Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்புலிமாமாகதை வேண்டாம் முடியுமா முடியாதா மஹிந்த உறுதியாகசொல்லவேண்டும். மனோ கணேசன்

Featured Replies

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 26, 2010

மஹிந்த இராஜபக்‌ஷ அம்புலிமாமா கதை எல்லாம் எமக்கு சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். அரசியல் தீர்வில் தமக்கு உடன்பாடு உண்டா, இல்லையா என்பதை மஹிந்தா உடனடியாக, பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்காமல் தவிர்ப்பதற்கு ஜனாதிபதி சொல்லும் அம்புலி மாமா கதைதான், தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின்மை என்பதாகும். இந்தக் கருத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் சாடினார்.

தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின்மை காரணமாக அரசியல் தீர்வு வழங்க முடியாதுள்ளது என ஜனாதிபதி கூறியது தொடர்பாகக் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு;

போருக்கு முன்னரும், போரின் போதும் பயங்கரவாதத்தைக் காரணங்காட்டி அரசியல் தீர்வு ஒத்திவைக்கப்பட்டது. இன்று போர் முடிந்த பின்னர் தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்ற காரணத்தைக் கண்டுபிடித்துக் காட்டி அரசியல் தீர்வு மறுக்கப்படுகின்றது. இது அம்புலி மாமா புத்தகத்தில் வரும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் விக்கிரமாதித்தன் கதையை நினைவுப்படுத்துகின்றது.

ஜனாதிபதியே நியமித்த சர்வக்கட்சிக் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு பலமாதங்கள் ஆகிவிட்டன. அதேபோல் இன்றைய அரசமைப்பில் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படாமல் பல்லாண்டுகளாக இழுத்தடிக்கப்படுகின்றது. இந்நிலையில், தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையின்மையை காரணங்காட்டுவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்.

ஜனாதிபதியின் இந்தக் கருத்திற்கு இந்தியாவிலும் எதிரொலி கிளம்பியுள்ளது. தமிழக முதல்வர் இந்த நிலைப்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக முதல்வரும், இந்திய நடுவன் அரச தலைவர்களும் அரசியல் தீர்வை வலியுறுத்துவது தொடர்பில் இலங்கை அரசின் ஆதரவாளர்கள் அவசர அவசரமாக விமர்சனம் செய்கின்றார்கள்.

ஆனால் இந்த அக்கறையும், அவசரமும் ஏற்கனவே உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் சர்வக்கட்சி உடன்பாடுகளையும் 13 ஆவது திருத்தத்தையும் அமுல்படுத்துவதில் கிஞ்சித்தும் காட்டப்படவில்லை.

போர்க் காலகட்டத்தில் இலங்கை அரசிற்கு உறுதுணையாக தமிழக அரசும், இந்திய அரசும் இருந்தன. இது அனைவரும் அறிந்த பகிரங்க உண்மையாகும். இந்தத் துணையிருப்பிற்கு நிபந்தனையாக அரசியல் தீர்வை போர் முடிந்தவுடன் நடைமுறை படுத்துவோம் என இலங்கை அரசு உறுதியளித்திருந்ததும் பகிரங்க உண்மையாகும்.

13 ஆவது திருத்தத்திற்கு மேலதிகமாக தீர்வை முன்வைப்பேன் என இந்திய ஊடகங்களுக்கு ஜனாதிபதி பலமுறை கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் நண்பரான பிரபல இந்திய ஊடகவியலாளர் "இந்து' ராம் தனது பத்திரிகையில் 13 ஆவது திருத்தத்திற்கு மேல் செல்லும் தீர்வு பற்றி பலமுறை எழுதியிருந்தார். இன்று அதே "இந்து' ராம் தனது பத்திரிகையில் அரசியல் தீர்வில் தொடர்பிலான இலங்கை அரசின் அக்கறையின்மை சம்பந்தமாக எழுதுமளவிற்கு நிலைமை முற்றியுள்ளது.

எனவே, இன்று தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையின்மை பற்றி ஜனாதிபதி கருத்துத் தெரிவிப்பது வேடிக்கையானதாகும். அப்படியே பார்த்தாலும்கூட வடக்கு, கிழக்கிலே தமிழ்க் கட்சிகள் மத்தியில் அரசு நினைப்பதைப் போல் பாரிய ஒற்றுமையின்மை கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களை பெற்ற பல கட்சிகளின் கூட்டமைப்பாக இருக்கின்றது.

அதேவேளையில் மூன்று ஆசனங்களை பெற்ற ஈ.பி.டி.பியுடன் கூட்டுச் சேர்ந்துள்ள இன்னும் பல கட்சிகள் தமிழ்க் கட்சிகளின் அரங்கமாகச் செயற்படுகின்றன. ஆக இந்த இரண்டு அணிகள்தான் வடக்கு, கிழக்கில் காணப்படுகின்றன. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயும் அரசியல் தீர்வு தொடர்பாக பாரிய வேறுபாடுகள் இருப்பதாகத் தோன்றவில்லை. குறிப்பாக 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது சம்பந்தமாக ஒத்த கருத்து நிலவுவதாகவே நாம் நம்புகின்றோம்.

எனவே, அரசியல் தீர்வுக் கொண்டுவருவதில் தமக்கு உடன்பாடு இருக்குமானால் அதை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அரசியல் தீர்வை வழங்குவதற்கு உடன்பாடு இல்லாவிட்டால், அதையும் அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அரசின் நிலைப்பாட்டை உலகம் அறிந்துகொள்வதற்கு அது வழியை ஏற்படுத்தும்.

இப்படி அவர் தெரிவித்தார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.