Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

[b]இறந்தும் வாழும் உன்னதம்...[/b]

Featured Replies

இறந்தும் வாழும் உன்னதம்...

தமிழ்நாட்டில் மூளைச்சாவுக்கு ஆளானவர்களின் உடல் உறுப்புகளைத் தானம் பெற்று, தேவையானவர்களுக்குப் பொருத்தும் திட்டம் தொடங்கப்பட்டு, செப்டம்பர் மாதத்துடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. தமிழகம் இதில் முன்னோடியாகத் திகழ்கிறது என்பது பாராட்டுக்குரியது.

மாற்று உறுப்புகள் பொருத்தும் சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகள் மட்டுமன்றி, இரண்டு அரசு மருத்துவமனைகளும்கூட சாதனைகள் நிகழ்த்தியுள்ளன என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பொது சுகாதாரத் துறைச் செயலர் வி. கே. சுப்புராஜ் கூறியுள்ள குறிப்புகளின்படி, தமிழக மருத்துவமனைகளில் மொத்தம் 716 பேருக்கு மாற்று உறுப்புகள் பொருத்தும் சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இந்த அளவுக்கு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. முதலாண்டைக் காட்டிலும் இரண்டாம் ஆண்டு இதன் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்திருப்பதையும் காண முடிகிறது.

-- முதலாண்டு 42 பேரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டுள்ளன.

-- இரண்டாம் ஆண்டு இந்த எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய அளவில் உடல் உறுப்பு தானம் செய்வோரின் சராசரி எண்ணிக்கையைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் 10 மடங்கு அதிகம்.

-- 25 பேருக்கு இதயம்,

-- இரண்டு பேருக்கு நுரையீரல்,

-- 110 பேருக்கு கணையம்,

-- 236 பேருக்கு சிறுநீரகம் கிடைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் 48 மருத்துவமனைகளுக்கு உடல் உறுப்பு தானம் பெற, தமிழக அரசால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தும்கூட, இரண்டு அரசு மருத்துவமனைகள் உள்பட மொத்தம் 10 மருத்துவமனைகளில் மட்டுமே உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளது. மற்ற 38 மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தான நடவடிக்கைகள் ஏதும் இல்லை.

இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லலாம். முதலாவது, மக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை. மூளைச்சாவு ஏற்பட்டவரை, இந்த சமூகத்துக்குப் பயன்படும்படி உடல் உறுப்பு தானத்துக்கு உள்படுத்த முடியும் என்பதைப் பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்கள் அறிந்திருக்கவில்லை.

அப்படியே அறிந்திருந்தாலும் உடல் உறுப்புகள் தானம் செய்வதைப் பலர் விரும்பாத நிலைமையும் இருக்கிறது. இன்றைய அரசு செய்ய வேண்டிய வேலை, மக்களிடம் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வையும், உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருவோரை ஊக்கப்படுத்தும் சலுகைகளையும் அறிவிப்பதுதான். கண் தானம் பெறுவதிலும்கூட தொடக்க காலத்தில் சுணக்கமான நிலைமையே இருந்தது. நெருங்கிய ரத்த உறவு இறந்து கிடக்கும்போது சடலத்தில் கத்தி படுவதை ஒரு குறையாக நினைத்த காலம் இருந்தது. ஆனால், மெல்ல மெல்ல இந்த மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது.

இறந்த பிறகும் உங்கள் கண்கள் உலகைக் காணும் என்கிற விளம்பரங்கள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்ல, கண் தானம் பெறுவதற்கு இறந்தவர்கள் பதிவு செய்திருக்காவிட்டாலும் அவரது வாரிசுகள் விரும்பினால் தானம் அளிக்கலாம் என்று நிபந்தனைகள் தளர்த்தப்பட்டபோது கண்தானம் அதிக அளவில் கிடைக்கத் தொடங்கியது. இப்போது, துக்க வீட்டில் இறந்தவர் கண்தானம் செய்தவர் அவருக்கு நன்றி என்று கண்தானம் பெற்ற அமைப்பும், மருத்துவமனையும் பேனர் கட்டுவதை அவர்களே பெருமையாகக் கருதும் நிலைமை உருவாகியிருக்கிறது. இத்தகைய நிலையை உடல்உறுப்பு தானத்திலும் ஏற்படுத்த முடியும்.

மேலும் உடல்உறுப்பு தானம் செய்தவர்களில் 18 விழுக்காட்டினர் பெண்கள். 82 விழுக்காட்டினர் ஆண்கள் என்கிற பாலின வேறுபாடும் இப்போது இருக்கிறது. இதற்குக் காரணம், மூளைச்சாவு ஏற்படுவோரில் பெரும்பாலும் விபத்தில் சிக்கியவர்கள்; ஆகவே ஆண்கள்தான் அதிக எண்ணிக்கையில்- அதிலும் 21 வயது முதல் 50 வயதுக்குள் இருப்பவர்கள்- விபத்தைத் தொடர்ந்து மூளைச்சாவுக்கு ஆளாகிறார்கள். ஆகவே, அனைத்து வகை வாகன ஓட்டுநர்களிடத்திலும் உடல்உறுப்பு தானம் குறித்த அவசியம் பற்றியும், அதன் நன்மை பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மிகவும் பயனுள்ளதாக அமையும். எந்தெந்த உடல்உறுப்புகள் யாருக்குப் பொருந்தும், அப்படிப் பொருத்தப்படக்கூடிய நபர் இதனால் வாழ்நாள் நீட்டிக்கப் பெறுவாரா, யாருக்கு உடனடியாகத் தேவைப்படுகிறது என்பதை மருத்துவக் குழுதான் தீர்மானிக்க முடியும்.

உடல்உறுப்புதானம் என்பது பாராட்டுக்குரிய விஷயம் என்றாலும், இதில் கார்ப்பரேட் மருத்துவமனைகளே அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன என்பதும், இவற்றால் பயனடையக்கூடிய நோயாளிகள் பெரும்பாலும் இந்த மருத்துவமனையின் கட்டணத்தைச் செலுத்தக்கூடிய வசதியுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நினைக்க வேண்டியிருக்கிறது. மேலும், ஓர் உடல்உறுப்பை இன்னொரு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் நேரம், தூரம், கொண்டுசெல்வதற்கான பாதுகாப்பான மருத்துவப் பெட்டகங்கள், உடல்உறுப்பை சரியான முறையில் எடுத்துக்கொடுக்கும் சிறப்பு மருத்துவர் என்று பல்வேறு மருத்துவ வசதிகளும்கூட அவசியமாகிறது. இந்த வசதிகள் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இருக்கிறது என்ற நிலைமையை மாற்றி, அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

உடல்உறுப்பு வேண்டுவோர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், அவர்கள் தங்கள் பெயரை வெளிப்படையாகப் பதிவு செய்துகொள்ளவும், அந்தப் பட்டியலை அனைவரும் பார்க்கும் வகையில் வெளிப்படையாகவும் இருக்கச் செய்தால், இந்த உடல்உறுப்பு தானத்தில் நம்பகத்தன்மை ஏற்படும். பொதுவாக உடல்உறுப்பு மாற்றுச் சிகிச்சையை ஒரு சாதனையாகச் சொல்லப்படும் அளவுக்கு, தொடர் மருத்துவச் செலவுகள் பற்றி மருத்துவர்கள் சொல்வதில்லை. சாதாரணமாக சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்து கொண்டவர் குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள மருந்துகள் உட்கொள்ள வேண்டியிருக்கும் என்கிற நடைமுறை உண்மைகளையும் மருத்துவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். உடல்உறுப்பைப் பொருத்திவிட்டு, அந்த மருத்துவச் செலவுகளை அவர்களால் செலவிட முடியாதநிலையில், அவர் இறந்துபோவாரெனில் உடல்உறுப்பு தானம் அதன் நோக்கத்தையே பொருளற்றதாகச் செய்துவிடும். சாதனைகளைச் சொல்லி பெருமை தேடிக் கொள்வதில் தவறில்லை. குறைகளைக் களைந்து தானத்தின் பலன் முழுமையாக பயனாளிகளுக்கு கிடைக்கவும், இந்த வாய்ப்பு வசதி படைத்தவர்களுக்கு மட்டுமல்லாமல், சாதாரணக் குடிமக்களுக்குக் கிடைக்கவும் செய்தால் மட்டுமே நாம் உண்மையான பெருமிதம் அடைய முடியும்!

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.