Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சீரழியும்-செத்து மடியும் எங்கள் தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 19, அக்டோபர் 2010 (7:49 IST)

இலங்கையில் சீரழியும்-செத்து மடியும் எங்கள்

தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக:கலைஞர்

இலங்கைத் தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்தர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

’’சென்னை விமான நிலையத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து அவரிடம் கடிதம் ஒன்றை அளித்தேன்.

அதில், இலங்கையில் இன்னமும் முகாம்களில் இருந்து வரும் 30 ஆயிரம் தமிழர்களையும் உடனடியாக அவரவர் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், போரினால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழர்களுக்கும் விரைவில் மறுவாழ்வு அளிக்க இலங்கை அரசை பயன்தரத்தக்க முறையில் வலியுறுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தேன்.

மேலும், தாமதமின்றி அரசியல் தீர்வுக்கான செயல்முறையைத் தொடங்க இலங்கை அரசு வற்புறுத்தப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தேன். அதுகுறித்து உடனடியாக கவனிப்பதாக சோனியா காந்தி என்னிடம் உறுதி அளித்தார்கள்.

இலங்கைத் தமிழர்கள் அந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெறுவதற்கு அரசியல் தீர்வு ஒன்றுதான் நிரந்தரத் தீர்வாக அமைந்திட முடியும் என்று, இன்று நேற்றல்ல; நீண்ட நெடுங்காலமாகவே திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கடந்த 1956-ம் ஆண்டு சிதம்பரத்தில் நடந்த திமுக பொதுக்குழுவில், இலங்கைத் தமிழர்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்த நாள் முதல் தொடர்ச்சியாக அவர்களது நல்வாழ்வு மற்றும் உரிமைகளுக்காக உரியவர்களிடத்தில் பல்வேறு வழிமுறைகளில் வலியுறுத்தி வருகிறோம்.

இந்திய நாட்டின் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு, இலங்கைத் தமிழர் பிரச்னையில் நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகள், எடுத்து வரும் நடவடிக்கைகள் எண்ணற்றவை. தமிழீழ ஆதரவாளர்கள் என்ற அமைப்பை உருவாக்கி, இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடிய அமைப்பின் தலைவர்களையெல்லாம் மதுரைக்கு அழைத்து வந்து நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் முன்னிலையில், சகோதர யுத்தம் கூடாது என கடந்த 1986-ம் ஆண்டு வேண்டுகோள் விடுத்தோம்.

அந்த வேண்டுகோள் முழுமையாக-மனப்பூர்வமாக அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டிருக்குமானால் வரலாறு வேறுவகையான வடிவத்தைப் பெற்றிருக்கும்.

ஆனால், சகோதர யுத்தத்தின் காரணமாக, இலங்கையில் நடைபெற்ற சோகமயமான நிகழ்ச்சிகள், அவற்றினால் இலங்கைத் தமிழர்கள் பட்ட-இன்னமும் பட்டுக் கொண்டிருக்கும் துன்ப, துயரங்களை சரித்திரம் நிச்சயமாக மறக்காது; மன்னிக்கவும் செய்யாது.

இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மாநிலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதால் நம்மைக் காத்திடும் பொறுப்பை இந்தியப் பேரரசு பார்த்துக் கொள்ளும். ஆம், பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உரிமையோடு எதிர்பார்க்கிறோம்.

உலகில் எங்கு இனப் படுகொலை நடந்தாலும் தட்டிக் கேட்கும் உணர்வும், உரிமையும் கொண்ட இந்தப் பெரிய ஜனநாயக நாடாம் இந்தியத் திருநாட்டில் மக்களாட்சியை நடத்துகிற மத்திய ஆட்சியின் கரங்களில் இருக்கும் போது அந்தக் கரங்களைப் பிடித்துக் கொண்டுதான் இலங்கையில் சீரழியும்-செத்து மடியும் எங்கள் தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக என கண்ணீர் மல்கக் கேட்கிறோம் என தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு எத்தகைய தீர்வு வேண்டுமென்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இன்னமும் தமிழர்களிடையே ஒற்றுமை ஏற்படவில்லையே என்று இலங்கை அதிபர் ராஜபட்ச போன்றோர் காரணம் சொல்லிக் கொண்டிருப்பது கவைக்குவதவாத வாதமாகவே இருக்கிறது.

அந்த வீண் வாதங்களையும், பிடிவாதங்களையும் விட்டுவிட்டு, இலங்கையில் தமிழர்கள், இனியாவது உரிமை பெற்ற தமிழர்களாக வாழ்வதற்கு, இலங்கை அரசு உறுதியளித்து, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தாய்த் தமிழகம் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து ஏங்கியவாறு இருக்கிறது.

இந்த ஏக்கத்தைப் போக்க வேண்டிய கடமை இந்திய பேரரசுக்கு இருக்கிறது என்பதை நினைவூட்டி அந்த கடமையை காலத்தே நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்துவதாக’’ தெரிவித்துள்ளார்.

nakkheran

முதல்வரே நீங்கள் 56 ஆண்டில் இருந்து 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் வரை எங்களுக்கு செய்த சகல உதவிகளுக்கும் நன்றியுங்கோ...இனிமேலாவது நீங்கள் கொஞ்சம் இளைப்பறூங்கோ....

மகிந்தாவிடம் தேவையானவற்றை அவர்களே கதைத்து பெற்றுக்கொள்ளட்டும்.....நீங்கள் உங்கள் தந்தி ,கடித செட்டைகளை குறையுங்கோ

தமிழர்களிடையே ஒற்றுமை ஏற்படவில்லையே என்று இலங்கை அதிபர் ராஜபட்ச போன்றோர் காரணம் சொல்லிக் கொண்டிருப்பது கவைக்குவதவாத வாதமாகவே இருக்கிறது.

காலம்டா.......ஒற்றுமைபற்றி நீங்கள் ...................

என்ன திடீரென்று எங்கள் மேல் உங்கள் கடைக்கண் பார்வை :)

நமீதாவின் படத்திற்கு வசனம் எழுதி முடிந்து விட்டதா :)

இவர் முதல்வர் பின்; கலைஞர் முன்.

வரும் சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் கலைஞர் தன் மக்களுக்கு பல சேவைகள் செய்ய முன் வந்துள்ளார். அவற்றுள் என்னை கவர்ந்தது இது:

கோவில்களில் பணியாற்றும், 10 ஆயிரம் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு, இரண்டு கோடியே 78 லட்ச ரூபாய் செலவில், இலவச சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

காமெடி தலைவர் கவுண்டமணிக்கு போட்டியாக திரையுலகில் இருந்திருந்தால் வந்திருக்க கூடியவர் நல்லவேளை அரசியல் பக்கம் ஒதுங்கி காமெடி செய்கிறார்.. :icon_idea:

போக இணையத்தில் கொள்கை பரப்புவதற்கெ சில கைத்தடிகளை வைத்திருப்பார்கள் போல தோன்றுகிறது.. தட்ஸ்தமிழில் ஒரு சொறி சந்திரன்.. தினமலருக்கு ஒரு ரமேசு.. தமிழ்மணத்திற்கு ஒரு பாலா எண்ற கொல்டி.. வாங்குற காசுக்கு வஞ்சம் இல்லாம வேலை செய்யுறார்கள்.. முழுநேரதொழிலெ இதான் இன்று இருப்பவர்களுடன் பகுதி நேர கருத்தாளர்கள் போதுவது சிரமம் என்பது எனக்கு தெரியும்.. ஆனால் புதியதாக இணையத்தில் இணைபவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினருக்கு தவறான புரிதலை ஏற்படுத்தி விட கூடும் என்பதற்காகவே இந்த கைத்தடிகளுடன் அக்க போர் செய்ய நேரிடுகிறது... மற்ற இணையதளங்களை கூர்ந்து கவனித்து வருகிறேன் .. இதற்கு இன்னும் எவனும் கமெண்டு ஆரம்பிக்கவில்லை... :)

ஒரு திமுக உடன்பிறப்பு கைத்தடியின் கருத்து இது...

சீமான் கைதின் போது எழுதியது..

முதலில் சீமான் செய்த குற்றம் என்ன என்று ஆராயவேண்டும். டாக்டர் முதல்வர் கலைஞர் அவர்கள் மீனவர் பிரச்சனைக்காக எத்தனையோ திட்டங்களள கண்டுபிடித்து அதை செயல்படுத்தி இன்று மீனவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வழிவகை செய்து இருக்கிறார். இல்லாத ஒரு பிரச்சனையை ஏன் கிளப்பவேண்டும் மேலும் அந்தப்பிரச்சனையில் கலைஞரை கண்ணியமில்லாமல் சீமான் விமர்சித்து இருக்கிறார்.தேசியபாதுகாப்பு இறையாண்மை என்பது காலத்துக்கு காலம் கட்சிக்கு கட்சி வேறுபடும். அது ஒரு பிரச்சனையே இல்லை. கலைஞரை விமர்சிக்கும் அளவுக்கு என்ன பிரச்சனை தமிழ்நாட்டில் இருக்கிறது. இல்லாத விசயத்தை பேசுவதால்தானே அனைத்து பிரச்சனையும் இதை சீமான் புரிந்து கொள்ள வேண்டும். சீமானை ஏன் திரையுலகம் கொண்டு வரவேண்டும். அவர் ஒரு கட்சி வைத்து நடத்துகிறார். திரை உலகத்திற்கும் கட்சிக்கும் வேறுபாடு உண்டு. அசின் அவர்கள் மேல் ஒரு தவறும் இல்லை. அவர் கலைஞர் சொன்னப்டி நடந்தார். ஈழத்தமிழருக்கு உதவி செய்தார். கலைஞர் மிக தெளிவாக ஒன்றற சொல்லி இருக்கிறார். அதாவது சிங்களரை கோபப்படுத்த வேண்டாம். பொறுமையாக இருந்து தாழ்ச்சியாக நடந்து கொண்டால் எல்லாம் கிடைக்கும் என்று. அதே போல் அசின் அவர்கள் ஒரு உதாரணமாக திகழ்ந்தார். இலங்கைக்கு சென்று மிகவும் தாழ்ச்சியாக பொறுமையாக நடந்து கொண்டாரே. அத்னால் இன்று கண்ணில்லாத ஏழை தமிழருக்கு கண் கிடைத்து விட்டதே. அவர் செய்த மருத்துவ சேவையால் ஒன்று அனைத்து நோய்களும் தீர்ந்துவிட்டன ஏழை தமிழருக்கு. இனிமேல் அசினை கோபப்படுத்தினால் அவர் கழகத்தின் அடிமட்டத்தொண்டர்களிடம் அவர்கள் ப்ரீயாக இருக்கும்போது செல்ல வேண்டும். முறையிட வேண்டும். அதற்குபிறகு கலைஞர் அசினுக்கு எந்த பிரச்சனனயும் வராதவாறு பார்த்துக்கொள்வார். ரஜினி காந்துக்கு இது மாதிரி பிரச்சனை வந்த போது ரஜினி\க்கு உதவி செய்ததரே க்லைஞர்.

கருநா உண்ணவிரதத்தின் போது எழுதியது..

அய்யா நீங்கள் வரம்பு மீறுகிறீர்கள். உங்களைப்போன்றோர் மூணு மணிநேரம் உண்ணாநோன்பு என்று குறை சொல்கிறீர்கள் தவிர ஏன் மூன்று மணிநேரத்தில் உண்ணாவிரதம் முடிந்தது என்று தெரிந்து கொள்ள வில்லை. எத்தனையோ பேர் வாரக்கணக்கில் கூட உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால் உண்ணாவிரதத்திற்கான நோக்கமே நிறைவுறாமல் முடிவுக்கு வரும் உண்ணாவிரதம் ஆனால் டாக்டர் முதல்வர் கலைஞர் அவர்கள் உண்ணாவிரதத்தின் மூன்று மணிநேரத்தில் போர் உடனே நின்றது. லச்சக்கணக்கான உயிர்கள் காக்கப்பட்டன. நோக்கம் நிறறவேறியபடியால் உண்ணாவிரதம் மூண்று மணியில் நின்றது. அந்த அளவுக்கு கலைஞர் அவர்கள் செல்வாக்கு மிக்கவராக இருந்தார் என்பது தெரியவில்லை உங்களுக்கு

இந்த மாதிரி கைத்தடிகள் எப்பவாது சென்னையில் ஒன்று கூடலின் போது சிக்கினார்கள் என்றால் அவர்களின் கோணவாய் நேர்வாயாக இந்த தோழரால் மாற்றப்படும் .. :lol: அதே போல இந்த சந்திரன ராஜா... துரை.... இணைய கோஸ்டிகளை ஈழத்தோழர்கள் கவனித்து கொள்ளவேண்டும்.. :D

டிஸ்கி:

தோழர் அகூதா போல வெள்ளைக்காரன் சைட்டில் கமெண்டு எழுதுவதும் சிங்களர்கள் கமெண்டுகளுடன் மோதுவதிலும் பார்க்க ......இந்த மாதிரி கைத்தடிகளை முதலில் கவனிக்கணும் ..... :)

கோணவாய்= பொய் புளுகுகளை அவிழ்த்துவிடும் வாய்

நேர்வாய்= உண்மைய சொல்லும் வாய் :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.