, தொடங்கி ள்+ஔ=ளௌ வரை 12x18) = 216

1:4 ஆய்த எழுத்து (ஃ) = 1

மொத்தம் 247 எழுத்துகள்.

  • தொடங்கியவர்

தமிழ் வட்டெழுத்துகள் (வரிவடிவங்கள்) பற்றி நிறைய வேறுபட்ட கருத்துகள் உள்ளன.

தமிழில் மொத்த உயிரெழுத்தே (அ,இ,உ,எ,ஒ) ஐந்துதான் என்ற கருத்தும் எப்படி எனில்:

அ+அ=ஆ

இ+இ=ஈ

உ+உ=ஊ

எ+எ=ஏ

ஒ+ஒ=ஓ

ஆக ஓரேயெழுத்து இரண்டு தடவை வந்தால் நெடிலாகி விடும் என்ற யுனிகோடு (Unicode) கணக்கோடு.

அ+ய்=ஐ;

அ+வ்=ஔ என்று சொல்வோரும் உண்டு.

ஐ,ஔ ஆகிய இரண்டு எழுத்துகள் பண்டைய தமிழில் இல்லாமலிருந்து பின்னர் வந்து இணைந்தவை என்ற கருத்தும் உண்டு. ஏனெனில், கி.பி 3-6 நூற்றாண்டுகளைச் சேர்ந்த எந்தக் கல்வெட்டிலும் நடுகல்லிலும் ஐ,ஔ ஆகிய இரண்டு எழுத்துகளும் காணப் படவில்லை.

ஏ,ஓ ஆகிய இரு எழுத்துகளும் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் உருவாக்கப் பட்டவை.

இருப்பினும் தொல்காப்பியரின் கூற்றுப்படி,

அ இ உ எ ஒ : என்னும் அப் பால் ஐந்தும்

ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ : என்னும் அப் பால் ஏழும்

சேர்த்து 12 உம் உயிரெழுத்துகள் என்றே நாம் கொள்வோம்.

  • தொடங்கியவர்

உயிரெழுத்துகளும் அவற்றின் தனித் தன்மைகளும்

உயிரெழுத்துகளை நான்கு வகைப் படுத்துவர்:

1. குற்றெழுத்து(குறில்)

2. நெட்டெழுத்து(நெடில்)

3 சுட்டெழுத்து

4.வினாவெழுத்து.

1 குற்றெழுத்து அல்லது குறில். இதன் ஒலி, ஒரு மாத்திரை கால அளவு குறுகி ஒலிப்பதால் குறில் என்றானது (ஒரு மாத்திரை கால அளவு என்பது கண் சிமிட்டும் நேரம் அல்லது கைவிரல் சொடுக்கும் நேரம் என்பர். ஒரு மாத்திரைக்கும் குறைவான கால அளவில் கண்களை மூடித் திறந்து விடலாம். அதற்காகவே, "இயல்பெழு மாந்தர் இமை நொடி மாத்திரை" என்றது நன்னூல். அஃதாவது மனிதன் இயல்பாகக் கண்களை மூடித் திறக்கும் நேரம் ஒரு மாத்திரையாம்.)

அ,இ,உ,எ,ஒ = 5 எழுத்துகள்.

2(அ)நெட்டெழுத்து அல்லது நெடில். இதன் ஒலி இரு மாத்திரை அளவு முழுமையாக நீண்டு ஒலிப்பதால் நெடில் என்றானது:

ஆ,ஈ,ஊ,ஏ,ஓ = 5 எழுத்துகள்.

குறிப்பு: ஆ,ஓ ஆகிய இரண்டு எழுத்துகளும் ஒரு சொல்லின் இறுதியில் அமைந்து வினாவெழுத்தாக மாறும். ஆ என்பது ஓரெழுத்து ஒரு சொல். ஆ என்றால் பசு (ஆவின் பால்).

2 (ஆ)குறுக்கம். இதன் ஒலி ஒன்றரை மாத்திரை அளவே ஒலிப்பதால் இது குறுக்கமென்றாலும் தொல்காப்பியத்தில் நெடிலுடன் சேர்த்தே கணக்கிடப் படுகிறது: "ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்னும் அப்பால் ஏழும் ஈரளபிசைக்கும் நெட்டெழுத்தென்ப". ஆனால், உண்மையில் ஐ,ஔ ஆகிய இரண்டும் குறுக்கமே. "மூன்று உயிர்அளபு, இரண்டா நெடில், ஒன்றே குறிலோடு 'ஐ' 'ஔ'க் குறுக்கம் ஒற்றளபு....." -நன்னூல். நமது பாடங்களில் இவ்விரண்டையும் குறுநெடில்/குறுக்கம் என்றே குறிப்போம்.

ஐ,ஔ = 2 எழுத்துகள்.

குறிப்பு: ஐ என்பது இரண்டாம் வேற்றுமைக்குரிய எழுத்தாகும். (அவன்+ஐ = அவனை). ஐ எனும் எழுத்து, தனித்து ஒலிக்கும்போது இரண்டு மாத்திரை; ஒரு சொல்லின் தொடக்கத்தில் ஒன்றரை மாத்திரை; நடுவில்/இறுதியில் ஒரு மாத்திரை அளவுகளாக மூன்று வகைகளில் மாறி ஒலிக்கும். "தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம் நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்" -நன்னூல்.

காட்டுகள்: தனித்த ஐ = இரண்டு மாத்திரை

சொல்லின் முதலில்: ஐயம் = ஒன்றரை மாத்திரை

சொல்லின் நடுவில்: அலையோசை = ஒரு மாத்திரை

சொல்லின் இறுதியில்: மலை = ஒரு மாத்திரை

3 சுட்டெழுத்து. சொல்லின் முதலெழுத்தாக அமைந்து, ஒன்றைச் சுட்டிக் காட்டும் ஓரெழுத்து, சுட்டெழுத்தாகும்.

அ,இ,உ = 3 எழுத்துகள்

காட்டுகள்: அ+சொல்=அச்சொல்; இ+பாடம்=இப்பாடம்; உ+பக்கம்=உப்பக்கம்.

'உப்பக்கம்' என்பது இப்போது வழக்கில் இல்லாத சொல்லாகும். 'பின்பக்கம்' என்பது அதன் பொருளாகும்.

4 வினாவெழுத்து. ஒரு சொல்லின் இறுதி எழுத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு வினாவை எழுப்புவது வினாவெழுத்தாகும்.

ஆ,ஓ = 2 எழுத்துகள்

காட்டுகள்: வருவான்+ஆ = வருவானா?

வருகின்றான்+ஆ = வருகின்றானா?

வந்தான்+ஆ = வந்தானா?

தருவான்+ஓ = தருவானோ?

மாட்டான்+ஓ = மாட்டானோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.