Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ரமேஷ், நடேசன், புலிதேவன் வெள்ளைக்கொடியுடன் சரணடையவில்லை போர்க்களத்தில் கொல்லப்பட்டனர்'

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களான ரமேஷ், நடேசன், புலிதேவன் ஆகியோர் வெள்ளைக்கொடியுடன் சரணடையவில்லை எனவும் அவர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டனர் எனவும் மேஜனர் ஜெனரல் சவீந்திர சில்வா நேற்று செவ்வாய்க்கிழமை கூறினார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி வழக்கில் நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் சாட்சியமளிக்கும்போதே மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

நீதிபதிகள் தீபாலி விஜேசுந்தர (தலைவர்), டபிள்யூ.எம்.பி.பி. வராவேவ, எம்.எஸ்.ரம்ஸீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ட்ரையல் அட் பார் விசாரணையில் வழக்குத் தொடுநர் தரப்பு வழக்குரைஞரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரட்ண தலைமையில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா சாட்சியமளித்தார்.

கேள்வியொன்றுக்கு அவர் பதிலளிக்கையில் இறுதிக்கட்ட யுத்தம் வெள்ளமுள்ளி வாய்க்கால் மற்றும் கலய முள்ளி வாய்க்காலில் நடைபெற்றதாகவும் பயங்கரவாதிகள் 350 X 500 மீற்றர் பரப்பளவிலான இடமொன்றுக்குள் ஒதுக்கப்பட்டதாகவும் கூறினார்.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல்: எல்.ரி.ரி.ஈ. தலைவர்கள் ரமேஸ், நடேசன், புலிதேவன் ஆகியோரை நீங்கள் அறிவீர்களா?

சாட்சி: ஆம்.

பி.சொ.ஜெ: அவர்கள் சரணடைய விரும்புகிறார்கள் என்று நீங்கள் அறிந்துகொண்டிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?

சாட்சி: எவரேனும் சரணடைய முயற்சித்திருந்தால் நாம் அவர்களை மகிழ்ச்சியுடன் ஏற்றக்கொண்டிருப்போம். நாம் மனிதாபிமான யுத்தமொன்றையே மேற்கொண்டோம். இதில் எல்.ரி.ரி.ஈ. தலைவர்களுக்கும் சாதாரண அங்கத்தவர்களும் நாம் வித்தியாசம்

பார்க்கவில்லை. அவர்கள் சரணடைய விரும்பியிருந்தால் அவர்களை நாம் ஏற்றுக்கொண்டிருந்திருப்போம்.

சாட்சியத்தின் இறுதியில் பிரதிவாதியின் வழக்குரைஞர் நளின் லடுவாஹெட்டி, குறுக்கு விசாரணை செய்தபோது, நற்பண்புள்ள, சட்டத்திற்கு கட்டுப்பட்ட, ஒழுக்கமான, திறமையான இராணுவம் என சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இராணுவத்திற்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தலைமை தாங்கியதாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தெரிவித்தார்.

பிரதிவாதியின் வழக்குரைஞர்: தளபதி என்ற வகையில் நற்பண்புள்ள, சட்டத்திற்கு கட்டுப்பட்ட, ஒழுக்கமான, திறமையான இராணுவம் என சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இராணுவத்திற்கு தளபதி என்ற வகையில் சரத் பொன்சேகாவே தலைமை தாங்கினார்?

சாட்சி: அது அனைவருக்கும் தெரியும்.

பிரதிவாதியின் வழக்குரைஞர்: யுத்த வெற்றிக்கு முன்னால் சரத் பொன்சேகா 3 வருடங்கள் மற்றும் 4 மாதகாலம் இராணுவத் தளபதியாக இருந்தார். இல்லையா?

சாட்சி:துல்லியமான மாத கணக்கு எனக்கு நிச்சயமில்லை. ஆனால் அவர் நீண்டகாலம் அப்பதவியில் இருந்தார்.

மேலும் குறுக்கு விசாரணை செய்யப்பட்டபோது, பிரெட்ரிகா ஜேன்ஸுக்கு சரத் பொன்சேகா என்ன சொன்னார் என்பது சரியாக தனக்குத் தெரியாது எனவும் பிரெட்ரிகா ஜேன்ஸ் சொன்னைவை மட்டுமே தனக்குத் தெரியும் எனவும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறினார்.

பிரதிவாதியின் வழக்குரைஞர்: யுத்தத்தில் வெல்வதற்காக 58 ஆவது படையணியின் தளபதியாக நீங்கள் நியமிக்கப்பட்டீர்கள்?

சாட்சி: ஆம்.

பிரதிவாதியின் வழக்குரைஞர்: இந்த நியமனம் இராணுவத் தளபதியினால் மேற்கொள்ளப்பட்டது?

சாட்சி: அதற்கு சில நடைமுறைகள் இருக்கின்றன. பல்வேறு சபைகள் இருக்கின்றன. எனது நியமனம் முதலாம் சபையினால் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்புச் செயலாளருக்கும் பெயர்கள் அனுப்பப்பட்டன என நான் எண்ணுகிறேன்.

பிரதிவாதியின் வழக்குரைஞர்: அந்த நியமனங்கள் இராணுவத் தளபதியின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்பட்டன?

சாட்சி: ஆம். இராணுவத் தளபதிக்குப் பதிலாக பாதுகாப்புச் செயலாளரினால் அவை கையெழுத்திடப்பட்டன. ஆனால் இராணுவத் தளபதிக்குத் தெரியாமல் நியமனங்கள் மேற்கொள்ளப்பட முடியாது.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் குறுக்கு விசாரணைகள் முடிவுற்றன. அதேவேளை நாளை வியாழக்கிழமை வழக்கு விசாரணை மீண்டும் நடைபெறும்போது சாட்சியமளிக்க வருமாறு ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஷெனீகா செனரவிரட்னவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/11291-2010-11-16-21-30-24.html

KP யை கேட்டால் அவரும் இதை போல ஒரு கதை தான் சொல்லுவார்...

  • தொடங்கியவர்

இந்த போர்க்குற்றவாளியின் சாட்சி தமிழர் தரப்புக்கு ஆதரவானது என்றே தோன்றுகின்றது.

இவரின் சாட்சி "ஒரு மிட்டாயை மணியன் கடையில் களவெடுத்த சிட்டியின்" பதில் போலுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக கதை சொல்கிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.