Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வலியுறுத்தி நாளை போராட்டம் : காவல்துறை திடீர் தடை உத்தரவால் பதற்றம் 2010-10-18

Featured Replies

சென்னை : விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வலியுறுத்தி தமிழ் அமைப்புகள் நாளை சென்னையில் நடத்த உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை திடீரென தடை விதித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

விடுதலைப்லிகள் மீதான தடையை நீக்குவது தொடர்பான விசாரணை தீர்ப்பாயத்தின் 3வது கட்ட ஆலோசனைக் கூட்டம் உதகையில் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், புலிகள் அமைப்பின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இயக்குநர் புகழேந்தி தலைமையில் பனகல் மாளிகை முன்பு 50 மீட்டர் துணி பேனரில் கையெழுத்து இயக்கப் போராட்டம் நாளை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு வார காலத்திற்கு முன்பாக அனுமதி பெற வேண்டும் என்று கூறி மாநகர காவல்துறை இதற்கு அனுமதி மறுத்துள்ளது. எனவே இதனை எதிர்த்து புகழேந்தி நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இதனிடையே தமிழக மக்கள் உரிமை கழகம் சார்பாக அதன் செயலாளரும், வழக்கறிஞருமான புகழேந்தி, இதே கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை மெமோரியல் ஹால் முன்பு நாளை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். இதற்கும் காவல்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளது. இதேபோல மே 17 இயக்கம் திருமுருகன் தலைமையில் நாளை நடைபெற இருப்பதாக அறிவித்துள்ள பிரச்சார ஆர்ப்பாட்டத்திற்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. எனினும், தடையை மீறி குறிப்பிட்டதுபோல நாளை போராட்டம் நடைபெறும் என்று இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது

http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=10690#10690

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வலியுறுத்தி, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக, வரும் செவ்வாயன்று காலை, சென்னை மெமோரியல் ஹால் அருகே, ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்த அனுமதி கோரி, சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம் கடிதம் ஒன்று வழங்கப் பட்டிருந்த்து.

இது குறித்து, நேரில் விளக்கம் அளிக்க வேண்டுமேன்று, ஆணையாள்ரின் சார்பாக அறிவிக்கை ஒன்று அனுப்ப்ப் பட்டிருந்த்து. இந்த அறிவிக்கைக்கு தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக, உரிய பதில் வழங்கி, ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரப் பட்டிருந்த்து.

இன்று காலை, சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலிருந்து வந்த கடித்த்தில், புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க்க் கோரி சட்ட ரீதியாக அணுகி தீர்வு காணலாம் (அது எங்களுக்கு தெரியாதா... ?) அதைவிடுத்து மேற்படி கோரிக்கைக்காக பொது இடங்களில் போராட்டத்தில் ஈடுபடுவது உகந்த்து அல்ல (அப்போ கண்ணாயிரம் அடிக்கடி போகும் இடங்களில் போராட்டம் நடத்தலாமா ) எனவே மனுதார்ரது விளக்கம் ஏற்புடையதாக இல்லை.

எனவே கிடைத்துள்ள ஆவணங்கள் மற்றும் தகுதியின் அடிப்படையில் ஆணை வழங்கப் படுகிறது. பொதுமக்கள் நலன் கருதியும் (எந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாதுன்னு உங்ககிட்ட சொன்னார் ?) சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதி காத்திட வேண்டியதாலும் (துவைக்காத சாக்ஸ் செக்கர்ஸ் ஹோட்டலில் காத்த மாதிரியா ?) இந்திய இறையாண்மைக்கும், பிரதேச ஒருமைப்பாட்டிற்கும் எவ்வித களங்கம் ஏற்படாவண்ணம் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியத்தினாலும், மனுதார்ர் 19.10.2010 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை, பூங்கா நகர், நினைவரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப் படுகிறது என்று அக்கடித்த்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த தடையாணையை மதிக்காமல், தடையை மீறி, ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயற்குழு முடிவு செய்துள்ளது.நாளை திட்டமிட்ட படி, காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

.

http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=127:2010-10-18-08-27-51&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

----------------------------------------------------------------------------------------------------------------------------

டிஸ்கி:

இவர்களை தூக்கி உள்ளே வைப்பார்கள் ..முட்டிக்கு முட்டி லாடம் கட்டுவார்கள்... வெளியே வந்ததும் .. இவர்கள் கோவம் வழக்கம் போல " ஜாபர் சேட்" "ஜாங்கீர் " என்று காவல்துறை அதிகாரிகள் மீதே பாயும்... ஏய்தவனை (கருநா) விட்டு அம்பை நோவானேன்...

http://savukku.blogspot.com/2010/07/blog-post_14.html

இந்தமாதிரி காவல்துறை எடுப்பு சோறுகளையெல்லாம் மாற்றுவது வெற்றியா? அவன் என்ன கருநாவின் உறவினரா...அவன் வாங்கிய காசுக்கு குலைக்கிறான் அவ்வளவே :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.