Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திரா காந்தி - எம்.ஜி.ஆர். - ஈழப் போராளிகள்

Featured Replies

1983 ஜூலைக் கலவரத்தின் பின்னர்தான் இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாக உத்தியோகபூர்வமாகத் தொடர்புபட்டதெனக் கூறிக்கொண்டாலும், 1982 ஆம் ஆண்டிலேயே ஈழப் பிரச்சினையுடன் தமிழகத்துக்குப் பெருமளவு தொடர்புகள் நேரடியாகவே ஏற்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை. இந்திய மத்திய அரசும் இலங்கை நிகழ்வுகளை குறிப்பாக வடக்கில் உருவாகியிருக்கும் மாற்றங்களை நுணுக்கமாக அவதானித்துக்கொண்டுதான் இருந்தது.

இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைகள் காரணமாக 1982 ஆம் ஆண்டிலேயே பெருமளவு தமிழர்கள் வடபகுதியிலிருந்து படகுகள் மூலமாக தமிழகத்துக்கு அகதிகளாகச் செல்லத் தொடங்கிவிட்டனர். இதனைவிட போராளி அமைப்புக்களும் தமக்குரிய பின்தளமாக தமிழகத்தைப் பாவிக்கத் தொடங்கிவிட்டன. போராளிகளுக்கான புகலிடமாக மட்டுமன்றி, அவர்களுக்கான பயிற்சிக் களமாகவும் 1982 ஆம் ஆண்டிலேயே தமிழகம் மாற்றமடைந்திருந்தது.

இதேவருடத்தில் சென்னையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றும் தமிழகத்தில் தமிழ்ப் போராளிகள் இருப்பதை உறுதிப்படுத்தியது. சென்னை பாண்டி பஜார் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் உமா மகேஸ்வரன் உட்பட மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய இலங்கையின் ஜனாதிபதி ஜெயவர்த்தன அவர்களை இலங்கைக்கு நாடு கடத்துமாறு இந்தியாவைக் கேட்டுக்கொண்டார்.

அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள போராளிகளின் விவகாரத்தைக் கையாளும் பொறுப்பை அவர் உள்ளுர் பொலிஸாரிடம் ஒப்படைக்கவில்லை. தமிழக டி.ஐ.ஜி.யாக இருந்த மோகனதாஸிடமே இந்தப் பொறுப்பை எம்.ஜி.ஆர். ஒப்படைந்திருந்தார். மோகனதாஸ் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய ஒருவராக இருந்தமையாலேயே இந்தப் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்து.

இருந்தபோதிலும் கைதான போராளித் தலைவர்களை இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே மோகனதாஸ் கொண்டிருந்தார். ஆனால், இவ்விடயத்தில் தலையிட்டு, 'போராளி தலைவர்களுக்கு இந்தியாவில் புகலிடம் தரப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட போராளிகளைத் திருப்பி அனுப்பக் கூடாது. அங்கு அவர்களுக்கு ஆபத்து உள்ளது" என முதல் தடவையாக குரல் கொடுத்தவர் பழ.நெடுமாறன்தான்.

நெடுமாறனின் இந்தக் கருத்தை எம்.ஜி.ஆரும் எற்றுக்கொண்டார். போராளிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என தமிழக அரசு மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது. மத்திய அரசும் இதனை ஏற்றுக்கொண்டது. போராளிகளைத் திருப்பி அனுப்பப்போவதில்லை என்ற அறிவிப்பு மத்திய அரசிடமிருந்தும் வெளியாகியது.

ஆனால், இந்திரா காந்தி இவ்வாறான ஒரு முடிவை எடுத்தமைக்கு தமிழக அரசின் அழுத்தம் மட்டும் காரணமாக இருக்கவில்லை. இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்கு இந்தியா வகுத்த திட்டமே இதற்குப் பிரதான காரணமாக இருந்தது.

இக்காலப் பகுதியில் இலங்கை தொடர்பாக இந்தியா எவவாறான திட்டத்தை வகுத்து வைத்திருந்தது என்பதையிட்டு தமிழக டி.ஐ.ஜி.யாகவும் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரியவருமாக இருந்த கே.மோகனதாஸ் தான் எழுதிய 'எம்.ஜி.ஆர். நிஜமும் நிழலும்" என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

'நிலைமைகளைத் தமக்குச் சாதகமாக்கிக்கொள்ள டில்லி மாபெரும் திட்டங்களைத் தீட்டியுள்ளது என எனக்குப் பேச்சுவாக்கில் தெரிவிக்கப்பட்டது. டில்லியிலுள்ள எனக்குத் தெரிந்தவர்கள் இலங்கையில் இந்தியா ஒரு பங்களாதேஷை உருவாக்கலாம் என எனக்குத் தெரிவித்தார்கள். இந்து மா சமுத்திரப் பகுதியில் திருமலை ஒரு முக்கிய துறைமுகமாகும். இந்தியா இந்த விஷயத்தில் அக்கறை காட்டுகின்றது என்ற செய்தியும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

பெருமளவுக்கு நம்பத்தகுந்ததான இந்தச் செய்திகளை நான் எம்.ஜ.ஆருக்குச் சொன்னேன். அவர் ஒரு முனிவரைப்போல சலனமற்று அமைதி காத்தார். ஆயுதங்களுடன் மாநிலத்தைச் சுற்றிவரும் இந்த இளைஞர்கள் விரைவில் தமிழகத்தை ஒரு லெபனானாக மாற்றிவிடும் அபாயம் உள்ளது. அத்துடன் புதுடில்லியும் இதனை ஒரு முக்கிய பிரச்சினையாக நினைக்கவில்லை என்பதையும் எம்.ஜி.ஆரிடம் எடுத்துச் சொன்னேன்."

ஈழப் போராளிகள் தொடர்பில் எம்.ஜி.ஆர். கொண்டிருந்த நிலைப்பாட்டைக் குழப்புவதற்கு 1982 ஆம் ஆண்டிலேயே மோகனதாஸ் முற்பட்டபோதிலும், எம்.ஜி.ஆர். அவ்விடயத்தில் தெளிவாகவே இருந்துள்ளார். அத்துடன் ஈழப் போராளிகளைப் பயன்படுத்தி இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனவை அடிபணிய வைப்பதற்கு இந்திரா காந்தி போட்டிருந்த உபாயங்களைக் குழப்புவதற்கும் அவர் விரும்பவில்லை என்பது தெரிகின்றது.

இவ்வாறு மத்திய அரசும், தமிழக அரசும் ஈழத் தமிழர் பிரச்சினையில் அக்கறையாக இருந்த ஒரு காலகட்டத்தில்தான் 83 ஜூலைக் கலவரம் வெடித்தது. இது தொடர்பில் வெளியான செய்திகள் தமிழகத்தில் பெரும் உணர்ச்சிக்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் இது தன்னிச்சையான எதிர்ப்பைக் கிளறிவிட்டது. அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, மாணவர்கள், அரச ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினருமே போராட்டங்களுக்காக வீதிகளில் இறங்கிய நிலையைக் காண முடிந்தது. பெருமளவு ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் தமிழகத்தில் இடம்பெற்றது.

இனப்படுகொலையைத தடுத்து ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அமைப்புக்கள் பலவும் மத்திய அரசை வலியுறுத்தத் தொடங்கியிருந்தன.

இதன் உச்சகட்டமாக இனப்படுகொலைக்குத் தீர்வைக் காண, மத்திய அரசின் கவனத்தைக் கவர ஒரு வார காலம் துக்கம் அனுஷ்டிப்பதற்கும் அதன் இறுதிநாளில் முழு அடைப்பை மேற்கொள்வதற்கும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தீர்மானித்தார். அவரது அறிவிப்பு வெளியான உடனடியாகவே தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் அமைப்புக்களும் அதற்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்டன. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இதற்கும் ஒரு படி மேலே சென்று முழு அடைப்பு நடைபெறும் தினத்தன்று மத்திய அரசின் அலுவலகங்கள் அனைத்தையும் மூடுவதற்கு உத்தரவிட்டார்.

இந்திரா காந்தியின் இந்த உத்தரவு இனப்படுகொலைக்கு உள்ளாகியிருந்த ஈழத் தமிழர்களை அரவணைப்பதாகவும், அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதாகவும் அமைந்திருந்தது. மத்திய அரசு இவ்வாறான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது இதுதான் முதன்முறையாக இருக்க வேண்டும்.

இந்திரா காந்தியும், எம்.ஜி.ஆரும் ஈழத் தமிழர்கள் விடயத்தில் இவ்வாறு பெயரெடுப்பது தமிழகத்தில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் மு.கருணாநிதிக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆரை முந்திச் செல்லும் வகையில் சென்னையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேரணி ஒன்றை நடத்திக்காட்டிய அவர், முழு அடைப்பு அறிவிக்கப்பட்ட தினத்தில் ரயில் மறிப்புப் போராட்டத்தை நடத்தப்போவதாகவும் அறிவித்தார். இதனால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளைக் கருத்திற்கொண்ட மத்திய அரசு தமிழகத்துக்கான அனைத்து ரயில் சேவைகளையும் அன்று நிறுத்திவைக்குமாறு உத்தரவிட்டது.

தமிழகத்தின் உணர்வுகள் இந்தளவுக்குக் கொந்தளித்துக்கொண்டிருந்த ஒரு பின்னணியில்தான் இது தொடர்பில் கடுமையான அறிக்கை ஒன்றை இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி வெளியிட்டார். அருகேயுள்ள நாடொன்றில் நிலைமைகள் இந்தளவுக்கு மோசமாகச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் இந்தியா மெனமாக இருந்துவிட முடியாது என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தது ஜெயவத்தனவுக்கு ஒரு எச்சரிக்கையாகவே அமைந்திருந்தது.

இந்த எச்சரிக்கையை வெளியிட்ட இந்திரா காந்தி, இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக தன்னுடைய விஷேட தூதுவராக அப்போது இந்திய வெளிவிவகார அமைச்சராக இருந்த நரசிம்மராவை 1983 ஜூலை 26 ஆம் திகதி கொழும்புக்கு அனுப்பிவைத்தார். அதாவது கொழும்பில் கலவரங்கள் ஆரம்பமாகி மூன்றாவது நாள் நரசிம்மராவ் கொழும்புக்குப் புறப்படுகின்றார். அப்போதும் தென்னிலங்கை எரிந்துகொண்டுதான் இருந்தது.

ஜனாதிபதி ஜெயவர்த்தனவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய போதே தனது பிரதிநிதியாக நரசிம்மராவை அனுப்பிவைக்கப்போவதாக இந்திரா காந்தி தெரிவித்தார். இதனை ஜெயவர்த்தனவும் ஏற்றக்கொண்டார். தன்னுடைய பிரதிநிதியுடன் நடத்தப்படும் பேச்சுக்களின் மூலம் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் தாக்குதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என இந்திரா காந்தி வலியுறுத்தினார்.

'வரட்டும் பார்ப்போம்" என ஜெயவர்ர்தன அப்போது மனதுக்குள் நினைத்திருக்கலாம். ஏனெனில் அப்போதைய நிலையில் நரசிம்பராவை வரவேற்கும் நிலையில் ஜெயவர்த்தன இருக்கவில்லை. கொழும்பு எரிந்துகொண்டிருக்கும் நிலையில் அங்கு சென்று இறங்கிய நரசிம்மராவ் நடத்திய பேச்சுக்களின் சுவாரஸ்யமான பக்கங்களை அடுத்த வாரம் பார்ப்போம்...

http://www.pooraayam.com/special-articles/1299-eelamnindia

பூராயத்துக்காக

சிவயோகன்

Edited by ஊர்பூராயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.