Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச ஆதரவு சிங்கள குடியேற்றம் அபாயகரமானது - ஆணைக்குழு முன் பேராயர் மல்கம் ரஞ்சித் சாட்சியம்

Featured Replies

வட,கிழக்கின் குடிப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவதானிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் மேற்கொள்ளப்படும் புதிய காலனித்துவமாக இது பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையானது மிகவும் அபாயகரமானதாகும். இதனை தவிர்த்துக் கொள்வது அவசியமென்று கர்தினாலும் கொழும்பு மறைமாவட்ட பேராயருமான வண. மல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அமர்வுகள் நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள கதிர்காமர் நிலையத்தில் இடம்பெற்ற போது தனது கருத்துகளை முன்வைத்த பேராயர்;இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவது அவசியமென நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் கூறினார். பேராயர் மல்கம் ரஞ்சித் இது தொடர்பாக மேலும் கூறியதாவது;கடந்த காலத்தில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினராலும் தவறுகள் இழைக்கப்பட்டன. இப்போது அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதே மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறு பாடங்களைக் கற்றுக்கொள்ளுதல் மற்றும் பரஸ்பர மன்னிப்பைக் கோருவதற்கான தன்மைகள் உண்மையான நல்லிணக்கத்துக்கு வழிவகுத்துக் கொடுக்கும்.

அரசியல் தீர்வானது வன்முறைகள், இன ரீதியான சௌஜன்யமின்மை, சமூகங்களின் மத்தியிலான சந்தேகம், அவநம்பிக்கை என்பவற்றுக்கான அடிப்படைக் காரணங்களை இல்லாதொழிக்க உதவியாக அமையும்.சுதந்திரம் பெற்ற காலம் முதல் பெரும்பான்மை வாத ஜனநாயகம் படிப்படியாக ஊடுருவியது. பெரும்பான்மை சமூகத்தின் மொழி, மதம் என்பனவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இவை இன ரீதியான பதற்றங்களை அதிகரிக்கச் செய்கின்றது. உண்மையான பல்லினக் கோட்பாட்டை இவை உதாசீனப்படுத்தின.1978 அரசியல் அமைப்பில் சிங்கள மொழிக்கும் பௌத்தத்திற்கும் முன் உரிமை அளிக்கப்பட்டன. இங்கு நாட்டில் பிளவுபட்ட தன்மைகளை நோக்கி சாய்வதற்கு இவை வழிவகுத்தன.

சுதந்திரத்திற்குப் பின்னர் பதவியிலிருந்த அரசாங்கங்களால் பாரிய அளவில் குடியேற்றத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. நல்ல நோக்கத்துடன் இருந்தாலும் கூட அவை இலங்கை மக்களின் இன, மத ரீதியான பன்முகத்தன்மைக்கு மதிப்பளிக்கக் கூடியவையாக அமைந்திருக்கவில்லை. இந்த பிராந்தியங்களை கலாசார ரீதியான தன்மைகள் படிப்படியாக உடைக்கப்படும் முயற்சிக்கு இவை வழிவகுத்தன.சோல்பரி அரசியல் அமைப்பில் (பிரிவு 29) உள்ளீர்க்கப்பட்டிருந்த சிறுபான்மையினருக்கான பாதுகாப்புகளை இல்லாமல் செய்பவையாக அல்லது அவற்றை விட மேலோங்குபவையாக 1972 குடியரசு அரசியலமைப்பும் 1978 அரசியமைப்பும் மேற்கொள்ளப்பட்டது.

மதச்சார்பற்ற ஜனநாயகமாக இலங்கை இருக்கவேண்டியது அவசியமாகும். எண்ணிக்கையை பொருட்படுத்தாத விதத்தில் சகல இன,மத குழுக்கள் ஒரே நாட்டில் பிரஜைகளாக தம்மை அடையாளப்படுத்தும் விதத்தில் மதச்சார்பற்ற ஜனநாயகமாக இலங்கை விளங்கவேண்டும். தேசிய ஒருமைப்பாட்டை தேடும் முயற்சியில் இன, மதங்களைக் கொண்ட அரசியல் கட்டமைப்புகள் தவிர்க்கப்படுவது அவசியமாகும்.30 ஆண்டுகளுக்கு மேலாக எமது தாய் நாட்டை பாதித்திருந்த வலியை ஏற்படுத்தும் மோதலின் ரணங்களை ஆற்றுப்படுத்தும் விதத்தில் எமது பரிந்துரைகளை இந்த ஆணைக்குழு பரிசீலணைக்கு எடுக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த சிபார்சுகளை சமர்ப்பிக்கின்றோம்.

எதிர்காலத்தில் சமாதானம், சௌஜன்யம் என்பன தொடர்பான திடமான உணர்வைக் கொண்ட அத்திபாரம் இடப்படவேண்டும் என்பதற்காக இந்தப் பரிந்துரைகளை நாம் முன்வைக்கிறோம்.சிங்களமும் தமிழும் உத்தியோகபூர்வ மொழிகளாகவும் தேசிய மொழிகளாகவும் அரசியல் அமைப்பில் பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த உண்மைக்கு தீவிரமான முறையில் அங்கீகாரம் வழங்கப்படுவது அவசியம். அரசாங்க நிர்வாகப் பிரிவுகளில் சிங்களம் பேசும் அதிகாரிகளே அதிகளவில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களுடன் தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாதுள்ள அதேசமயம் அரசாங்க அலுவலகங்களில் தமிழ் பேசும் அதிகாரிகளுக்குத் தட்டுப்பாடு காணப்படுகிறது.வடக்கு,கிழக்கில் பாரிய அளவில் மேற்கொள்ளப்படும் குடியேற்றமானது கலாசார ரீதியான ஆக்கிரமிப்பு என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. தமது பாரம்பரிய வதிவிடங்களில் கலாசார ஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது என்ற அச்ச உணர்வு அவர்கள் மத்தியில் உள்ளது.இன,மத,சமூக அந்தஸ்தை பொருட்படுத்தாமல் சகல பிரஜைகளுக்கும் இந்த நாடு சொந்தமானது என்ற உணர்வை ஏற்படுத்துவதற்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும். மேலாதிக்கவாத சிந்தனைகள் தடுக்கப்படுவது அவசியமாகும். இன,மத அடிப்படையிலான கொள்கைகளைக் கொண்டவர்கள் அரசியலுக்குள் பிரவேசிப்பதை கட்டுப்படுத்துவதும் அவசியமாகும். தார்மீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் ஒன்றுபட்ட ஒழுங்கமைப்பைக் கொண்ட புதிய இலங்கை மேலெழுந்து வருவதற்கு இடமளிக்கப்படவேண்டும்.

My link

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.